Friday 17 May 2013

முள்ளிவாய்க்கால்ப் படுகொலைக்கு பழி தீர்ப்போம்!

முள்ளிவாய்க்கால் மே 18 2013
 
 
முள்ளிவாய்க்கால்ப் படுகொலைக்கு பழி தீர்ப்போம்!
 
ஏகாதிபத்தியம் ஒழியப் போராடுவோம்.
 
உலக மறுபங்கீட்டு, அனைத்து ஏகாதிபத்திய நாட்டுப்பிரிவினைகளையும், ஆக்கிரமிப்பு யுத்தங்களையும், ஆட்சிக்கவிழ்ப்புகளையும் எதிர்ப்போம்!
உலகத் தொழிலாளர்களோடும் ஒடுக்கப்படும் தேசங்களுடனும் ஐக்கியப்படுவோம்!
 
இந்திய விரிவாதிக்க விசவாயு அரசைத் தகர்ப்போம்.
 
தமிழகத்தில் இன நல நாடகம் ஆடி ஈழத்தமிழர்களுக்கு தொடர்ந்து குழி பறிக்கும் சமரசவாதிகளைத் தனிமைப்படுத்துவோம்!

தமிழக மக்கள் ஜனநாயக இயக்கத்துடன் ஐக்கியப்படுவோம்!

இந்திய ஜனநாயகப் புரட்சியுடனும், இந்தியத் தேசங்களின் சுயநிர்ணய உரிமை இயக்கத்துடனும் ஒன்றுபடுவோம்!

காஸ்மீர் பிரிவினைக்கு வாக்கெடுப்புக் கோரிப் போராடுவோம்!
 
பக்ச பாசிஸ்டுக்களை வெற்றி கொள்வோம்.
 
மலையகப் பாட்டாளி இனச்சிறுபான்மை மக்களின் சுயாட்சி உரிமைக்காப் போராடுவோம்!

மதச் சிறுபான்மை இஸ்லாமியத் தமிழர்களின் விடுதலைக்கு குரல் கொடுப்போம்!

ஒடுக்கும் சிங்கள தேசத்தின் உழைக்கும் மக்களை வென்றெடுக்க விடாப்பிடியாக முயல்வோம்!
 
தமிழீழத்தின் விடுதலைக்கு பிரிவினைக் கோரிக்கையை உயர்த்திப்பிடித்து பொதுவாக்கெடுப்புக் கோரிப் போராடுவோம்!

தவிர்ந்த அனைத்து போலி ஜனநாயக பொறுக்கித் தேர்தல்களையும் புறக்கணிப்போம்!
 
இராணுவ மயமாக்கலை எதிர்ப்போம்.
தமிழீழத்தில் இருந்து ஆக்கிரமிப்பு சிங்கள அடக்குமுறை அவமான இராணுவத்தை வெளியேறக் கோருவோம்!
 
முள்ளிவாய்க்கால் கைதிகளின் விடுதலைக்குப் போராடுவோம்.
 
யுத்தக்கைதிகள் அனைவரினதும் விடுதலைக்கு குரல் கொடுப்போம்!
நிலம் பெயர்ந்த மக்களை- தமிழீழ விவசாயிகளை- தங்கள் சொந்த நிலத்தில் மீள் குடியேற்ற போராடுவோம்!
 
புதிய ஜனநாயகப் புரட்சிப்பாதையில் தமிழீழ விடுதலை காணும் வரை
உறுதி தளராது போராடுவோம்.
 
நிலத்திலும்,புலத்திலும்,தமிழகத்திலும், ஈழ ஆதரவு சமரசவாத, ஏகாதிபத்திய தாச, இந்திய விரிவாதிக்க நேச சக்திகளைத் தனிமைப்படுத்துவோம்!
 
உலகத்தொழிலாளர்களுடனும் ஒடுக்கப்பட்ட தேசங்களுடனும் ஐக்கியப்பட்டு தமிழீழ தேசத்தை வென்றெடுப்போம்!
 
 
 
புதிய ஈழப்புரட்சியாளர்கள்