Monday 6 December 2010

ஈழக்கலைமகள் இசைப்பிரியா

இசைப்பிரியா படுகொலை!
புலம்புவதை நிறுத்துங்கள்! புரட்சிசெய்யப் புறப்படுங்கள்!!
பக்ச பாசிசமே,
நிராயுதபாணியான ஈழத்தமிழர் மீது தொடரும் யுத்தத்தை நிறுத்து!
''பயங்கரவாதத்தை'' தோற்கடித்த அமெரிக்க, 'சர்வதேச சமூகமே',
தொடரும் தேசிய அழிப்புக்குப் பொறுப்பெடு!
ஆயுதங்களைக் கைவிடக் கோரிய ஐ.நா.சபையே,
உன் ஆணைக்குழுக்களால் தமிழ் மக்களைக் காப்பாற்றிக் காட்டு!
இந்திய விஸ்தரிப்புவாத அரசே
ஈழத்தமிழர் பிரச்சனையில் தலையிடாதே! 'இந்தியனே வெளியேறு''!
நெடுமாறன் கும்பலே,
இந்தியத் தலையீட்டிற்கு தொடர்ந்து அழைப்பு விடுக்காதே!
தமிழீழ தேசிய ஜனநாயகப் புரட்சியை, ஏகாதிபத்திய இந்தியவிஸ்தரிப்புவாத ஆதரவு, சமரசவாத சந்தர்ப்பவாத வழிகளில் சீரழிக்காதே!
தமிழகத்தில் முளைவிடும் ஈழ ஆதரவு ஜனநாயக இயக்கத்தை சீர்குலைவுப் பாதையில் சிதைக்காதே!
அதிகாரபூர்வ புலம்பெயர் ''தமிழ்ப் பேரவைகளே'' ,
பத்தாயிரம் விடுதலைப்புலி யுத்தக் கைதிகளை உடனடியாக விடுவிக்க இயக்கம் நடத்து!
பக்ச பாசிஸ்டுக்களின் பிடியில் யுத்தக்கைதிகளை விட்டு வைக்காதே!
பிணங்களை வைத்து பிழைப்பு நடத்தாதே!
புலம்பெயர் நாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்கப் போராடு!
யுத்தக்கைதிகள் அரசியல் புகலிடம் பெற சட்ட நடவடிக்கை எடு!
தமிழீழ மக்களே,
துயரம் பெரிதெனினும் துவண்டுவிடாதீர்கள்,
அந்த மண் உங்களின் சொந்த மண்!அண்ணன் போராடிய அன்னை மண்!
உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஈழமக்களுடன் ஒன்றுசேருங்கள்!
இறுதி வெற்றி ஈழமக்களுக்கே!
செந்தமிழ் தங்கைக்கு செவ்வீர வணக்கம்!
புதிய ஈழப்புரட்சியாளர்கள்

1 comment:

SILAMPU said...

உங்களின் தளம் மிகவும் அருமை உண்மைதான் ஏகாதிபத்திய அரசுகள் மக்களின் விடுதலைக்கு ஒருபோதும் வழி சமைக்காது!