Thursday 30 April 2015

2015 மே நாள் முள்ளிவாய்க்கால் போர்வீரம் நீடூழி வாழ்க!

மே நாள் முள்ளிவாய்க்கால் போர்வீரம் நீடூழி வாழ்க!

`ரணில்- மைத்திரி-பொன்சேகா`-போர்க்குற்றவாளிகளின் தேசத்துரோக ஆட்சியை நிராகரிப்போம்!

ஈழப்பிரிவினைக்கு பொது வாக்கெடுப்புக் கோரி போராடுவோம்!!
அன்பார்ந்த தமிழீழ மக்களே,
உலகெங்கும் பரந்து வாழும் ஈழ மாணவர்களே, இளைஞர்களே,உழைக்கும் மக்களே, ஜனநாயக உணர்வாளர்களே, அறிவுஜீவிகளே,போராளித் தோழர்களே;

மீள முடியாத நெருக்கடியில் சிக்குண்டுள்ள ஏகாதிபத்தியம் பொருளாதார உலகமய, தேசிய உலகமறுபங்கீட்டு ஆக்கிரமிப்பு யுத்தங்களை
பூமிப்பரப்பெங்கும் ஏவி வரும் காலம் இதுவாகும்.இன்றைய தருணத்தில் பரந்த பிராந்திய யுத்தங்களின் வடிவைப் பெற்றுள்ள இம் முரண்பாடு ஒரு முழு உலகப் போராக உருமாறுவதற்கான அத்தனை கூறுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.மூன்றாவது உலகப்போர் இராணுவ நிலையில் கருக்கொண்டுவிட்டது.

இத்தகைய ஒரு சர்வதேச சூழலில் தான் இவ்வாண்டு மே நாளையும், முள்ளிவாய்க்கால் நினைவின் ஆறாம் ஆண்டையும் நாம் எதிர் கொள்கின்றோம்.

ஈழ தேசிய விடுதலைக்கான புரட்சித்திட்டத்துக்கு புதிய சூழ்நிலையால் உயிரூட்டவும், ஏகாதிபத்திய எதிர்ப்பு சர்வதேசியப் புரட்சியில் நமது நிலையை வரையறை செய்யவும், உலக மறுபங்கீட்டை ஒட்டிய அணிசேர்க்கையில் நமது நிலையை வகுத்துக்கொள்ளவும்,  இன்றைய சர்வதேச சூழ் நிலையின் பொதுப்போக்கு பற்றிய அரசியல் ஆய்வு இன்றியமையாததாகும்.

இன்றைய சர்வதேச சூழ் நிலை:

ரசிய சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சிக்குப்பின்னால் (1991 ) அமெரிக்கா தலைமையிலான ஒரு ஒற்றைத் துருவ உலக ஒழுங்கமைப்புத் தோன்றியது.இந்தச் சூழலையைப்பயன்படுத்தி புதிய உலக மறுபங்கீட்டில் ஏகாதிபத்தியவாதிகள் குதித்தனர்.அமெரிக்க, ஐரோப்பிய, ஏகாதிபத்திய வாதிகள் நேட்டோ இராணுவ குழுமத்தின் துணையுடனும்,ஐ.நா.சபையின்
ஆசீர்வாதத்துடனும் சோவியத் யூனியனின் அங்க நாடுகளாக இருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளை, பெர்லின் சுவரைத் தகர்த்து சுதந்திர விழாக்கொண்டாடி ஐரோப்பிய ஜூனியனின் கீழ் இணைத்தனர்.அந்நாடுகளின் அடிபணியாத தேசியவாதிகளை `இனச்சுத்திகரிப்பு'க் குற்றம் சாட்டி,ஹேக்நீதி மன்றத்தில் நிறுத்தினர். (1992-1995)

அடுத்து மத்திய கிழக்கைக் குறிவைத்தனர்.``முரட்டு அரசுகளைக் கவிழ்ப்பது`` என்கிற கொள்கையை வகுத்தனர்.இந்தத் தருணத்தில் தான் அமெரிக்காவின்
ஆதிக்க இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டன(2001).இந்த இராணுவ நடவடிக்கையில் பங்கு கொண்ட பெரும்பான்மையோர் சவூதி அரேபியராக இருக்க அமெரிக்கா ஆப்கானிஸ்தானை கற்காலத்துக்கு பின்னோக்கித் தள்ளும் ஆக்கிரமிப்பு யுத்தத்தைக் கட்டவிழ்த்தது(2001).அதேவேளையில் அமெரிக்காவால் ஏககாலத்தில் மூன்று நாடுகளுக்கு எதிராக யுத்தம் புரிய சக்தி உண்டு என புஸ் சென்னி கும்பல் மார் தட்டியது, இதர இரு நாடுகளும் ஈராக்கும் ஈரானும் ஆகும்.ஆதிக்கக் கோபுரத்தாகுதலில் 3000 அப்பாவிப் பொதுமக்கள் பலியாகிய அநுதாபம் தமது உலகமறுபங்கீட்டீற்கு உறுதுணையாக இருக்குமென பாசிஸ்டுக்கள் நம்பினர். அயர்லாந்துப் பிரச்சனைக்கு அதிகாரப்பகிர்வு தீர்வு கண்டு:அதாவது உள்நாட்டில் அமைதியை ஏற்படுத்தி,அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்உலக மறுபங்கீட்டில் `தோளோடு தோள்`நிற்க,  புதிய தொழில் கட்சி என புத்தவதாரம் எடுத்த தொழில் கட்சி முடிவு செய்தது. ஈராக் அதிபர் சதாம் ஹுசைன் `மனிதப் பேரழிவு ஆயுதங்களை` உற்பத்தி செய்கின்றார் என்கிற ஆதாரமற்ற சோடிக்கப்பட்ட போலிக் குற்றச்சாட்டின் பேரில் ஈராக் மீது யுத்தம் தொடுத்தனர்(2003).இந்தத்தடவை இது ஐ.நா.வின் ஆசீர்வாதம் இன்றியே அரங்கேறியது.அதனால் சட்டவிரோத யுத்தம் எனப் பெயர் பெற்றது!புஸ் சென்னி பிளேயர் கும்பலின் எதிர்பார்ப்புக்கு மாறாக இலட்சோப இலட்சம் மக்கள் தெருவில் இறங்கி `` எண்ணெய்க்கான இந்த யுத்தத்தை எமது பெயரால் தொடுக்காதே, நிறுத்து!``, என உலகின் மிகப்பெரும் பிரதான நகரங்கள் எங்கும் விண்ணதிர முழங்கினர், எனினும் பாசிச ஆக்கிரமிப்பு வெறியர்கள் ஈராக்கில் இறங்கினர்.பொன் விளைந்த அந்தப் பூமியை 'பொரிமாத்தோண்டியின் கனவு போல்` நிர்மூலமாக்கினர்.

ஆனால் மூன்று நாடுகளுக்கு எதிராக ஏக காலத்தில் யுத்தம் செய்ய முடியும் என மார் தட்டியபோதும் ஈராக் யுத்த காலத்தில் ஏகாதிபத்திய பொருளாதார நிதியாதாரப் பொறிமுறை மீது பேரிடி விழுந்ததது.இது Financial crisis (2007-2008) என அழைக்கப்படுகின்றது. இதில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொடுமுடி நிறுவனங்கள் அனைத்தும் சரிந்து விழுந்து மக்களின் வரிப்பணத்தால் முண்டு கொடுத்து மரணத்தறுவாயில் துரோகத்தனமாக காக்கப்பட்டன.

இதன் காரணமாகவும் ஆப்கானிஸ்தானிலும்,ஈராக்கிலும் வாங்கிய உதையின் வலி காரணமாகவும்,அமெரிக்கா தனது உலகமறுபங்கீட்டு ஆட்சிக் கவிழ்ப்புகளை, நேரடியாக தனது படையை இறக்கி சாதிப்பதற்கு திராணியற்றதாகியது.இதை ஈடு செய்ய `ஏகாதிபத்திய தொண்டு நிறுவனங்களை`யும், துணைக்கூலிப்படைகளையும்,`புலம் பெயர் ஓடுகாலிகளையும்` ஏவி. `அரபு வசந்தம்`(2010) என்கிற ஆட்சிக்கவிழ்ப்பு
நாடகத்தை  அரங்கேற்றியது.துனூசியா,எகிப்து,லிபியா, வரிசையில் பேரவாக் கொண்டு சிரியா மீது பாய்ந்தது.

ரசிய சமூக  ஏகாதிபத்தியத்துக்கு  ஆப்கான் போர் அமைந்தது போல், அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு சிரியாப் போர் அமைந்துவிட்டது.சிரிய அதிபர் சதாத்தின் நாட்கள் எண்ணப்படுகின்றன என ஆர்ப்பரித்து ஆரம்பித்த ஆட்சிக்கவிழ்ப்புப் போர் (March 2011),நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இரண்டரை இலட்சம் மக்களைப் பலிகொண்டு, தொடர்ந்த வண்ணம் உள்ளது!.அதுமட்டுமல்லாமல் புதிய பரிமாணங்களையும் எட்டியுள்ளது.

ஈரானின் (மற்றும் ரசியாவின்) அனுசரணை இல்லாமல் சிரியாவில் ஒரு அடியும் இனிமேல் அமெரிக்காவால் முன்னேற முடியாது,கூடவே சதாம் இல்லாத ஈராக்கில் ஈரான் ஆழ வேரூன்றிவிட்டது,மட்டுமல்லாமல் ஈரான் சிவில் அணு ஆயுத தயாரிப்பிலும் இறங்கிவிட்டது, இவை அனைத்தும் ரசிய பின்பலத்துடன் நடப்பவை ஆகும்.இவற்றில் அணு ஆயுதப் பிரச்சனையில் ஈரானுடன் சமரசம் காணுதல் அமெரிக்க நலன்களுக்கு முதன்மை ஆகியது.

ஆனால் இத்தகைய சமரசம் இஸ்ரேல் சவூதி அரேபிய அமெரிக்க உறவில் விரிசலைத் தோற்றுவித்துள்ளது.இதன் விளைவு தான், சவூதி மற்றும் அரபுக் கூட்டாளிகளின் தன்னிச்சையான யேமன் யுத்தம் ஆகு

ஆக ரசிய சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சி அதிகாரபூர்வமாகப்  பிரகடனம் செய்யப்பட்ட 1991 ஆம் ஆண்டிலிருந்து இன்று (2015) வரையான கால் நூற்றாண்டில், அமெரிக்கா ஒற்றைத்துருவ உலக ஒழுங்கமைப்பில்
தனது மேலாண்மைய நிலை நிறுத்த எடுத்த ஆக்கிரமிப்பு சாகச வெறியாட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்து அமெரிக்காவை ஒரு முடி இழந்த மன்னனாக உலகில் உலாவ விட்டுள்ளது.

ரசிய சீன எழுச்சி

மாறாக இதே காலத்தில் ரசியாவும் சீனாவும் எழுந்து வந்தன.

ரசியா எண்ணெய் வளத்தைக் கொண்டும்,ஆயுத வியாபாரத்தைக் கொண்டும் தன்னை ஒரு ஏகாதிபத்தியமாக வளர்த்துக்கொண்டது.2020 ஆண்டளவில் ரசியா தனது ஆயுத ஏற்றுமதியை மும்மடங்காக அதிகரித்து அமெரிக்காவின் முதல் நிலையை எட்ட முயலும் என இராணுவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சீனா அந்நிய முதலீட்டிக்கும் , தேசிய மூலதனத்துக்கும் இடையில் ஒரு சமரச நிலையக் கடைப்பிடித்து, மிக மலிவாக உழைப்புச் சக்தியை சுரண்டி, மூலதன வலிமைமிக்க பிரமாண்டமான உலக உற்பத்திச்சாலையாக மாறியது. அமெரிக்காவை தனது கடனாளி நாடாக மாற்றியது.January 16, 2014FOX Business இன் தரவின் அடிப்படையில் (China Now Owns a Record $1.317T of U.S. Government Debt.) அதாவது அமெரிக்க அரசாங்கக் கடனில் 1.37ரில்லியன் டொலர் பெறுமதியான கடனை சீனா பொறுப்பேற்றுள்ளது. ஆசியா ஆபிரிக்கா தழுவிய வகயில் தனது விரிவாதிக்கத்தை விஸ்தரித்துக் கொண்டது.

இவ்வகையில் இரு மாபெரும் நாடுகள் உலக அரங்கில் உள்நாட்டு அடித்தளம் கொண்டு அமெரிக்காவுக்கு சவாலாகத்  தோன்றின. இவை இரண்டும் மத்திய கிழக்கில் ஈரானின் மேலாண்மையை ஆதரிக்கின்றன.

இத்தகைய புதிய சூழலில் ஒற்றைத்துருவ அமெரிக்க உலக ஒழுங்கமைப்பு சவாலுக்குள்ளானது.

இதனை எதிர்கொள்ள அமெரிக்கா ரசியாவை இராணுவரீதியில் சுற்றிவளைத்தது.இதற்காக கிழக்கு ஐரோப்பிய நாடுகளைத் தளமாக்கியது.கொசோவைப் பிரித்தது (2008), குறிப்பாக உக்ரேயினில் தலையீடு செய்தது.ரசியாவுக்கு எதிரான இராணுவத்தளமாக உக்ரேனை மாற்றியது.நேற்றோவைக் கொண்டு உக்ரேயின் இராணுவத்தை ரசிய எல்லைகளில் நிறுத்தியது.

முதல் இரு கட்டங்களிலும் இருந்தது போலல்லாமல் இந்தத்தடவை ரசியா நேரடியாக கிரீமியாவை ஆக்கிரமித்து தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து பதிலடி கொடுத்தது.சிரியாவுக்கும்,ஈரானுக்கும் பகிரங்கமாகவே ஆயுத விநியோகம் செய்தது. பொருளாதாரத் தடைக்கு மேல் அமெரிக்காவால் எதுவும் செய்ய இயலவில்லை.

இது ஒரு புதிய காலகட்டத்தின் தோற்றமாகும்.

இக்காலகட்டத்தில்  ரசிய சீன எதிர்ப்பு உலக அமைப்பை உருவாக்குவது  அமெரிக்க ஏகாதிபத்திய நலனுக்கு அவசியமாகிவிட்டது.அணு ஆயுதப்பிரச்சனையில் ஈரானுடன் சமரசம் செய்துகொண்டாலும்
அமெரிக்காவின் உலக மேலாதிக்க யுத்ததந்திர நலனின் கோணத்தில் ரசிய சீன வரிசையில் ஈரானும் எதிராளி நாடே ஆகும்.

இந்தப் பின்னனியில் தான் ஜப்பானுடன், இந்திய விரிவாதிக்க அரசையும் தனது யுத்ததந்திர கூட்டாளி ஆக்கியுள்ளது அமெரிக்கா. மோடி அரசு முழந்தாளிட்டு சேவகம் செய்ய தயாராகிவிட்டது.

இதனடிப்படையில் தனது ஏகாதிபத்திய தொண்டை தென்னாசிய,இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகள் மீது நிறைவேற்றும் பொருட்டு இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களிலும் தலையீடு நடத்தி வருகின்றது இந்திய விரிவாதிக்க அரசு..
உள்நாட்டுச் சூழ்நிலை:

30 ஆண்டுகால ஈழப்போரில் ஆனையிறவுப் பெரும் படைத்தளத்தை தகர்த்து புலிகள் தமது முகட்டை எட்டினர்.யாழ் நோக்கிச் செல்ல ஏகாதிபத்தியம்  தடை விதித்தது.

பேச்சு வார்த்தை நாடகம் ஆடினர்.அன்ரன் பாலசிங்கம் `அதிகாரப்பரவலாக்கத்துக்கு` ஒஸ்லோவில் துரோகத்தனமாக கையொப்பம் இட்டான்.

ரணில் கருணாவை கைப்பற்றினான்,யுத்த பல சமநிலை மாறியது,இறுதியில் புலிகளின் தலைமைத் தளபதிகளை  விசவாயுத் தாக்குதலில் கோழைத் தனமாக படுகொலை செய்தனர்.

விடுதலைப்புலிகள் ஒரு ஸ்தாபனம் என்ற வகையில்(As an Organaisation) முற்றாக அழித்தொழிக்கப்பட்டனர்.

இதற்கு முழு உரிமை கொண்டாடிய பக்ச பாசிஸ்டுக்கள், இந்த யுத்த வெற்றியை மூலதனமாகக் கொண்டு தமது பாசிச இராணுவ, குடும்ப சாம்ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்பினர்.

பக்ச பாசிஸ்டுக்களின்  இனப்படுகொலைக்கு அமெரிக்காவும், இந்தியாவும், உறுதுணையாக இருந்த போதும் சில மட்டுப்பாடுகள் இருந்தன.

இவை எதுவுமின்றி இந்துசமுத்திரத்தில் தனது கடலாதிக்கத்தை உறுதி செய்யும் பொருட்டு ஆயுதங்களையும், நிதியையும் அள்ளி அள்ளி வழங்கியது சீன அரசு.

இலங்கை இந்தியாவைக் காட்டிலும் சீனாவை சார்ந்த வெளிவிவகாரக் கொள்கையை நாடுவதற்கு தமிழகமும், ஈழப்பிரிவினை இயக்கமும் ஒரு முக்கிய காரணமாகும்.

இலங்கையின் சீன சார்பு போக்கு பக்ச பாசிஸ்டுக்களால் தோற்று விக்கப்பட்டது அல்ல.70களில் சிறீமா அரசாங்கம், சீன  அரசுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது.தமிழீழம் மன்னார் பேசாலையில் எண்ணெய் ஆய்வுக்கான குத்தகை சீன நிறுவனத்துக்கே வழங்கப்பட்டிருந்தது.

1972 அரசியல் யாப்பை எதிர்த்து சிறை சென்ற தமிழ் இளைஞர்களில் ஒருவரான புகழ்பெற்ற தமிழ்க் கவிஞர் ஒருவரின் பிரசுரிக்கப்படாத உணர்ச்சிக் கவிதை வரிகள் பின்வருமாறு:
`` சிறீமாத் தாய்- தமிழர்க்கு நாய் ;
சூ என் லாய்- படுத்துறங்கிய பாய்``!
(ஆதாரம்: அவர் கூட சிறையிருந்தவர்கள்) 
ஆனால் யுத்தத்துக்கு, சீனா வழங்கிய நிபந்தனையற்ற பேருதவியின் காரணமாகவும், இனப்படுகொலை,மனித உரிமை மீறல், ஐ.நா.விசாரணை என மேற்குலக அரசுகள்  மிரட்டி வந்ததாலும், யுத்த வெற்றிக்குப் பின்னால் வெளியுறவு கொள்கையில் ஒரு அடிப்படையான மாற்றத்தை பக்ச பாசிஸ்டுக்கள் ஏற்படுத்தினர்.

அமெரிக்க இந்திய சார்பு நிலைக்கு மாறாக, சீன ஈரான் நிலையைத் தேர்ந்து கொண்டனர்.

இலங்கை ஒரு இந்திய எதிர்ப்பு நாடாகும்.குறிப்பாக சிங்கள மக்கள் எப்போதும் இந்தியாவை நம்பியதில்லை.பழங்காலப் படையெடுப்புகள் மட்டுமல்ல, நிகழ்காலப் படையெடுப்புகளும் இற்கு காரணமாகும்.ராஜீவ் காந்தி மீதான சிங்கள சிப்பாய் ஒருவனின் தாக்குதல் இதன் விளைவே .இலங்கை மீது இந்தியா குறைந்த பட்சம் 4 தடவை தலையிட்டுள்ளது.இந்திய இலங்கை ஒப்பந்தம் ஒரு மேலாதிக்க ஆக்கிரமிப்பு ஒப்பந்தமாகும்.தன் கையை முறுக்கி இந்தியா செய்த ஒப்பந்தம் என்று ஜே.ஆர் வர்ணித்தார். மேலும் யுத்த வெற்றியின் விளைவாக மன்னர் ராஜபக்ச இரண்டுதடவை அமோக வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டார், `ஜெயித்துக் கொண்டே இருப்பேன்` என நம்பிக்கை கொண்டிருந்தார்! இந்த அடிப்படையான அயல் உறவுக் கொள்கை மாற்றத்துக்கு மக்களின் ஆதரவு இருந்தது.

இந்த நம்பிக்கையில் தனது பதவிக்காலம் முடியும் முன்னமே, எதிர்க் கட்சியான ஐக்கிய தேயக் கட்சி உட்கட்சி பூசலில் சிக்கிக் கொண்டிருந்த வேளையில் தேர்தலை அறிவித்து, மூன்றாவது பதவிக்கால வெற்றியைப் பெற முயன்றார்.

அமெரிக்காவும் இந்தியாவும் திட்டமிட்டிருந்த ஆட்சிக்கவிழ்ப்பை இந்தத் தேர்தலில்(2013) அமூலாக்க முடிவு செய்தனர்.RAW நேரடியாக தலையீடு செய்தது.ராஜபக்சவுக்கு எதிராக அவரது சொந்தக்கட்சி உறுப்பினரும்,சொந்த அரசாங்க அமைச்சரும்,இறுதிக்கட்டத்தில் இனப்படுகொலை யுத்த அமைச்சருமான மைத்திரிபால சிறீசேன தேர்தலில் ராஜபக்சவை எதிர்த்து போட்டியிட்டார்.

இந்திய நாடாளுமன்றத்தேர்தல்களில் பொதுவிதியாகவும்,இலங்கை நாடாளமன்றத் தேர்தலில் மிக விதிவிலக்கானதுமான `கட்சி தாவல்`தாராளமாக இடம்பெற்றது.இவ்வாறு கட்சி தாவியோர் காலம் காலமாக தமது எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இரவோடு இரவாக  கூட்டமைத்தனர்.இந்தியக் கைக்கூலி தமிழ்க் கூட்டமைப்பும், இதர தமிழ் அடிமைகளும், அந்நிய சிவில் சொசைட்டிகளும்,பாதிரிமார்களுமாக
தமது பங்குக்கு தமிழ் மக்களின் வாக்கை மைத்திரிக்குப் பெற்றுக் கொடுத்து தமிழ் வாக்குகளால் `போர்க்குற்றவாளிகள்` அதிகாரத்தைக் கைப்பற்ற வழியமைத்தனர்.மைதிரிபால சிரீசேனா ஜனாதிபதி ஆனார்.

பக்ச பாசிஸ்டுக்களின் சாம்ராஜ்ஜியக் கனவு தற்காலிகமாகத் தகர்ந்தது.மைதிரி ஆட்சி ``புதிய அரசு`` என ஊடகச் சிங்கங்களால் அழைக்கப்பட்டது.மேற்குலக ஊடகங்கள் மாத்தறை பாக்கு நீரிணையை தொடுவதாகவும்: இலங்கை தலைகீழாக மாறிவிட்டதாகவும், `நடுநிலையாக` செய்தி சொன்னன!

மைதிரி-ரணில் அரசாங்கம் 100 நாள் திட்டத்தை அறிவித்தது. ஒரு நாளும் ஒரு திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.குறிப்பிட்டுச் சொல்லத்தக்க வகையில் 19 A, நிறைவேற்றப்பட்டது என்றால் அதற்கு முக்கிய காரணம், ஆணைப் பெண்ணாக மாற்றுவதைத் தவிர அனைத்து வல்லமையும் பெற்றிருந்த ஜனாதிபதி, பக்சபாசிஸ்டுக்களின் ஆட்சியில், அந்த சர்வவல்லமைமிக்க அதிகாரத்தை அமெரிக்க இந்திய நலனுக்கு எதிராக பிரயோகித்ததாகும்.மேலே நாம் கண்ட ஆக்கிரமிப்புகளிலும்,ஆட்சிக்கவிழ்ப்புகளிலும் எவ்வாறு ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்களின் நியாயமான ஜனநாயகக் கோரிக்கைகளை,தமது உலக மறுபங்கீட்டுக்குப் பயன்படுத்திக்
கொண்டார்களோ,அவ்வாறே ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு எதிராக 1978 இல் அது அமூலாக்கப்பட்ட காலம் முதலே இருந்து வந்த எதிர்ப்பைப் பயன்படுத்தி ஆட்சிக் கவிழ்ப்பை இலங்க்கையில் நடத்தினார்கள் என்பதே உண்மை.

மைத்திரி அரசின் யோக்கியம்:

தேசியமும்,ஜனநாயகமும்,சட்டம் ஒழுங்கும்  பேசும் மைத்திரி அரசாங்கம்,இந்திய இலங்கை ஒப்பந்தத்தைக் கிழித்தெறியவில்லை,ஆறாவது திருத்தச்சட்டத்தை நீக்கவில்லை,தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து வழங்க -வில்லை.பெளத்த மதத்தை அரச மதமாக முடியில் சுமக்கின்றது.வடக்கு கிழக்கில் இருந்து சிங்கள இராணுவத்தை வெளியேற்ற மறுக்கின்றது. வடக்குக் கிழக்கில் சிறு தொழில்,சுற்றுலாச்`சேவை`,வர்த்தகம் போன்ற இராணுவ முதலீடுகளை முடக்க மறுக்கின்றது.சிவில் சமூக வாழ்வில் இராணுவத் தலையீடு தொடர்கின்றது.ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களின் விவசாய குடியிருப்பு நிலங்கள் முற்றாக மீளக் கையளிக்கப்படவில்லை. யுத்தக்கைதிகள் விடுவிக்கப்படவில்லை,தம்வசம் இல்லை என்று கைவிரிக்கின்றது.கடத்திச் சென்று காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பொறுப்பேற்க மறுக்கின்றது.சிங்கள மக்களும், புதல்வர்களும் ஜீவமரணப் போராட்டம் நடத்தி, பல பத்தாயிரம் பேரைப் பலிகொடுத்து,களனியாற்றில் கரிக்கட்டைகளாக மிதந்து,விடுதலைப் புலிகளால் முதுகெலும்பு முறிக்கப்பட்டு,இறுதியாக இலங்கை ஜனாதிபதி பிரேமதாசாவே நாட்டை விட்டு வெளியேறக் கோரிய அந்நிய ஆக்கிரமிப்பு இந்திய இராணுவத்துக்கு கொழும்பில் மண்டபம் அமைத்து காவல் காத்து பூச்செண்டு வைக்கும் சிங்களம்,மாவீரர் துயிலும் இல்லங்களின் மேல் இராணுவ முகாம் அமைத்து நல்லிணக்கத்துக்கு அழைப்புவிடுகின்றது!கேவலம் யுத்த விதவைகள் பிரச்சனையில் கூட இராணுவ விதவைகளுக்கும்,தமிழ் விதவைகளுக்கும்
பாரபட்சம் காட்டுகின்றது.அரசியல் பிரமுகர் பாலகுமார்,ஆஸ்தான புலவன் புதுவை இரத்தினதுரை எங்கே என்று எம் தேசத்துக்கு பதில் சொல்லவில்லை. இராணுவப் புதைகுழிகளுக்கு விசாரணை இல்லை, மாகாணசபை உறுப்பினர் அனந்தி அவர்கள் கூட இராணுவத்திடம் ஒப்படைத்த தனது கணவரை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அவரோடு அணிவகுத்து கண்ணீரும் கம்பலையுமாய்,அன்னையர்,மனைவியர், சகோதரர் என ஒரு பட்டாளம், தட்டாத கதவில்லை.விபூசிக்கா குடும்பம் கூட இன்னும் -100 நாள் திட்டம் முடிந்தும் ஒன்றிணையவில்லை- தூ!

பக்ச பாசிஸ்டுக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் கூட வெறும் அரசியல் பழிவாங்கல் என்பதற்கு மேலாக எதுவும் நடந்தேறிவிடவில்லை, மேலும் இனப்படுகொலை குறித்த பிரச்சனையில் பக்ச பாசிஸ்டுக்களின் உள்ளக விசாரணை என்பதே மைத்திரி பாசிஸ்டுக்களினதும் நிலையாகும். அயல் உறவுக் கொள்கையில் எடுத்த திருப்பம் காரணமாக தற்போது`உள்ளக விசாரணையை` அமெரிக்காவும்,ஐ.நாவும் ஏற்றுக்கொண்டுவிட்டன!

இதுதான் 100 நாள் திட்டம்!

ஆனால் அவசர அவசரமாக இந்தியா சென்று,செங்கம்பள வரவேற்புப்பெற்று, இராணுவ ஒப்பந்தம் உள்ளிட்ட நான்கு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டது.மோடி அரசு தென்னாசிய சகோதரத்துவம் என்று பீத்திக்கொண்டது.~`சிங்களத் தீவுக்கு பாலம் அமைப்பதாக` பாரதியை அவமதித்தது. ஆனால் உலக வர்த்தக நிறுவனத்தின் கடந்த ஆண்டு ஆய்வறிக்கையின் தரவுகளின் அடிப்படையில் இலங்கையின் இந்திய
இறக்குமதியின் பெறுமதி 18 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.ஆனால் இலங்கை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ததோ ஆக 5மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.  மேலும் இத்தரவுப் படி இலங்கை இறக்கு மதியின் முதன்மை நாடு இந்தியாவாகும். 70 களில் ஜே.ஆர் உலகமயப் பொருளாதாரக் கொள்கையை ஏற்று , இலங்கையை சிங்கப்பூர் ஆக்குவேன் என்று பிரகடனம் செய்து திறந்த பொருளாதாரக் கொள்கையை அறிவித்த காலத்தில் இந்த இடத்தைப் பிடித்திருந்தது ஜப்பான் ஆகும்.இந்தச் சந்தைப்போராட்டத்தின் ஒரு களமாகத்தான் இந்திரா ஈழப்போராட்டத்தைக் கையாண்டார்.காங்கிரஸ் கருங்காலி நெடுமாறன் தொடர்ந்து கூறி வரும் `இந்திராவினதும் எம் ஜி ஆர் இனதும் ஈழப்போராட்ட ஆதரவு` என்பது  இந்தச் சந்தைக் கைப்பற்றல் தான்.

சிறீ சேனா அடிமை அரசாங்கம் மோடி ஆட்சியுடன் செய்து கொண்ட நான்கு ஒப்பந்தங்கள்,இந்திய இலங்கை ஒப்பந்தத்துடன் இணைந்து இலங்கையின் அரைக்காலனிய சுதந்திரத்தை இறையாண்மையை அமெரிக்க இந்திய உலகமறு பங்கீட்டு நலன்களுக்கு  அடகு வைத்த  தேசத்துரோகச் செயலாகும்.

புதிய அரசின் அந்நிய பினாமிகளான `சந்திரிக்கா,ரணில், பொன்சேகா, மைத்திரி ` அனைவரும் போர்க்குற்றவாளிகள் ஆவர்.
சந்திரிக்கா ஜெயசுக்குறுவின் நாயகி- நவாலித்தேவாலய இனப்படுகொலையாளி, ரணில் பேச்சுவார்த்தைப் போர்வையில் `கருணாச்சதியை` நிறைவேற்றிய நாயகன்,பொன்சேகா, இனப்படுகொலை யுத்த இராணுவத் தளபதி,ஆழ ஊடுருவும் படையின் சிற்பி, மைத்திரி முள்ளிவாய்க்கால் இராணுவ அமைச்சர்! ஏன் சம்பந்தன் கூட `எரிக் சொல்கெய்ம் பிரபாகரனைப் புரிந்து கொள்ள’ உதவியவர்!

ஆக இந்தப் ``புதிய அரசு`` உலகமறுபங்கீட்டு அணிசேர்க்கையில் அமெரிக்க இந்திய அணி சேர்ந்த, போர்க்குற்றவாளிகளின் தேசத்துரோக அரசாகும்.

ஆதலால், `ரணில்- மைத்திரி- பொன்சேகா`- போர்க்குற்றவாளிகளின் தேசத்துரோக ஆட்சியை  நிராகரிப்போம்!

பக்சபாசிஸ்டுக்களின் மீள்வருகைக்கான புறநிலை வாய்ப்புகள்:

1) இலங்கை அரசு இன ஒடுக்குமுறையின் மீது கட்டப்பட்டது,
2) பெரும்பான்மைச் சிங்கள மக்கள், சிங்களப்பேரினவாத பெளத்தமதவாதத்துக்கு பலியாக்கப்பட்டவர்கள்.
3) ``முப்பது ஆண்டுகால புலிப்பயங்கரவாத்திடமிருந்து`` நாட்டை மீட்டவர் ராஜபக்ச!
4) ராஜபக்ச ஒக்ஸ்பேர்ட் பல்கலைகழகம் உற்பத்தி செய்த தரகன் அல்ல, அவன் உள்நாட்டுத் தரகன்.
5) இலங்கை அரசியலில் என்றும் தீர்மானகரமான பாத்திரம் ஆற்றும் பெளத்த நிறுவன சமூக சக்திகளின் பலத்த ஆதரவு கொண்டவன்.
6) `ரணில்-சந்திரிக்கா-மைத்திரி-பொன்சேகா` கும்பல் அமெரிக்க இந்திய அந்நிய அரசுகளுடன் இணைந்து நடத்திய ஆட்சிக்கவிழ்ப்பு , `தேசபக்தன்` ராஜபக்சவுக்கு ஒரு பலமான தேர்தல் துரும்பாகும்.மகிந்த
ஒபாமாவைப்போல் எழுதியதைப் பேசும் கிளிப்பிள்ளையும்  அல்ல.
7) மைத்திரி கும்பலின் உலகமய இந்திய விரிவாதிக்க பொருளாதாராப் பாதை எவ்வகையிலும் பக்ச பாசிஸ்டுக்களின் பாதைக்கு மேலானது அல்ல.இதனால் ஒடுக்கப்படும் விவசாய உழைக்கும் மக்களை ராஜபக்ச தன் பக்கம் திரட்டிக்கொள்வான், நமது ஐக்கிய இலங்கை `இடது சாரிகள்` அதற்கு துணை நிற்பார்கள்.
8) ராஜபக்ச பலம் பெறும் போது மைத்திரியிடம் தாவிய `கொள்கைக் குன்றுகள்` மீண்டும் இரவோடு இரவாக பக்ச பாசிஸ்டுக்கள் பக்கம் தாவமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
9) சிங்கள வாக்குகளின் அடிப்படையில் மகிந்த பெறத்தவறியது சிறு தொகை தான்.தமிழ் மக்களின் வாக்குகள் தான் மைத்திரியை ஜனாதிபதி ஆக்கியது, இதைத் தமிழ் மக்கள் மறக்க மாட்டார்கள்.
10) மைத்திரி வெற்றி பெற்றது ஜனாதிபதித்தேர்தலில், ஆனால் பொதுத் தேர்தலை சிறிலங்கா சுதந்திரக்கட்சி சந்தித்தாகவேண்டும்.
இவையெல்லாம் பொதுத்தேர்தலில் மகிந்த மீண்டெழுவதற்குள்ள புறவய வாய்ப்புகள் ஆகும்.

பக்ச பாசிஸ்டுக்கள் பலி கொள்ளப்படவில்லை, கிலி கொள்ள வைக்கப்பட்டிருக்கின்றார்கள், இதிலிருந்து அவர்களால் மீண்டெழ முடியும், அதற்கான சமூக வேர்களும் புறச்சூழலும் உள்ளன!

ஈழப்புரட்சியின் பாதை என்ன?

மூன்றாம் உலகப்போரை நோக்கிய உலக மறுபங்கீட்டின் போர்க்களமாக இலங்கை ஆகி விட்டது. ஈழப்பிரிவினை இதன் ஒரு பகுதியாகிவிட்டது.

இச்சூழலில் அமெரிக்க இந்திய அணியோ,சீன ரசிய அணியோ
இரண்டுமே ஏகாதிபத்திய அணிகளே ஆகும்.

இதில் எதையும் நாம் சார முடியாது, இதில் எது ஒன்றைச் சார்பவர்களும் ஏகாதிபத்திய தாசர்களே!

இந்த இரண்டு அணியும் தமது ஆதிக்கத்தை நிலை நாட்ட நடத்தும் சித்து விளையாட்டே இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல்களாகும்.

இந்த இலங்கை நாடாளு மன்றத் தேர்தலில் பங்கேற்கும் இரு தரப்பு மேற்கண்ட ஏகாதிபத்திய அணியின் இரு தரப்பே ஆகும்.

ஏகாதிபத்திய உலக மறுபங்கீட்டில் எந்த அணிக்கு சேவகம் செய்ய, அரைக்காலனிய அடிமைகளை தேர்வு செய்கின்றோம் என்பதே `பொதுத்தேர்தல் ஆகும்`!

எனவே இயற்கையாகவே இந்தப்பாதையில் ஈழம் தனது விடுதலையை அடைய முடியாது. எனவே தேர்தல் பாதையைப் புறக்கணிப்போம்!

இதனால் ஈழ தேசத்துக்கு தன் சொந்தப் பாதையை தேர்ந்து கொள்ளும் சுதந்திரம் உத்தரவாதம் செய்யப்படவேண்டும்.
எனவே ஈழப்பிரிவினைக்கு பொது வாக்கெடுப்புக் கோரி போராடுவோம்!!
================================================================

ஈழப்புரட்சியாளர்களின் மே1 மே18 முழக்கங்களின் மீது அணிதிரளுமாறு அறைகூவல் விடுக்கின்றோம்.

 மே1-மே18
புரட்சித்திருநாள் சூளுரைகள்:

அமெரிக்க இந்திய ஆட்சிக்கவிழ்ப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றிய 
மைத்திரி-ரணில்-பொன்சேகா கும்பலின் அரசாங்கம் தேசத்துரோக அரசாங்கமே!

ஏகாதிபத்திய உலக மறுபங்கீட்டில் ரசிய-சீன முகாமுக்கு எதிராக அமெரிக்க இந்திய முகாமுடன் 
அணி சேரும் வெளிவிவகாரக் கொள்கை, `அணி சேராக் கொள்கை`யைக் கைவிடும் விதேசியப் பாதையே!

உலக மறுபங்கீட்டுப் போரில் இந்த முகாம்களில் எந்த ஒன்றைச் சார்பவர்களும் ஏகாதிபத்திய தாசர்களே!

பக்ச பாசிஸ்டுக்களுக்கு மாற்று மைத்திரி ரணில் பாசிஸ்டுக்கள் அல்ல!

சரிந்து வரும் அமெரிக்காவின் உலக மேலாதிக்க சாகச வெறியாட்டங்களை எதிர்ப்போம்!

முண்டு கொடுக்கும் இந்திய அரசின் ஆசிய விரிவாதிக்க கனவை தகர்ப்போம்!

அண்டிப் பிழைக்கும் மைத்திரி - ரணில் கும்பலின் தேசத்துரோக அரசாங்கத்தை தூக்கியெறிவோம்!

அதிகாரப்பரவலாக்கல் பாதையை நிராகரித்து, ஈழச்சமரசவாதிகளை, நாடுகடந்த-புலம் பெயர்ந்த 
தமிழீழ ஏகாதிபத்திய தாசர்களை, தமிழக- இந்திய விரிவாதிக்க நீசர்களை தனிமைப்படுத்துவோம்!

சிங்கள, தமிழ் - இரு தேச உழைக்கும் மக்களையும் ஒன்றிணைக்க ஈழப்பிரிவினையை உயர்த்திப்பிடிப்போம்!

மலையக முஸ்லிம் ஈழத்தமிழ் மக்களின் ஐக்கியத்தைக் கட்டியமைக்க போராடுவோம்!

ஏகாதிபத்திய உலகமய, உலக மறுபங்கீட்டு கொடுங்கோன்மையை எதிர்த்து அலைகடலென 
ஆர்ப்பரிக்கும் உலகத் தொழிலாளர்களுடனும் ஒடுக்கப்பட்ட தேசங்களுடனும் ஒன்றுசேருவோம்!

இனப்படுகொலையாளரை கூண்டிலேற்ற ஐ.நா.பாதையை நிராகரிப்போம்!

பாராளமன்ற தேர்தல் பாதையைப் புறக்கணிப்போம், புரட்சிப்பாதையில் அணிதிரள்வோம்!

மே நாள் தியாகம் - முள்ளிவாய்க்கால் தியாகம் நீடூழி வாழ்க! 

மார்க்சிய லெனினிய மா ஓ சிந்தனை வெல்க!

புதிய ஈழம் மலர்க!

இறுதி வெற்றி ஈழ மக்களுக்கே!

புதிய ஈழப்புரட்சியாளார்கள்                                                                    மே 2015

Monday 27 April 2015

மே1-மே18 புரட்சித்திருநாள் சூளுரைகள்:

மே1-மே18
புரட்சித்திருநாள் சூளுரைகள்:

* அமெரிக்க இந்திய ஆட்சிக்கவிழ்ப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றிய 
மைத்திரி-ரணில்-பொன்சேகா கும்பலின் அரசாங்கம் தேசத்துரோக அரசாங்கமே!

* ஏகாதிபத்திய உலக மறுபங்கீட்டில் ரசிய-சீன முகாமுக்கு எதிராக அமெரிக்க இந்திய முகாமுடன் அணி சேரும் வெளிவிவகாரக் கொள்கை, `அணி சேராக் கொள்கை`யைக் கைவிடும் விதேசியப் பாதையே!

* உலக மறுபங்கீட்டுப் போரில் இந்த முகாம்களில் எந்த ஒன்றைச் சார்பவர்களும் ஏகாதிபத்திய தாசர்களே!

* பக்ச பாசிஸ்டுக்களுக்கு மாற்று மைத்திரி ரணில் பாசிஸ்டுக்கள் அல்ல!

* சரிந்து வரும் அமெரிக்காவின் உலக மேலாதிக்க சாகச வெறியாட்டங்களை எதிர்ப்போம்!

* முண்டு கொடுக்கும் இந்திய அரசின் ஆசிய விரிவாதிக்க கனவை தகர்ப்போம்!

* அண்டிப் பிழைக்கும் மைத்திரி - ரணில் கும்பலின் தேசத்துரோக அரசாங்கத்தை தூக்கியெறிவோம்!

* அதிகாரப்பரவலாக்கல் பாதையை நிராகரித்து, ஈழச்சமரசவாதிகளை, நாடுகடந்த-புலம் பெயர்ந்த தமிழீழ ஏகாதிபத்திய தாசர்களை, தமிழக- இந்திய விரிவாதிக்க நீசர்களை தனிமைப்படுத்துவோம்!

* சிங்கள, தமிழ் - இரு தேச உழைக்கும் மக்களையும் ஒன்றிணைக்க ஈழப்பிரிவினையை உயர்த்திப்பிடிப்போம்!

* மலையக முஸ்லிம் ஈழத்தமிழ் மக்களின் ஐக்கியத்தைக் கட்டியமைக்க போராடுவோம்!

* ஏகாதிபத்திய உலகமய, உலக மறுபங்கீட்டு கொடுங்கோன்மையை எதிர்த்து அலைகடலென ஆர்ப்பரிக்கும் உலகத் தொழிலாளர்களுடனும் ஒடுக்கப்பட்ட தேசங்களுடனும் ஒன்றுசேருவோம்!

* இனப்படுகொலையாளரை கூண்டிலேற்ற ஐ.நா.பாதையை நிராகரிப்போம்!

* பாராளமன்ற தேர்தல் பாதையைப் புறக்கணிப்போம், புரட்சிப்பாதையில் அணிதிரள்வோம்!

மே நாள் தியாகம் - முள்ளிவாய்க்கால் தியாகம் நீடூழி வாழ்க! 

மார்க்சிய லெனினிய மா ஓ சிந்தனை வெல்க!

புதிய ஈழம் மலர்க!

இறுதி வெற்றி ஈழ மக்களுக்கே!

புதிய ஈழப்புரட்சியாளார்கள்