Wednesday 22 July 2020

கதவைத் தட்டுகிறது அடுத்த `கறுப்பு ஜூலை`


காப்பரண் போலித் தேர்தல் அல்ல,
பொது வாக்கெடுப்பே!

அன்பார்ந்த ஈழ தேச மக்களே,


கறுப்பு ஜூலையின் 37வது நினைவாண்டு இன்று, ஜூலை 23, 2020ஆகும்.
 
இலங்கையின் கறுப்புச் சுதந்திர பாராளமன்றத்தின் 16வது பொதுத் தேர்தல் ஓகஸ்ட் 5 ஆகும்.

இந்த இரண்டு நிகழ்வுகளையும் அவற்றின் தனி அம்சங்களையும், அவற்றின் பொது இணைப்பையும், இது நிறைவேறும் குறிப்பான சர்வதேசச் சூழ்நிலையையும் ஆய்ந்தறிந்து, கறுப்பு ஜூலை 37 ஆம் ஆண்டு நினைவாக, ஓகஸ்ட் 5 பொதுத் தேர்தலில் ஈழதேச மக்கள் எடுக்க வேண்டிய நிலை என்ன என்பதை கண்டறிவது இத் தொடர் கட்டுரையின்  குறிக்கோள் ஆகும்.

பாகம் (1)

கறுப்பு ஜூலை 1983

எழுபதுகளில் தோன்றிய பிரபாகரனின் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்,சிங்களத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து தமிழர் தாயகமான தமிழீழ தேசத்தை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.இதன் பொருட்டு தம் தாயகப் பகுதியில் நிலை கொண்டிருந்த சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவத்தை விரட்டியடிக்கும் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தது. 1983ம் ஆண்டு யூலை மாதம் 23 ம் தேதி யாழ்ப்பாணம் பலாலி இராணுவத்தளத்தில் இருந்து வந்த சிங்களப் படையின் வாகனத் தொடர் அணி மீது நடத்திய கண்ணி வெடித் தாக்குதலில் 13 சிங்கள படையினர் பலியாகினர்.இதை ஒரு பொறியாக வைத்து மூட்டப்பட்ட நாடு தழுவிய  தீ தான் கறுப்பு ஜூலை 1983.

இதை விசமத்தனமாக `கலவரம்-Riots' என பொதுவாக கூறிவருகின்றனர். கறுப்பு ஜூலை 1983, இரண்டு சமூகங்களுக்கிடையே தோன்றிய தற்காலிக வன்முறை மோதல் அல்ல.இது அரசதிகாரத்தின் துணையுடன்,படை பலத்துடன், பெரும்பான்மையான சிங்கள மக்களை; அவர்களது பகுதியில் சிறுபான்மையினராக வாழும், ,வட கிழக்குத் தமிழர்,மலையகத் தமிழர், இலங்கைச் சோனகருக்கு எதிராக ஏவி 
கட்டவிழ்க்கப்பட்ட இனவெறிப் படுகொலைத் தாண்டவம் ஆகும்.மேலும் ``கலவரம்`` என்பதன் அடிப்படைக் குணாம்சமான ஏதோ ஒரு அதிகாரம் ஏவி விடுகின்ற கண் மூடித்தனமான அராஜக வன்முறை அல்ல 

கறுப்பு ஜூலையில் நிகழ்ந்தது.``கலகக் காரர்கள்`` வாக்காளர் பட்டியலை வைத்து, தமது இலக்கைத் தேர்ந்து கொண்டார்கள். வர்த்தக இருப்புக்களைக் கண்டறிந்தார்கள்.வாழ் நாள் தேட்டத்தை தீ மூட்டி அழித்தார்கள்.பொலிசார் எண்ணெய் எடுத்துக் கொடுத்தார்கள், படை வீரர்கள் காவல் காத்தனர் ``கலகக் காரர்களை``! தமிழரின் தனிச் சொத்துரிமை மீதான இந்தத் தாக்குதலுக்கு தரகு முதலாளித்துவ வர்க்கம் 

கூட தப்பவில்லை.இவை அனைத்தும் அரசதிகாரத்தின் துணையில் ஏவப்பட்டது.

இலங்கையின் வரலாற்றில் ``கலவரம்`` என்றழைக்கப்படுகின்ற எந்த ஒரு நிகழ்வும், ``கலவரம்`` என்பதன் அடிப்படைக் குணாம்சமான கண் மூடித்தனமான அராஜக வன்முறை கொண்ட தன்னியல்பான சமூக 
மோதலாக ஒரு போதும் இருந்ததில்லை.இவை அனைத்தும் ஆளும் வர்க்கம், அரசதிகாரம், படைபலம் கொண்டு தெளிவான திட்டத்தோடு தூண்டிவிட்டு ஏவப்பட்ட இனப்பகைமை ஆயுதமாகவே இருந்துள்ளன``. 

இது சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறை அசுரக்கரங்களில் ஒரு கரமாக -பிரிக்க முடியாத அங்கமாக இன்றும் இருந்து வருகின்றது.என்றும் இருந்துவரும்.

`நூலைப்போல சேலை தாயைப் போல பிள்ளை` என்கிறோமே, அதுபோல  இந்த ஆயுதம் ஆங்கிலேய காலனிய ஆட்சிமுறையில் இருந்து கற்று, சிங்களம் சுதந்திரமாக கடன் வாங்கிக் கொண்டதாகும்.

1915 இலேயே இது இலங்கைச் சோனகருக்கு எதிராக ஏவப்பட்டது.இதை நமது ``சேர்`` ( பொன்னம்பலம்,இராமநாதன்) தலைவர்களும் இணைந்தே செய்தார்கள். பின்னால் இந்த தமிழ்-சிங்கள ஏகாதிபத்திய தாச தரகர்கள் சுதந்திர புருசர்கள் ஆனார்களே 1948 இல்!, அதற்குப் பின்னால் இது தமிழ்த் தரகர்களுக்கு எதிராக திரும்பியது.

1949 இன் வாக்குரிமைப் பறிப்பில் ஏகாதிபத்திய தாச தமிழ்த் தரகர்களின் ஒரு பிரிவு துரோக நிலையையும், மறு பிரிவு சந்தர்ப்பவாத நிலையையும் எடுத்தது. இதன் விளைவாக சிங்களம் திடப்பட்டது.

1915 இலும் 1949 இலும் நமது தமிழ்த் தலைவர்கள் (ஏகாதிபத்திய தாச சமரசவாத தமிழ்த் தரகர்கள்), எடுத்துக் கொண்ட நிலைப்பாடு ஈழ விடுதலைப் புரட்சியின் மீது விழுந்த முதலாவது வரலாற்றுப் பழியாகும்.ஈழ தேசிய ஒற்றுமையை வேரறுக்கும் இப்பழியை இவர்கள் திட்டமிட்டே செய்தார்கள்.

இவ்வாறான துரோகப் பாத்திரத்தால் திடம் கொண்ட சிங்களம் 1972 இல் ரொட்ஸ்கிய கம்யூனிச விரோதிகளோடு கூட்டமைத்து பெளத்த சிங்கள அரசியல் யாப்பை உருவாக்கியது.இது SLFP சிறீமா அரசாங்கத்தில் நிறைவேறியது.(இது தான் சீன ஏகாதிபத்திய தாச, செந்தில், சிவசேகரம் கும்பல் தேங்காய் உடைக்கும் `தேசிய முதலாளித்துவக் கட்சி`!)

இந்த அரசியல் யாப்பு ஏகாதிபத்திய தாச தமிழ்த் தரகர்களாலும் கூட ஏற்றுக் கொள்ளப்படவில்லை. S.J.V செல்வநாயகம் பதவி விலகினார்.

இது வெறும் உள் நாட்டு நிகழ்வு மட்டுமல்ல, எழுபதுகளில் ஏற்பட்ட உலக ஏகாதிபத்திய பொருளாதார நெருக்கடியும் சார்ந்ததாகும்.

இதனால் மிகவும் நலிந்து போன தமிழ்க் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினரிடம் இருந்து தான் தனி நாட்டுக்கோரிக்கை தர்க்க ரீதியாக, நீதியாக முதலில் எழுந்தது.

தமிழீழக் கோரிக்கை ``தந்தை செல்வாவால்`` முன் வைக்கப்பட்டது என்பது வரலாற்றுப் பொய் ஆகும்.

அதற்கு முன்னரே தமிழீழ விடுதலை இயக்கம் தோன்றி விட்டது. சிவ.ஜோதிலிங்க செம்பாட்டான்கள் இதைக் கண்ணாரக் கண்டும் அதிகார பூர்வ `அரசியல் ஆய்வாளர்` என்கிற மகுடத்துக்காக பொய் 
சொல்லுகின்றனர்.இவ்வாறான பொய்வாளர்களின், பொய் வாழர்களின் பட்டியல் மெய்யாகவே மிக மிக நீளமானது.

இந்த நெருக்கடியில் இருந்து மீள, தமிழ்த் தரகு முதலாளிய வர்க்கம் தவிர்க்க இயலாமல், தம்மை தக்க வைத்துக் கொள்ள கண்டடைந்த வழிதான் 1977 வட்டுக்கோட்டைத் தீர்மானம்.

1915 இல் கலவரம், 1958 இல் கலவரம். 1961 இல் கலவரம், 1977 இல் கலவரம்,1981 இல் மாவட்ட அபிவிருத்திசபை பலிக்களம்,  1983 இல் இனப்படுகொலைக் ``கலவரம்``. இவ்வாறு 68 ஆண்டுகள் அரசியல் அமைப்புச்சட்டம் என்ன சொன்னாலும் இந்த கலவர ஆயுதத்தால் தான் நாடு ஆளப்பட்டு வந்திருக்கின்றது.

மூச்சு விட மக்களுக்கு தேசம் இருந்ததென்றால் அது இந்தப் ``பாசிசப் பிராபகரனின்`` முப்பது ஆண்டுகள் மட்டும் தான்.

முள்ளிவாய்க்கால் முடிந்த கையோடு பக்ச பாசிஸ்டுக்கள் இலங்கைச் சோனகர்களுக்கு எதிராக கலவர ஆயுதத்தை ஏவினர்.

ஒரு ஞாயிறு தினத்தில் சடுதியாக சஹாரான் என்கிற பயங்கரவாதி உயிர்த்தது, அது உலகளவில் பிரபல்யமாகியது, கலவர ஆயுதம் கைவிடப்படவில்லை என்பதற்கான ஆதாரமாகும்.

எவ்வாறு எண்பத்தி மூன்று ஜூலை கலவரக் கிளர்ச்சிக்கு டட்லியில் இருந்து ஜே.ஆர் வரை ஒரு 35 ஆண்டுகால பிரச்சார இயக்கம் இருந்ததோ, அதேபோல 2009 இற்குப் பின்னாலும் ஒரு பிரச்சார இயக்கம் 

ஆரம்பித்தாகிவிட்டது.பிக்கு வர்க்கத்தை ஆதார சமூக சக்தியாகக் கொண்ட இந்த வரலாற்று இயக்கத்தின் ஒரே குறிக்கோள் , ``ஏக்க ரட்டே`` சிங்கள அரசு, சிங்கள நாடு என்பதேயாகும்.

1983 இற்குப் பின்னால் 2009 வரை ``சிங்கள தமிழ்க் கலவரம்`` நடக்கவில்லை என்றால் அதற்குக் காரணம், தளபதி பிரபாகரனின் விடுதலைப் புலிப்படை காப்பரணாக இருந்ததே!

துடைத் தொழித்து விட்டார்கள் துரோகிகள்!

நிராயுத பாணியாக நிற்கிறது ஈழ தேசம்!

பக்ச பாசிசம் அரங்கேற, நாடாள மன்ற ஜனநாயகம் ஏணிப்படியாய் நிற்கின்றது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறும் பக்ச பாசம் வரலாறு காணாத ஏகாதிபத்திய நெருக்கடியின் காலகட்டத்தில், உலக மறுபங்கீட்டு மூன்றாம் பெரும் போர் முகிழ்க்கும் தருணத்தில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுகின்றது.

அடுத்த கறுப்பு ஜூலை கதவைத் தட்டுகின்றது.
காப்பரண் போலித் தேர்தல் அல்ல,
பொது வாக்கெடுப்பே!

(தொடரும்)


Thursday 15 November 2018

மாவீரர் நாள் முழக்கங்கள்-2018


மாவீரர் நாள் முழக்கங்கள் - 2018

ஏகாதிபத்தியவாதிகளே:

அமெரிக்க இந்திய முகாமோ, ரசிய சீன முகாமோ
இலங்கையை மறுபங்கீடு செய்ய ஒருபோதும் அனுமதியோம்!

இந்திய விரிவாதிக்கத்தின் தமிழகத் தரகு - இனமானத் தூண்களே:

ஈழத்தமிழர் பிரச்சனையில் இனப்படுகொலை இந்திய அரசு
தலையீடு செய்ய அழைப்பு விடாதீர்!
``தொப்புள்க் கொடி உறவுகளே``,
இந்திய இலங்கை ஒப்பந்தத்தைக் கிழித்தெறியப் போராடுவீர்!

சிங்களமே:

`ஒரே நாடு` பேசி ஒட்டுமொத்த நாட்டையும் அந்நியருக்கு தாரை வார்க்காதே!
அனைத்து அந்நிய அநியாயக் கடன்களையும் ரத்துச் செய்!
அந்நிய மூலதன உலகமயத்தைக் கைவிடு,  உள்ளூர் உற்பத்திக்கு வழிவிடு!
சிங்கள விவசாயிகளுக்கு நிலம் வழங்கு!
மலையக மக்களுக்கு மாநிலம் வழங்கு!
முஸ்லிம் மக்களுக்கு சுயாட்சி வழங்கு!
இந்திய இலங்கை ஒப்பந்தம் உள்ளிட்ட நாட்டின் `இறையாண்மைக்கு` எதிரான
அனைத்து அந்நிய ஒப்பந்தங்களையும் கிழித்தெறி!

யுத்தத்தால் கொன்றொழித்த தேசத்தின் வாழ்வாதாரப் பிரச்சனைகளைத் தீர்!
தமிழ் விவசாயிகளின் தனியார் நிலத்தைத் திருப்பிக்கொடு!
அனைத்து யுத்த-அரசியல் கைதிகளையும் விடுதலை செய்!
ரோகண விஜேவீராவுக்கு பதில் சொல்!

புலம் பெயர் ஏகாதிபத்திய தாச, இந்தியக் கைகூலிகளே:

புலிக்கோடு போட்டு `தமிழ்த் தேசியம்` பேசி, ஈழவிடுதலைப் புரட்சியைக் காட்டிக் கொடுக்காதீர்!

தமீழீழ மக்களே:

அனைத்து `தமிழ்க் கட்சி` ஒட்டுக்குழுக்களையும், NGO களையும் நிராகரிப்பீர்!
அனைத்துத் தேர்தல்களையும் புறக்கணிப்பீர்,
பொது வாக்கெடுப்புக்கு போராடுவீர்!

மாண்ட நம் மக்கள் வாழ்க!                                                             மாவீரர் நாமம் வாழ்க!!
இறுதி வெற்றி ஈழமக்களுக்கே.

புதிய ஈழப்புரட்சியாளர்கள். Eelam New Bolsheviks
(14-11-2018)

Monday 23 July 2018

கறுப்பு ஜூலை 35ம் ஆண்டு அரசியல் அறிக்கை

கறுப்பு ஜூலை 35ம் ஆண்டு அரசியல் அறிக்கை


மாவீரன் செல்லக்கிளிக்கு சமர்ப்பணம்


சுய நிர்ணய உரிமைக்கான பொதுஜன வாக்கெடுப்புக்கு போராடுவோம்!

23-07-2018 இன்றைய தினம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க திண்ணைவேலி கெரில்லா இராணுவத்தாக்குதலின் 35 ஆம் ஆண்டு நினைவு தினம் ஆகும்.24-07-2018 கறுப்பு ஜுலையின் 35 ஆம் ஆண்டு நினைவு தினம் ஆகும்.

சட்டப்புலமையாளர்களின் சர்வதேச ஆணையத்தின் உறுப்பினரும் நீதிபதியுமான Paul Sieghart தனது Sri Lanka: A Mounting Tragedy of Errors எனும் நூலில் பின்வருமாறு கூறுகின்றார்,

''Clearly this (July 1983 attack) was no spontaneous upsurge of communal hatred among the Sinhala people – nor was it as has been suggested in some quarters, a popular response to the killing of 13 soldiers in an ambush the previous day by Tamil Tigers, which was not even reported in the newspapers until the riots began. It was a series of deliberate acts, executed in accordance with a concerted plan, conceived and organized well in advance''.

(Paul Sieghart of the International Commission of Jurists stated in Sri Lanka: A Mounting Tragedy of Errors, two months after the riots. Wikipidia)

அதாவது July 1983 attack திண்ணைவேலித் தாக்குதலுடன் எந்த சம்பந்தமும் இல்லாமல், (அரசும் அதிகாரபீடமும்) முன்கூட்டியே திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்டிருந்த திட்டத்தின் வெளிப்பாடாகும்.

அக்கம் பக்கமான இவ் இரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வுகளின் 35ஆம் ஆண்டின் நினைவை ஏந்துகின்ற இன்று -1983 உள் நாட்டு யுத்தம் 2009 இல் வித்தாகிப் போய் ஒன்பது ஆண்டுகள் கடந்து போன இன்று, பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக வட கிழக்கில் குவிக்கப்பட்டிருகின்ற-சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவம் விலக்கப்படமாட்டாது என்கிற அரச அறிவிப்பு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

இந்த மூன்று சம்பவங்களுக்கும் இடையிலுள்ள இணைப்பைத் தர்க்கித்து அறிந்து ஈழத் தமிழ்ப் பிரச்சனைக்கு தீர்வு காண வழி கோலுவதே இவ் அறிக்கையின் குறிக்கோள் ஆகும்.

ஈழத் தமிழர் மீதான அடக்குமுறை,ஒடுக்கும் தேசம்-ஒடுக்கப்படும் தேசம் என்ற வகைப்பட்ட தேசிய ஒடுக்குமுறையாக பரிணமித்தது அதிகாரக் கைமாற்றத்துக்கு-போலிச் சுதந்திரத்துக்கு பின்பாகும்.மேலும் இந்த ஒடுக்குமுறை எப்போதும் வன்முறை ஆகவே இருந்து வந்தது.இந்த வன்முறை மூன்று வடிவங்களில் கட்டவிழ்க்கப்பட்டது.

1) ஆயுதமேந்திய அரச படைகளின் வன்முறை.

2)காடையர்களை ஆயுதம் தரித்த காவலாளிகளாக்கி தாக்குவது,

3) ஆயுதப் படையின் பக்கத் துணையுடன் வெகுஜனங்களையே ஏவி விட்டு நடத்தும் ``கலவரம்`` என்கிற வன்முறை.

இந்தக் ``கலவரங்கள்`` எவையும் தாமாக சிங்கள மக்கள் கிளர்ந்தெழுந்து, தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தியவை அல்ல.இந்தப் பொருளில்* ``கலவரம்`` என்கிற பதம் இந் நிகழ்வுகளைக் குறிக்க பொருந்தாதவை ஆகும். ஆனால் ஈழத் தமிழருக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்க்கும் ஒரு வழிமுறையாக வடிவமாக, அரசின் ஒரு ஆயுதமாக இந்தக் ``கலவரம்`` பயன்பட்டது என்கிற பொருளில் மட்டுமே இது சரியானதாகும்.

*(Riots: a noisy, violent public disorder caused by a group or crowd of persons, as by a crowd protesting against another group, a government policy, etc., in the streets. http://www.dictionary.com/browse/riot)


இனப்பகைமையை ஊட்டி வளர்த்ததால் தமழர்களுக்கு எதிராக எக்கணமும் தீ மூட்டத் தயாரான `காய்ந்த விறகுகளாக` ஒடுக்கும் தேசத்து-சிங்கள மக்களில் ஒரு பிரிவினர் செப்பனிடப்பட்டிருக்கின்றனர்.கூண்டில் அடைக்கப் பட்டிருக்கும் வேட்டை நாய்களைப் போல, இவர்களைத் திறந்துவிட்ட சம்பவம் தான் 1983 கறுப்பு ஜூலை.

இந்த வன்முறையின் காவல் அரணாக ஆயுதமேந்திய அந்நிய சிங்களப் படை-பொலிஸ்,இராணுவம்- ஈழத்தை ஆக்கிரமித்து அங்கு பலவந்தமாக நிலை கொண்டிருந்ததால் அதை முற்றாக வெளியேற்றுவதே ஈழதேசத்தின் 
விடுதலைக்கு,மண்ணின் பாதுகாப்புக்கு,மக்களின் சுதந்திரத்துக்கு, ஜனநாயகத்தின் உத்தரவாதத்துக்கு முன்நிபந்தனை ஆயிற்று.

எனவே இராணுவத்தை வெளியேற்றுவதை விடுதலைப் புலிகள் தமது முதல் பணியாக இயற்கையாகவே தேர்ந்துகொண்டனர்.சொல்லப்போனால் இது ஒன்றே அவர்களது வாழ்வும் வரலாறும் ஆனது.திண்ணை வேலித் தாக்குதலில் ஆரம்பித்து, ஆனையிறவை வீழ்த்தி வெற்றியின் எல்லையை எட்டினார்கள்.இருந்தும் அரசியல் சதியால் அவர்களின் வீர வரலாறு முள்ளிவாய்க்காலில் வித்தானது.

மீண்டும் தமிழர்கள் நிராயுதபாணிகள் ஆகினர். சிங்களப்படை ஈழத்தை மீண்டும் ஆக்கிரமித்துக் கொண்டது. இராணுவம் விலக்கப்படமாட்டாது என அரசு அறிவிக்கின்றது.முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் ஈழத்தமிழர்களது, 
ஈழதேசத்தினது- (ஏன் சிங்கள ஒடுக்கும் தேசத்தினதும்), அனைத்து அவலங்களுக்கும் மூல காரணம் ஈழம் இராணுவ அதிகாரத்தின் கீழ் இருப்பதாகும்.

ஆக 1983 இலிருந்த அதே அவசியம் 2009-2018 இல் மீண்டும் ஏற்பட்டிருக்கின்றது.

நீங்கள் வேண்டுமென்றால் `விஜயகலா` என்கிற பெயரை எடுத்துவிடுங்கள், ஆனால் அந்தக் கூற்று சமுதாய அவசியம் ஆகும்.

பொதுவாகவும் குறிப்பாக இலங்கையிலும் விடுதலைப் புரட்சியில் புரட்சிகர வன்முறையின் பாத்திரத்தை நிராகரிக்க முடியாது-கூடாது.

அதேவேளை `புரட்சிகர வன்முறையோடு விளையாடக் கூடாது` என்கிற மார்க்சின் -பாரிஸ் கொம்யூன்- எச்சரிக்கையை மறந்துவிடவும் கூடாது.

யுத்தத்தைப் போலவே வன்முறையும் அரசியலின் தொடர்ச்சியாகும். புலிகளின் வன்முறை-நீதியான யுத்தம், வித்தாகிப் போனது, புலிகளின் அரசியல் -(தமிழீழத்தை அடைவதற்கான திட்டம்,யுத்த தந்திரம்,செயல் தந்திரங்கள், 
இராணுவ மார்க்கம்) முற்றுப் பெற்றதன் விளைவாகும்.

இனி ஒரு புதிய அரசியலுக்கு, அவசியப்பட்டால் மட்டுமே ஒரு நீதியான,புரட்சிகர வன்முறை தோன்ற முடியும்.அல்லாதவை வெறும் வெஞ்சினத்தின் வெளிப்பாடான பயங்கரவாத வகைப்பட்டவை, எதிரிக்கே அநுகூலமானவை.

அந்த புதிய அரசியல் என்ன?

இராணுவ அதிகாரத்தில் இருந்து ஈழ தேசம்-வன்முறை அல்லாத வழியில் விடுதலை பெற முயல்வது எவ்வாறு?

ஒரே ஒரு வழிதான் உண்டு.

ஏகாதிபத்தியவாதிகளும், இந்திய விரிவாதிக்க அரசும், சிங்களமும்,ஈழச் சமரசவாதிகளும், தமிழக ஓடுகாலிகளும் `ஒரே நாடு`-එකම රට என்கிற முழக்கத்தின் கீழ், சிங்களத்தின் ஈழ தேசிய இராணுவ- ஆக்கிரமிப்பை, அதிகாரத்தை, ஆட்சியை நியாயம் செய்கின்றனர்.சுய நிர்ணய உரிமைக்கு மாற்றாக, சுய அதிகாரம் என ஏமாற்றுகின்றனர்.

நாம் இதற்கு மாற்றாக ஈழ தேசிய சுய நிர்ணய உரிமையை உயர்த்திப்பிடித்து `ஒரே நாட்டு`க்கு எதிராக;


* வடக்கு கிழக்கு தமிழர் தேசம்-(ஆறாவது திருத்த நீக்கம்)!
* மலையக இஸ்லாமிய தமிழர்களுக்கு தனி மாநிலம்- சுயாட்சி!
* சுய நிர்ணய உரிமைக்கான பொது ஜன வாக்கெடுப்பு!

என்ற கோரிக்கைக்காக இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரிப் போராடுவதே ஒரே ஒரு வழியாகும்.

இதன் பொருட்டு ஈழ தேசம் மீதான இராணுவ அதிகாரத்துக்கு ஜனநாயகப் பசுத்தோல் போர்க்கும் அனைத்துத் தேர்தல்களையும் புறக்கணிப்பது,

அனைத்து வாழ்வாதாரக் கோரிக்கைகளையும் பொது ஜன வாக்கெடுப்புக் கோரிக்கையோடு இணைத்து, அதற்கு கீழ்ப்படுத்தி முன்னெடுப்பது,

ஈழ தேசிய ஒற்றுமையை இறுகப்பற்றுவது,இன்றியமையாதவை ஆகும்.

இறுதிவெற்றி ஈழமக்களுக்கே!


புதிய ஈழப் புரட்சியாளர்கள்
23-07-2018

Tuesday 1 May 2018

ENB 2018 மே நாள் சூளுரை



மே நாள் சூளுரை

அன்பார்ந்த ஈழமக்களே, தாய்மாரே,பெண்களே, மாணவர்களே, இளைஞர்களே, உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே;

புரட்சிகர மே நாள் வாழ்த்துகள்.

மே நாள் சர்வதேசத் தொழிலாளர் தினமாகும். உலகெங்கும் வாழும் உழைக்கும் மக்களும்,ஒடுக்கப்படும் தேசங்களும் தத்தமது உள்நாட்டு,மற்றும் சர்வதேசியக் கடமைகளால் ஒன்றிணையும் நாளாகும்.இதனால் தான் இம்மாபெரும் நாளில் தொழிலாளி வர்க்க இயக்கங்கள்,தேசிய இயக்கங்கள்,ஜனநாயக இயக்கங்கள் தமது குறிப்பான புரட்சிகரக் கடமைகளை வரையறை செய்யக் கோரப்படுகின்றன.இதர முதலாளித்துவ,ஆளும்வர்க்க,
திருத்தல்வாத,சீர்திருத்த,மதவாத,அந்நிய அடிவருடிக் கும்பல்களின் சம்பிரதாய களியாட்டச் சடங்காக அல்லாமல், உண்மையிலேயே முரணற்ற ஜனநாயகத்துக்கான எந்த ஒரு பாட்டாளிவர்க்க தேசிய
இயக்கத்துக்கும், மே நாள் கோரும் இக்கடமை ஒரு சர்வதேசியப் பணியாகும்.

புதிய ஈழப்புரட்சியாளர்களாகிய நாமும் இச் சர்வதேசியப் பணியை நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையேற்று நடத்திய முப்பது ஆண்டுகால ஈழப்போர், அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகளாலும், ரசிய சீன ஏகாதிபத்தியவாதிகளாலும், விரிவாதிக்க இந்திய அரசு மற்றும் இஸ்ரேல் பாகிஸ்தான் கூட்டாலும்,நோர்வேயின் சமாதானச் சதியாலும்,பாலசிங்கம்- சம்பந்தன் - கருணா உள்ளிட்ட கோடரிக்காம்புகளின் துரோகத்தினாலும், ஐ நா.வின் கைவிரிப்பாலும், மே 18 2009 முள்ளிவாய்க்காலில், இவர்கள் அனைவரும் திட்டமிட்ட ஒரு இனப்படுகொலை மூலம் முறியடிக்கப்பட்டது.இந் நாளில் ஈழ விடுதலை இயக்கம் ( Movement), தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு (Organaisation),அதன் முன்னணித் தலைவர்கள்-தளபதிகள், ஒன்றரை இலட்சம் பொதுமக்கள் எதிரிகளால் கொன்றொழிக்கப்பட்டு `வெற்றி வாகை சூடப்பட்டது`!

இதனால் மே 18 ஈழத் தேசிய தினமாகும்.

ஈழத் தேசிய விடுதலைப் புரட்சி இயக்கத்தை மீளக்கட்டியெழுப்பும் பணி, சர்வதேசத் தொழிலாள வர்க்க விடுதலை இயக்கத்தின் ஒரு பகுதியாக அமைவதே முரணற்ற ஜனநாயகப் பாதை என்பதால் நாம் மே தினத்தையும், மே 18 ஈழதேசிய தினத்தையும் ஒரு சேர அனுசரித்து வருகின்றோம்.

எனவே மே 1 இல் எமது கடமை, மே 18 இற்கு பதில் சொல்வது தவிர வேறெதுவும் இல்லை. இதன் பொருட்டு எமது கடமைகளை வகுத்துக்கொள்ள இன்றைய புறச்சூழல் குறித்த பருண்மையான, புறவய ஆய்வு இன்றியமையாதது ஆகும்.

புதிய சர்வதேசியச் சூழல்

ஈழப்புரட்சியின் இன்றைய காலகட்டம் இதற்கு முந்திய காலகட்டங்கள் சந்தித்திராத ஒரு புதிய சர்வதேசியச் சூழலைச் சந்தித்துள்ளது.

ஈழப்புரட்சியில் பின்வரும் ஆண்டுகளில் நிகழ்ந்த நிகழ்வுகளை இன்று ஒப்பிட்டால் இந்த மாற்றங்கள் புலப்படும்.

1) 1983 இல் உள்நாட்டு ஜூலை இனப்படுகொலையைச் சாட்டாக வைத்து ஈழத்தமிழர் பிரச்சனையில் தலையீடு செய்த இந்தியா, 1985இல் திம்புவில் ஈழப் போராளிகளின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை ஏற்க மறுத்து, ஈழ விடுதலை இயக்கத்தை நசுக்கவும், சிங்களத்தை பாதுகாக்கவும்,இலங்கையில் இந்திய மேலாதிக்கத்தை நிறுவவும் ஜுலை 1987 இல் ஒப்பந்தம் நிறைவேற்றியது. இதில் திரிகோணமலைத் துறைமுகத்தை தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டது.இதற்குக் காரணம் அப்போது- தகர்ந்து கொண்டிருந்த- ரசிய சமூக ஏகாதிபத்தியமும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் என `இரு துருவ உலக ஒழுங்கமைப்பு` இருந்தது. இந்தியா வெளி விவகாரத்துறையில் ரசிய சமூக ஏகாதிபத்தியத்தைச் சார்ந்திருந்தது.

2) 2002 பேச்சுவார்த்தைக் காலத்தில் ரசிய சமூக ஏகாதிபத்தியம் பொறிந்து விழுந்து நொருங்கிச் சிதறி சின்னாபின்னமாகிவிட்டது. அமெரிக்கா தலைமையிலான ஒற்றைத்துருவ உலக ஒழுங்கமைப்பு உருவாகிவிட்டது. இந்தியா அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் யுத்த தந்திரக் கூட்டாளியாகிவிட்டது.

3) 2009 முள்ளிவாய்க்கால் காலத்தில் அமெரிக்காவின் ஏக உலக மேலாதிக்கத்துக்கு போட்டியான,  ஏகாதிபத்திய வல்லரசுகளாக ரசியாவும் சீனாவும் வளர்ந்துவிட்டன.

4) பக்ச பாசிஸ்டுக்களின் பத்தாண்டு ஆட்சி (19 November 2005 to 9 January 2015) கவிழ்க்கப்பட்டு பத்து மாதத்தில், (November 8, 2016) இல் அமெரிக்காவில் ரம்பின் ஆட்சி பிறந்தது!

அமெரிக்காவில் ரம்பின் ஆட்சி இதற்கு முன் என்றும் இருந்திராத, முற்றிலும் மாறான புதிய சர்வதேசியச் சூழ்நிலையில் நிகழ்ந்தேறிய ஒன்றாகும். ஏகாதிபத்திய நெருக்கடியின் பல தொடர் நிகழ்வுகளின் விளைவுகளில் ஒன்றாகும்,

அத் தொடர் நிகழ்வுகள் ஆவன:

a)  70களில் ஏகாதிபத்திய நெருக்கடிக்கு தீர்வாக உலகெங்கும், அமெரிக்காவும், ஐரோப்பாவும், ஐ.நாவும் இவர்களது ஏஜென்டுகளாக IMF,WB,IBRD உம் அமூலாக்கிய தனியார்மய, தாராளமய, சுதந்திர வர்த்தக பொருளாதார உலகமயக் கொள்கைகள், பின் தள்ளப்பட்ட நாட்டு மக்களை மட்டுமல்ல, முன்னேற்றப்பட்ட நாட்டு மக்களையும் ஒட்டச்சுரண்டி வாங்கும் சக்தியைப் பறித்தெடுத்துவிட்டது.

b) வாங்கும் சக்தியற்றோருடன் போலிப் பத்திரங்களைக்கொண்டு நடத்திய வர்த்தகத்தை ஆதாரமாக வைத்து கணக்கிடப்பட்ட வங்கிகளின் சொத்து மதிப்புப் பொய்க்கணக்கு, மெய்யான போது படிப்படியாக ஏகாதிபத்திய பெரு வங்கிகள் திவாலாகின. 2008 financial crisis சாராம்சத்தில் இதுவே!
('' It was only a few years later that an even nastier crisis would hit the entire world’s financial markets. In many ways it has still has not ended, with the billions in losses and slowing global economy manifesting themselves in the current European sovereign debt crisis. It resulted in the collapse of a number of large financial institutions and is considered by many economists to be the worst crisis since the Great Depression. While the causes are numerous, the main trigger is considered to be the crash of the US housing market``. - A history of the past 40 years in financial crises - IFR 2000 issue Supplement By Spencer Anderson  )
c) இப் பகிரங்கத் திருட்டுக்கு, பகல் கொள்ளைக்கு காரணமான எந்த தனிப்பட்ட அதிகாரியும்,நிறுவனமும் தண்டிக்கப்படவில்லை, மாறாக எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம் என, எஞ்சியிருந்த கோடிக்கணக்கான சொத்துக்களை வாரிச் சுருட்டிக்கொண்டு, `சட்டத்தின் பிடியில் இருந்து இவர்கள்` சந்தோசமாக` தப்பிவிட்டார்கள்.

d) இவர்களை தப்புவித்த அதே அரசுகள் பொறிந்து விழுந்த வங்கிகளை மீண்டும் தூக்கி நிறுத்த மக்களின் வரிப்பணத்தை வாரி வாரி இறைத்தன. இந்தக் கைங்கரியத்துக்கு கஜானாவை நிரப்ப மக்களுக்கு austerity எனும் நாசகாரத் திட்டத்தை அறிவித்தன.

e) இது முன்னேற்றப்பட்ட நாட்டு மக்களை குறிப்பாக நடுத்தர மற்றும் கீழ் மட்ட உழைக்கும் மக்களை ஒட்டாண்டிகள் ஆக்கியது. உலகப் போருக்குப் பிந்திய `பொது நல அரசுகள்`-என்பதற்கு அலங்காரக் குஞ்சங்களான அனைத்துச் சலுகைகளும் வெட்டிக் குறைக்கப்பட்டன.பின் தள்ளப்பட்ட நாடுகளில் கிரேக்கம் என்கிற ஒரு பழம் பெரும் நாடே திவாலாகியது!

f) இதன் விளைவாக ஏகாதிபத்தியத்தை எதிர்த்த உடனடிப் பொருளாதார-சமூக நலன்களுக்கான,நாட்டு இறையாண்மைக்கான,தேசிய சுயநிர்ணய உரிமைக்கான தன்னியல்பான வெகுஜன இயக்கங்கள் கொழுந்துவிட்டு எரிந்தன.

இவ் வெகுஜனத்திரள் காலம் காலமாக தம்மை `ஆட்டிப்படைத்த` நிலைமைகள் மீது அதிர்ப்தியும் எதிர்ப்பும் கொண்டிருந்தது. அதிகாரபூர்வ ஆளும் வர்க்க கட்சிகள்,வங்கிகள்,ஏகபோக காப்பரேட்டுக்கள், ஜனநாயகத்தின் ஒரு எலும்பான ஊடகங்கள், சட்டம் ஒழுங்கின் காவலர்கள்,இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் மானுடத்தை மீட்டெடுத்த (பெரிய பிரித்தானியாவின் வின்ஸன் சேர்ச்சில் போன்ற!) `மோசேஸ்`கள்- சுருங்கச் சொன்னால் ஒட்டு மொத்த அமைப்புமுறை அரசுமுறை மீதும் அதிர்ப்தி அடைந்திருந்தனர்.

g) துரதிஸ்ரவசமாக புரட்சிகர மார்க்சியத் தத்துவத்தாலோ, புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கட்சியாலோ வழி நடத்தப்படாதவர்களாவும் இவர்கள் இருந்தனர்.

h) இதனால் ஏகாதிபத்திய எதிர்ப்பு, சோசலிசப் புரட்சித் திட்டத்தில் இருந்து இவர்களைத் திசை திருப்புவது எதிரிகளுக்கு, கூடவே சமரச சக்திகளுக்கு சாத்தியமாக இருந்தது.

i) இந்த விளைநிலத்தில் தான் Populism மற்றும் Populist Leaders தோன்றி இப்போராட்டங்களை, பாசிச தேசிய வெறிப் பாதையில் திசை திருப்பினர், கடவுளால் எப்போதும் ஆசீர்வதிக்கப்படும் அமெரிக்கா இப்போதும் முன்னணி வகுத்து, ரம்ப் அமெரிக்காவின் தலைவர் ஆனார்.ஐரோப்பிய ஜூனியனின் தகர்வின் தொடக்கமாக இங்கிலாந்தில் பிரிவினை வாக்கெடுப்பு வெற்றிபெற்றது.

j) இதனோடு கூடவே, ஏகாதிபத்திய பொருளாதார உலகமயம், நாடு சாராத, எந்தவித சட்ட திட்டங்களுக்கும் உட்படாத, `அலைந்து திரியும்`, உற்பத்திசாராத வழி வகைகளில் திரட்டப்பட்ட மூலதனத்தின் புல்லுருவி வர்க்கம் ஒன்றையும் உருவாக்கியுள்ளது. இவர்களும்தான் அந்த 1% பேர்! இவர்களுக்கு ஒரு நாடில்லை,ஒரு அரசில்லை,ஒரு கட்சி இல்லை,ஒரு ஊடகம் இல்லை ஆனால் தீவுக் கூட்டங்கள் உள்ளிட்ட உலகின் 200 நாடுகளும் இந்த மூலதனத்தின் கோரப்பிடிக்குள்ளேயே சிக்குண்டுள்ளது.மாபெரும் நாடுகளும், கட்சிகளும், அவற்றின் தலைவர்களும் கூட இதற்கு விதிவிலக்கில்லை. பிரித்தானியாவின் ரொனி பிலேயரும், அமெரிக்காவின் ரம்ப்பும், பிரான்சின் மக்ரோனும் மிகச் சிறந்த உதாரணங்கள் ஆவர்.ஆட்சிக் கவிழ்ப்புக் கூட அவசியமில்லை; ஒரு `ஜனநாயகத் தேர்தல்` மூலமே தமது அடியாட்களை ஆட்சியில் அமர்த்த இவர்களால் முடியும்.ரம்ப் இவ்வாறுதான் ஆட்சியைப் பிடித்தார்.

வட அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய நாடுகளின் கதி இது வென்றால், தென் அமெரிக்க கிழக்கு ஐரோப்பிய, ஆசிய ஆபிரிக்க மத்திய கிழக்கு நாடுகளின் கதியை எண்ணிப்பாருங்கள்.அவர்களுக்கு ஆவணம் இல்லாது போக வேண்டும் என்றால், இவர்களுக்கு கோவணம் இல்லாது போனாலும் போதும்! அல்லாமல் எவரேனும் எதிர்த்தால் அவை `அடிபணியா`-முரட்டு அரசுகள் என வகைப்படுத்தப்படுகின்றன.

k) இக்காரணங்களால் 2008 நெருக்கடி தீரவில்லை, மென்மேலும் தீவிரமடைந்து மீள முடியாத நெருக்கடியாகிவிட்டது.

l) ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் என்கிற மகத்தான நூலில் `ஏகாதிபத்திய நெருக்கடிக்கு யுத்தத்தை தவிர வேறு தீர்வு உண்டா` என்பார் மாமேதை லெனின்; இன்றைய யுத்தங்களும் அத்தகைய `தீர்வுகள்` தான்!

m) உலகை மறுபங்கீடு செய்வதற்கான யுத்தம்; அதன் மூலம் நெருக்கடிக்கு தீர்வு!

ஆக ஈழப்புரட்சியின் இன்றைய காலகடத்தின் புதிய சர்வதேசியச் சூழலை, உற்பத்திசாராத வழி வகைகளில் திரட்டப்பட்ட மூலதனத்தின் ஒரு புல்லுருவி வர்க்கத்தினதும்,`சொந்த` நாடுகளின் ஆளும் வர்க்கங்களதும் கூட்டு,ஏகாதிபத்தியத்தின் - ஏகபோக நிதி மூலதனத்தின் - நெருக்கடிக்குத் தீர்வாக உலகை மறுபங்கீடு செய்யும், ஆட்சிக் கவிழ்ப்புகளையும் யுத்தங்களையும் தூண்டிவரும் காலம் எனக் கூறலாம்.

உலகிலுள்ள அனைத்து நாடுகளதும் உள் நாட்டு நிலைமைகளும் இப்பொதுவான சர்வதேசச் சூழலை சார்ந்து தான் ஏதோ ஒரு வகையில் அமைகின்றன.

ஏகாதிபத்தியம் மானுட விரோத சமூக அமைப்பு:

ஏகாதிபத்தியம் என்பது யுத்தம்:

ஏகாதிபத்திய நெருக்கடியின் இன்றைய குறிப்பான சூழ்நிலையை மேலே கண்டோம்.இது மட்டுமல்ல பொதுவாகவே ஏகாதிபத்தியம் ஒரு மானுட விரோத சமூக அமைப்பும் ஆகும்.2008 உலக நெருக்கடி உடனடியாக சடுதியாக தோன்றவில்லை, முப்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட, Savings and loans crisis – 1980s, LatAm sovereign debt crisis – 1982, Stock market crash – 1987, Junk bond crash – 1989, Tequila crisis – 1994, Asia crisis – 1997 to 1998, Dotcom bubble – 1999 to 2000,எனத் தொடர்ந்த பகுதி நிகழ்வுகளின் மொத்த விளைவே Global financial crisis – 2007 to 2008 ஆகும். ஆக ஏகாதிபத்தியம் தனது இயல்பு காரணமாக இடைவிடாது நெருக்கடிகளுக்குள்
சிக்குகின்றது. நெருக்கடி முற்றி உலகப் பொது நெருக்கடியாக வெடிக்கின்ற போது யுத்தத்தின் மூலம் தீர்வு காண்கின்றது.இந்த யுத்தங்களின் சுமையை மக்கள் மீது சுமத்துகின்றது.மேலும் யுத்தம் என்பது உயிரழிவு,பொருளழிவு மட்டுமல்ல உற்பத்தி சக்திகளின்
பேரழிவுமாகும்.ஒரு நாட்டில் வளர்ச்சி அடைந்த உற்பத்தி சக்திகளை யுத்தம் நிர்மூலம் செய்கின்றது.பின்னர் அதை நிர்மாணம் செய்வது (Nation Building!),என்கிற பெயரில் சந்தையை உருவாக்குகின்றது. இந்தச் சந்தையில் அந்த 1% புல்லுருவிகள் முதலீடு செய்கின்றார்கள், இது அனைத்துக்கும் கங்காணி வேலை பார்க்கின்றது ஐ.நா.எனவே ஏகாதிபத்தியம் என்பது சாராம்சத்தில் நிதிமூலதனத்தின் நலனுக்கான யுத்தம், இது தவிர வேறெதுவும் இல்லை.

உலக வேலையின்மை:

2018 ம் ஆண்டில் ஏற்கெனவே உள்ள வேலையில்லாப் பட்டாளத்தோடு மேலதிகமாக 27 இலட்சம் பேர் இணைந்து கொள்வர் என ஐ.நா.வின் சர்வதேச தொழிற் திணைக்கள(ILO) ஆய்வில் கூறப்படுள்ளது.

உலகெங்கும் விவசாயம் புறந்தள்ளப்பட்டு அபரிமித ஏகாதிபத்திய பண்ட உற்பத்தியையும்,நிதி மூலதனத்தையும் பரிவர்த்தனை செய்வதற்கான சேவைத் துறை ஊக்குவிக்கப்படுவது வேலையின்மைக்கு முதன்மையான காரணமாகும்.இதனை
ஏகாதிபத்தியத்தின் கீழ் தீர்க்க முடியாது. வேலையின்மையே வறுமையின் ஊற்று மூலம்.

உலக வறுமை

உலகத்தில் வறுமை பற்றிய புள்ளிவிபரங்களுக்கு புகழ் போன நிறுவனமும் உலக வங்கிதான்! அதனுடைய 2013 ஆண்டு கணக்குப்படி உலகில் 800மில்லியன் மக்கள், அதிகார பூர்வ சர்வதேச வறுமைக்கோட்டு அளவுகோலான நாளுக்கு US$1.90 - இலங்கை ரூபாய் வெறும் 300!- இற்கு குறைவாக பெறுவோர் ஆவர்.இது ஏற்கத் தகுந்தது அல்ல என உலக வங்கியே கூறுகின்றது. பணவீக்கத்தோடு ஒப்பிடுகையில் இலங்கை ரூபாய் 300 வறுமை நிலையைத் தாண்ட எவ்வகையிலும் போதுமானது அல்ல.இலங்கையில் மலையக தோட்டத் தொழிலாளர்களின் தினக் கூலி ஆக 500 முதல் 600 ரூபாய் வரைதான்.இது அவர்களை வறுமையில் இருந்து மீட்கவில்லை.

கனிம வளம்மிக்க ஆபிரிக்கக் கண்டத்தில் நாடு நாடாக பசி பஞ்சம் பட்டினிச் சாவுகள் நிலவுகின்றன.ஆக உலக வங்கியின் 800மில்லியன் கணிப்பை யதார்த்தமாக கொள்ள இயலாது.

உலக குடியிருப்புப் பிரச்சனை
According to the UN Habitat 30% of the world’s urban population lives in slums, deplorable conditions where people suffer from one or more of the following basic deficiencies in their housing: lack of access to improved water; lack of access to improved sewage facilities (not even an outhouse); living in overcrowded conditions; living in buildings that are structurally unsound; or living in a situation with no security of tenure (that is, without legal rights to be where they are, as renters or as owners).35% of the world’s rural population lives in unacceptable conditions.Overall more than 2 Billion people are in desperate need of better housing....In London, for example, the average monthly rent and mortgage payments equate to roughly 135% of monthly net income.
உலக குடிநீர் பிரச்சனை
Why fresh water shortages will cause the next great global crisis. As a result, some 1.1 billion people worldwide lack access to water, and a total of 2.7 billion find water scarce for at least one month of the year. Inadequate sanitation is also a problem for 2.4 billion people—they are exposed to diseases, such as cholera and typhoid fever, and other water-borne illnesses. Two million people, mostly children, die each year from diarrheal diseases alone. Report WWF

உலக பருவநிலைப் பிரச்சனை
Do scientists agree on climate change?
 Yes, the vast majority of actively publishing climate scientists – 97 percent – agree that humans are causing global warming and climate change. Most of the leading science organizations around the world have issued public statements expressing this, including international and U.S. science academies, the United Nations Intergovernmental Panel on Climate Change and a whole host of reputable scientific bodies around the world.
அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் இதனை சீனப்புரளி என்கிறார்.

ஆக ஏகாதிபத்தியம் வேலையின்மை,வறுமை,குடியிருப்புப் பிரச்சனை,குடிநீர் பிரச்சனை,பருவநிலைப் பிரச்சனை இன்னும் எண்ணற்ற பிரச்சனைகளின் ஊற்று மூலமாக இருந்து, மானுட வாழ்வின் ஆதாரங்களையெல்லாம் அழித்தொழித்து, சோசலிசத்தின் பாதையில் ஒரு இடறுகட்டையாக இருந்து தன் இருப்பை செயற்கையாக,பலவந்தமாக தக்க வைப்பதற்காக வனமுறையையும்,யுத்தத்தையும் கையிலேந்திய நாசகார மானுடவிரோத சமூக அமைப்புமாகும் .

இதனால் மிக அதிக அளவில் பாதிக்கப்படுபவர்கள் உலகத் தொழிலாளர்களும் ஒடுக்கப்படும் தேசங்களுமே.இதனால் இந்த வேண்டாப் பிண்டத்தை வெட்டி எறிவதும் அவர்களேதான்.

 முள்ளிவாய்க்காலுக்குப் பிந்திய சூழல்

மே 18 2009 இலிருந்து February 12, 2018 பிரதேச சபைத் தேர்தல்வரை.
மே 18 2009 இலிருந்து February 12, 2018 பிரதேச சபைத் தேர்தல்வரையான ஒன்பது ஆண்டுகள், பிரபாகரன் - விடுதலைப்புலிகள் இல்லாத சூழலில் இலங்கையிலும்,தமிழகத்திலும்,புலம்பெயர் நாடுகளிலும் ஈழ அரசியல் - ( அது சார்ந்து சமூக சக்திகள்_வர்க்கங்கள் தமது நிலையில்) ஒரு முழுச் சுற்றை முடித்து  எதிர்காலப் பாதையை தீர்க்கமாகத் தேர்ந்துகொண்ட காலப்பகுதியாகும்.

எமது கடந்த வருட (2017),மே நாள் பிரசுரத்தில் உள்நாட்டுச் சூழ்நிலை,
மற்றும் புலம் பெயர் சூழலை பின்வருமாறு மதிப்பீடு செய்திருந்தோம்.

இ) உள்நாட்டுச் சூழ்நிலை:

1) மூன்றாம் உலகப்போர் மறுபங்கீட்டுச் சூழலில், பக்ச பாசிஸ்டுக்களுக்கு சீனாவுடன் அணிசேரும் ``சுதந்திரம்`` அனுமதிக்கப்படாததின் விளைவாக, அமெரிக்க இந்திய ஆட்சிக்கவிழ்ப்பில் மைத்திரி-ரணில்-சந்திரிக்கா-பொன்சேகா
போர்க்குற்றக் கும்பல் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. தமது ஆட்சியை நல்லாட்சி எனப் பிரகடனம் செய்தது.ஆனால் இந்த நல்லாட்சி நாடகம் வெகுஜன உணர்வில் நாடு தழுவி இன்று அம்பலமாகிவிட்டது.

2) முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் முழு மூச்சுடன் நாசகார -Regaining Sri Lanka- நவீன காலனிய திட்டத்தை அமூலாக்கிய சிங்களம் மற்றும் `நல்லாட்சி` , ஒட்டு மொத்த நாட்டையும் மீள இயலாத கடன் பொறிக்குள் வீழ்த்திவிட்டு விட்டது. அதாவது அந்நிய மூலதனத்துக்கு நாடு விலை போய்விட்டது.

3) இதனால் கிளர்ந்தெழும் உழைக்கும் மக்களின் எதிர்ப்பை நசுக்க, கடந்த 65ஆண்டுகளாக சிங்களம் கடைப்பிடித்து வந்த அதே தந்திரத்தைத்தான் இந்த ஏகாதிபத்திய, இந்திய விரிவாதிக்க நல்லாட்சியும் கடைப்பிடித்து வருகின்றது.ஒரு புறம் இராணுவ சர்வாதிகார பாசிசத்தைக் கட்டவிழ்ப்பது, மறுபுறம் சிங்கள தமிழ் உழைக்கும் மக்கள் ஒன்றுபடாது தடுக்க, ஈழ தேசத்தை ஆக்கிரமித்து சிங்களவர்களுக்கு தாரை வார்த்து இனப் பகைமையை தக்கவைப்பது.நடைமுறையில் இக்கொள்கையை அமூலாக்கிய வண்ணமே சிங்களம் நல்லிணக்க நாடகமாடுகின்றது.

4) ஏகாதிபத்தியவாதிகள் இந்த நல்லிணக்கத்தின் முன்னேற்றத்துக்கு, `மாணாக்கன் இலங்கைக்கு` மாதா மாதம் மார்க்குகள் வழங்கி, தகுதியின் அடிப்படையில் கடன் வழங்கி- அந்நிய நிதி மூலதன முதலீடு செய்து வருகின்றனர்.

5) ஏகாதிபத்திய அடிவருடிகளின் `போர்க்குற்ற நீதிமன்றம்` ஐ.நா.சபை, வெசாக் கொண்டாடுகின்றது!

6) ஏகாதிபத்திய தாச சமரசவாத சத்திராதிகளின் ஐ.நா.மோசடிப் பாதை அம்பலமாகி முழு நிர்வாணமாகிவிட்டது.

7) அந்நிய தேசத்துரோக ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஈழமக்களை தேர்தல் பலிக்கடாக்கள் ஆக்கி, நல்லாட்சியுடன் அரச சுகத்தை பகிர்ந்து தின்ற வண்ணம், அதிகாரப் பகிர்வு-சமஸ்டி நாடகம் ஆடும் கூட்டமைப்புக் கும்பலை ஈழ மக்கள் இனம் கண்டு தீ மூட்டி எரித்து விட்டனர்.

8) அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது உலக மறுபங்கீட்டு மேலாதிக்கத்தை நிலை நிறுத்த, `ஜனநாயக ரீதியில்` தெரிவு செய்யப்பட்ட ஆட்சிகளை தன் நலனுக்கேற்ப கவிழ்த்து கலைத்து வருகின்றது.இதற்கு அதன் கூலிப் போர்ப்படையான NGO க்களை ஏவி வர்ணப் புரட்சிகள் நடத்தி வருகின்றது. போலந்திலிருந்து வெனிசுவேலா வரை இது தொடரும் கதையாகும்.

9) மண்டையன் குழு சுரேஸ் பிரேமச்சந்திரன், காமுகச் சாமியார் பிரேமானந்த பக்தன் விக்னேஸ்வரன், ------ இரு தேசப் புத்திரன் கஜேந்திரன் அடங்கிய தமிழ்நெற், மற்றும் கத்தோலிக்க பாதிரிகளின் பின் புலத்தில் இயங்கும், `எழுக தமிழ்` முழக்கம் மேற்கண்ட NGO க்களின் வகைப்பட்ட ஒன்று தான்.இதன் கோரிக்கை சம்பந்தன் சுமந்திரனின் அதிகாரப் பகிர்வு தான்! இந்தத் தேசத்துரோகக் கும்பலோடு இந்து சமுத்திர பிராந்திய இந்தியக்
காவலர்களான இடது சாரி சமுத்திரர்களும் இணைந்து விட்டார்கள்.

10) இதன் காரணத்தால் தான் இக் கும்பல், போர் மீண்ட மக்களின் போராட்டங்களோடு தன்னை அடையாளப் படுத்திக் கொள்வதில்லை.!

11) போர் மீண்ட மக்களின்-வாழ்வாதார போராட்டக் கோரிக்கைகளில் எவையும் கூட எட்டு ஆண்டுகளாக தீர்த்து வைக்கப்படவில்லை.

12) நம்பிக்கை நட்சத்திரமாக நல்லாட்சி அமைந்து, அருமை ஐயா சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவர் ஆன பின்னரும் எதுவும் மாறவில்லை!

13) மாறாக அரசியல் அமைப்புத் திருத்தம், முழு நாடு தழுவிய வாக்கெடுப்பு என, ஈழதேசம் மீது ஒரு அடிமைத் தீர்வை திணிக்க சிங்களம் தினவெடுத்து நிற்கின்றது.

ஈ) புலம் பெயர் நாட்டுச் சூழ்நிலை

1) நாட்டுக்கு நாடு அமைந்திருந்த புலம் பெயர் பேரவைகள், நாடுகடந்த அரசாங்கம், ஈழத்தமிழர்களுக்கு நீதி பெறக் காட்டிய ஐ.நா பாதை அம்பலமாகிவிட்டது.

2) புலம் பெயர் நாடுகளில் மாவீரர் தின `புலி` வாரிசுகள் வெறும் சொத்துச் சேர்க்கும் பணந்தின்னிகளாக ஆகி விட்டனர். `புலிச் சொத்து பணக்காரர்` என்கிற ஒரு புல்லுரிவிக் கும்பல் உருவாகிவிட்டது.

3)இவர்களின் பின் புலத்தில் , சிறு மதி கொண்ட ஒரு சிறு கும்பல் சிங்களத்தோடு சமரசம் செய்ய தொடர்ந்து முயன்று வருகின்றது.

4) தொகுப்பில் இது புலம் பெயர் ஈழ விரோத, தேசத்துரோக ஏகாதிபத்திய தாச கும்பல் ஆகும்.

5) இதன் செல்வாக்கு சரிந்து வருகின்றது.

மேற்கண்ட நிலைமைகள் இன்றும் தொடர்கின்றன. ஆனால் இந்த ஆண்டில் நிகழ்ந்த உள்ளூர் ஆட்சி சபைகளுக்கான தேர்தலும், அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும், மேற்கண்ட சூழ்நிலைகளை இயக்கிய சக்திகளின்  ஈழ அரசியல் தொடர்பான நிலை, ஒரு முழுச் சுற்றை முடித்து, ஈழ விரோத எதிர்காலப் பாதையை தீர்க்கமாகத் தேர்ந்து கொண்டதன் தெளிவான அடையாளமாகும்.

இத்துடன் ஈழப்புரட்சியின் இரண்டாம் காலப்பகுதி நடைமுறை வழியிலும் முற்றுப்பெற்றுவிட்டது. இனிமேல் இந்தக் குதிரைகளை நம்புவோர் ஆடத்தான் முடியும், ஓடமுடியாது.

கடந்த பெப்ரவரி மாதம் இலங்கையின் உள்ளூர் ஆட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற்றது.கூட்டாக நல்லாட்சி அமைத்திருக்கும் UNPஉம் SLFPஉம் தனித்தனியாகப் போட்டியிட்டன.ஆட்சி கவிழ்க்கப்பட்ட ராஜபக்ச தனியாகப்
போட்டியிட்டார்.  `கொள்கை முரண்பாடுகளால்` தமிழ்த்தேசிய அரசியல் பிளவுபட்டு மும்முனைப் போட்டி இடம்பெற்றது. நான்காவது முனையில் வாழைத்தோட்ட வெள்ளைவான் டக்ளஸ் போட்டியிட்டார்.மண்டையன் குழுவும் சடலம் சங்கரியும் கூட்டமைத்து தனித்துப் போட்டியிட்டனர்.அகில இலங்கை திடீரென இரண்டு தேசமாகி தமிழ் மக்கள் முன்னணி என்ற புதிய அவதாரத்தில் பொன்னம்பலம் கஜேந்திர குமார் அதே சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டார்.முஸ்லிம் கட்சிகளும், மனோ கணேசனும் தேர்தலில் பங்கு கொண்டனர்.

இலங்கையின் அரசியல் அதிகாரக் கட்டமைப்பில் உள்ளூர் ஆட்சி சபைகள் எந்த வல்லமையும் கொண்டவை அல்ல.அவற்றின் வரவு செலவுத் திட்டம் கூட களவாடத்தான் போதுமானது, கொள்ளையடிக்கப் போதுமானது அல்ல.

ஆனால் பின்வரும் சம்பவங்களால் இந்தத் தடவை இத்தேர்தல் அரசியல் முக்கியத்துவம் பெற்றது.

1) புலம்பெயர் பேரவைகளின் ஒருங்கிணைப்புக் கும்பல், கொழும்போடு ஒருங்கிணைய பொன்னம்பலம் கஜேந்திர குமாருடன் தேசியக் கூட்டமைத்தது.

2) ஆட்சி கவிழ்க்கப்பட்ட ராஜபக்ச இத் தேர்தலில் பெரு வெற்றிபெற்று பாராளமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தல் நடத்துமாறு கோரினார்.

3) நல்லாட்சி, இஸ்லாமியத் தமிழர் மீது கட்டவிழ்க்கப்பட்ட வன்முறையை கைகட்டிப் பார்த்து ரசித்தது.தமிழ்த்தேசியம் தன் சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் வாழ்தல் கண்டு, மாற்றான் தாய் மனப்பான்மையில் பாராமுகம் காட்டியது.

4) ஊழல்,தேர்தல் தோல்வி,இஸ்லாமியத் தமிழர் வன்முறை எல்லாமுமாக பிரதமர் ரணிலுக்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது.

5) அமெரிக்க இந்தியத் தூதுவர்கள் அனைத்துக் கட்சிகளோடும் ``ஆலோசனை`` நடத்தினர்.

6) கூட்டமைப்பு,முஸ்லிம் கட்சிகள்,மனோ கணேசன், SLFP இன் 6 பா.உ.கள் துணையுடன் ரணில் வெற்றி பெற்றார்.

7)அமெரிக்காவும்,இந்தியாவும் உருவாக்கிய நல்லாட்சி மீண்டும் நிலை நிறுத்தப்பட்டது.தொடர்ந்து நிலைத்திருக்கும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது.

8) பெரும்பான்மை வாக்குகள் பெறாத பெரும்பான்மையான சபைகளில், தமிழரசுக்கட்சி டக்ளஸோடு கூட்டமைத்து தனது கடைசிக் கோவணத்தையும் வாழைத்தோட்டத்தில் புதைத்தது.

9) ரணிலை 10அம்ச கோரிக்கைகளின் நிபந்தனையின் அடிப்படையில் காப்பாற்றியதாகக் கூறிய பச்சைப் பொய் அம்பலமானது.காணாமல்ஆக்கப்பட்டோர், நிலப்பிரச்சனை, ஆனந்தன் விடுதலை என எந்தக் கோரிக்கைகளும்
நிறைவேற்றப்படவில்லை.

10) ஏறத்தாழ இதே காலத்தில் தான் தமிழகத்தின் `கருணா` வை.கோ, மீண்டும் தி.மு.க.வில் இணைந்து கொண்டார்.வை கோவை சீமான் தெலுங்கன் என்கிறார்.தான் ஒரு தாய்க்கும் ஒரு தந்தைக்கும் பிறந்த தமிழன் என்கின்றார்.பதிலுக்கு வைகோ பருதி கொலையில் சம்பந்தப்பட்டவர்களென `புலிகள்` அனுப்பிய புகைப்படங்களில் உள்ளவர்கள் சீமானோடு இருப்பவர்கள் எனக் கொலைக் குற்றம் சாட்டுகின்றார்! சீமானை விட பிரபாகரனுக்கு அதிகம் நெருக்கமானவர் தான் தான் என்று உரிமை கொண்டாடுகின்றார்.

`இலங்கை ஒரு நாடு இரு தேசம்` என்ற முழக்கம் குறித்து:

புலம்பெயர் பேரவைகளின் ஒருங்கிணைப்புக் கும்பல், கஜேந்திர குமாருடன் அமைத்த கூட்டை தமிழ்த் தேசியக் கூட்டு எனக் கூறியது.இதற்கு ஏதுவாக கஜேந்திரன் `இலங்கை ஒரு நாடு இரு தேசம்` எனக் கூறிவந்தார்.2002 நோர்வே பேச்சுவார்த்தைக் காலத்தில் பாராளமன்றத்தைப் போர்க்களமாக்கிய `ஆய்வாளர்கள்`, இப்போது புதியதொரு போர்வீரனை கொழும்பில் கண்டுபிடித்தனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

 ஈழத்தமிழர்களின் அரசியல் வரலாற்றில் இந்த முழக்கம் மூன்று பொருள்களில்-உள்ளடக்கங்களில்- பேசப்பட்டு வருகின்றது.

1) இலங்கையில் தமிழர்கள் பூர்வீகக் குடியினர்.வடக்கு கிழக்கு அவர்களுடைய தாயகம் (தேசம்).அவர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப்படக்கூடாது.இலங்கை என்கிற ஒரு நாட்டுக்குள்,ஒரு அரசுக்குள் சமஸ்டி ஆட்சிமுறையின் அடிப்படையில் அவர்கள் சமத்துவமாக ஆட்சி செய்யப் படவேண்டும்.

2) இதனை சுதந்திரத்தின் போது சோல்பரி அரசியல் யாப்பு உறுதி செய்யாததாலும், தொடர்ந்து வந்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களை வன்முறை கொண்டு ஒடுக்கி, அவர்கள் தாய் நிலத்தைப் பறித்து வந்ததாலும்,அரசியல் பேச்சுவார்த்தைகளும் ஒப்பந்தங்களும் கிழித்தெறியப்பட்டதாலும், நிபந்தனையற்ற பிரிவினையை ஆயுதமேந்திப் போராடிப் பெற்று, தமிழர்கள் தம்மைத் தாமே ஆள்வது.

3) இலங்கையின் அரசுமுறையின் - சிங்களத்தின், கீழ் தேசிய இன சமத்துவம் அடையப்பட முடியாததாகி விட்டதால், வட கிழக்கு தமிழர்கள் பிரிந்து சென்று தனிநாடமைப்பதும், அதில் இஸ்லாமியத் தமிழர்களின் ஆட்சிஉரிமை, பிரதேச சுயாட்சி மூலம் உத்தரவாதம் செய்யப்படுவதும், மலையகத் தனி மாநிலம் வாக்கெடுப்பின் மூலம் ஈழத்துடன் இணைவதா இல்லையா என்பதை முடிவு செய்வதும்.

எனினும் இப்பிரிவினை முழக்கமானது- சிங்கள மக்கள் மத்தியில் ஈழ தேசத்தின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்த ஒரு ஜனநாயக இயக்கம் தோன்றி, தமது சொந்த அரசை எதிர்த்து உறுதி தளராது தொடர்ந்து போராடுமேயானால்,மறுபரிசீலனை செய்யப்படும் என்கிற- நிபந்தனைக்கு உட்பட்டது.

தில் முதலாவதுதான் ஈழத்தமிழர் அரசியலின் அடிநாதமான கோட்பாடாகும்.சமஸ்டி என்பது ஒடுக்கும் தேசத்து -சிங்கள- ஆளும் வர்க்கத்துடன், ஒடுக்கப்படும் தேசத்து - தமிழ்- ஆளும் வர்க்கம் எவ்வாறு அதிகாரங்களைப் பகிர்ந்து மக்களை ஆளுவது என்பதற்கான முறைமை பற்றியது. இறையாண்மை என்பது தமிழர்களை ஆளுவதற்கு தமிழ் ஆளும் வர்க்கத்துக்குள்ள சட்டபூர்வ உரித்தைக் குறிக்கின்றது.இந்த சிந்தனைப்போக்கு போலிச் சுதந்திரத்துக்கு முன்னரே தமிழ் ஆளும் வர்க்கப் பிரதிநிதிகளான அரசியல் தலைவர்களிடம் இருந்தது. திரு ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் 1939 இலேயே State Council இல் இது குறித்து நீண்ட விவாதம் நடத்தியுள்ளார்.

இதுவே சமஸ்டிக் கட்சியின் நிலைப்பாடாகவும் தொடர்ந்தது.1972 அரசியல் யாப்பு தமிழ் ஆளும் வர்க்கத்தின், தமிழர்களை ஆளும் உரிமையை நிராகரித்து, அனைத்து மக்களையும் ஆளும் உரிமையை தனது ஏகபோகம் (ஒற்றையாட்சி) ஆக்கிக் கொண்டது.இதை எதிர்த்த  Trial At Bar வழக்கில் தமிழர்கள் ஒரு தனியான தேசம் என்பது சட்டபூர்வமாக நிரூபிக்கப்பட்டு வழக்கு வெற்றி பெற்று திரு அமிர்தலிங்கம் அவர்கள் விடுதலை 
செய்யப்பட்டார்.ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றில் இது ஒரு மாபெரும் சட்ட விவாதம்! அது வரலாறு; அதனை எவராலும் இனி மாற்றியமைக்க முடியாது.

இதனால்தான் 1977 சர்வஜன வாக்கெடுப்பை சட்டத்தின் மூலம் தடுக்க சிங்களத்தால் இயலவில்லை.
1) Sixth Amendment to Sri Lanka Constitution
Certified on 8th August, 1983
Prohibition against violation of territorial integrity of Sri Lanka
157A.
(1) No person shall, directly or indirectly, in or outside Sri Lanka, support, espouse, promote, finance, encourage or advocate the establishment of a separate State within the territory of Sri Lanka.
(2) No political party or other association or organisation shall have as one of its aims or objects the establishment of a separate State within the territory of Sri Lanka.
மேலே காணுகின்றவாறு, 1983 ஜூலை விடுதலைப் புலிகளின், திண்ணைவேலி இராணுவத் தாக்குதலின் பின்னால், 1978 அரசியல் யாப்புக்கு ஓகஸ்டில் கொண்டுவரப்பட்ட ஆறாவது திருத்தம், ஒரு தனி அரசை உருவாக்குவதற்கான முயற்சிகளைத்தான் தடை செய்கின்றது.  பிரபாகரனும் மாவீரரும் செய்தது இதுதான்:

தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியரசென்றிடுவோம்!
பிரபாகரனுடைய நிலை மேற் கூறியவற்றில்  இரண்டாம் வகைப்பட்டது.

எனினும் இவ்விரு நிலைகளும் ஈழத்தமிழர் பிரச்சனையை - தேசிய இனப்பிரச்சனையாக, சுய நிர்ணய உரிமைப்பிரச்சனையாக, நிலப்பிரச்சனையை விவசாயப் பிரச்சனையாகப் பார்க்கவில்லை. இனப்பிரச்சனையாக மட்டுமே பார்த்தனர்.பிரபாகரனோடு இது ஒரு இனத்துவ வாதமாக வளர்ந்தது.இலங்கையின் குறிப்பான வரலாற்றுச் சூழலில், உள் நாட்டு நிலமைகளில்  இந்த இனத்துவ வாதம் எந்தளவுக்கு தர்க்க ரீதியானதும், நீதியானதும், நியாயமானதும், ஜனநாயகமானதும், பலமானதாகவும் இருந்ததோ, மேலும் முக்கியமாக புறவயமாக ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலை கொண்டதாக இருந்ததோ, அதே நேரத்தில் அகவயமாக இன்றைய (ஏகாதிபத்தியத்தினதும் சோசலிச ஜனநாயகப் புரட்சிகளினதும்) சகாப்தத்தில், சர்வதேசிய முரண்பாடுகளைக் கையாளுவதற்கு வலுவானதாக இருக்கவில்லை.

இது ஒரு வரலாற்று விபத்து, இதற்கு பிரபாகரனோ, விடுதலைப் புலிகள் அமைப்போ தனிப்படப் பொறுப்பாகாது. விடுதலைப் புலிகளின் முப்பதாண்டுப் போர்க்காலம் ஈழத்தேசிய ஜனநாயகப் புரட்சியின் இரண்டாம் கட்டம் ஆகும். தமிழ்த் தரகுமுதலாளிய வர்க்கத்தின் முதல்கட்டம் எந்தளவுக்கு எந்தளவு புரட்சியைப் பின் தள்ள -சாகடிக்க- முயன்றதோ, அந்தளவுக்கு அந்தளவு பிரபாகரனின் மாவீரப் புலிப்படை புரட்சியை முன் தள்ள முடிந்த வரைக்கும்
இறுதி மூச்சு இருந்த வரைக்கும் முயன்றது. இந்த வீரகாவியம் தேசியப் புரட்சிகளின் வரலாற்றில் ஈழ ஓவியமாக என்றும் நீடித்து நிலைத்திருக்கும்.

மேலும் இவ்விரு நிலைகளும் தமக்குள் இணக்கம் கொண்டதற்கான அடிப்படைக் காரணம் அந்தக் குரலை எழுப்பிய சமூகப் பிரிவுகளின் வர்க்கநிலை ஆகும்.

முதல் தரப்பினர் தரகு முதலாளிய, நில உடமை வர்க்கத்தினர். இரண்டாம் தரப்பினர் சிறு உடமை வர்க்கத்தினர்.

ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்த வர்க்கங்களின் சிந்தனை செலுத்திய ஆளுமை முடிவுக்கு வந்து, முற்றுப்பெற்றுவிட்டது.

லங்கையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதித்துவ ஆட்சியை, அமெரிக்காவும் இந்தியாவும் அனுமதிக்கத் தயாராக இல்லை.சீனாவும் பிக்குத்துவமும் பக்ச பாசிஸ்டுக்களைக் கைவிடவில்லை.இலங்கை அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகம் உலக மறுபங்கீட்டுப் போர்க்களத்தில் சிக்கிக் கொண்டுவிட்டது.மலையக, முஸ்லிம் ஆளும் தரப்பைப்போலவே தமிழ்த்தரப்பும் அமெரிக்க இந்திய ரணில் முகாமைச் சார்ந்து இயங்குகின்றது. புலம்பெயர் பேரவைகள் கஜேந்திரன் மூலம் கொழும்போடு ஒருங்கிணைய முயல்கின்றன. ஆண்ட பரம்பரை டக்ளஸோடு சேர்ந்து மாகாணசபையையும் ஆள நினைக்கின்றது- என்ன குறை!

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னால் இலங்கைச் சூழலில் மேலதிகமாக ஏற்பட்ட மாற்றங்கள் இதுவாகும்.

இதனால்தான் ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்த வர்க்கங்களின் சிந்தனை செலுத்திய ஆளுமை முடிவுக்கு வந்து முற்றுப் பெற்றுவிட்டது  என்கிறோம்.மக்கள் காரணம் இல்லாமல் கொடும்பாவி எரிக்கவில்லை!

இனிமேல் புதிய ஈழப் புரட்சித் திட்டத்தில், தேர்தல் புறக்கணிப்புப் பாதையில், விடுதலைப் புரட்சியின் மூன்றாம் கட்டமே முன்னேறிச் செல்லும்.

மே 18 முள்ளிவாய்க்கால் மாண்ட நம் மக்களே, மாவீரத் தோழர்களே;

உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்,
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்,
எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!

மீண்ட நம் மக்களே, போராளிப் புலிகளே, முன்னணி சக்திகளே;

உலக மறுபங்கீட்டு, உலகப் பெரும் போர் வெறியர்களைத் தோற்கடிப்போம்!

அமெரிக்க ஐரோப்பிய, ரசிய சீன, ஏகாதிபத்தியம் ஒழிப்போம், இந்திய விரிவாதிக்கம் தகர்ப்போம்!

இந்திய -சீன முகாம்களுக்கு இலங்கையைத் தாரைவார்க்க போட்டி போடும் சிங்கள ஆளும் கும்பல்களை அம்பலப்படுத்துவோம்!

ஏகாதிபத்திய தாச, இந்திய விரிவாதிக்க பாச ஈழச் சமரச சக்திகளை தனிமைப்படுத்துவோம்!

போலிப்பாரளுமன்ற தேர்தல் பாதையைப் புறக்கணிப்போம்!

ஈழ தேசிய (இஸ்லாமிய,மலையக ) ஒற்றுமையைக் கட்டியெழுப்புவோம்!

ஈழ விடுதலைக்கு ஆதரவாக சிங்கள உழைக்கும் மக்களை வென்றெடுக்கப் போராடுவோம்!

போர் ஓய்ந்த மக்களின் - மண்ணின் வாழ்வாதாரங்களுக்காகப் போராடுவோம்!

ஈழம் காணும் வரை ஓயமாட்டோம்! 
இறுதி வெற்றி ஈழ மக்களுக்கே!



புதிய ஈழப் புரட்சியாளர்கள் 
Eelam New Bolsheviks
மே-1-2018

Wednesday 28 February 2018

அம்பாறைத் தாக்குதல்- ENB கண்டன அறிக்கை

அம்பாறையில் இஸ்லாமியத் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் தீக்கிரை! பள்ளிவாசல் மீது தாக்குதல்!!


லங்கையின் கிழக்கு மாகாண, அம்பாறை நகரில் சிங்களக் காடையர்கள் ஒன்று கூடிபொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் உள்ள  முஸ்லிம்களுக்கு சொந்தமான  கடைகளை தீக்கிரையாக்கியுள்ளனர்.  பள்ளிவாசல் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்த சிங்களப் பேரின பெளத்த மதவெறித் தாண்டவம் 26-02-2018 அன்று அரங்கேறியுள்ளது.

அன்று முன்னிரவு முஸ்லிம்களின் உணவு விடுதி ஒன்றுக்கு வந்த சிங்களவர்கள் சிலர், உணவு அருந்திவிட்டு, உணவில் இருந்த கோதுமை மாவின் அவியாத சில பகுதிகளை காண்பித்து "கடைக்காரர்கள் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மருந்தை-"sterilization pills" - கலந்திருப்பதாக" கூறி குற்றஞ்சாட்டினர் என அப்பகுதி முஸ்லிம்கள் BBC தமிழோசைக்கு தெரிவித்துள்ளனர்.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து காடையர்கள் அந்தக் கடையை மட்டுமல்லாமல் வேறு சில கடைகளையும், அங்கிருந்த பள்ளிவாசல் ஒன்றையும் முற் காலை ஒரு மணி வரை தாக்கி சேதமாக்கியுள்ளனர்.

சுற்றுப்புறங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனங்கள்,மோட்டார் சைகிள்கள் என வாகனங்கள் பலவற்றையும் தீக்கிரையாக்கியுள்ளனர்.

பொலிசாருக்கு உடன் தகவல் தெரிவிக்கப்பட்டும், கோடம்பாக்க தமிழ்ச் சினிமாப் பாணியில் இந்த வெறியாட்டம் ஓய்ந்து காடையர்கள் கலைந்த பின்னர் தான் பொலிஸ் ஸ்தலத்துக்கு ``விரைந்தது``!

இதைத் தொடர்ந்து காடையர்களின் வெறியாட்டத்துக்கு ஆதரவாக ஏராளமான `சிங்கள பொது மக்கள்`திரண்டனர்.இவர்களை கலைந்து செல்லுமாறு கோரிய பொலிசாரை எச்சரித்த  `சிங்கள பொது மக்கள்`, `` எங்களைப் போகக் கேட்க வேண்டாம்,அவர்களை
வெளியேறச் சொல்லுங்கள்`` என சிங்கள மொழியில் கூச்சலிட்டனர்.

ஒரு பெட்டிக்கடை உணவு வியாபாரி தனது விற்பனைப் பண்டமான உணவில் மருந்து கலந்து அம்பாறை நகரில் சிங்களவருக்கு மட்டும் மலட்டுத் தன்மையை ஏற்படுத்த திட்டமிடுவான் என்பது கற்பனைக்கும் எட்டாத கற்பனை! சிங்களத்துக்கு மட்டுமே சாத்தியம்!!

அம்பாறைத் தாக்குதலின் பின்னணி

அம்பாறை மாவட்டத்தின் இன விகிதாசார சனத்தொகை 2015இல், சிங்களவர் 34.43%,தமிழர்15.46%,இஸ்லாமியத் தமிழர்38.75% ஆகும்.(ஆதாரம் ANNUAL PERFORMANCE REPORT & ACCOUNTS 2015-Amparai District).

எனினும் அம்பாறை மாவட்டத்தின் தலை நகரான அம்பாறையில் சிங்களவரே அதிகம் வாழ்கின்றனர்.

எனவே நகர்ப்புற வர்த்தகத்தை தமது ஏகபோகமாக்கவும், படிப்படியாக அம்பாறை மாவட்டத்தையே சிங்கள மயப்படுத்தவுமான திட்டத்தின் ஒரு பகுதியே அம்பாறைத் தாக்குதல் ஆகும்.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் விடுதலைப்புலிகள் அழித்தொழிக்கப்பட்டு தமிழர்கள் நிராயுதபாணிகள் ஆக்கப்பட்டதற்குப்பின்னால் சிங்களம் இஸ்லாமியத் தமிழர்கள் மீது `பெளத்த படையை` ஏவி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது.

மேலும் இது தேசிய இனப்பிரச்சனையை மத மோதல்களைத் தூண்டி சீரழிக்கும் திட்டத்தின் பகுதியுமாகும்.

இந்திய விரிவாதிக்கத்தின் மோடி ஆட்சி இதற்கு பக்கபலமாக இருக்கின்றது.

அம்பாறைச் சம்பவம் நடந்த அதே சமயத்தில் மன்னாரில் இந்து விக்கிரகங்கள் `தொடர்ந்து தாக்கி அழிக்கப்படுவதாக` குற்றம் சாட்டி, இலங்கையின் `இந்து முன்னணி` எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சிங்களத்துக்கு துணை போகும் ``தமிழ் ஊடகங்கள்``

சிங்களக் காடையர்களின் சிங்களப் பேரின பெளத்த மதவெறித் தாண்டவத்தை நியாயப்படுத்த உணவு விடுதி ஊழியன் ஒருவனை புடை சூழ்ந்து மிரட்டி அச்சுறுத்தி, உணவில் மலட்டுத்தன்மை மருந்து கலந்ததாக அவனிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்ற வீடியோ ஒன்று பரப்பப்பட்டு வருகின்றது.

இந்த வீடியோ நமது (Investigative Journalists) ஊடறுப்பு ஊடகவாதிகளுக்கு உடனே ஆதாரம் -Evident- ஆகிவிட்டது! IBC தமிழ் ஆரம்பித்து வைக்க ஊளையிட்டன ஊடகங்கள்!

IBC ஊழியர் ஒருவர் Mc Donalds இல் வாங்கிய உணவில் மலட்டுத்தன்மை மருந்து இருப்பதாகக் கண்டுபிடித்தால் முதலில் Trading Standard Department க்கு தெரியப்டுத்தி உணவுப் பரிசோதனை மூலம் அல்லவா நிரூபிக்க வேண்டும்.இது தானே இலங்கையிலும்
உலகத்திலும் உள்ள வழக்கு.

இதுவரையில் அம்பாறைப் பிரச்சனையில் உணவுப் பரிசோதகர் சம்பந்தப்பட்ட ஒரு பரிசோதனை நடக்கவில்லையே ஏன்?

இந்த எளிமையான கேள்வி நமது தமிழ் ஊடகங்களுக்கு எழவில்லையே ஏன்?

அந்தளவுக்கு கண்ணை மறைத்திருக்கின்றது குறுந் தமிழின வெறி.

இந்த மலட்டுத் தன்மையை என்னவென்று சொல்வது!

சமரசவாத முஸ்லிம் தரகுத் தலைமைகளின் பித்தலாட்டம்:

அமைச்சர் ரவூப் ஹக்கீம், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பிரதி அமைச்சர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், ஏ.எல்.எம். நசீர் கூடவே மனோ கணேசன் அடங்கிய துணை ஆளும் கும்பல்கள், தாக்குதல்
சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதியும், பிரதமரும் உறுதியளித்துள்ளனர் என உறுதியளிக்கின்றனர்.  முஸ்லிம் மக்கள் மிகவும் நிதானமாக நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றனர்.

அமைச்சரவை கூட்டத்தில் ஹக்கீம் கூறுகின்றார் '`நள்ளிரவு நேரத்தில் பள்ளிவாசல் தாக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிலையம் தீவைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன. இவ்வளவு கலவரங்கள் நடைபெற்று முடியும் வரைக்கும் பொலிஸார் தலையிடாமல் இருந்தமைக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். உளவுப்பிரிவுக்கு தெரியாமல் இந்த விடயங்கள் நடந்திருக்காது. ஆனால், உளவுப்பிரிவும் இந்த விடயத்தில் அவதானம் செலுத்த தவறியுள்ளது``.மேலும்  இதில் கைதுசெய்யப்படுபவர்கள் மீது பிணை வழங்குவதில் இறுக்கமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள “சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை” (International Convention Civil and Political Rights) சட்டத்தின் கீழ், உயர் நீதிமன்றத்தில் A Grade வழக்கு தொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கூறியுள்ளதாக சட்டவாதம் புரிகின்றார்.

தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசல், வர்த்தக நிலையம் போன்றவை அரச செலவில் புனரமைக்கப்பட வேண்டும். அத்துடன் எரியூட்டப்பட்ட வாகனங்களுக்கும் நஷ்ட  ஈடு வழங்கப்படவேண்டும் என்று  அமைச்சரவையில் வலியுறுத்தினார்.

``இனவாதத்தை ஏற்படுத்தி, மக்களை குழப்பும் நோக்கில் சில குழுக்கள் வன்முறையில் இறங்கியிருப்பதானது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம். அண்மையில் வெளியான தேர்தல் முடிவுகளால் இந்த இனவாதக் குழுக்கள் உற்சாகமடைந்திருக்கலாம். இந்த நேரத்தில் எல்லா
தலைமைகளும் ஒற்றுமையாக செயற்பட்டு தீர்வுகாண முன்வரவேண்டும். இப்பிரச்சினைக்கு நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் உத்தரவாதம் தந்துள்ளதால், முஸ்லிம் மக்கள் மிகவும் நிதானமாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் சில தீவிர சமரசவாதிகள், நாடு பிரிய வழி கோலும், முஸ்லிம்களை ஆயுதம் ஏந்தத் தள்ளும் என தமது எஜமானர்களுக்கு ஆலோசனை வழங்குகின்றனர்.

ஆக இவர்கள் விளக்கப்படி;  சில குழுக்கள் இனவாத வன்முறையில் இறங்கியிருப்பதும், பொலிசும் உளவுப் பிரிவும் தலையிடாமல் இருந்தமையுமே இப்பிரச்சனைக்கு காரணம். 1) சந்தேக நபர்கள் மீது A Grade வழக்கு தொடுப்பது, 2) அழிவுக்கு அரசு இழப்பீடு செய்வது
3)முஸ்லிம் மக்கள் மிகவும் நிதானமாக நடந்துகொள்வது, இவையே தீர்வாகும்.

இதன் மூலம் 1) ஒட்டுமொத்த நாட்டையும் அந்நிய நிதி மூலதனத்துக்கு விற்றுத் தொலைத்து 2) உலக மறுபங்கீட்டு யுத்தத்தில் அமெரிக்க இந்திய இராணுவக் காலனியாகும் நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகிவிட்ட 3) இன ஒடுக்குமுறையின் மீது கட்டப்பட்ட சிங்கள அரசு தனது இருப்பைத் தற்காத்துக் கொள்ள இன மத பூசல்களை தணியவிடாது, ஓயாது தூண்டிக் கொண்டே இருக்கும் என்கிற ஆதார உண்மையை மூடி மறைக்க முயல்கின்றனர்.

முஸ்லிம் துணை ஆளும் கும்பல்கள், வணிகத் தரகு வர்க்கம் என்கிற முறையில் ஆற்றுகின்ற வரலாற்றுப் -பிற்போக்கு எதிர்ப் புரட்சிப் - பாத்திரம் இதுவாகும்.

எவ்வாறு தமிழ்த்தரகு முதலாளிய வர்க்கம், `இனத்தோல் போர்த்து` தன் வர்க்க இயல்பை மூடி மறைக்க முயன்றதோ, அது போலவே முஸ்லிம் தரகு முதலாளிய வர்க்கமும் `மதத் தோல் போர்த்து` தன் வர்க்க இயல்பை மூடி மறைத்து வருகின்றது.

ஆனால் முரட்டுப் பிடிவாதமுள்ள வர்க்க முரண்பாடு-வரலாறு, இந்த போலித் தோல் போர்வைகளை சற்று முந்தியோ பிந்தியோ நீக்கி இவர்களின் சுய ரூபத்தை வெளிக்காட்டி விடுகின்றது, அல்லது வெளிக்காட்டியே தீரும்.

இவ்வாறுதான் தமிழ்த்தரகு முதலாளிய வர்க்கத்தின் `அதிகாரப் பகிர்வு சமஸ்டி இயக்கம்`, ஒரு முப்பது ஆண்டு காலத்தில் சாயம் வெளுத்துப் போனது.இதுவே முஸ்லிம் தரகு முதலாளிய வர்க்கத்துக்கும் நடந்தேறி வருகின்றது.

எனவே இது 1915 மற்றும்,  கறுப்பு ஒக்ரோபர் 1990* களங்கங்களுக்கு பரிகாரமாக, இஸ்லாமியத் தமிழர்களோடு ஒன்றுபட கரம் நீட்டும் காலமாகும்.

இந்த ஒற்றுமைக்கு குழி பறிக்கும், குறுமினவாத,குறுமதவாத சக்திகளைத் தனிமைப்படுத்தி ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டும் காலமாகும்.

சிங்களத்தின் இஸ்லாமியத் தமிழர்கள் மீதான தொடர் தாக்குதலை கண்டிப்போம்!

யுத்த மற்றும் பிற்கால அழிவுகளுக்கு நஸ்ட ஈடு கோருவோம்!

1983 ஜூலைக்கு முன்பிருந்த நிலைக்கு இஸ்லாமியத் தமிழர்களின் மீள் குடியேற்றத்தைக் கோருவோம்!

இஸ்லாமியத் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளை நிர்வாக ரீதியாக ஒன்றிணைத்த பிரதேச சுயாட்சிக்காகப் போராடுவோம்!


புதிய ஈழப் புரட்சியாளர்கள்.
01-03-2018
-------------------------------------
  *கறுப்பு ஒக்ரோபர் 1990-தமிழீழ விடுதலைப் புலிகளின் வடமாகாண இஸ்லாமியத் தமிழர் கட்டாய வெளியேற்றம்-சமூக நீக்கம்.

முதலாவது கட்டாய வெளியேற்றம் சாவகச்சேரியில் இடம்பெற்றது. சுமார் 1,500 முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதன் பின்னர் கிளிநொச்சி, மன்னார் என தமது பூர்வீக வாழ்விடங்களைவிட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். யாழ்ப்பாணத்திலிருந்து 1990 அக்டோபர் 30 இல் வெளியேற்றப்பட்டனர்.  1981 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி யாழ்ப்பாணத்தில் 14,844 முஸ்லிம் மக்கள் வசித்து வந்திருந்தனர். வட மாகாணத்தில் இருந்து 14,400 முசுலிம் குடும்பங்கள் (கிட்டத்தட்ட 72,000 பேர்) வெளியேற்றப்பட்டனர். இவர்களில் மன்னாரில் இருந்து 38,000 பேரும், யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் இருந்து 20,000 பேரும், வவுனியாவில் இருந்து 9,000 பேரும், முல்லைத்தீவில் 5,000 பேரும் அடங்குவர்.

இவர்களில் பலர் புத்தளம் மாவட்டத்திலும், ஏனைய பகுதிகளிலும் குடியமர்த்தப்பட்டனர்.