Monday 25 October 2010

மாவீரர் தின முழக்கங்கள்

தியாக தீபங்கள் மில்லர், திலீபன், மாலதி தொடங்கிய போரைத் தொடர்வோம்.
புலம்பெயர் நாடுகளில் மாவீரர் துயிலும் இல்லம் அமைப்போம்! அவற்றை புதிய ஈழ விடுதலைக்கான புரட்சிப்பள்ளிகளாய் மாற்றுவோம்!
மாவீரன் மில்லர் நினைவாக!
* பக்ச பாசிஸ்டுக்களின் ஈழதேச முற்றுகையை முறியடிப்போம்!
* இடைவழிச் சமரசங்களைத் தோற்கடிப்போம்! ஈழவிடுதலைக்காய் ஊற்றெடுப்போம்!
* 18 வது அரசியல் சட்டத் திருத்தத்தை எதிர்ப்போம்!
* சிங்களப் பேரினவாத போலிப் பாராளமன்றப் பாதையை நிராகரிப்போம்!
* தேசிய சுயநிர்ணய உரிமையை உயர்த்திப்பிடித்து பிரிந்து செல்லும் உரிமைக்காகப் போராடுவோம்.
* பிரிந்து செல்லும் உரிமை அங்கீகரிக்கப்படாத ஒற்றையாட்சி அரசு முறையில் பிரிவினையே தீர்வு என முழங்குவோம்!
* ஈழத்தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு குறித்து கருத்தறிய வடக்கு கிழக்கு தமிழர்களிடையே பொது ஜன வாக்கெடுப்பு நடத்தக் கோருவோம்!

மாவீரன் திலீபன் நினைவாக!
* விடுதலைப் போரைக் கருவறுத்த விஸ்தரிப்புவாத இந்திய அரசுக்குப் பதில் சொல்வோம்!
* இலங்கையை அடிமைப்படுத்திய,இந்திய இலங்கை ஒப்பந்தத்தை கிழித்தெறியப் போராடுவோம்!
* இலங்கையில் இந்தியாவின் தலையீட்டை முறியடிக்க 'இந்திய எதிர்ப்பு மக்கள் இயக்கத்தைக்' கட்டியமைப்போம்!
* இந்து சமுத்திரப் பிராந்தியத்தை, ஏகாதிபத்திய உலக மறு பங்கீட்டிற்கான போர்க்களமாக மாற்றுவதை தடுத்து நிறுத்துவோம்.!
* அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஏவல் நாயாக இருந்து இலங்கை மக்களை 'இந்திய சீன மேலாதிக்கப் போட்டிக்குள் இழுத்து விடுவதை எதிர்ப்போம்!
* நவீன காலனியாதிக்கத்தின் தாசன் மன் மோகன் சிங், 'அபிவிருத்தி' என்ற பெயரால் உலகமயமாக்கல் கொள்கையை இலங்கை மக்கள் மீது திணிப்பதை எதிர்ப்போம்!
முத்துக்குமாரன் மற்றும் தீயில் கருகிய 16 தமிழக இளைஞர்கள் தியாகத்தின் நினைவாக!
* 'இன மானம்' 'தமிழ் வீரம்', பிரபாகரன் புகழ் பாடி, தமிழக மக்களை ஏமாற்றி இந்திய விஸ்தரிப்புவாதத்தை தாங்கிப்பிடிக்கும், சமரசவாத, சீர்குலைவுவாத நெடுமாறன், வை கோ, சீமான் கும்பலைத் தனிமைப் படுத்துவோம்.
* காங்கிரஸ், பாரதிய ஜனதா, போலிக் கொம்யூனிஸ்ற் கும்பல்களின் அதிகாரத்தின் கீழ் நசுக்கப்படும் இந்திய தேசிய இனங்களுடன் ஒன்றுபடுவோம்!
* காஸ்மீர் தேசத்தின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை ஆதரிப்போம்
* ஆந்திர பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகவும், அவர் வாழ் நிலத்தின் வளங்களைக் காப்பதற்காகவும் போராடும் மா ஓ
இஸ்டுக்களுக்கெதிராக மன் மோகன் கும்பல் தொடுத்துள்ள பச்சை வேட்டைப் பயங்கரத்தை எதிர்ப்போம்!
* தமிழகத்தில் போல்சுவிக்குகளுடனும், மக்கள் ஜனநாயக இயக்கங்களுடன் ஐக்கியப்படுவோம்!

மாவீராங்கனை மாலதி நினைவாக!
* ஏகாதிபத்திய உலக மறுபங்கீட்டுப் பிணக்குகளுக்கு பஞ்சாயத்து வழங்கும் ஐ.நா.மன்றத்தில் ஈழதேசிய ஒடுக்குமுறைக்கு நீதி கிடைக்காது என்பதை அறிவோம்!
* ஏகாதிபத்தியம் தேசியத்தின் எதிரி! புலம்பெயர் நாடுகளில் அரசுகளை நோக்கியல்ல மக்களை நோக்கி அரசியல் பிரச்சாரம் செய்வோம்.
* ஈழத்தை ஆக்கிரமித்துள்ள சிறீலங்காத் துருப்புக்களை வெளியேற்றப் போராடும் அதேவேளையில், ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும், பாலஸ்தீனத்திலும் இருந்து அந்நிய ஆக்கிரமிப்புப் படைகளை வெளியேற்றவும் கோருவோம்!
* தமிழீழ யுத்தக்குற்றவாளிகளை கூண்டில் நிறுத்தப் போராடும் அதேவேளையில்,அமெரிக்க,பிரித்தானிய,இஸ்ரேலிய, இந்திய யுத்தக்குற்றவாளிகளையும் கூண்டில் நிறுத்தப்போராடுவோம்.
* மாவீரர்களை நினைவு கொள்ளும் வேளையில், இன்னும் மாளாத வீரர்களை பக்ச பாசிசத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப் போராடுவோம்!
* புலம்பெயர் நாடுகளில் மாவீரர் துயிலும் இல்லம் அமைப்போம்! அவற்றை புதிய ஈழ விடுதலைக்கான புரட்சிப்பள்ளிகளாய் மாற்றுவோம்!

மாவீரர்கள் நமது அரசியல் புரட்சியின் பொக்கிசங்கள், அவர்கள் பெயரால் கேளிக்கைகள் நடத்துவதைத் தவிர்ப்போம்!

மாவீரர்கள் நமது தாயக விடுதலைக்காக மரித்த போர்வீரர்கள்!

அவர்கள் பெயரால் நாடுகடந்த அரசாங்கம் அமைக்கும் போலிகளை இனங்காண்போம்!

நாடுகடந்த அரசாங்கம் நோக்கி ஈழத்தமிழரை வழி நடத்தும் கேடுகெட்ட திராவிடத் துரோகிகளை புறந்தள்ளுவோம்!

* மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திர தமிழீழம் மலரட்டும்!

மாவீரர் கனவு நனவாகட்டும்!
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்! இறுதி வெற்றி ஈழ மக்களுக்கே!
புதிய ஈழப் புரட்சியாளர்கள்

No comments: