Thursday 26 December 2013

தேசிய சுயநிர்ணய உரிமை, மார்க்சியத்தின் பத்துக் கோட்பாடுகள்! செல்வம் செங்கொடிக்கு சமர்ப்பணம்!


செங்கொடிக்கு சமர்ப்பணம்:

சுயநிர்ணய உரிமை என்றால் என்ன? 

1) ஒரே அரசின் கீழ் உள்ள பல தேசிய இனங்கள் அதே அரசின் கீழ் வாழ்வதா, பிரிந்துசென்று தனியரசு அமைத்துக் கொள்வதா என அந்தந்த இனத்து மக்கள் தாமாகவே முடிவெடுக்கும் உரிமையிது.

2) ஒரு தேசிய இனம் ஒரு அரசிலிருந்து பிரிந்து செல்ல விரும்பினால் அவ்வாறு பிரிந்து செலவதற்கு அதற்கு சுதந்திரம் இருக்க வேண்டும் என்ற ஜனநாயக உரிமையிது.

3) சுயநிர்ணய உரிமை என்றால் பிரிந்து செல்லும் உரிமையே. சுய நிர்ணய உரிமை என்பதை தனி அரசாக நிலவும் உரிமை என்ற பொருளில் அன்றி வேறு விதமாக வியாக்கியானம் செய்வது தவறானதாகும்.பிரிந்து செல்லும் உரிமையும், பிரிவினையும் ஒன்றல்ல.

4) பல இனங்கள் ஒரே அரசின் கீழ் வாழ்வதால் அங்கு பிரிந்து செல்லும் உரிமை நிலவும் போதுதான் இன சமத்துவத்தை ஏற்படுத்த முடியும்.

5)இத்தகைய இன சமத்துவம் என்ற இடைக்கட்டத்தின் மூலம்தான் தேசங்களின் பரிபூரண ஐக்கியத்தை நோக்கி முன்னேறமுடியும்.

6) அனைத்து இனங்களின் சமத்துவத்திற்காகப் போராடுவது முதலாளி வர்க்கத்தின் நோக்கமல்ல. அது தனது 'தேசிய உரிமைகளைப் பற்றி
மட்டுமே கவலைப்படும்.

7) பாட்டாளிவர்க்கம் மட்டுமே அனைத்து இனங்களின் சமத்துவத்தை, முரண்பாடற்ற ஜனநாயகத்தை நோக்கமாகக் கொண்டது.

8)எந்த அரசின் கீழ் இருப்பது என்பது மக்களின் விருப்பங்களின்படி தீர்மானிக்கபடுவதாகவும் விரும்பினால் பிரிந்து போகவும் உரிமை
இருக்கக்கூடிய நிலையில்தான் தேசிய ஒடுக்குமுறைகளை ஒழிப்பதற்கான வாய்ப்புகள் யதார்த்தமாகின்றன.

9) அத்தகைய ஜனநாயக ரீதியில் அமையப்பெற்ற அரசு நிறுவப்படுவது ஜனநாயக புரட்சியை பூர்த்தி செய்து சோசலிசத்திற்கு முன்னேறுவதற்கு கூட முன்னிபந்தனையாகும்.

10)  ஆகவே பாட்டாளிவர்க்கம் புரட்சிக்கு முன்பு மட்டுமல்ல. புரட்சிக்கு பின்பும் சோசலிசத்தின் கீழும்கூட சுயநிர்ணய உரிமையை உயர்த்திப் பிடிக்க வேண்டும்; இனசமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும்,அத்துடன் இது ஏகாதிபத்திய சகாப்தமாகியிருப்பதால், பழைய வகைப்பட்ட உலக முதலாளித்துவ ஜனநாயக புரட்சிக்காலம் ஏற்கனவே முடிந்துவிட்டு உலகப் பாட்டாளிவர்க்க புரட்சிக்காலம் தொடங்கிவிட்ட படியால் தேசிய இனப் பிரச்சனை உலக பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் நடைபெறும் புரட்சிகளின் பகுதியாக ஆகிவிட்டது.

மாமேதை லெனின்


குறிப்பு: இந்த பத்துக் கட்டளைகளில் எந்த ஒன்றை விலக்கிவிட்டு `சுயநிர்ணயம்` பற்றிப் பேசினாலும் அது மார்க்சியம் ஆகாது.


======================================================================

தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான 

மார்க்சியத்தின் விடுதலைப் பதாகை!

இதுவே தமிழீழ விடுதலைப் பாதை!!