Monday 30 January 2012

போலிச்சுதந்திரம் பொசுங்கியே தீரும்! புதிய ஜனநாயகம் மலர்ந்தே தீரும்!!


ஜனநாயகமும் சுதந்திரமும் சுபீட்சமும்  மிக்க

இலங்கை நாட்டைக் கட்டியெழுப்ப,

சிங்களமே;

ஈழதேசத்தின் பிரிந்து செல்லும் உரிமையை அங்கிகரி!

இல்லையேல் ஈழப்பிரச்சனைக்கு தீர்வு காண, ஈழமக்களிடையே சர்வஜன வாக்கெடுப்பு நடத்து!

ஆறாவது திருத்தச் சட்டத்தை நீக்கு!

இந்திய இலங்கை ஒப்பந்தத்தைக் கிழித்தெறி!

 ஏற்றத்தாழ்வான அனைத்து அந்நிய ஒப்பந்தங்களையும் ரத்துச் செய்!

 அநியாய அந்நியக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாது என அறிவி!

 IMF, World Bank உள்ளிட்ட அனைத்து அந்நிய நிதியாதிக்க கும்பல்களும் 
 நாட்டின் பொருளாதாரத் திட்டமிடலில் தலையிடுவதை      நிறுத்து!

 தனியார்மய, தாராளமய, உலகமய அந்நியப் பொருளாதாரக்      கொள்கை   களைக்  கைவிடு!
        
இக்கொள்கைகளுக்குச் சேவகம் செய்யும் ஏற்றுமதி சார்ந்த சேவைத் துறையை ஊக்குவிக்காதே!
      
பட்டி தொட்டியும் பரந்து, முழு நாட்டையும் மூலை முடுக்கெங்கும் மின்சாரமயமாக்கு! `இரவைப் பகலாக்கு`!!
        
62 ஆண்டுகளாக உலக வங்கி தடை செய்து வரும் பெருவீதத் தொழிற் துறையில்  முதலீடு செய்!
   
நிலத்தடி, நீரடி வளங்களை அந்நியருக்கு தாரை வார்க்காதே! 
        
நீண்ட காலக் குத்தகையில் அந்நிய கொம்பனிகளுக்குத் தாரை வார்த்துள்ள நிலங்களை அரசுடமையாக்கு!
        
பெளத்த மடாலயங்களுக்கும், கிறீஸ்தவத் தேவாலயங்களுக்கும், பெரும் இந்துக் கோவில்களுக்கும் மற்றும் நிலவுடமையாளர்களுக்கும்       
சொந்தமான பெருநில உடமைகளைப் பறிமுதல் செய்து நிலமற்ற வறிய விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கு!

பெருந்தோட்டம், நெல் விவசாயம், உப உணவுப் பயிர்ச்செய்கை, கடற்றொழில், வனத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் துறைகளை         நவீனமயப்படுத்து!
        
மூலிகை விவசாயத்தை வளர்த்தெடு, மூலிகை விஞ்ஞானத்தை பல்கலைக்கழகம் வரை போதனைப் பாடமாக்கு, மூலிகை மருத்துவத்தை    
விஞ்ஞான மயமாக்கு!
        
அந்நியர்கள் மூலவளங்களை அபகரிக்கவோ நாசப்படுத்தவோ அனுமதிக்காதே!
        
அபிவிருத்தி என்ற பெயரால் உற்பத்தி சாராத ஊதாரி உல்லாச, இராணுவத் துறைகளில் முதலீடு செய்யாதே!
      
அரச கட்டுப்பாட்டில் அல்லாத அனைத்து அந்நிய பணவரவுகளையும் பறிமுதல் செய்!

உளவாளிகளும் ஊடுருவலாளர்களுமான, அனைத்து NGO க்கள், மற்றும் போலி `மக்கள் சங்கங்களின்` உடைமைகளைப் பறிமுதல் செய்து  நாட்டை விட்டு விரட்டு!
      
உள்நாட்டுத் தரகுமுதலாளிய நிறுவனங்களுக்கு அளிக்கும் வரிச் சலுகைகளை நிறுத்து! அவை மீது அதிக வரி அறவிடு!
        
உள்ளூர் உற்பத்தியாளர்களையும் விவசாயிகளையும் ஊக்குவிக்க வரிச் சலுகை வழங்கு!

அனைத்து மறைமுக வரிகளையும் நீக்கு!

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்து!
        
விவசாயிகளின் இடுபொருட்களுக்கு மானியம் வழங்கு!
        
குறைந்த வட்டியில் கடன் வழங்கி உள்ளூர் உற்பத்தியை ஊக்குவி!
      
படகு மற்றும் படகு இயந்திரத் தொழிற்துறையை உருவாக்கு!
        
பதனிடும் சாலைகளைப் பரவலாக்கு!
        
நகர கிராம பேதமின்றி நாடுதழுவிய போக்குவரத்து வலைப்பின்னலை உருவாக்கு!
        
உள்நாட்டு உற்பத்தியை நாசப்படுத்த திட்டமிட்ட வெளிநாட்டு இறக்குமதி களைச் செய்யாதே!
    
வனவளங்களைப் பாதுகார்! வக்கிர புத்தியில் விடுதலைப்புலிகள் வளர்த்து உருவாக்கிய செயற்கைக் காடுகளை அழிக்காதே!
        
வனத்துறை வளங்களை மூலப்பொருளாகக் கொண்ட முதலாளித்துவ தொழிற்துறையைக் கட்டியெழுப்பு!
      
அந்நியச் செலாவாணி, நாணய மதிப்பிறக்கம் போன்ற நாசகார ஏகாதிபத்திய கொள்கைகளால் நாட்டு மக்களின் உழைப்புச் சக்தியின் மதிப்பை 
 மலிவுபடுத்தாதே!
        
பங்குவர்த்தகச் சூதாடிகளை சிறையில் அடை, சூதாட்டத்துக்கு முற்றுப் புள்ளி வை!
        
ஊழலை ஒழி! அனைத்து ஊழல் பெருச்சாளிகளையும் கூண்டிலடை!
     
        
யுத்தகாலப் பேரழிவை மீளக்கட்டியமைக்க முழு இராணுவத்தையும் உடல் உழைப்பில் ஈடுபடுத்து!
        
முதலீட்டில் ஈடுபடுத்தி இராணுவ முதலாளிகளை உருவாக்காதே!
        
வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தைத் திரும்பப் பெறு!
     
 நாட்டை இராணுவமயப்படுத்தி இலங்கையை மியான்மார் (பர்மா) ஆக்காதே!
        
உலக மறுபங்கீட்டுப் போட்டியில் இலங்கையை பலிக்களம் ஆக்காதே!
        
இந்து சமுத்திரப்பிராந்தியத்தை அமைதிப் பிராந்தியமாக்கப் போராடு!
        
ஐ.நா.வின் ஆக்கிரமிப்புப் போர்களுக்கு `காக்கிச்சட்டை அணிந்த சிங்கள விவசாயிகளை` விற்றுப் பிழைக்காதே!
   
உலகமயமாக்கல் பொருளாதார நலன்களக் காக்கவும், உள்நாட்டு அடக்கு முறைக்கும் நடைமுறையில் உள்ள அனைத்துக் கறுப்புச்  சட்டங்களையும் காலாவதியாக்கு!

தொழிலாளர் நலச்சட்டங்களை அமூலாக்கு!
        
வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற பெயரால் நாட்டின் உழைப்புச் சக்தியை மலிவுக் கூலிகளாகவும், அடிமைத் தொழிலாளர்களாகவும்     மத்திய கிழக்கு நாடுகளுக்கு விற்றுப் பிழைக்காதே!
   
பெண்ணடிமைத்தனத்துக்கு முடிவு கட்டு!
   
மாணவர், பாலகர் பாலியல் குற்றவாளிகளிகளுக்கு ஆயுள் தண்டனை அளி!
        
உலகமயமாக்கல் நகரங்களையும், உல்லாசத்துறையையும், ஏழ்மையையும் சார்ந்து கலாச்சாரச் சீரழிவுக்கு வழிவகுக்காதே!

சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டு, பாதாளக்குழுக்களின் வெள்ளை வான்  ஆட்சி நடத்தாதே!

ஊடக, இணைய சுதந்திரத்தில் கை வையாதே!

யுத்தக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கு!
   
ஒன்றுபட்ட ஜனநாயக நாட்டை உருவாக்க இனமத பூசல்களைத் தூண்டாதே!
        
அரசில் இருந்தும் கல்வியில் இருந்தும் மதத்தை வேறுபிரி!
        
பெளத்த மதத்துக்கு அரசியல் சாசனத்தில் வழங்கியுள்ள விஷேட அந்தஸ்தை ரத்துச் செய்!

இன மத நல்லிணக்கத்துக்கு தடையாக இருக்கும் பெளத்த மத வெறி அமைப்புக்களை ஊட்டி வளர்க்காதே!
        
நடைமுறையில் தமிழர்களை சிங்கள மொழிபடிக்க நிர்ப்பந்திப்பதில் போய் முடியப் போகிற, மும்மொழித் திட்டத்தைக் கைவிடு!
     
 தாய்மொழிக்கல்வியை அமூலாக்கு!
        
வடக்குக் கிழக்கு மாகாணங்களை சட்டரீதியாக ஒன்றிணை!
        
வரலாற்று ரீதியான பொதுமொழித் தொடர்பாலும், பொது உற்பத்தி உறவாலும், பொது மொழி மற்றும் கலாச்சாரத்தாலும் இயல்பாக. அவர்கள் ஒரு சந்தையாக உருவானதை  வலுக்கட்டாயமாகப் பிரிக்காதே!
        
மத்திய மலைநாட்டில் மலையக மக்கள் செறிந்து வாழும் மாவட்டங்களை தனிப்பிரதேசமாக ஒன்றிணைத்து பிரதேச சுயாட்சி   அந்தஸ்து வழங்கு!
        
இஸ்லாமியத் தமிழர்களுக்கு தனியான சுயாட்சி அலகை உருவாக்கு!
        
அனைத்து தேசிய, இன, மத மக்களையும் ஜனநாயகக் கூட்டாட்சியில் ஒன்றிணை!
        
நிறைவேற்று சேர்ந்து வாழ்வோம்!    இல்லையேல் பிரிந்து போவோம்!
        
ஜனநாயகமும் சுதந்திரமும் சுபீட்சமும்  மிக்க இலங்கை நாட்டைக் கட்டியெழுப்ப, மேற்கண்ட புதிய ஜனநாயக அரசியல்,தேசிய ஜனநாயாகப் பொருளாதாரப் பாதையே ஒரே வழியாகும். வேறெந்த வழியும் கிடையாது.மாறாக அந்நிய உலகமயமாக்கல்  பொருளாதாரக் கொள்கையிலும், அந்நிய நிதி மூலதனத்திலும் தங்கியிருக்கும் வரை, நாடு தனது அரைக்காலனிய சுதந்திரத்தையும் இழந்து முழு அடிமை நாடாகிவிடும். இன ஒடுக்குமுறை மேலும் கூர்மையடையும்.இத்தகைய ஒரு போக்கில் ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனம் ஒடுக்கும் சிங்களத்துடன் `அதிகாரத்தைப் பகிரும்` சீர்திருத்த வழியில் தனது சுதந்திரத்தை உறுதி செய்யமுடியாது.

ஒரு மக்கள் ஜனநாயக குடியரசால் இத்தகைய திட்டத்தை அதன் முதல் ஐந்தாண்டிலேயே  நிறைவேற்றிவிட முடியும்.ஆனால் 64 ஆண்டுகளாக இலங்கையின் ஆளும் கும்பல்கள் நாட்டை விதேசிய திட்டத்தில் வழி நடத்தி  வந்துள்ளனர். அதனால்த்தான் நாடு அடிமைப்பட்டுக் கிடக்கின்றது. இனப் பூசல் தொடர்கின்றது.இதற்குக் காரணம் தமிழர்கள் அல்ல.சிங்கள ஆளும்  கும்பல்களே ஆகும்.   ஆட்சி அதிகாரம் இவர்கள் கையில் உள்ளவரை அதுவே இனியும் தொடரப்போகின்றது. 
        
* பக்ச பாசிஸ்டுக்கள் தேசபக்தர்கள் அல்ல ஏகாதிபத்திய தாசர்களே!
        
* அவர்கள் கொண்டாடுவது சுதந்திரம் அல்ல, 64 ஆண்டுகால அரைக்காலனிய அடிமைத்தனமே!!     
* புதிய ஜனநாயக இலங்கை உருவாக பிரிந்து செல்லும் உரிமையை

உயர்த்திப் பிடிப்போம்!!!

புதிய ஈழப்புரட்சியாளர்கள்
ஜனவரி-30-2012

Sunday 29 January 2012

யார் இந்த TNA?



யார் இந்த  –TNA (Tamil National Alliance)?

தமிழ்க் கூட்டமைப்பா, இந்திய நாட்டமைப்பா?

(முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் கூட்டமைப்பு எடுத்துள்ள நிலைப்பாடும் ஆற்றும் பாத்திரமும்.)

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF), தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (TELO), ஆகிய அமைப்புக்களின் சில தனிநபர்களைக் கொண்டும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின்(LTTE) சில ஆதரவாளர்களைக் கொண்டும் 2002 ஆம் ஆண்டு ஒஸ்லோ பேச்சுவார்த்தையை ஒட்டி இக்கூட்டமைப்பு (Tamil National Alliance –TNA)  தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டது.

இவர்களில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, 1983 ஜூலைக் கலவரத்தை ஒட்டி இந்தியாவில் அடைக்கலம் புகுந்த நாள் முதல், ஆயுதப் போராட்டத்தை சமரச வழியில் சீரழிக்க இந்திய ஆளும் கும்பலுடன் சேர்ந்து திட்டம் தீட்டி வந்தது. (படிக்க ஈழத்தில் வர்க்கப் போராட்டம்).  ஈழப்போராளிக் குழுக்களில் இருந்து இந்திய கைக்கூலி அமைப்பு ஒன்றை உருவாக்க இந்திய உளவுப்படை (RAW) றோ முதலில் அணுகிய அமைப்பு தமிழீழ விடுதலை இயக்கம் ஆகும். இதில் வெற்றி கண்டு ஆரத் தழுவி  அணைத்துக் கொண்ட இயக்கமாகும். 1985 திம்புப் பேச்சுவார்த்தைக்குப் பின்னால் விடுதலைப் புலிகளை அழித்தொழிக்க றோவால் ஏவப்பட்ட இயக்கமாகும். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது குட்டிமுதலாளித்துவ நிலைப்பாடு காரணமாக சோவியத் சமூக ஏகாதிபத்திய ஆதரவு  திரிபுவாதிகளும்,பாராளமன்றவாதிகளுமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடம் CPI, ஈழப்போராட்டத்துக்கு வழிகாட்டுதல் பெறவிளைந்து இந்திய விஸ்தரிப்புவாதத்தின் காலில் விழுந்தது. 1985 ஆரம்பத்திலேயே அதாவது திம்புப் பேச்சுவார்த்தைக்கு முன்னாலேயே ஈழப் பிரிவினை குறித்த நிலைப்பாட்டில் ஊசலாடத் தொடங்கிவிட்டது.  இந்த இந்திய சார்பு அணிக்கு தலைமை வகுத்தவர், இந்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் அடியாளாக EPRLF இற்குள் இருந்த திரு சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆவார்.

இந்த வரலாற்றுப் பின்னணியில் தான் இந்த மூன்று அணியினரும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு, மாகாணசபையை அங்கீகரித்து,
இந்திய ஆக்கிரமிப்புப் படையுடன் கூட்டணி அமைத்து, தமிழீழ விடுதலைப் புலிகளை வேட்டையாடி, இந்திய ஆக்கிரமிப்பை எதிர்த்த தமிழீழ
மக்களுக்கு எதிராக கொலைவெறித் தாண்டவத்தைக் கட்டவிழ்த்தனர்.
அமிர்தலிங்கம் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு இந்தியப்படை இருப்பது அவசியம் என்றும், இந்தியப் படையின் கையில் இருக்கும் துப்பாக்கிகள்
சட்டபூர்வத் துப்பாக்கிகள் என்றும் கூறினார். சுரேஸ் பிரேமச்சந்திரன் யாழ்-அசோக்கா ஹொட்டேலில் ஈழ வதை முகாம் நடத்தி நல்லாட்சி புரிந்து
வந்தார்.

எனினும் இந்திய ஆக்கிரமிப்பை எதிர்த்த விடுதலைப் புலிகளின் நீதியான, வீரம் செறிந்த, வரலாறு படைத்த தமிழீழ விடுதலை யுத்தம் வெற்றிவாகை
சூடி இந்திய ஆக்கிரமிப்புப் படை தோற்கடிக்கப்பட்டது. இவ்வாறு இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் ஈழமண்ணில் இருந்து விரட்டியடிக்கப்பட்டது. இந்திய
ஆக்கிரமிப்பாளர்களுடன் கூட்டமைத்துக் கொண்ட தமிழினத் துரோகிகள் மக்களிடம் இருந்து தனிமைப்பட்டு கொழும்பிலும் இந்தியாவிலும் உதிரிகளாக
தஞ்சம் புகுந்தனர். தேடுவாரற்று தெருவில் கிடந்தனர்.மாகாண முதலமைச்சர் வரதராசப் பெருமாள் பதவி துறந்து தமிழீழப் பிரகடனம் செய்து விட்டு
ஒரிசாவில் அஞ்ஞாதவாசம் புரிந்தார்!

தமிழீழ விடுதலைப் போரை தொடரும் பொறுப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் கையில் தனியாக விடப்பட்டது. இந்தப் பணியைப் பொறுப்பேற்று
இறுதிவரை விடுதலைப் போரைத் தொடர விடுதலைப் புலிகள் திடசங்கற்பம் பூண்டிருந்தனர். இவ்வாறுதான் ஈழவிடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளின் “ஏகபோகம்” -தனித்த தலைமைத்துவம்- நிலைநாட்டப்பட்டது. இவ்வாறு விடுதலைப் புலிகள் ``பாசிசப் புலிகளாகி!``, 1989 இறுதியில் இருந்து 2002 வரை சுமார் 13 ஆண்டுகள்  தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தலைமை தாங்கி வழிநடத்தி வந்தனர்.

இந்த ஆண்டுகளில் எண்ணற்ற இராணுவ சாதனைகள் புரிந்தனர். தமிழீழ மண்ணின் பல பகுதிகளில் நிலைகொண்டிருந்த சிறீலங்கா இராணுவம்
விரட்டியடிக்கப்பட்டது.எதிரியிடமிருந்து விடுவிக்கப்பட்ட தளப்பிரதேசங்கள் உருவாகின. இதனால் விடுதலை இயக்கம் பெரு வளர்ச்சி கண்டது.
இதன் விளைவாக ஆனையிறவுப் பெரும்படைத்தளம் விடுதலைப்புலிகளின் கையில் வீழ்ந்தது. ஆறையிறவின் வெற்றியைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தை நோக்கிய முன்னேற்றத்தைக் கைவிட்டு சிங்களத்துடன் அரசியல் பேச்சுவார்த்தை மூலம் தமிழ்மக்களின் பிரச்சனைக்கு தீர்வுகாண 
முயலுமாறு அமெரிக்க ஏகாதிபத்தியத்தாலும் இந்திய விரிவாதிக்க அரசாலும் விடுதலைப் புலிகள் மிரட்டப்பட்னர். அமெரிக்க இந்தியப் படைகளின்
ஒருமித்த தாக்குதலில் இருந்து தமிழீழ விடுதலை இராணுவத்தைப் பாதுகாக்க விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதென சரியாகவே முடிவு செய்தனர்.

{இது முதல், மிகவும் காலம் தாழ்த்தி தமிழ்ச் செல்வன் பேச்சுவார்த்தைக் களத்தைப் பொறுப்பேற்கும் வரையான காலம் வரை அன்ரன் பாலசிங்கத்தின்
செல்வாக்கில் புலிகளின் அரசியல், வழி நடந்தது. எரிக் சொல்ஹெய்மின் வார்த்தைகளில் சொன்னால், `` ``பிரபாகரனை நேரில் சந்தித்து கலந்துரையாடி
தமது கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும்படி எவரும் கேட்க முடியாது.அவர் அத்தகைய தலைவர் அல்ல. அந்த நிலையில் இருந்த ஒரே நபர் அன்ரன்
பாலசிங்கம் மட்டும் தான்.எனவே நாம் பாலசிங்கம் ஊடாக பிரபாகரனை வழிப்படுத்த முயன்றோம்.பாலசிங்கம் உயிரோடு இருந்தவரையில் அது
வெற்றியும் அளித்தது.)``.இந்த வெற்றிகளில் முக்கியமானது, தமிழீழத்தைக் கைவிட்டு, பிரிந்து செல்லும் உரிமையைக் கை விட்டு, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைக் கைவிட்டு, திம்புக்கோரிக்கையைக் கைவிட்டு, வருடா வருடம் மாவீரர் தின உரையின் தாரக மந்திரமாக இருந்த புலிகளின் தாகத்தையும் மறந்து, ஒரு புதிய வாக்கெடுப்பைக் கூடக்கோராமல் ஒற்றையாட்சிக்குள் `அக சுயநிர்ணய உரிமை` யின் அடிப்படையில் அதிகாரத்தைப் பங்கீடு செய்யலாம் என்று புலிகளை நம்ப வைத்த பாலசிங்கத்தின் சதி ஆகும்,}

இந்தச் சூழ்நிலையில் தமிழ் மக்களின் பிரச்சனை தொடர்பான அரசியல் பேச்சுவார்த்தையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகப் பங்கேற்பவர்கள் யார் என்ற கேள்வி எழுந்தது. விடுதலைப் புலிகள் தமது 13 ஆண்டுகால தனியான அரசியல் தலைமைத்துவத்துக்கு ஜனநாயக வடிவம் கொடுக்க முயன்றனர். இந்த முயற்சியின் விளைவே  கூட்டமைப்பாகும்.

நோர்வே பேச்சுவார்த்தையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக கலந்து கொள்ளும் விடுதலைப் புலிகள் தமிழ் மக்களால் ஜனநாயக ரீதியாக தெரிவு
செய்யப்பட்டவர்கள் எனக் காட்டவும், ஏகாதிபத்தியவாதிகளும் இந்திய விரிவாதிக்க அரசும் தமது செல்வாக்கை தமிழ் மக்களிடையே நிலைநிறுத்த
கோரிவந்த, `அரசியல் பன்முகத் தன்மை`க் கோரிக்கையோடு கோட்பாடற்ற சமரசம் செய்து கொண்ட, சந்தர்ப்பவாத நிலைப்பாட்டின் காரணமாகவும்
விடுதலைப் புலிகள் இக்கூட்டமைப்பை உருவாக்கினர்.

கூட்டமைப்புக்கு ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை எழுதிக் கொடுத்து, தேர்தலில் நிறுத்தி, `வீட்டுக்குப் போக வீட்டுக்குப் போடுங்கள்`; எனத் தேர்தல் பிரச்சாரம் செய்து, கூடவே வாக்கும் அளித்து பாராளமன்றத்துக்கு அனுப்பினார்கள். இந்தத் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள்தான் என்றும், தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்த எந்தப்
பேச்சுவார்த்தைகளும் அவர்களுடனேயே நடத்தப்படவேண்டும் எனக் கோரியிருந்தது.
(10) The LTTE has for the past two years put up with the violent, surly behavior of the armed forces without impairing the conditions for peace and observing the cease-fire and acting steadfastly and firmly towards the path of peace. Hence, the international community should create the environment by removing the restrictions put in place by certain countries on the LTTE, the authentic sole representatives of the Tamil people, so that they could, with authority, dignity and with equal status conduct talks with the government of Sri Lanka
TNA Election Manifesto 2004

இவ்வாறு, தமது ஏகப் பிரதிநிதிகள் விடுதலைப் புலிகளே என
மக்கள் ஆணை வழங்கியுள்ளனர் என்பது தர்க்கமாகியது. (அவர்களது-எதிரிகளது தடியைக் கொண்டே அவர்களுக்கு அடிக்கும் `காய் நகர்த்தல்` என
இதனைப் புலி அறிவாளர்கள் புரிந்து கொண்டனர்.)

குறிப்பு 1.

சமஸ்டிக் கட்சி தமிழ்த் தேசியப் பிரச்சனைக்கு சமஸ்டி ஆட்சி முறையைத் தீர்வாக முன்வைத்துக் கட்டப்பட்ட கட்சி, (நடைமுறைக்கு வரவில்லையென்றாலும் டட்லி-செல்வா ஒப்பந்தம், பண்டா செல்வா ஒப்பந்தம் ஆகியவை சமஸ்டிக்கு மிகவும் கீழானவை ஆகும்.ஐக்கிய தேசியக்
கட்சியோடு கூட்டரசாங்கம் அமைத்த போது சமஸ்டியை நிபந்தனையாக வைக்கவில்லை சமஸ்டிக்கட்சி.) 1977 இல் தமிழ் ஈழத்துக்கு-பிரிவினைக்கு
சர்வஜன வாக்கெடுப்பு கோரி மக்களின் ஆணையைப் பெற்ற கட்சி, 1981 இல் மாவட்ட அபிவிருத்திச் சபையை ஏற்றுக் கொண்ட கட்சி. 1987 இல்
மாகாணசபையை ஏற்றுக் கொண்ட கட்சி, 2002 இல் மீண்டும் தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற தமிழ் மக்களின் `சுயநிர்ணயத்தை` ஏற்றுக் கொண்ட
கட்சி. பூச்சி, புழுக்கள் கூட இந்த அளவுக்கு வளைந்து நெளியாது!.

குறிப்பு 2.

சம்பந்தனின் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர். அ.அமிர்தலிங்கம் விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டார். சுரேஷ் பிரேமச்சந்திரனின் EPRLF கட்சியின் தலைவர் பத்மநாபா விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார். செல்வம் அடைக்கலநாதனின் ரெலோ அமைப்பின் தலைவர் சிறி சபாரத்தினம் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார். இந்தத் தலைவர்களது தொண்டர்களான, கூட்டமைப்புத் தலைவர்கள் யாரும், ஏன் எங்கள் `தாய்க் கட்சிகளின்` தலைவர்களைக் கொன்றீர்கள் என்று பகிரங்கமாகக் கேட்கவில்லை. தலைவர்கள் மரணதண்டனைக்குரிய “குற்றங்களை
இழைத்திருந்த போது”, தொண்டர்களோடு எப்படி அரசியல் கூட்டமைக்க முடிந்தது என்று விடுதலைப் புலிகளும் மக்களுக்கு விளக்கம் அளிக்கவில்லை. விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர்களும் அறிவு ஜீவிகளும் ஆதரவாளர்களும் அனுதாபிகளும் கூட இக்கேள்வியைக் கேட்கவில்லை. மக்கள் மட்டும் இப் புனிதக் கூட்டுக் குறித்து, மனதுக்குள் முணுமுணுத்து முறுகிக் கொண்டனர்.

குறிப்பு 3.

பிரிவினைக்காக – தமிழீழத் தனியரசுக்காக போராடிய விடுதலைப் புலிகளுடன் `அரசியல் கூட்டமைத்த` கூட்டமைப்பு, பிரிவினைக் கோரிக்கையைத் தடை செய்த ஆறாவது திருத்தச் சட்டத்தை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது எப்படி, என்பதற்கும் எந்த விளக்கமும் இல்லை.

குறிப்பு 4.

இக்காலத்தில் விடுதலைப் புலிகளின் காட்டில் மும்மாரி பொழிந்தது. காளான்களும் கண்மண் தெரியாமல் முளைத்தன. விச ஜந்துக்களும்
வெள்ளத்தில் நீந்தி மகிழ்ந்தன. இவர்களுக்குப் பொதுவாக சூட்டப்பட்ட அல்லது இவர்கள் பொதுவாகச் சூடிக் கொண்ட கிரீடம் “அரசியல் ஆய்வாளர்”
என்பதாகும்.

இந்த அரசியல் ஆய்வாளர்கள் தமது பங்கிற்கு அமெரிக்காவும், ஐரோப்பியன் ஜூனியனும், இந்தியாவும் விடுதலைப் புலிகளை அங்கீகரித்து நடத்தவுள்ள
முடிசூட்டு விழாவுக்கு கூட்டமைப்பு ஒரு `போர்வாள்` என ஆய்ந்து அறிந்து கூறிவந்தனர்.

இவ்வாறாகத்தானே கூட்டமைப்புச் சேனை பாராளுமன்றத்தைப் போர்க்களமாக்க புழுதி வீசி எறிந்த வண்ணம் புறப்பட்டது. 2002 ஆம் ஆண்டு இடம் பெற்ற இவர்களின் முதலாவது தேர்தலில் உயர்பாதுகாப்பு வலையங்களையும், யுத்தத்தால் ஏற்பட்ட இடப் பெயர்வுகளையும் மனதில் கொண்டு ``வீட்டுக்குப் போக வீட்டுக்குப் போடுங்கள் என முழங்கி, புலிகளின் ஆயுத பூஜையின் வரத்தால், டக்ளசுக்கு சொந்தமான இரண்டு தொகுதிகள் தவிர, எஞ்சிய  24 இல் 22  பொரும்பான்மை பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றி மக்கள் பிரதிநிதி ஆகியது.

நோர்வே வீசிய பாசக்கயிறு முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் குரல்வளையை நெரிக்கும் வரையிலும் இவ்வாறு கூட்டமைப்பு
பாராளமன்றத்தைப் போர்க்களமாக்கிக் கொண்டு- பெரும்பாலான காலங்களில் இந்தியாவிலும் பிற மேலைநாடுகளிலும் தங்கியிருந்தது.

கடைசியாக முள்ளிவாய்க்கால் பிரளயம் நடந்து முடிந்து, போர்க்களம் பாராளமன்றமானது. யுத்தத் தளபதி பொன்சேகாக்காவுடன் கூட்டமைத்து,  கூட்டமைப்பு தமிழ் மக்களிடையே வாக்கு வேட்டையாடியது. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததற்கு ராஜ பக்‌ஷவுக்கு நன்றி செலுத்தியது. புலிகளின் தியாகத்தை மதிப்பதாகவும் அவர்களின் வழிமுறையை எதிர்ப்பதாகவும் அறிவித்தது.யுத்தக்குற்றம் பற்றிய முறையீட்டில் கலந்து கொள்ளவில்லை.  பசு தனது புலித்தோலைக் கழற்றி எறிந்தது.கேவலம் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் சிங்களம் சிறைப்பிடித்து முகாம்களில் அடைத்து வைத்த இலட்சக்கணக்கான மக்களைச் சென்று பார்வையிடக் கூட இந்தக் கூட்டமைப்பு  போராடவில்லை!

விடுதலைப் புலிகள்  தம்மைத் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று நிரூபிக்க  கையில் எடுத்த துடைப்பங்கட்டை, இப்போது தன்னைத் தானே
மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்மக்களின் ஏகப்பிரதிநிதிகள் எனப் பிரகடனம் செய்தது.அவர்களது-எதிரிகளது- தடியைக் கொண்டே அவர்களுக்கு
அடிப்பதாக நினைத்து புலிகள் நகர்த்திய காய், தடியைக் கொடுத்து மரண அடிவாங்கிய கதையாய் முடிந்தது.அரசியலில் சந்தர்ப்பவாதம் என்பது
மரணதண்டனை தவிர வேறெதுவுமல்ல.இத்தகைய சந்தர்ப்பவாதத்துக்கு மேலே குறிப்பிட்ட அரசியல் ஆய்வாளர்கள் சூட்டிய நாமம் தான் காய்
நகர்த்தல்.(இந்தச் சொல்லே ஒரு சூதாட்ட மொழி, அரசியல் மொழி கிடையாது)

உலக மறுபங்கீடு நடைபெற்ற வண்ணமிருக்கும் சர்வதேசப் போக்கின் ஒரு  பகுதியாக இலங்கையிலும் அதன் பிரதிபலிப்பு வெடிக்கின்றது.அமெரிக்க இந்திய அணியும், ரசிய சீன அணியும் இப்போட்டியில் குதித்துள்ளன.ரசிய சீன அணி சிங்களத்தை முற்றிலுமாகச் சார்ந்து, தமிழ்மக்களுக்கு எதிரான நிலை எடுத்துள்ளது.
அமெரிக்க இந்திய அணி சிங்களத்தின், ரசிய சீன அணி நோக்கிய சாய்வைத் தடுக்க ஈழத்தமிழர்களை ஒரு துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தும் கொள்கையைக் கடைப்பிடிக்கின்றது.
 இவ்வாறு தமிழ் மக்களை வைத்து தமது நலன்களை அடைய முயலும் இந்தியாவும் அமெரிக்காவும் இந்தத் துடைப்பங்கட்டையை தமிழ் மக்களின் அரசியல் கட்சியாக அங்கீகரித்து (தமது நாடுகளுக்கு வரவழைத்துப் `பேச்சுவார்த்தை`கள் நடாத்தி) முடி சூட்டி விட்டனர். ஆகக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்களின் ஏக அரசியல் பிரதிநிதிகள் என்ற அங்கீகாரம் கிடைத்து விட்டது!.
இந்திய அரசியல் ஆலோசகரான விரிவாதிக்கவாதி B.ராமன், ஈழப்பிரச்சனைக்கு தீர்வுகாண்பதற்கு முதற்படி `அரபாத் இல்லாத பாலஸ்தீனம்` என்ற கொள்கையை வகுத்தளித்தார்.இதுவே இந்திய அரசின் அதிகாரபூர்வ கொள்கையுமாகியது.ஆக அரபாத் இல்லாத பாலஸ்தீனத்தில் கூட்டமைப்பை தனது அரசியல் பிரதிநிதியாக நிறுவியிருக்கின்றது இந்திய விரிவாதிக்க அரசு.இவ்வாறு கூட்டமைப்பு இந்திய நாட்டமைப்பாக உருவெடுத்துள்ளது.

(இலங்கையில் நோர்வேயின் சமாதான முயற்சி பற்றிய ஆய்வறிக்கை தொடர்பான விமர்சன அரங்கில் கலந்துகொண்ட எரிக் சொல்ஹெய்ம் `` தமிழ்
மக்கள் இனிமேல் ஆயுதம் ஏந்திப்போராடக் கூடாது, கூட்டமைப்பு தமிழ்மக்களின் முக்கிய அரசியல் பிரதிநிதி. அவர்கள் மூலம் நோர்வே தனது
பங்களிப்பைத் தொடரும்`` எனக் கூறியிருந்தார்.இந்துப்பத்திரிகை கூட்டமைப்பு தனது கடமையில் இருந்து தவறக் கூடாது என ஆலோசனை வழங்கியுள்ளது.உருத்திரகுமாரன் `தாயகத்தில் கூட்டமைப்பும், புலம்பெயர் நாடுகளில் நாடுகடந்த அரசாங்கமும்` ``தமிழீழ விடுதலைப் பணியை``த்
தொடர்வோம் என அறிவிக்கின்றார். தமிழ் கத்தோலிக்க பெரிய பாதிரியார் அரசாங்கம் கூட்டமைப்புடன் பேசி பிரச்சனைக்குத் தீர்வு காண
முயலவேண்டும் எனக் கோருகின்றார்.சமாதானத்துக்கு அயராது உழைக்கும் அந்நிய NGO க்களின் சிங்கள முகாமையாளர்கள் கூட்டமைப்பின்
நம்பிக்கையைப் பெற LLRC பரிந்துரைகளை அரசாங்கம் அமூலாக்க வேண்டுமென வேண்டிக் கொள்கிறார்கள்.)

புதிய அணிசேர்க்கைக்கான தயாரிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளைச் செலவிட்ட கூட்டமைப்பு இறுதியாக ஒரு தெளிவான விதேசியத் திட்டத்துடன்
ஈழத்தமிழ் அரசியலில் மீண்டும் குதிக்கின்றது.இனிமேலும் கூட்டமைப்பு செத்தபாம்போ செல்லாக் காசோ அல்ல.

மக்களைப் பொறுத்தவரையில் கூட்டமைப்பு செத்த பாம்பாகவும், செல்லாக்காசாகவும் இருப்பதனால் இது எந்தக்காலத்திலும் பரந்துபட்ட மக்களின் பெருந்திரளான ஆதரவைப் பெறப்போவதில்லை. இதன் காரணத்தால் இது அமைப்பு ரீதியிலும் பலம் பெறப்போவதில்லை. இந்த இரண்டு காரணங்களாலும் சிங்களத்துடன் பேரம் பேசுவதற்கு கூட்டமைப்புக்கு எந்தப்பலமும் கிடையாது. மேலும் பொருளாதார மையப்படுதலின் விளைவான பாசிசத்தின் வளர்ச்சி காரணமாக, உலகு தழுவிய ஒரு பொதுப்போக்கைச் சார்ந்து இலங்கையிலும் பிரதான ஆளும்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையில் ஒற்றுமை மேலும் மேலும் நெருங்கி
வருகின்றது.கொள்கைகள் ஏறத்தாழ ஒன்றே என்று ஆகிவிட்டன. இதனால் இங்கேயும் சந்தர்ப்பவாதக் கூட்டுக்கான வாய்ப்புக்கள் இல்லாது
போய்விட்டன.

இந்த நிலையில் சர்வதேச சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றங்களையும், பக்ச பாசிஸ்டுக்களின் ரசிய சீன சாய்வைக் கணக்கில் கொண்டும், அமெரிக்க
ஏகாதிபத்தியத்துக்கும், இந்திய விரிவாதிக்க அரசின் நலன்களுக்கும் சேவகம் செய்யும் தரகுப் பாத்திரத்தை ஆற்ற கூட்டமைப்பு விளைகின்றது.இவர்களின் நலன்களுக்கு சிங்களத்தைப் பணியவைப்பதற்கு ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனையை ஒரு துருப்புச் சீட்டாகப் பாவிக்க முயலுகின்றது. இதனால் உண்மையில் இந்த அதிகார பேரம் ஈழத்தமிழ் மக்களின் நலன் சம்பந்தப்பட்டது அல்ல.அமெரிக்க ஏகாதிபத்திய, இந்திய விரிவாதிக்க அரசுகளின்
நலன் சம்பத்தப்பட்டதாகும்.இவ்வகையில் கூட்டமைப்பு உலக மறுபங்கீட்டு போட்டியில் ரசிய சீன அணிக்கெதிராக, அமெரிக்க இந்திய- ஏகாதிபத்திய
அணிக்கு சேவகம் செய்ய முயல்கிறது.

இது ஒரு அபாயகரமான சமரச, சதிகாரப் பாதை.இது தமிழினத்தைக் காட்டிக் கொடுப்பது மட்டுமல்ல.ஒட்டு மொத்த நாட்டையுமே அந்நியருக்கு
காட்டிக்கொடுப்பதாகும். கூட்டமைப்பின் இத் தேச விரோத விதேசிய நடத்தை தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு பழியும், இழிவும் தேடி பலவீனப்
படுத்துவதாகும்.சிங்கள மக்களை மேலும் தமிமீழ விடுதலைப் போராட்டத்தில்ம இருந்து அந்நியப்படுத்துவதும் சிங்களத்தைப் பலப்படுத்துவதுமாகும்.உலக மறுபங்கீட்டுப் போட்டியில் இலங்கையை  ஆழத்தள்ளி அதன் பழியை ஈழத் தமிழரைச் சுமக்க வைப்பதாகும். 

இதற்கான கோரிக்கையே அரசியல் அமைப்பின் 13வது சட்டத் திருத்தத்துக்கு அமைய அமைக்கப்பட்ட மாகாணசபை(கள்) ஆகும்.

இம்மாகாண சபைக்கு உள்ள அதிகாரங்கள் குறித்து இந்தியாவின் பின்பலத்தில் அதிகார பேரம் நடத்தி அந்நிய சேவகம் செய்து பிழைக்க முயல்கின்றது
கூட்டமைப்பு.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் அமெரிக்காவுக்கும், இந்திய விரிவாதிக்க அரசுக்கும் அழைப்பு விடுவது அப்பட்டமான துரோகம் ஆகும்.மேலும் தமிழ்
மக்களின் போராட்டத்தை 25 ஆண்டுகள் பின்னோக்கித்தள்ளி அதிகாரப்பரவலாக்க சீர்திருத்த வழியில் சீரழிப்பதாகும்.

கடந்த 25 ஆண்டுகால சிங்களப் பேரினவாதத்தின் வளர்ச்சியும், மாறியுள்ள சர்வதேச-பிராந்திய சூழ்நிலைமைகளும், புலிகளின் வீழ்ச்சியும் அதிகார பேரத்தை ஆழக்குழிதோண்டிப் புதைத்துவிட்டன.

போலிச்சுதந்திரத்துக்குப் பிந்திய இந்த 64 ஆண்டுகால அரசியல் வரலாறு சொல்லுவதெல்லாம், சிங்களம் தனது அரசியல் அதிகாரத்தில்
எந்தப்பங்கையும் ஈழதேசத்துக்கு வழங்கத் தயாராகவில்லை என்பதுதான். இந்த ஈர்ப்பு மையத்தைச் சுற்றித்தான் இந்த 64 ஆண்டுகால வரலாறும் நகர்ந்திருக்கின்றது.

ஒற்றையாட்சி என்பது சிங்களத்தின் அரசியல் அதிகாரத்தின் ஏகபோகம் தவிர வேறொன்றும் இல்லை.

இந்நிலையில் ஒற்றையாட்சிக்குள், ஒன்றுபட்ட இலங்கைக்குள் `அரசியல் தீர்வு காண்பது` என்பது, கட்டாய இணைப்புக்குள் தமிழ்மக்களைத் தொடர்ந்தும்
வாழ நிர்ப்பந்திப்பது என்பது தமிழீழ தேசத்தின் இருப்பை படிப்படியாக இல்லாதொழிப்பதற்கான சதியே தவிர வேறெதுவுமல்ல.இது தேசிய இன
அழிப்பும், தேசியப் படுகொலையும் ஆகும்.

இதனால் பிரிந்து செல்லும் உரிமையை உயர்த்திப்பிடிப்பது இன்றியமையாத ஜனநாயகக் கடமையாகும்.இது ஒன்றே இன ஒடுக்குமுறையின் மீது கட்டப்பட்ட சிங்களத்தைத் தகர்க்கும்.இதுவே தமிழ்த் தேசிய இன ஒடுக்குமுறைக்கு முடிவுகட்டும், இதன் மூலம் மட்டுமே இன மதச் சிறுபான்மை மக்களும், சிங்களப் பெருந்தேசிய இனமும் விடுதலை பெற முடியும்.

கூட்டமைப்பு, உலகத் தமிழர் பேரவை, நாடுகடந்த அரசாங்கம் இவையாவும் கூட வசதிக்கேற்ப `சுய நிர்ணய உரிமையை` ஒரு சொல் என்ற அளவில்
பயன்படுத்துகின்றன. ஆனால் உள்ளடக்கத்தில் பிரிந்து செல்லும் உரிமை என்ற பொருளில் அல்ல மாறாக, ’சேர்ந்துவாழ  அதிகாரப் பகிர்வு’ என்ற
பொருளிலேயே  ஆகும்.

ஆக வரலாறு மீண்டும் எழுதப்படுகின்றது.கூட்டமைப்பு இலங்கை அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்துக்கு அமைய உருவாக்கப்பட்ட மாகாணசபைத்
திட்டத்தை தமிழ்த்தேசிய இனப்பிரச்சனைக்குத் தீர்வாகக் கையில் எடுத்துள்ளது.காணி அதிகாரம் பொலிஸ் அதிகாரம் குறித்து சிங்களத்துடன் அதிகார பேரம் நடத்தும் பொருட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ``அமெரிக்கவே நீதி வழங்கு! இந்தியாவே தீர்வு வழங்கு!!` எனச் சமரசவாதிகள் நடத்திய போராட்டங்களின் விளைவாக,
ஒபாமா ராஜபக்சவை யுத்தக் குற்றக் கூண்டிலிருந்து விடுவித்து விட்டார், இந்தியா மாகாணசபைத் தீர்வு வழங்கியுள்ளது, ஐ.நா.யுத்தக் குற்றவாளியான சிங்கள இராணுவ அதிகாரியை தனது அமைதிகாப்பு நடவடிக்கைகளுக்கு ஆலோசகராக நியமித்துள்ளது! இவை தான் சமரசவாதிகள் அமெரிக்காவிடம் இருந்தும், இந்தியாவிடமிருந்தும், ஐ.நா. விடமிருந்தும் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்த நீதி! ( இன்னும் நம்பிக்கை இழக்காத மயிலைக் காளைகள் மட்டும் நீதி கேட்டு நடந்தவண்ணமே இருகின்றார்கள்!)

1987 ஐ விட 2012 மாகாண சபை மேலானது என்று காட்ட இந்த நாடகத்தில் இணைத்துக்கொண்ட மேலதிக அங்கமே இந்த 13+ ஆகும்! (Extra Large!)

இன்று அமைப்பு ரீதியாக இம்முழக்கத்தை முன் வைப்பது கூட்டமைப்பாக இருந்தாலும், இச்சமரச தேசத்துரோக வழியில் நிற்பவர்கள் இவர்கள்
மட்டுமல்ல.ஈழத்திலும்,புலம் பெயர் நாடுகளிலும்,தமிழ் நாட்டிலும் உள்ள சில சமூக சக்திகள்- வர்க்கங்கள் இவ்வழியின் வளர்ச்சிக்கு ஆதாரமான
சமூகத் தூண்களாய் உள்ளன. புற முதுகில் பதுங்கி இருந்து விடுதலைப் புலிகளுக்கு கொள்ளி வைத்ததில் இக்கும்பலுக்கு பெரும் பங்குண்டு.
கூட்டமைப்பு TNA, உலகத் தமிழர் பேரவை Global Tamil Forum, பிரித்தானிய தமிழர் பேரவை British Tamil Forum, நாடு கடந்த அரசாங்கம் Trans National Government of Tamil Eelam), அந்நிய தமிழ் NGO கோடரிக்காம்புகள்,  நெடுமாறன்- வை.கோ கும்பல், கத்தோலிக்க பாதிரிகள், இந்துப் பெருங் கோவில்களின் சொந்தக்காரச் செல்வந்தர்கள் ஆகிய வகையறாக்கள், ஒரு கொடியின் கீழ், ஒரே அமைப்பின் கீழ் திரளாவிட்டாலும், அவரவர் தளங்களில், அடிப்படையில் ஒரே நலனுக்காகவே செயற்படுகின்றனர். அது தரகு முதலாளித்துவ நலனும், தேசத் துரோக, தமிழின விரோத, சந்தர்ப்பவாத சமரசவாத வழியும் ஆகும்.

கூட்டமைப்பும் தன்னை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய முயல்கின்றது. ஏதோ EPRLFஉம், TELOவும் சமஸ்டிக் கட்சிக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல, சமஸ்டிக்கட்சி தன்னை தாய்க் கட்சி என்று உரிமை கோருகின்றது. பிள்ளைக் கட்சிகளோடு கொடி,சின்னம்,பெயர் பற்றி விவாதித்து வருகின்றது.மாநாடு கூட்டத் திட்டமிடுகின்றது.அமைப்பை மேலும் விரிவாக்கிப் பலப்படுத்த சம்பந்தன் பிள்ளையான் பேச்சுவார்த்தை
நடைபெறவுள்ளது.இவையனைத்தும் ஈழத்தமிழரின் பெயரால் அமெரிக்க இந்திய ஆதரவு அரசியல் சக்தியொன்று உருவாக்கப்பட்டு வருவதையே
காட்டுகின்றது.இதை நுகர்ந்து பிடித்துவிட்ட புலம்பெயர் மேட்டுக்குடி பொன்னாடை போர்த்தத் தொடங்கிவிட்டது!

இதே நேரத்தில் சட்டபூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சியை நீக்க முயற்சிகள் நடப்பது தற்செயலானது அல்ல. ஆயுதங்களை மெளனித்துவிட்ட விடுதலைப் புலிகள் அரசியல் ரீதியாக ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்காகச் செயற்படுவதை யாரும் தடுக்க
முடியாது.தடுக்கக் கூடாது.இதை ஜனநாயகவாதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும்.

போலிச் சுதந்திரத்துக்குப் பிந்திய முதல் முப்பது ஆண்டுகால பாராளுமன்ற பாதையிலும், அடுத்த முப்பது ஆண்டுகால ஆயுதப் போராட்டப் பாதையிலும் ஈழத்தமிழ் மக்கள் தமது எதிரிகளை நன்கு அறிந்துள்ளனர்.சிங்களத்தைப் பற்றி மக்களுக்குத் தெரியும்.அமெரிக்கா, மற்றும் இதர ஏகாதிபத்தியவாதிகளைப் பற்றியும் மக்களுக்குத் தெரியும்.இலங்கையில் கால்பதித்துவரும், ஏகாதிபத்திய நோக்கில் வளர்ந்து வரும் சீன, ரசிய வல்லரசுகளையும் மக்கள் அறிவர்.இந்திய விரிவாதிக்க அரசையும் அதன் கபட வேடத்தையும் மக்கள் நன்கறிவர்.

மக்களுக்கு இன்று உடனடியாகத் தேவைப்படுவதெல்லாம் இந்த எதிரிகளை எதிர்த்துப் போரிடுவதற்கான சரியான, புரட்சிகரமான தத்துவார்த்த, அரசியல் ஸ்தாபன வழிகாட்டுதல் மட்டும் தான்.

இந்தப் பொறி மக்களைப் பற்றிக்கொண்டால் மீண்டும் ஒரு பெருங்காட்டுத் தீயாய் மூளும்!

இதைத் தடுப்பதுதான் அனைத்து சமரசவாதிகளின் நோக்கம்.இவர்கள் எங்கிருந்தாலும் இந்த ஒரே குறிக்கோளுக்காகவே பாடுபடுகின்றனர்.இதனால்
இச்சமரசவாதிகளைத் தனிமைப்படுத்தாமல் புரட்சிகர வெகுஜன மக்கள் திரளை விடுதலைப் புரட்சியின் பக்கம் வென்றெடுக்க முடியாது. அதிகாரப்
பகிர்வு வழியை ஒரு அரசியல் போக்கு என்ற வகையில் முறியடிக்காமல், பிரிவினைக் கோரிக்கையின் மீது மீண்டும் ஒரு முற்போக்கு தேச விடுதலை
இயக்கத்தைக் கட்டியமைக்க முடியாது. இதை அரசியல் ரீதியில் சாதிக்காமல் ஏகாதிபத்தியவாதிகளோடும், இந்திய விரிவாதிக்க அரசோடும்,
சிங்களத்தோடும் தீர்மானகரமான முறிவை ஏற்படுத்த முடியாது.இத்தகைய ஒரு முறிவு ஏற்படாமல் ஈழவிடுதலைப் புரட்சி பரந்துபட்ட மக்களைத்
தழுவுவது என்பது சாத்தியமில்லை.எனவே கூட்டமைப்பின் அணியில் இணையும் அனைத்து சமரசவாத தமிழினத் துரோகிகளின்,ஈழத்தமிழ் மக்கள் மீதான செல்வாக்கைத் தடுத்து நிறுத்தி, புரட்சிகர ஈழ மக்களை, எதிரிகளுக்கெதிராக விடுதலைப் புரட்சியில் ஊன்றி நிறுத்த பின்வரும் முழக்கங்களின் கீழ் அணிதிரளுமாறு அறை கூவல் விடுக்கின்றோம்.

         * அன்ரன் பாலசிங்கத்தின் ‘அகசுய நிர்ணய உரிமை’ அதிகாரப் பகிர்வே!


         * அதிகாரப்பகிர்வு என்பது அரசியல் விடுதலை அல்ல அடிமைத்தனமே!


         * நமது விடுதலைக் கோரிக்கை பிரிந்து செல்லும் உரிமையே!


         * மாகாணசபை, இடைக்கால அதிகார சபை அனைத்தும் அடிமைத் தீர்வே!


         * ஜனநாயகத் தீர்வுக்கு வழி, தமிழ்பேசும் மக்களிடையேயான சர்வஜன
            வாக்கெடுப்பே!


         * ஆறாவது திருத்தச்சட்டத்தை நீக்கவும்,இந்திய இலங்கை ஒப்பந்தத்தைக்
            கிழித்தெறியவும் போராடுவோம்!


         * அமெரிக்க ஏகாதிபத்திய, இந்திய விரிவாதிக்க அரசுகளின் அடியாளான
            கூட்டமைப்பைத் தனிமைப்படுத்துவோம்!


         * தமிழ்பேசும் மக்கள் வேண்டும் அரசியல் தீர்வு, என்ன என்பதை அறிய
           கூட்டமைப்பு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றைக் கோரினால் ஒழிய,
           இதர அனைத்துத் தேர்தல்களையும் புறக்கணிப்போம்!


         * பிரிந்து செல்லும் உரிமையை உயர்த்திப்பிடித்து முற்போக்கு
            தேசவிடுதலை அமைப்பைக் கட்டியமைப்போம்!


         * மலையக இஸ்லாமியத் தமிழர்களை விடுதலைப் புரட்சியில் ஐக்கியப்
            படுத்துவோம்!


         * மலையக, இஸ்லாமியத் தமிழர்கள், மற்றும் சிங்கள மக்கள் மீதான
           சிங்களத்தின் ஒடுக்குமுறையை எதிர்த்து குரல் கொடுப்போம்,
           அவர்களின் பிரதேச சுயாட்சி உரிமைகளுக்காகப் போராடுவோம்!


         * சிங்கள ஜனநாயக சக்திகளை ஈழத் தமிழர்களின் பிரிந்து செல்லும்
            உரிமையை அங்கீகரிக்கக் கோருவோம்!


         * உலகத் தொழிலாளர்களுடனும் ஒடுக்கப்பட்ட தேசங்களுடனும்
            ஒன்றுசேருவோம்!

                                                 புதிய ஈழப் புரட்சியாளர்கள்


                                                                        ஜனவரி-2012

Saturday 28 January 2012

TNA: தமிழ்க் கூட்டமைப்பா, இந்திய நாட்டமைப்பா?

யார் இந்த  –TNA (Tamil National Alliance)
தமிழ்க் கூட்டமைப்பா,  இந்திய நாட்டமைப்பா?

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF), தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (TELO), ஆகிய அமைப்புக்களின் சில தனிநபர்களைக் கொண்டும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின்(LTTE) சில ஆதரவாளர்களைக் கொண்டும் 2002 ஆம் ஆண்டு ஒஸ்லோ பேச்சுவார்த்தையை ஒட்டி இக்கூட்டமைப்பு (Tamil National Alliance –TNA)  தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டது.

இவர்களில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, 1983 ஜூலைக் கலவரத்தை ஒட்டி இந்தியாவில் அடைக்கலம் புகுந்தது முதல், ஆயுதப்
போராட்டத்தை சமரச வழியில் சீரழிக்க இந்திய ஆளும் கும்பலுடன் சேர்ந்து திட்டம் தீட்டி வந்தது. (படிக்க ஈழத்தில் வர்க்கப் போராட்டம்).  ஈழப்போராளிக் குழுக்களில் இருந்து இந்திய கைக்கூலி அமைப்பு ஒன்றை உருவாக்க இந்திய உளவுப்படை (RAW) றோ முதலில் அணுகிய அமைப்பு தமிழீழ விடுதலை இயக்கம் ஆகும். இதில் வெற்றி கண்டு ஆரத் தழுவி  அணைத்துக் கொண்ட இயக்கமாகும். 1985 திம்புப் பேச்சுவார்த்தைக்குப்
பின்னால் விடுதலைப் புலிகளை அழித்தொழிக்க றோவால் ஏவப்பட்ட இயக்கமாகும். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது
குட்டிமுதலாளித்துவ நிலைப்பாடு காரணமாக சோவியத் சமூக ஏகாதிபத்திய ஆதரவு  திரிபுவாதிகளும்,பாராளமன்றவாதிகளுமான இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியிடம் CPI, ஈழப்போராட்டத்துக்கு வழிகாட்டுதல் பெறவிளைந்து இந்திய விஸ்தரிப்புவாதத்தின் காலில் விழுந்தது. 1985 ஆரம்பத்திலேயே
அதாவது திம்புப் பேச்சுவார்த்தைக்கு முன்னாலேயே ஈழப் பிரிவினை குறித்த நிலைப்பாட்டில் ஊசலாடத் தொடங்கிவிட்டது.  இந்த இந்திய சார்பு
அணிக்கு தலைமை வகுத்தவர், இந்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் அடியாளாக EPRLF இற்குள் இருந்த திரு சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆவார்.

இந்த வரலாற்றுப் பின்னணியில் தான் இந்த மூன்று அணியினரும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு, மாகாணசபையை அங்கீகரித்து,
இந்திய ஆக்கிரமிப்புப் படையுடன் கூட்டணி அமைத்து, தமிழீழ விடுதலைப் புலிகளை வேட்டையாடி, இந்திய ஆக்கிரமிப்பை எதிர்த்த தமிழீழ
மக்களுக்கு எதிராக கொலைவெறித் தாண்டவத்தைக் கட்டவிழ்த்தனர்.
அமிர்தலிங்கம் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு இந்தியப்படை இருப்பது அவசியம் என்றும், இந்தியப் படையின் கையில் இருக்கும் துப்பாக்கிகள்
சட்டபூர்வத் துப்பாக்கிகள் என்றும் கூறினார். சுரேஸ் பிரேமச்சந்திரன் யாழ்-அசோக்கா ஹொட்டேலில் ஈழ வதை முகாம் நடத்தி நல்லாட்சி புரிந்து
வந்தார்.

எனினும் இந்திய ஆக்கிரமிப்பை எதிர்த்த விடுதலைப் புலிகளின் நீதியான, வீரம் செறிந்த, வரலாறு படைத்த தமிழீழ விடுதலை யுத்தம் வெற்றிவாகை
சூடி இந்திய ஆக்கிரமிப்புப் படை தோற்கடிக்கப்பட்டது. இவ்வாறு இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் ஈழமண்ணில் இருந்து விரட்டியடிக்கப்பட்டது. இந்திய
ஆக்கிரமிப்பாளர்களுடன் கூட்டமைத்துக் கொண்ட தமிழினத் துரோகிகள் மக்களிடம் இருந்து தனிமைப்பட்டு கொழும்பிலும் இந்தியாவிலும் உதிரிகளாக
தஞ்சம் புகுந்தனர். தேடுவாரற்று தெருவில் கிடந்தனர்.மாகாண முதலமைச்சர் வரதராசப் பெருமாள் பதவி துறந்து தமிழீழப் பிரகடனம் செய்து விட்டு
ஒரிசாவில் அஞ்ஞாதவாசம் புரிந்தார்!

தமிழீழ விடுதலைப் போரை தொடரும் பொறுப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் கையில் தனியாக விடப்பட்டது. இந்தப் பணியைப் பொறுப்பேற்று
இறுதிவரை விடுதலைப் போரைத் தொடர விடுதலைப் புலிகள் திடசங்கற்பம் பூண்டிருந்தனர். இவ்வாறுதான் ஈழவிடுதலைப் போராட்டத்தில்
விடுதலைப் புலிகளின் “ஏகபோகம்” -தனித்த தலைமைத்துவம்- நிலைநாட்டப்பட்டது. இவ்வாறு விடுதலைப் புலிகள் ``பாசிசப் புலிகளாகி!``, 1989
இறுதியில் இருந்து 2002 வரை சுமார் 13 ஆண்டுகள்  தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தலைமை தாங்கி வழிநடத்தி வந்தனர்.

இந்த ஆண்டுகளில் எண்ணற்ற இராணுவ சாதனைகள் புரிந்தனர். தமிழீழ மண்ணின் பல பகுதிகளில் நிலைகொண்டிருந்த சிறீலங்கா இராணுவம்
விரட்டியடிக்கப்பட்டது.எதிரியிடமிருந்து விடுவிக்கப்பட்ட தளப்பிரதேசங்கள் உருவாகின. இதனால் விடுதலை இயக்கம் பெரு வளர்ச்சி கண்டது.
இதன் விளைவாக ஆனையிறவுப் பெரும்படைத்தளம் விடுதலைப்புலிகளின் கையில் வீழ்ந்தது. ஆறையிறவின் வெற்றியைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தை நோக்கிய முன்னேற்றத்தைக் கைவிட்டு சிங்களத்துடன் அரசியல் பேச்சுவார்த்தை மூலம் தமிழ்மக்களின் பிரச்சனைக்கு தீர்வுகாண 
முயலுமாறு அமெரிக்க ஏகாதிபத்தியத்தாலும் இந்திய விரிவாதிக்க அரசாலும் விடுதலைப் புலிகள் மிரட்டப்பட்னர். அமெரிக்க இந்தியப் படைகளின்
ஒருமித்த தாக்குதலில் இருந்து தமிழீழ விடுதலை இராணுவத்தைப் பாதுகாக்க விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதென சரியாகவே
முடிவு செய்தனர்.

{இது முதல், மிகவும் காலம் தாழ்த்தி தமிழ்ச் செல்வன் பேச்சுவார்த்தைக் களத்தைப் பொறுப்பேற்கும் வரையான காலம் வரை அன்ரன் பாலசிங்கத்தின்
செல்வாக்கில் புலிகளின் அரசியல், வழி நடந்தது. எரிக் சொல்ஹெய்மின் வார்த்தைகளில் சொன்னால், `` ``பிரபாகரனை நேரில் சந்தித்து கலந்துரையாடி
தமது கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும்படி எவரும் கேட்க முடியாது.அவர் அத்தகைய தலைவர் அல்ல. அந்த நிலையில் இருந்த ஒரே நபர் அன்ரன்
பாலசிங்கம் மட்டும் தான்.எனவே நாம் பாலசிங்கம் ஊடாக பிரபாகரனை வழிப்படுத்த முயன்றோம்.பாலசிங்கம் உயிரோடு இருந்தவரையில் அது
வெற்றியும் அளித்தது.)``.}

இந்தச் சூழ்நிலையில் தமிழ் மக்களின் பிரச்சனை தொடர்பான அரசியல் பேச்சுவார்த்தையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகப் பங்கேற்பவர்கள் யார் என்ற கேள்வி எழுந்தது. விடுதலைப் புலிகள் தமது 13 ஆண்டுகால தனியான அரசியல் தலைமைத்துவத்துக்கு ஜனநாயக வடிவம் கொடுக்க முயன்றனர். இந்த முயற்சியின் விளைவே  கூட்டமைப்பாகும்.

நோர்வே பேச்சுவார்த்தையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக கலந்து கொள்ளும் விடுதலைப் புலிகள், தமிழ் மக்களால் ஜனநாயக ரீதியாக தெரிவு
செய்யப்பட்டவர்கள் எனக் காட்டவும், ஏகாதிபத்தியவாதிகளும் இந்திய விரிவாதிக்க அரசும் தமது செல்வாக்கை தமிழ் மக்களிடையே நிலைநிறுத்த
கோரிவந்த, `அரசியல் பன்முகத் தன்மை`க் கோரிக்கையோடு கோட்பாடற்ற சமரசம் செய்து கொண்ட, சந்தர்ப்பவாத நிலைப்பாட்டின் காரணமாகவும்
விடுதலைப் புலிகள் இக்கூட்டமைப்பை உருவாக்கினர்.

கூட்டமைப்புக்கு ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை எழுதிக் கொடுத்து, தேர்தலில் நிறுத்தி, `வீட்டுக்குப் போக வீட்டுக்குப் போடுங்கள்`; எனத் தேர்தல் பிரச்சாரம் செய்து, கூடவே வாக்கும் அளித்து பாராளமன்றத்துக்கு அனுப்பினார்கள். இந்தத் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள்தான் என்றும், தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்த எந்தப்
பேச்சுவார்த்தைகளும் அவர்களுடனேயே நடத்தப்படவேண்டும் எனக் கோரியிருந்தது. இவ்வாறு, தமது ஏகப் பிரதிநிதிகள் விடுதலைப் புலிகளே என
மக்கள் ஆணை வழங்கியுள்ளனர் என்பது தர்க்கமாகியது. (அவர்களது-எதிரிகளது தடியைக் கொண்டே அவர்களுக்கு அடிக்கும் `காய் நகர்த்தல்` என
இதனைப் புலி அறிவாளர்கள் புரிந்து கொண்டனர்.)

குறிப்பு 1.
சமஸ்டிக் கட்சி தமிழ்த் தேசியப் பிரச்சனைக்கு சமஸ்டி ஆட்சி முறையைத் தீர்வாக முன்வைத்துக் கட்டப்பட்ட கட்சி. (நடைமுறைக்கு
வரவில்லையென்றாலும் டட்லி-செல்வா ஒப்பந்தம், பண்டா செல்வா ஒப்பந்தம் ஆகியவை சமஸ்டிக்கு மிகவும் கீழானவை ஆகும்.ஐக்கிய தேசியக்
கட்சியோடு கூட்டரசாங்கம் அமைத்த போது சம்ஸ்டியை நிபந்தனையாக வைக்கவில்லை சமஸ்டிக்கட்சி.) 1977 இல் தமிழ் ஈழத்துக்கு-பிரிவினைக்கு
சர்வஜன வாக்கெடுப்பு கோரி மக்களின் ஆணையைப் பெற்ற கட்சி. 1981 இல் மாவட்ட அபிவிருத்திச் சபையை ஏற்றுக் கொண்ட கட்சி. 1987 இல்
மாகாணசபையை ஏற்றுக் கொண்ட கட்சி. 2002 இல் மீண்டும் தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற தமிழ் மக்களின் `சுயநிர்ணயத்தை` ஏற்றுக் கொண்ட
கட்சி. பூச்சி, புழுக்கள் கூட இந்த அளவுக்கு வளைந்து நெளியாது!.

குறிப்பு 2.
சம்பந்தனின் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர். அ.அமிர்தலிங்கம் விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டார். சுரேஷ் பிரேமச்சந்திரனின் EPRLF கட்சியின் தலைவர் பத்மநாபா விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார். செல்வம் அடைக்கலநாதனின் ரெலோ அமைப்பின் தலைவர் சிறி சபாரத்தினம் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார். இந்தத் தலைவர்களது தொண்டர்களான, கூட்டமைப்புத் தலைவர்கள் யாரும், ஏன் எங்கள் `தாய்க்கட்சிகளின்` தலைவர்களைக் கொன்றீர்கள் என்று பகிரங்கமாகக் கேட்கவில்லை. தலைவர்கள் மரணதண்டனைக்குரிய “குற்றங்களை
இழைத்திருந்த போது”, தொண்டர்களோடு எப்படி அரசியல் கூட்டமைக்க முடிந்தது என்று விடுதலைப் புலிகளும் மக்களுக்கு விளக்கம் அளிக்கவில்லை. விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர்களும் அறிவு ஜீவிகளும் ஆதரவாளர்களும் அனுதாபிகளும் கூட இக்கேள்வியைக் கேட்கவில்லை. மக்கள் மட்டும் மனதுக்குள் இப் புனிதக் கூட்டுக் குறித்து முணுமுணுத்து முறுகிக் கொண்டனர்.

குறிப்பு 3.
பிரிவினைக்காக – தமிழீழத் தனியரசுக்காக போராடிய விடுதலைப் புலிகளுடன் `அரசியல் கூட்டமைத்த` கூட்டமைப்பு, பிரிவினைக் கோரிக்கையைத் தடை செய்த ஆறாவது திருத்தச் சட்டத்தை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது எப்படி, என்பதற்கும் எந்த விளக்கமும் இல்லை.

குறிப்பு 4.
இக்காலத்தில் விடுதலைப் புலிகளின் காட்டில் மும்மாரி பொழிந்தது. காளான்களும் கண்மண் தெரியாமல் முளைத்தன. விச ஜந்துக்களும்
வெள்ளத்தில் நீந்தி மகிழ்ந்தன. இவர்களுக்குப் பொதுவாக சூட்டப்பட்ட அல்லது இவர்கள் பொதுவாகச் சூடிக் கொண்ட கிரீடம் “அரசியல் ஆய்வாளர்”
என்பதாகும்.இந்த அரசியல் ஆய்வாளர்கள் தமது பங்கிற்கு அமெரிக்காவும், ஐரோப்பியன் ஜூனியனும், இந்தியாவும் விடுதலைப் புலிகளை அங்கீகரித்து நடத்தவுள்ள முடிசூட்டு விழாவுக்கு கூட்டமைப்பு ஒரு `போர்வாள்` என ஆய்ந்து அறிந்து கூறிவந்தனர்.

இவ்வாறாகத்தானே கூட்டமைப்புச் சேனை பாராளமன்றத்தைப் போர்க்களமாக்க புழுதி வீசி எறிந்த வண்ணம் புறப்பட்டது. 2002 ஆம் ஆண்டு இடம்பெற்ற இவர்களின் முதலாவது தேர்தலில் உயர்பாதுகாப்பு வலையங்களையும், யுத்தத்தால் ஏற்பட்ட இடப் பெயர்வுகளையும் மனதில் கொண்டு ``வீட்டுக்குப் போக வீட்டுக்குப் போடுங்கள்`` என முழங்கி, புலிகளின் ஆயுத பூஜையின் வரத்தால், டக்ளசுக்கு சொந்தமான இரண்டு தொகுதிகள் தவிர, எஞ்சிய  24 இல் 22  பொரும்பான்மை பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றி மக்கள் பிரதிநிதி ஆகியது.

நோர்வே வீசிய பாசக்கயிறு முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் குரல்வளையை நெரிக்கும் வரையிலும் இவ்வாறு கூட்டமைப்பு
பாராளுமன்றத்தைப் போர்க்களமாக்கிக் கொண்டு- பெரும்பாலான காலங்களில் இந்தியாவிலும் பிறநாடுகளிலும் தங்கியிருந்தது.

கடைசியாக முள்ளிவாய்க்கால் பிரளயம் நடந்து முடிந்து, போர்க்களம் பாராளமன்றமானது. யுத்தத் தளபதி பொன்சேகாவுக்கு கூட்டமைப்பு தமிழ்
மக்களிடையே வாக்கு வேட்டையாடியது. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததற்கு ராஜ பக்‌ஷவுக்கு நன்றி செலுத்தியது. புலிகளின் தியாகத்தை மதிப்பதாகவும் அவர்களின் வழிமுறையை எதிர்ப்பதாகவும் அறிவித்தது. பசு தனது புலித்தோலைக் கழற்றி எறிந்தது.கேவலம் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் சிங்களம் சிறைப்பிடித்து முகாம்களில் அடைத்து வைத்த இலட்சக்கணக்கான மக்களைச் சென்று பார்வையிடக் கூட இந்தக் கூட்டமைப்பு போராடவில்லை!

விடுதலைப் புலிகள்  தம்மைத் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று நிரூபிக்க  கையில் எடுத்த துடைப்பங்கட்டை, இப்போது தன்னைத் தானே
மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்மக்களின் ஏகப்பிரதிநிதிகள் எனப் பிரகடனம் செய்தது.அவர்களது-எதிரிகளது- தடியைக் கொண்டே அவர்களுக்கு
அடிப்பதாக நினைத்து புலிகள் நகர்த்திய காய், தடியைக் கொடுத்து மரண அடிவாங்கிய கதையாய் முடிந்தது.அரசியலில் சந்தர்ப்பவாதம் என்பது
மரணதண்டனை தவிர வேறெதுவுமல்ல.இத்தகைய சந்தர்ப்பவாதத்துக்கு மேலே குறிப்பிட்ட அரசியல் ஆய்வாளர்கள் சூட்டிய நாமம் தான் காய்
நகர்த்தல்.(இந்தச் சொல்லே ஒரு சூதாட்ட மொழி, அரசியல் மொழி கிடையாது)

உலக மறுபங்கீடு நடைபெற்ற வண்ணமிருக்கும் சர்வதேசப் போக்கின்பகுதியாக இலங்கையிலும் அதன்பிரதிபலிப்பு வெடிக்கின்றது.
அமெரிக்க இந்திய அணியும், ரசிய சீன அணியும் இப்போட்டியில் குதித்துள்ளன.ரசிய சீன அணி சிங்களத்தை முற்றிலுமாகச் சார்ந்து, தமிழ்மக்களுக்கு எதிரான நிலை
எடுத்துள்ளது.அமெரிக்க இந்திய அணி சிங்களத்தின், ரசிய சீன அணி நோக்கிய சாய்வை தடுக்க ஈழத்தமிழர்களை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தும்
கொள்கையைக் கடைப்பிடிக்கின்றது. இவ்வாறு தமிழ் மக்களை வைத்து தமது நலன்களை அடைய முயலும் இந்தியாவும் அமெரிக்காவும் இந்தத் துடைப்பங்கட்டையை தமிழ் மக்களின் அரசியல் கட்சியாக அங்கீகரித்து (தமது நாடுகளுக்கு வரவழைத்துப் `பேச்சுவார்த்தை`கள் நடாத்தி) முடி சூட்டி விட்டனர். ஆகக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்களின் ஏக அரசியல் பிரதிநிதிகள் என்ற அங்கீகாரம் கிடைத்து விட்டது!.
இந்தியஅரசியல்ஆலோசகரான விரிவாதிக்கவாதி B.ராமன், ஈழப்பிரச்சனைக்கு தீர்வுகாண்பதற்கு முதற்படி, `அரபாத் இல்லாத பாலஸ்தீனம்` என்ற கொள்கையை வகுத்தளித்தார்.இதுவே இந்திய அரசின் அதிகாரபூர்வ கொள்கையுமாகியது.ஆக அரபாத் இல்லாத பாலஸ்தீனத்தில் கூட்டமைப்பை தனது அரசியல் பிரதிநிதியாக நிறுவியிருக்கின்றது இந்திய விரிவாதிக்க அரசு.இவ்வாறு கூட்டமைப்பு இந்திய நாட்டமைப்பாக உருவெடுத்துள்ளது.
(இலங்கையில் நோர்வேயின் சமாதான முயற்சி பற்றிய ஆய்வறிக்கை தொடர்பான விமர்சன அரங்கில் கலந்துகொண்ட எரிக் சொல்ஹெய்ம் `` தமிழ் மக்கள் இனிமேல் ஆயுதம் ஏந்திப்போராடக் கூடாது, கூட்டமைப்பு தமிழ்மக்களின் முக்கிய அரசியல் பிரதிநிதி. அவர்கள் மூலம் நோர்வே தனது பங்களிப்பைத் தொடரும்`` எனக் கூறியிருந்தார்.இந்துப்பத்திரிகை கூட்டமைப்பு தனது கடமையில் இருந்து தவறக் கூடாது என ஆலோசனை வழங்கியுள்ளது.உருத்திரகுமாரன் `தாயகத்தில் கூட்டமைப்பும், புலம்பெயர் நாடுகளில் நாடுகடந்த அரசாங்கமும்` ``தமிழீழ விடுதலைப் பணியை``த் தொடர்வோம் என அறிவிக்கின்றார். தமிழ் கத்தோலிக்க பெரிய பாதிரியார் அரசாங்கம் கூட்டமைப்புடன் பேசி பிரச்சனைக்குத் தீர்வு காண முயலவேண்டும் எனக் கோருகின்றார்.தேசிய சமாதானத்துக்கு அயராது உழைக்கும் அந்நிய NGO க்களின் சிங்கள முகாமையாளர்கள் கூட்டமைப்பின் நம்பிக்கையைப் பெற LLRC பரிந்துரைகளை அரசாங்கம் அமூலாக்க வேண்டுமென வேண்டிக் கொள்கிறார்கள்.)
புதிய அணிசேர்க்கைக்கான தயாரிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளைச் செலவிட்ட கூட்டமைப்பு இறுதியாக ஒரு தெளிவான விதேசியத் திட்டத்துடன் ஈழத்தமிழ் அரசியலில் மீண்டும் குதிக்கின்றது.இனிமேலும் கூட்டமைப்பு செத்தபாம்போ செல்லாக் காசோ அல்ல.
மக்களைப் பொறுத்தவரையில் கூட்டமைப்பு செத்த பாம்பாகவும், செல்லாக்காசாகவும் இருப்பதனால் இது எந்தக்காலத்திலும் பரந்துபட்ட மக்களின் பெருந்திரளான ஆதரவைப் பெறப்போவதில்லை. இதன் காரணத்தால் இது அமைப்பு ரீதியிலும் பலம் பெறப்போவதில்லை. இந்த இரண்டு காரணங்களாலும் சிங்களத்துடன் பேரம் பேசுவதற்கு கூட்டமைப்புக்கு எந்தப்பலமும் கிடையாது. மேலும் பொருளாதார மையப்படுதலின் விளைவான பாசிசத்தின் வளர்ச்சி காரணமாக, உலகு தழுவிய ஒரு பொதுப்போக்கைச் சார்ந்து இலங்கையிலும் பிரதான ஆளும்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையில் ஒற்றுமை மேலும் மேலும் நெருங்கி வருகின்றது.கொள்கைகள் ஏறத்தாழ ஒன்றே என்று ஆகிவிட்டன. இதனால் இங்கேயும் சந்தர்ப்பவாதக் கூட்டுக்கான வாய்ப்புக்கள் இல்லாது போய்விட்டன.
இந்த நிலையில் சர்வதேச சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றங்களையும், பக்ச பாசிஸ்டுக்களின் ரசிய சீன சாய்வைக் கணக்கில் கொண்டும், அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும், இந்திய விரிவாதிக்க அரசின் நலன்களுக்கும் சேவகம் செய்யும் தரகுப் பாத்திரத்தை ஆற்ற கூட்டமைப்பு விளைகின்றது.இவர்களின் நலன்களுக்கு சிங்களத்தைப் பணியவைப்பதற்கு ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனையை ஒரு துருப்புச் சீட்டாகப் பாவிக்க முயலுகின்றது. இதனால் உண்மையில் இந்த அதிகார பேரம் ஈழத்தமிழ் மக்களின் நலன் சம்பந்தப்பட்டது அல்ல.அமெரிக்க இந்திய விரிவாதிக்க அரசின் நலன் சம்பத்தப்பட்டதாகும்.இவ்வகையில் கூட்டமைப்பு உலக மறுபங்கீட்டு போட்டியில் ரசிய சீன அணிக்கெதிராக, அமெரிக்க இந்திய- ஏகாதிபத்திய அணிக்கு சேவகம் செய்ய முயல்கிறது.
இது ஒரு அபாயகரமான சமரச, சதிகாரப் பாதை.இது தமிழினத்தைக் காட்டிக் கொடுப்பது மட்டுமல்ல.ஒட்டு மொத்த நாட்டையுமே அந்நியருக்கு காட்டிக்கொடுப்பதாகும். கூட்டமைப்பின் இத் தேச விரோத விதேசிய நடத்தை தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு பழியும், இழிவும் தேடி பலவீனப் படுத்துவதாகும்.சிங்கள மக்களை மேலும் தமிமீழ விடுதலைப் போராட்டத்தில் இருந்து அந்நியப் படுத்துவதும் சிங்களத்தைப் பலப்படுத்துவதுமாகும்.
இதற்கான கோரிக்கையே அரசியல் அமைப்பின் 13வது சட்டத் திருத்தத்துக்கு அமைய அமைக்கப்பட்ட மாகாணசபை(கள்) ஆகும்.
இம்மாகாண சபைக்கு உள்ள அதிகாரங்கள் குறித்து இந்தியாவின் பின்பலத்தில் அதிகார பேரம் நடத்தி அந்நிய சேவகம் செய்து பிழைக்க முயல்கின்றது கூட்டமைப்பு.முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் அமெரிக்காவுக்கும், இந்திய விரிவாதிக்க அரசுக்கும் அழைப்பு விடுவது அப்பட்டமான துரோகம் ஆகும்.மேலும் தமிழ் மக்களின் போராட்டத்தை 25 ஆண்டுகள் பின்னோக்கித்தள்ளி அதிகாரப்பரவலாக்க சீர்திருத்த வழியில் சீரழிப்பதாகும். கடந்த 25 ஆண்டுகால சிங்களப் பேரினவாதத்தின் வளர்ச்சியும், மாறியுள்ள சர்வதேச-பிராந்திய சூழ்நிலைமைகளும், புலிகளின் வீழ்ச்சியும் அதிகாரபேரத்தை ஆழக்குழிதோண்டிப் புதைத்துவிட்டன.
போலிச்சுதந்திரத்துக்குப் பிந்திய இந்த 64 ஆண்டுகால அரசியல் வரலாறு சொல்லுவதெல்லாம், சிங்களம் தனது அரசியல் அதிகாரத்தில் எந்தப்பங்கையும் ஈழதேசத்துக்கு வழங்கத் தயாராகவில்லை என்பதுதான். இதைச் சுற்றித்தான் இந்த 64 ஆண்டுகால வரலாறும் நகர்ந்திருக்கின்றது.
ஒற்றையாட்சி என்பது சிங்களத்தின் அரசியல் அதிகாரத்தின் ஏகபோகம் தவிர வேறொன்றும் இல்லை.
இந்நிலையில் ஒற்றையாட்சிக்குள், ஒன்றுபட்ட இலங்கைக்குள் `அரசியல் தீர்வு காண்பது` என்பது, கட்டாய இணைப்புக்குள் தமிழ்மக்களைத் தொடர்ந்தும் வாழ நிர்ப்பந்திப்பது என்பது தமிழீழ தேசத்தின் இருப்பை படிப்படியாக இல்லாதொழிப்பதற்கான சதியே தவிர வேறெதுவுமல்ல.இது தேசிய இன அழிப்பும், தேசியப் படுகொலையும் ஆகும்.
இதனால் பிரிந்து செல்லும் உரிமையை உயர்த்திப்பிடிப்பது இன்றியமையாத ஜனநாயகக் கடமையாகும்.கூட்டமைப்பு, உலகத் தமிழர் பேரவை, நாடுகடந்த அரசாங்கம் இவையாவும் கூட வசதிக்கேற்ப `சுய நிர்ணய உரிமையை` ஒரு சொல் என்ற அளவில் பயன்படுத்துகின்றன. ஆனால் உள்ளடக்கத்தில் பிரிந்து செல்லும் உரிமை என்ற பொருளில் அல்ல மாறாக, ’சேர்ந்துவாழ  அதிகாரப் பகிர்வு’ என்ற பொருளிலேயே  ஆகும்.
ஆக வரலாறு மீண்டும் எழுதப்படுகின்றது.ஆனால் இந்தத் தடவை எழுதுவோர் அனைவரின் முகங்களிலும் நாம் தமிழரின் எதிரிகள் என்று தெளிவாக எழுதப்பட்டிருக்கின்றது!.கூட்டமைப்பு இலங்கை அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்துக்கு அமைய உருவாக்கப்பட்ட மாகாணசபைத் திட்டத்தை தமிழ்த்தேசிய இனப்பிரச்சனைக்குத் தீர்வாகக் கையில் எடுத்துள்ளது.காணி அதிகாரம் பொலிஸ் அதிகாரம் குறித்து சிங்களத்துடன் அதிகார பேரம் நடத்தும் பொருட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ``அமெரிக்கவே நீதி வழங்கு! இந்தியாவே தீர்வு வழங்கு!!` எனச் சமரசவாதிகள் நடத்திய போராட்டங்களின் விளைவாக, ஒபாமா ராஜபக்சவை யுத்தக் குற்றக் கூண்டிலிருந்து விடுவித்து விட்டார், இந்தியா மாகாணசபைத் தீர்வு வழங்கியுள்ளது! ஐ.நா யுத்தக் குற்றவாளியான சிங்களத்தின் இராணுவ அதிகாரியை தனது `உலக அமைதி காக்கும் நடவடிக்கைக்கு ஆலோசகனாக நியமித்துள்ளது! இவைதான் சமரசவாதிகள்அமெரிக்காவிடம் இருந்தும், இந்தியாவிடமிருந்தும், ஐ நா விடமிருந்தும் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்த நீதி! (நம்பிக்கை இழக்காத மயிலைக் காளைகள் மட்டும் நீதி கேட்டு நடந்தவண்ணமே இருகின்றார்கள்!)
1987 ஐ விட 2012 மாகாண சபை மேலானது என்று காட்ட இந்த நாடகத்தில் இணைத்துக்கொண்ட மேலதிக அங்கமே இந்த 13+ ஆகும்! (Extra Large!)
இன்று அமைப்பு ரீதியாக இம்முழக்கத்தை முன் வைப்பது கூட்டமைப்பாக இருந்தாலும், இச்சமரச தேசத்துரோக வழியில் நிற்பவர்கள் இவர்கள் மட்டுமல்ல.ஈழத்திலும்,புலம் பெயர் நாடுகளிலும்,தமிழ் நாட்டிலும் உள்ள சில சமூக சக்திகள்- வர்க்கங்கள் இவ்வழியின் வளர்ச்சிக்கு ஆதாரமான சமூகத் தூண்களாய் உளளன. புற முதுகில் பதுங்கி இருந்து விடுதலைப் புலிகளுக்கு கொள்ளி வைத்ததில் இக்கும்பலுக்கு பெரும் பங்குண்டு.கூட்டமைப்பு TNA, உலகத் தமிழர் பேரவை Global Tamil Forum, பிரித்தானிய தமிழர் பேரவை British Tamil Forum, நாடு கடந்த அரசாங்கம் Trans National Government of Tamil Eelam), அந்நிய தமிழ் NGO கோடரிக்காம்புகள்,  நெடுமாறன்- வை.கோ கும்பல், கத்தோலிக்க பாதிரிகள், இந்துப் பெருங் கோவில்களின் சொந்தக்காரச் செல்வந்தர்கள் ஆகிய வகையறாக்கள், ஒரு கொடியின் கீழ், ஒரே அமைப்பின் கீழ் திரளாவிட்டாலும், அவரவர் தளங்களில், அடிப்படையில் ஒரே நலனுக்காகவே செயற்படுகின்றனர். அது தரகு முதலாளித்துவ நலனும், தேசத் துரோக, தமிழின விரோத, சந்தர்ப்பவாத சமரசவாத வழியும் ஆகும்.
கூட்டமைப்பும் தன்னை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய முயல்கின்றது. ஏதோ EPRLFஉம், TELOவும் சமஸ்டிக் கட்சிக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல, சமஸ்டிக்கட்சி தன்னை தாய்க் கட்சி என்று உரிமை கோருகின்றது. பிள்ளைக் கட்சிகளோடு கொடி,சின்னம்,பெயர் பற்றி விவாதித்து வருகின்றது.மாநாடு கூட்டத் திட்டமிடுகின்றது.அமைப்பை மேலும் விரிவாக்கிப் பலப்படுத்த சம்பந்தன் பிள்ளையான் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.இவையனைத்தும் ஈழத்தமிழரின் பெயரால் அமெரிக்க இந்திய ஆதரவு அரசியல் சக்தியொன்று உருவாக்கப்பட்டு வருவதையே காட்டுகின்றது.இதை நுகர்ந்து பிடித்துவிட்ட புலம்பெயர் மேட்டுக்குடி பொன்னாடை போர்த்தத் தொடங்கிவிட்டது!
இதே நேரத்தில் சட்டபூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சியை நீக்க முயற்சிகள் நடப்பது தற்செயலானது
அல்ல.ஆயுதங்களை மெளனித்துவிட்ட விடுதலைப் புலிகள் அரசியல் ரீதியாக ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்காகச் செயற்படுவதை யாரும் தடுக்க முடியாது. தடுக்கக் கூடாது. இதை ஜனநாயகவாதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும்.

போலிச் சுதந்திரத்துக்குப் பிந்திய முதல் முப்பது ஆண்டுகால பாராளுமன்ற பாதையிலும், அடுத்த முப்பது ஆண்டுகால ஆயுதப் போராட்டப் பாதையிலும் ஈழத்தமிழ் மக்கள் தமது எதிரிகளை நன்கு அறிந்துள்ளனர்.சிங்களத்தைப் பற்றி மக்களுக்குத் தெரியும்.அமெரிக்கா, மற்றும் இதர ஏகாதிபத்தியவாதிகளைப் பற்றியும் மக்களுக்குத் தெரியும்.இலங்கையில் கால்பதித்துவரும், ஏகாதிபத்திய நோக்கில் வளர்ந்து வரும் சீன, ரசிய வல்லரசுகளையும் மக்கள் அறிவர்.இந்திய விரிவாதிக்க அரசையும் அதன் கபட வேடத்தையும் மக்கள் நன்கறிவர்.

மக்களுக்குத் தேவையெல்லாம் இந்த எதிரிகளை எதிர்த்துப் போரிடுவதற்கான சரியான, புரட்சிகரமான தத்துவார்த்த, அரசியல் ஸ்தாபன வழிகாட்டல் மட்டும் தான்.இந்தப் பொறி மக்களைப் பற்றிக்கொண்டால் மீண்டும் ஒரு பெருங்காட்டுத் தீ மூளும்.

இதைத் தடுப்பதுதான் அனைத்து சமரசவாதிகளின் நோக்கம்.இவர்கள் எங்கிருந்தாலும் இந்த ஒரே குறிக்கோளுக்காகவே பாடுபடுகின்றனர். இதனால் இச்சமரசவாதிகளைத் தனிமைப்படுத்தாமல் புரட்சிகர வெகுஜன மக்கள் திரளை விடுதலைப் புரட்சியின் பக்கம் வென்றெடுக்க முடியாது. அதிகாரப் பகிர்வு வழியை ஒரு அரசியல் போக்கு என்ற வகையில் முறியடிக்காமல், பிரிவினைக் கோரிக்கையின் மீது மீண்டும் ஒரு முற்போக்கு தேச விடுதலை இயக்கத்தைக் கட்டியமைக்க முடியாது. இதை அரசியல் ரீதியில் சாதிக்காமல் ஏகாதிபத்தியவாதிகளோடும், இந்திய விரிவாதிக்க அரசோடும், சிங்களத்தோடும் தீர்மானகரமான முறிவை ஏற்படுத்த முடியாது.இத்தகைய ஒரு முறிவு ஏற்படாமல் ஈழவிடுதலைப் புரட்சி பரந்துபட்ட மக்களைத் தழுவுவது என்பது சாத்தியமில்லை.எனவே கூட்டமைப்பின் அணியில் இணையும் அனைத்து சமரசவாத தமிழினத் துரோகிகளின் செல்வாக்கை தடுத்து நிறுத்தி, புரட்சிகர ஈழ மக்களை, எதிரிகளுக்கெதிராக விடுதலைப் புரட்சியில் ஊன்றி நிறுத்த பின்வரும் முழக்கங்களின் கீழ் அணிதிரளுமாறு அறை கூவல் விடுக்கின்றோம்.

* அன்ரன் பாலசிங்கத்தின் ‘அகசுய நிர்ணய உரிமை’ அதிகாரப் பகிர்வே!

*அதிகாரப்பகிர்வு என்பது அரசியல் விடுதலை அல்ல அடிமைத்தனமே!

* நமது விடுதலைக் கோரிக்கை பிரிந்து செல்லும் உரிமையே!

* மாகாணசபை, இடைக்கால அதிகார சபை அனைத்தும் அடிமைத்தீர்வே!

* ஜனநாயகத் தீர்வுக்கு வழி, தமிழ்பேசும் மக்களிடையேயான சர்வஜன வாக்கெடுப்பே!

* ஆறாவது திருத்தச்சட்டத்தை நீக்கவும்,இந்திய இலங்கை ஒப்பந்தத்தைக் கிழித்தெறியவும் போராடுவோம்!

* அமெரிக்க ஏகாதிபத்திய, இந்திய விரிவாதிக்க அரசுகளின் அடியாளான கூட்டமைப்பைத் தனிமைப்படுத்துவோம்!

* தமிழ்பேசும் மக்கள் வேண்டும் அரசியல் தீர்வு, என்ன என்பதை அறிய கூட்டமைப்பு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றைக் கோரினால் ஒழிய,
அனைத்துத் தேர்தல்களையும் புறக்கணிப்போம்!

* பிரிந்து செல்லும் உரிமையை உயர்த்திப்பிடித்து முற்போக்கு தேசவிடுதலை அமைப்பைக் கட்டியமைப்போம்!

* மலையக இஸ்லாமியத் தமிழர்களை விடுதலைப் புரட்சியில் ஐக்கியப் படுத்துவோம்!

* மலையக, இஸ்லாமியத் தமிழர்கள், மற்றும் சிங்கள மக்கள் மீதான சிங்களத்தின் ஒடுக்குமுறையை எதிர்த்து குரல் கொடுப்போம்,
அவர்களின் பிரதேச சுயாட்சி உரிமைகளுக்காகப் போராடுவோம்!

* சிங்கள ஜனநாயக சக்திகளை ஈழத் தமிழர்களின் பிரிந்து செல்லும் உரிமையை அங்கீகரிக்கக் கோருவோம்!

* உலகத் தொழிலாளர்களுடனும் ஒடுக்கப்பட்ட தேசங்களுடனும் ஒன்றுசேருவோம்!
                                            






புதிய ஈழப் புரட்சியாளர்கள்  
ஜனவரி2012

Thursday 12 January 2012

On LLRC Report: படிப்பினை மற்றும் பரஸ்பர இணக்கத்துக்கான ஆணைக்குழுவின் அறிக்கை பற்றிய ஒரு பரிசீலனை.

படிப்பினை மற்றும் பரஸ்பர இணக்கத்துக்கான ஆணைக்குழுவின் அறிக்கை பற்றிய ஒரு பரிசீலனை.

சிங்களத்தை நன்கறிந்த ஈழத்தமிழ் மக்களுக்கும், புரட்சிகர ஜனநாயகச் சக்திகளுக்கும், இந்தப் படிப்பினை மற்றும் பரஸ்பர இணக்கத்துக்கான
ஆணைக்குழு (Lession Learnt and Reconciliation Commission- LLRC) வின் அறிக்கை ஒரு கண்துடைப்பு என்பதை கட்டுரை எழுதி விளக்க வேண்டிய அவசியம் இல்லை.

போர்க்குற்றம் இழைத்த சிங்களத்தை தண்டிக்க வேண்டுமென உலக மக்கள் கோரியபோது, ஐநா சபை சிங்களத்தையே அவ்வாறு ஒரு விசாரணையை நடத்துமாறு கோரியது. அமெரிக்காவும் அதையே கோரியது. ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகளும் அதையே கோரினர். ஆக ஐநா சபையின் அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகளின் வேண்டுகோளுக்கமைய சிங்களம் படிப்பினை மற்றும் பரஸ்பர இணக்கத்துக்கான ஆணைக்குழு (Lession Learnt and Reconciliation Commission- LLRC) வின் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கை போர்க்குற்றம் தொடர்பில் இரு அடிப்படைக் கோட்பாடுகளில் ஆதாரப்பட்டு நிற்கிறது.

1. இந்த யுத்தம் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து பொதுமக்களை விடுவிப்பதற்கான மனித நேய நடவடிக்கை.

2. மனித நேய நடவடிக்கையில் நாம் பயங்கரவாதிகளுடன் போரிட்டோம். பயங்கரவாதிகளான புலிகள் மனித உயிர்களுக்கு மதிப்பளிக்காத அரசு
சாராத அங்கத்தவர்களாவர். இதனால் அரசுகளுக்கு எதிராக நடக்கும் யுத்தங்களில் கடைப்பிடிக்க வகுக்கப்பட்ட சர்வதேச மனிதாபிமான சட்டவிதிகளை (International Humanitarion Laws) இத்தைகைய போர்களுக்கு பொருத்தக் கூடாது.

இந்தக் கோட்பாடுகளின் மூலகர்த்தாக்கள் சிங்களமோ அல்லது பக்ச பாசிஸ்டுக்களோ அல்ல. மாறாக பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் புஷ், சென்னி, ரம்ஸ்பீல்ட், பாசிஸ்ட்டுக்கள் வகுத்தளித்து கடைப்பிடித்த கோட்பாடுகள் தான் இவை. ஆப்கானிஸ்தானிலும். ஈராக்கிலும் பயன்படுத்தப்பட்டவைதான் இவை. பயங்கரவாதிகளை சர்வதேச மனிதநேயச் சட்டவிதிகளுக்கு உட்பட்டு நடத்தக் கூடாது என்ற அடிப்படையில் தான் நாடுகடந்த வதை முகாம்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் ஒன்றுதான் 10 ஆண்டு நிறைவு கண்ட, கியூபா, குவாண்டனோமாவில் அமைக்கப்பட்ட டெல்டா 4 என்கிற வதை முகாமாகும். தேர்தலில் அளித்த வாக்குறுதியைக் கூடக் காற்றில் பறக்கவிட்டு ஒபாமா அந்த வதை முகாமைக் கூட மூடவில்லை.

LLRC அறிக்கைக்கு மேலாக எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாதென ஐ.நா கருதுவதாக இன்னசிற்றி பிரஷ் (Innercity Press),கருத்து வெளியிட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் பிரளயம் ஆரம்பிப்பதற்கு முன்பே, பக்‌ச பாசிஸ்டுக்களுக்கு எதிரான போர்க்குற்ற இயக்கத்தை ஒபாமாவையும், ஐநாவையும் சார்ந்து நின்று நடத்தக் கூடாது, மாறாக உலகத் தொழிலாளர்களையும் ஒடுக்கப்பட்ட தேசங்களையும் சார்ந்து நின்று நடத்த வேண்டுமென நாம் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றோம். இதற்கு மாறாக ஒபாமாவினதும் ஏகாதிபத்தியவாதிகளினதும் `கவனத்தை ஈர்க்க` ஐநாவுக்கு நீதிப்பயணம் நடத்தியவர்கள், நடத்துகிறவர்கள் இன்று மக்களை நடுத்தெருவில் விட்டுவிட்டார்கள். எந்த ஒபாமாவினதும் ஐநாவினதும் கோட்பாடுகளின் அடிப்படையில் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதுவோ அவர்களிடம் நீதிகேட்கிற போலிப் போராட்டங்களின் போக்கிரித் தனமும் அப்பலமாகிவிட்டது. இவர்களை நம்பி இவர்களின் பின்னால் அணிதிரண்ட மக்களின் கதை மண்குதிரையை நம்பி கடற்பயணம் செய்த கதையாகிவிட்டது.

இவ்வருட மாவீரர் தினத்தன்று வானொலி நிலையமொன்றுக்கு கருத்துரை வழங்கிய கவிஞர் திரு காசி ஆனந்தன் அண்ணன் அவர்கள் இலங்கையில்
ஈழத்தமிழர்களுக்கு நடந்ததை, போர்க்குற்றமாக மட்டும் குறுக்கக் கூடாது. அது ஒரு தேசிய படுகொலையாகும் எனப் பிரகடனம் செய்தார். இதை
எதிர்த்து தமிழீழ மக்கள் போராடுவதற்கு இலங்கையிலுள்ள நிலைமைகள் தடையாகவும் அச்சுறுத்துவனவாகவும் உள்ளன. எனினும் மக்கள்
போராடுவார்கள், தமிழீழம் மலர்ந்தே தீரும்……… அதற்கு தமிழ்நாட்டிலும் புலம் பெயர் நாடுகளிலும் மற்றும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் பக்கபலமாக இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார்.

அதே வானொலி நிகழ்ச்சியில் சொற்பொழிவாற்றிய வை.கோ தமிழீழத்தில் இன்று போராடக் கூடிய நிலைமையில் தமிழ்மக்கள் இல்லை என்றும்
அவர்களுக்காக தமிழ்நாட்டு மக்களும், புலமபெயர் தமிழர்களுமே போராட வேண்டுமென்றும் கூறினார். மேலும் போர்க்குற்ற விசாரணை கோரி
அமெரிக்காவை நோக்கியும், ஐநாவை நோக்கியும் நடக்கும் போராட்டங்கள் ஊக்கம் பெற்று வருவதாகவும் அப்பாதையில் நாம் தொடர்ந்தும் முன்னேற
வேண்டுமென்றும் `அறைகூவல்` விட்டார்.

மாதகலிலும், கீரிமலையிலும், யாழ்பல்கலைக்கழகத்திலும், வல்வெட்டித்துறையிலும், மலையகத்திலும், மன்னாரிலும், யாழ்ப்பாணத்திலும், காத்தான்குடியிலும் கடற்றொழிலாளர்களும், விவசாயிகளும், தாய்மார்களும், மாணவர்களும், மலையகத் தொழிலாளர்களும் முஸ்லீம் மக்களும் நடத்திய போராட்டங்கள் காசி அண்ணனின் கூற்றை சரியென்றும், வைகோவின் கூற்றைப் பிழையென்றும் நிரூபிக்கின்றன.

`தமிழீழத்தில் தமிழ்மக்கள் போராடும் நிலையில் இல்லை` என்பது கோட்பாட்டு அடிப்படையில் இருவகையில் தவறானதாகும். ஒன்று
அடக்குமுறையை எப்போதும் மக்கள் எதிர்ப்பார்கள். ஸ்பாட்டகஸ் தலைமையில் அடிமைகள் கூடக் கலகம் செய்திருக்கிறார்கள். இரண்டாவது
தமிழ்மக்களின் விடுதலைகாக தமிழீழ மக்கள் தான் போராட வேண்டும். தமிழ்நாட்டுமக்களோ புலம் பெயர் தமிழர்களோ போராடமுடியாது. இவ்வாறான ஒரு தப்பெண்ணத்தை தமிழீழ மக்கள் மத்தியில் வளர்த்து புலம் பெயர் தமிழர்களை நோக்கி அவர்களை கையேந்தி நிற்க வைக்கவும் கூடாது.

`ஐநாவே நீதி வழங்கு! இந்தியாவே தீர்வு வழங்கு!` என முனகும் அத்தனை சமரசவாதிகளும் ஒரு சேர ஈழத்தில் தமிழ்மக்கள் போராடக்கூடிய நிலையில் இல்லை என்று ஒப்புவித்து வருகின்றனர். இதற்கான காரணங்களில் ஒன்று ஈழத்தமிழர்களின் போர்க்குணத்தை மழுங்கடிப்பது. இரண்டு ஈழத்தமிழர்கள் தமக்காக தாமே போராடினால் தமது சொந்த நலன்களை உத்தரவாதம் செய்யவல்ல மண்ணின் விடுதலைக்கான முழக்கங்களை முன்வைத்துப் போராடுவார்கள். இதற்குப்பதில் போராட்டங்களை சமரசவாதிகள் தத்தெடுத்துக் கொண்டால் அவற்றை ஏகாதிபத்தியவாதிகளினதும் இந்திய விரிவாதிக்கவாதிகளினதும் நலன்களுக்கமைந்த சீர்திருத்த வழியில் சீரழித்து விடலாம் என்பதே இவர்களது திட்டமாகும்.

கூட்டமைப்பு கடந்த சிலமாதங்கள் வரை போர்க்குற்றம் குறித்து வாயே திறக்கவில்லை. போர்க்குற்றம் குறித்து பேசுவதில்லை என ராஜ பக்‌சவுடன் உடன்பாடுகண்டிருப்பதாகக் கூட சில புலம் பெயர்தமிழர் அமைப்புக்களால் குற்றச்சாட்டவும்பட்டது. `காணிநிலம் வேண்டும் –காக்க பொலிஸ் அதிகாரம் வேண்டும்` என பராக்கிரமன் ராஜபக்‌சவிடம் வேண்டிய அதிகாரப் பிச்சை கிடைக்காமல் போக யுத்தக் குற்றப்பிரச்சனையை ஒரு பேரப்பொருளாக   இப்போது பயன்படுத்துகிறது. அப்போதும்கூட அயோக்கியத்தனமாக, இருதரப்பும் இழைத்த யுத்தக் குற்றங்களுக்கும் அனைத்துலக விசாரனை தேவை எனக் கூறுகிறது. இவ்வாறு இருதரப்பு மீதும் விசாரனை நடத்தக் கோருவது கூட்டமைப்பு மட்டுமல்ல. பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் புலம் பெயர்நாட்டுப் பேரவைகளை உள்ளடக்கிய உலகத் தமிழ்ப் பேரவை ஆகியவையும் தான்.

இதுவேதான் சனல் 4, சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைக் கண்காணிப்பகம் மற்றும் ஏகாதிபத்தியவாதிகளினதும் நிலைப்பாடாகும்.


தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான பிரிவினை இயக்கத்தை ஏகாதிபத்தியவாதிகளுக்கும், இந்திய விரிவாதிக்கவாதிகளுக்கும் விற்றுப்பிழைக்கும் இச்சமரசக் கும்பலுக்கு, மீண்டும் புலிகள் எழுந்து வந்து விடுவார்களோ என்ற பயபீதி இன்னமும் உள்ளது. அவ்வாறு வந்தால் அவர்களைக் கூண்டில் அடைக்கவே புலிகள் மீது யுத்தக் குற்ற விசாரனை வேண்டுமென அரசியல் பிரச்சாரத் தயாரிப்பு செய்து வருகிறது.

மேலும் விடுதலைப் புலிகள் மீது யுத்தக் குற்றச்சாட்டைச் சுமத்துவது அவர்கள் மீதான தடையை விதிப்பதற்கு வலுவான காரணமாக அமையும்.
எனவே விடுதலைப்புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாக இருந்து, அவர்களின் அரசியல் நடவடிக்கைகள் முடக்கப்பட்டால் அது தமது சமரசச்
சவாரியை தமிழ்மக்கள் மீது நடாத்த வசதியாக இருக்கும் எனவும் இக்கும்பல் கணக்குப் போடுகிறது.

எமது சொந்தத் தவறுகளை நாம் திருத்திக் கொள்வதற்கு நமது கடந்த காலத்தை சுயவிமர்சன நோக்கில் பரிசீலனை செய்ய வேண்டும். இது எமது மக்களின் பெயரால் எமது மண்ணின் பெயரால் எமது மாவீரர்களின் பெயரால் நாம் ஏற்றுக் கொள்கிற கடமையாகும். அந்தப் பொறுப்பையோ
பணியையோ நாம் ஒருபோதும் புறக்கணிக்கவில்லை. ஆனால் இந்த சுயவிமர்சன பரிசீலனையும், எம்மை ஏகாதிபத்தியவாதிகளின்
குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதும் ஒன்றல்ல.

போலிச்சுதந்திரமடைந்த காலமுதல் 1977 வரையான முப்பது ஆண்டுகள் ஈழத்தமிழர்களின் அரசியல் தலைமை தரகு முதலாளித்துவ சமரசவாத
அரசியல் தலைமையாக இருந்தது. அவர்கள் பாராளுமன்ற பாதையைக் கடைப்பிடித்தனர். தேவைப்பட்ட நேரங்களில் எல்லாம் சிங்களப் பேரினவாதக் கட்சிகளோடு கூட்டமைத்து, கூட்டரசாங்கம் அமைத்து உறவுக்குக் கைகொடுக்கத் தயங்கவில்லை. அகிம்சையை தமது யுத்த தந்திரப் பாதையாகக் கொண்டிருந்தனர். காந்தி, சமஸ்டி இயக்கத்துக்கு ஆதர்ஸ புருசனாக விளங்கினார். எஸ். ஜே.வி. செல்வநாயகம் ஈழத்துக் காந்தி என்று அழைக்கப்பட்டார். இதன் தொடர்ச்சிதான் இன்றைய கூட்டமைப்பும், நாடுகடந்த அரசாங்கமும், உலகத் தமிழர் பேரவையும், தமிழ்க் கத்தோலிக்கப் பாதிரிகளும் ஆவர்.

இந்த அளவுக்கு ஆழ வேரூன்றிய ஏகாதிபத்திய சார்பு சமரசவாத, சந்தர்ப்பவாத அகிம்சா இயக்கம் சமஸ்டி இயக்கமாகும். இதனால் இந்த இயக்கத்தின் வாரிசாக தளபதி பிரபாகரனோ, தமிழீழ விடுதலைப் புலிகளோ, ஆயுதப் போராட்டமோ தோன்றியிருக்க முடியாது.கல்லில் இருந்து குஞ்சு பொரிக்காது!

தமிழீழ விடுதலைப் புலிகளினதும் ஆயுதப் போராட்டத்தினதும் தோற்றுவாய் தமிழ் மக்கள் மீதான சிங்களத்தின் அரச பயங்கரவாத அடக்குமுறையே ஆகும். எனவே ஆயுதப் போராட்டத்தின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் விளைவுகளுக்கும் முழுப் பொறுப்பேற்க வேண்டியது சிங்களமே தவிர தமிழ் மக்களோ, தமிழீழ விடுதலைப் புலிகளோ அல்ல.

காலனியாதிக்க ஆட்சியில் சிங்களத்துடன் எம்மைக் கட்டாயமாக இணைத்து, போலிச் சுதந்திரம் முதல் முள்ளிவாய்க்கால் வரை சிங்களத்தைப் போசித்து வளர்த்து, முள்ளிவாய்காலுக்குப் பின்னாலும் தமிழீழத் தேசத்தைச் சூறையாட வெறிகொண்டு அலையும் ஏகாதிபத்தியவாதிகளுக்கும், இந்தியவிரிவாதிக்கவாதிகளுக்கும் எம்மைக் குற்றஞ்சாட்டி தமது சுண்டுவிரலை நீட்ட எந்த யோக்கியதையும் கிடையாது. உரிமையும் தகுதியும் கூடக் கிடையாது.

எனவே இருதரப்பிற்கும் யுத்தக்குற்ற விசாரனை என்கின்றவர்கள் சிங்களத்தின் யுத்தக் குற்றங்களை ஒருவழியில் நியாயம் செய்பவர்களே ஆவர். ஏகாதிபத்திய இந்திய விரிவாதிக்க விசுவாசத்தை இந்தப் பரந்து விரிந்த போலி ஜனநாயகத்தால் மூடிமறைத்து விடலாமென இந்த மூடர்கள் இனிமேலும் நம்பக்கூடாது.

இந்த LLRC அறிக்கையில் ஆங்காங்கே சில நட்சத்திரங்கள் மின்னுவதாக கண்டறிந்த சிந்தனைச் சுரங்கங்களில் NGOக்காரர்கள் முக்கியமானவர்களாவர். உள்ளூர் அரசாங்கங்களைச் சாராமல் ஏகாதிபத்திய அரசுகளையும் ஐநா சபையையும் சார்ந்து அவர்களது நிதியிலும்
கொள்கைத்திட்டத்திலும் இயங்கும் விதேசிய ஊடுருவல் நிறுவனங்களே இந்த NGOக்கள் ஆகும். நக்கித்தின்னும் பிழைப்புக்கு நன்றிக்கடனாக
ஏகாதிபத்தியவாதிகளும் ஐநாவும் அங்கீகரித்த LLRC அறிக்கையில் சொக்கி மகிழ இக்கும்பல் விழைவது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. இவர்களோடு
கூடவே ரொட்ஸ்கிய திரிபுவாதிகளும் சேர்ந்து கொண்டது தற்செயலானது அல்ல. ஐரோப்பிய நாடொன்றின் தொலைக்காட்சியில் கலந்து கொண்ட ஒரு பிரகிருதி தமிழ் மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த அறிக்கையை தமிழ் மொழியாக்கம் செய்து பரவலாக விநியோகிக்க
வேண்டுமெனவேறு உளறிக் கொட்டியது.

இவர்களது கோரிக்கை எல்லாம் LLRC அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்ற சிங்களத்தை நிர்ப்பந்திக்க வேண்டும் என்பதாகும்.

சிங்களம் இப்பரிந்துரைகளை நிறைவேற்றுமா என்பதற்கு முன்னால் இந்தப் பரிந்துரைகளை முதலில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்

LLRC recommendations
1. Responding to the Channel 4 programmes
2. Armed groups in operation
3. Heavy militarization in North – East
4. Land disputes and alienation
5. Devolution of powers.

முதலாவதாக இப்பரிந்துரைகள் இலங்கையில் ஈழத்தமிழர்களின் தனித்துவத்தை அடையாளம் காட்டவில்லை. மாறாக ஈழத்தமிழர்களை இலங்கை மக்களின் ஒரு சமூகப் பிரிவினராகக் காண்கிறது. இப்பரிந்துரைகள் அப்பிரிவினரின் அதிருப்தியின் தொகுப்பாகும். இந்த அதிருப்திகளைப் போக்குவதன் மூலம் இனப்பகைமைக்கு முடிவு கட்டி பரஸ்பர இணக்கத்தை ஏற்படுத்த முடியும் என இவ்வறிக்கை பரிந்துரைக்கிறது. ஒரு வேளை இப்பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டாலும் கூட அது இலங்கையின் தமிழ்த்தேசிய இனப்பிரச்சனையை தீர்ப்பதாக அமையாது. ஏனெனில் தமிழ்த்தேசிய இனப்பிரச்சனை என்பது சுயநிர்ணய உரிமை சம்பந்தமான பிரச்சனையாகும். இதன் மூலம் இந்த ஆணைக்குழுவில் நம்பிக்கை வைத்து தமது பிரச்சனைகளை முறையிட்ட மக்களுக்கு இந்த ஆணைக்குழு துரோகம் இழைத்துள்ளது.

இறுதியாக இப்பரிந்துரைகளாவது நடைமுறைக்கு வருமா என்று கேட்டால் அதுவும் கூட நடைபெறாது. இராணுவ மயமாக்கல் என்பது தேசியப்
பாதுகாப்புக்கான அச்சுறுத்தலில் இருந்து தேசத்தைக் காப்பாற்றுவதற்கானது என கோதபாய ராஜபக்‌ச கூறுகிறார். புலிகளும், ஜே.வி.பி இல் இருந்து பிரிந்த குழுவினரும் இணைந்து ஒரு ஆயுதப்போராட்டத்துக்கு திட்டமிடுவதாக உயர் கல்வி அமைச்சர் கூறுகின்றார்..ஆக இந்தப் பரிந்துரை தேசியப் பாதுகாப்புக்கு எதிரானதாகும்!!. நிலவிநியோகம் அதிகாரப்பரவலாக்கம் என்பதை சிங்களம் அடியோடு நிராகரித்து விட்டது. LLRC அறிக்கையின் அடிப்படையில் சனல் 4 ஆவணத்தின் போர்க்குற்றச்சாட்டு, கோட்பாட்டு ரீதியில் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டு விடப்பட்டதாகும். மென்மேலும் இராணுவ மயமாகிவரும் சிங்களத்தின் அங்கீகரிக்கப்படாத ஒரு அதிகாரவடிவமாக துணை இராணுவக் குழுக்கள் இருந்தே தீரும். இதற்கு மேல் பரிந்துரைகளை
நிறைவேற்றுவதற்கு என்ன இருக்கிறது.

எனவே `ஐ.நாவே நீதி வழங்கு! இந்தியாவே தீர்வுவழங்கு!!` என முனகும் சமரசவாதிகள் அரைமனதோடும், `இலங்கைப் பற்றுமிக்க`
`அதிகாரப்பரவலாக்க` சந்தர்ப்பவாத சமரசவாதிகள், கலைப்புவாதிகள் முழுமனதோடும் LLRC பரிந்துரைகளை நிறைவேற்று எனப் பிரச்சாரம் செய்து ஜனநாயக இயக்கத்தை திசைதிருப்பத் தொடங்கிவிட்டனர்.

மாதகலிலும், கீரிமலையிலும், யாழ்பல்கலைக்கழகத்திலும், வல்வெட்டித்துறையிலும், மலையகத்திலும், மன்னாரிலும், யாழ்ப்பாணத்திலும், காத்தான்குடியிலும் கடற்றொழிலாளர்களும், விவசாயிகளும், தாய்மார்களும், மாணவர்களும், மலையகத் தொழிலாளர்களும் முஸ்லீம் மக்களும் நடத்திய போராட்டங்கள் அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பது தமிழ்த் தேசிய இனப்பிரச்சனை தீர்வுகாணப்படாமல் இருப்பதாகும்.தமிழ்த்தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வை - பரஸ்பர இணக்கத்துக்கான ஏற்பாட்டை - ஆணைக்குழுக்களைக் கொண்டு தீர்மானிக்க முடியாது.வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களிடையேயான சர்வ ஜன வாக்கெடுப்பின் மூலமே தீர்மானிக்க முடியும்.தீர்மானிக்க வேண்டும்.

இத்தகைய ஒரு நீதியான ஜனநாயகக் கோரிக்கைக்காக சிங்களத்தையும், இந்திய விரிவாதிக்க அரசையும், ஏகாதிபத்தியவாதிகளையும் எதிர்த்துப்
போராட கூட்டமைப்போ, சமூக தேசியவெறியரான ஜே.வி.பி கட்சியினரோ, கலைப்புவாத ரொட்ஸ்கிய குழுக்களோ, புலம் பெயர் பேரவைகளோ தயாராக இல்லை.

எனவே சிங்களத்தையும், இந்திய விரிவாதிக்க அரசையும், ஏகாதிபத்தியவாதிகளையும் எதிர்த்து முற்போக்கு தமிழீழ தேசவிடுதலை இயக்கத்தைக் கட்டியெழுப்ப பின்வரும் முழக்கங்களின் கீழ் அணிதிரளுமாறு அறைகூவுகின்றோம்.

* ஏகாதிபத்தியவாதிகளே, உலகமறுபங்கீட்டில் இலங்கையைப் பங்குபோட ஈழத்தமிழரைப் பலிக்கடா ஆக்காதீர்!


* உலக முதலாளித்துவ பொதுப் பொருளாதார மந்தத்துக்கு தீர்வுகாண தமிழீழ தேசத்தை சூறையாடாதீர்!


* ஐ.நா.சபையே, பொதுநலவாய நாடுகள் மன்றமே யுத்தக் குற்ற அரசு சிறீலங்காவின் உறுப்புரிமையை ரத்துச் செய்!


* யுத்தக் குற்றப் பங்காளி இந்திய விரிவாதிக்க அரசே, ஈழத்தமிழர் பிரச்சனையில் தலையிடாதே!


* சிங்களமே, தமிழ்த் தேசியப் பிரச்சனைக்கு தீர்வுகாண ஆணைக்குழுக்கள், தெரிவுக்குழுக்கள் அமைத்து வழக்கமாக ஆடும் நாடகத்தை நிறுத்து!


* வடக்கு கிழக்கு வாழ் தமிழ்பேசும் மக்களிடையே சர்வஜன வாக்கெடுப்பு நடத்து!

புதிய ஈழப்புரட்சியாளர்கள்.
ஜனவரி 2012