Sunday, 29 April 2012

மே தினம் 2012 : புதிய ஈழப்புரட்சியாளர்கள்

நவீன காலனியாதிக்க ஆட்சிக்கவிழ்ப்பு, அந்நியத் தலையீடுகளை, புதிய ஜனநாயக உள்நாட்டுப் புரட்சியால் தோற்கடிக்க எழுக!

உலகத் தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட தேசங்கள் ஒன்றுபடுக!

தமிழீழ சுயநிர்ணய உரிமைப் போராட்டம் ஓங்குக!

மார்க்சிய லெனினிய மா ஓ சிந்தனை வெல்க!

மேதினி போற்றும் மே நாள் வாழ்க!


அன்பார்ந்த தமிழீழ மக்களே, இளைஞர்களே, மாணவர்களே;

இவ்வருடம் மே மாதம் முள்ளிவாய்க்கால் பிரளயத்தின் மூன்றாம் ஆண்டு நினைவாகும். சர்வதேச தொழிலாளர் தினத்துடன் ஆரம்பிக்கும் இம்மாதத்தில் தமிழீழ அரசியல் விடுதலைப் போராட்டத்தை – சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கான குறிப்பான பணிகள் பாதைகள் பற்றிய வரையறையைச் செய்து கொள்வது புரட்சிகர இயக்கத்தின் முன்னாலுள்ள பிரதான கடமையாகும்.

முள்ளிவாய்க்கால் பிரளயம் முடிந்த இந்த மூன்று ஆண்டுகளில், அதாவது விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமை அழித்தொழிக்கப்பட்டதன் பின் தமிழீழ விடுதலை இலட்சியத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான ஒரு அரசியல் தலைமை தோன்றவில்லை. இதன் காரணத்தால் விடுதலை இலட்சியம் புறம் தள்ளப்பட்டு சீர்திருத்தவாத சந்தர்ப்பவாத வழிகளில் மக்கள் திசைதிருப்பப்பட்டு வருகின்றனர்.

அமெரிக்காவின் தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்திய வாதிகள், உலகமுதலாளித்துவப் பொதுநெருக்கடியின் சுமைகளை, தங்கள் நாட்டுத் தொழிலாளி வர்க்கத்தின் மீதும், மூன்றாம் உலக நாட்டு மக்களின் மீதும் திணிப்பதை எதிர்த்து - உலகெங்கிலும் உள்ள தொழிலாளி வர்க்கமும் ஒடுக்கப்பட்ட நாட்டு மக்களும் எழுச்சிமிக்க போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

எனவே இவ்வாண்டு மேதினத்தை நாம் புறவயமாக- சர்வதேச ரீதியாக உலகெங்கும் ஒரு புரட்சிகரச் சூழல் கொந்தளித்திருக்கும் நிலையிலும், அகவயமாக- உள்நாட்டில் விடுதலைப்புலிகள் அமைப்பு அழித்தொழிக்கப்பட்டு புரட்சி அலை தணிந்து அரசியல் தலைமையற்ற நிலையிலும் எதிர்கொள்கின்றோம்.

சர்வதேச ரீதியான புரட்சிகர அலை எழுச்சியின் உயர் நிலையைப் பற்றிப்பிடித்து மீண்டும் எவ்வாறு ஒரு புரட்சிகர அலை எழுச்சியை ஈழத்தில் – இலங்கையில் கட்டியமைப்பது என்பதே இன்று எம்முன்னுள்ள பிரதான கேள்வியாகும்.

இக்கேள்விக்கு விடைகாணும் பொருட்டு நாம் இன்றைய சர்வதேச, உள்நாட்டுச் சூழ்நிலைகளையும், அவற்றில் இருந்து எழும் பிரதான அரசியல் போக்குகளையும், இப்போக்குகள் பால் பல்வேறு சமூக வர்க்கங்களின் நிலைப்பாடுகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.இதன் மூலம் மட்டுமே தமிழீழத் தேசிய விடுதலைக்கான இன்றைய எமது போராட்டப் பாதையையும், பணிகளையும், வகுத்துக் கொள்ளவும், புரட்சிகரத் தலைமையைக்  கட்டியெழுப்பவும் முடியும்.

இன்றைய சர்வதேசச் சூழ்நிலை:

1) மீளமுடியாப் பொருளாதார நெருக்கடியில் ஏகபோக முதலாளித்துவ உலகம்

 2008ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஏற்பட்ட நிதிநெருக்கடி, முதலாளித்துவ மிகை உற்பத்தியால் ஏற்பட்டதாகும். இந்த நெருக்கடி ஐரோப்பா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் பரவி நீடித்து வருகிறது. உலகப் பொருளாதார வளர்ச்சியானது 2010ல் 4 சதவீதமாக இருந்தது, 2011ல் 2.8 சதவீதமாக வீழ்ச்சியடைந்து விட்டது. அது மேலும் வீழ்ச்சியடையும் என்று ஐ.நா. ஆய்வு அறிக்கை அபாயச்சங்கை ஊதியுள்ளது*.
---------------------------------------------------------------
*The bank estimates that global GDP growth will be 3.3% this year against 3.9% in 2010, with emerging markets growing by 6%.
Overall, global growth is projected to ease from 3.8 percent in 2010 to 3.2 percent in 2011, before picking up to 3.6 percent in each of 2012 and 2013. The slowdown for high-income countries (from 2.7 percent in 2010 to 2.2 percent in 2011) mainly reflects very weak growth in Japan due to the after-effects of the earthquake and tsunami (see note on the Impact of the disaster in Japan). Growth in the remaining high-income countries is expected to  remain broadly stable at around 2.5 percent through 2013, despite a gradual withdrawal of the substantial fiscal and monetary stimulus introduced following the financial crisis to prevent a more serious downturn.
For developing countries growth is projected to decline from 7.3 to 6.2 percent between 2010 and 2012 before firming somewhat in 2013, reflecting an end to bounce-back factors that served to boost growth in 2010 and the tightening of monetary and fiscal policies as capacity constraints become increasingly binding (see note on the Synopsis of regional outlooks and the regional annexes to this document for more details on recent economic developments and the outlook for low– and middle-income countries — including country specific forecasts). (மூலம்:உலக வங்கி)
------------------------------------------------------------------
அமெரிக்காவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 2010ல் 2.3 சதவீதமாக இருந்தது, 2011ல் 1.8 சதவீதமாக வீழ்ந்துவிட்டது. அங்கு வேலையின்மையோ வரலாறு காணாத அளவிற்கு 18.4 சதவீதமாக உயர்ந்துவிட்டது. பெருகிவரும் வேலையின்மை, குறைந்து கொண்டே செல்லும் ஊதியம், மக்களின் வாங்கும் சக்தியை குறைத்து விட்டது. அமெரிக்கா இன்று உலகின் மிகப்பெரிய கடன்கார நாடாக மாறியுள்ளது *
-------------------------------------------
*$15,064,816,000,000- The U.S. GDP in 2011. The debt as of Jan 1st, 2012 is 15,170,600,000,000. United States now owes more money than its yearly production (GDP).
Statue of Liberty seems rather worried as United States national debt soon to pass 20% of the entire world's combined GDP (Gross Domestic Product). In former President Bill Clinton's first-ever State of the Union address, he announced that if America's debt were stacked in thousand dollar bills, it would "reach 267 miles" into space.
Today, the U.S. debt is $14.3 trillion and the government is currently embroiled in a fierce debate over whether to raise the allowed borrowing amount further. Stacked and bundled into one-hundred dollar bills, the national debt would be as wide and long as two football fields and as high as the Statue of Liberty, reports graphic design artist Oto Godfrey
-------------------------------------------- 
உலகப் பொருளாதாரத்தின் உந்துசக்தியாக கருதப்படும் அமெரிக்க ஏகாதிபத்தியம் புதை சேற்றில் மூழ்கிவருகிறது.

ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரமோ தற்கொலைப் பாதையை நோக்கிச் செல்கிறது. பிரிட்டனின் ஒட்டுமொத்த உற்பத்தி 0.5 சதவீதமாக வீழ்ந்துவிட்டது. ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகளிலும் மந்தநிலை தொடர்கிறது. கிரீஸ், ஸ்பெயின், இத்தாலி, அயர்லாந்து போன்ற நாடுகள் கடன் பொறியில் சிக்கியுள்ளதானது ஐரோப்பிய யூரோ நாணயத்தின் நீட்டிப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது. ஸ்பெயினில் 50 சதவீத இளைஞர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். (The euro area unemployment rate rose by 0.1 percentage point (for the eighth consecutive month) to 10.8% in February, maintaining a record high since the start of the global financial crisis.) என ஒரு தகவல் தெரிவிக்கின்றது.

மூன்றாம் உலக நாடுகள், அல்லது `வளர்ந்துவரும் நாடுகள்` என பொய்யாகவும் கொச்சையாகவும் அழைக்கப்படும் ஒடுக்கப்படும் கீழைத்தேசங்கள் அதன் பிற்போக்கு ஆளும்வர்க்கங்களால் ஐ.எம்.எஃப் இனதும், உலக வங்கியினதும் கட்டளைகளுக்குப் பணிந்து தமது தேசங்களின் சொந்தத் தேசியப் பொருளாதாரங்களை ஏகபோக முதலாளித்துவத்தின் நலன்களுக்கு சேவகம் செய்யும் – சேவைத்துறைத் துணைப் பொருளாதாரமாக மாற்றியமைத்துவிட்டன.

இதனால் இன்று முதலாளித்துவ உலகில் தொடரும் மீளமுடியாப் பொருளாதார நெருக்கடிகள் தவிர்க்க இயலாமல் ஒடுக்கப்படும் கீழைத்தேசங்கள் அனைத்தையும் கடுமையாக பாதித்து வருகின்றன. இதற்கு இலங்கை போன்ற நமது மிகச் சிறிய நாடு கூட விதிவிலக்கில்லை.(இலங்கையின் வரவு செலவுத் திட்டம் குறித்த ஆய்வைப் படிக்க இணைப்பை அழுத்துக.)
-----
2) உலக மறுபங்கீடும் யுத்தங்களும்.

ரசிய சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து அதன் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த நாடுகளை- சந்தைகளையும் மூலவளங்களையும், அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்திய வாதிகள் மறுபங்கீடு செய்து தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தனர். இந்த நவீன காலனிய ஆதிக்கப்போக்கு இன்னமும் முடியவில்லை. உலகு தழுவிய ஏகபோக முதலாளித்துவத்தின் பொருளாதார நெருக்கடி இதனை மேலும் கூர்மைப்படுத்தியுள்ளது.கிழக்கைரோப்பா, பொஸ்னியா, கொசோவோ, சூடான், ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மேலும் சிரியா, ஈரான் ஆகியவை இப்போக்கின் தொடர்ச்சியேயாகும்.

3) அரபு எழுச்சி

 
அமெரிக்க ஏகாதிபத்தியம், ரசிய சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு தமது நவீன காலனிய உலக மேலாதிக்கத்தை நிலைநாட்டவும், மத்திய கிழக்கில் கிடைக்கும் எண்ணெய் வளத்தின் மீது தமது ஏகபோகத்தை நிறுவவும் நேட்டோ நாடுகளுடன் இணைந்து தமக்கு அடிபணியாத நாடுகள் மீது தாக்குதல் தொடுத்தது. பயங்கரவாதத்தை ஒழிப்பது, பேரழிவு ஆயுதங்களை ஒழிப்பது எனும் பேரில் ஆப்கனிலும், ஈராக்கிலும் இராணுவ ரீதியில் தலையிட்டு தமது பொம்மை ஆட்சிகளை நிறுவியுள்ளது. தற்போது சிரியா மீதும், ஈரான் மீதும் இராணுவத் தலையீட்டிற்குத் தயாராகி வருகிறது.

அமெரிக்கா மத்திய கிழக்கிலும், வடக்கு ஆபிரிக்க நாடுகளிலும் தனது ஆதரவு நாடுகளுக்கு இராணுவ ரீதியில் உதவி செய்து அந்நாடுகளின் சர்வாதிகார ஆட்சிகளைப் பாதுகாத்து வந்தது. 2008ஆம் ஆண்டு நெருக்கடிகளின் சுமைகளை அரசியல், பொருளாதார, இராணுவ ஒப்பந்தங்கள் மூலம் இந்நாடுகளின் மீது திணித்தது. இத்தகைய புதியதாராளக் கொள்கைகள் ஏற்படுத்திய நெருக்கடிகளைத்  தாங்கமுடியாமல் அரபு நாட்டு மக்கள் தங்களது கொடுங்கோல் சர்வாதிகார ஆட்சிகளை எதிர்த்து கலகம் செய்தனர். துனூசியா முதல் எகிப்து, லிபியா, யேமன், சிரியா என மக்கள் வரலாறு காணாத அளவிற்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்க ஏகாதிபத்தியமோ ’மனித உரிமை காப்பு’, ’ஜனநாயக மீட்பு’ என்ற பேரில், இந்தப் போராட்டங்களின் தலைமையைக் கைப்பற்றி,இராணுவ உதவிகள் மற்றும் தலையீடுகள் நடத்தி, தமது அடிவருடிகளின் ஆட்சியை தவிர்க்க இயலாமல் அகற்றிவிட்டு, தமது புதிய பொம்மை ஆட்சிகளை நிறுவிவருகிறது. இப்பொம்மை ஆட்சிகளை எதிர்த்த அரபுமக்களின் கிளர்ச்சிகள் எகிப்திலும் லிபியாவிலும் ஏற்கெனவே ஆரம்பமாகிவிட்டன. அரபு மக்கள் அமெரிக்காவின் நவீன காலனிய பொம்மை ஆட்சிகளை எக்காலத்திலும் ஏற்கப்போவதுமில்லை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கனவு பலிக்கப் போவதுமில்லை என்பது திண்ணம்.

4) தொழிலாளி வர்க்கத்தின் சர்வதேசிய எழுச்சி


அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் 2008ஆம் ஆண்டின் அதல பாதாள நெருக்கடியிலிருந்து அந்நாட்டின் நிதிமூலதன திமிங்கலங்களை பாதுகாப்பதற்கு நட்ட ஈடு, ஊக்கத்தொகை என ஆண்டிற்கு 700 பில்லியன் டாலர்கள் மக்களின் வரிப்பணத்தை வாரி வழங்கினர். அதன் விளைவாக நிதிமூலதனக் கும்பல் கொழுத்தனவே ஒழிய பொருளாதார நெருக்கடி தீரவில்லை. மாறாக நெருக்கடிகளின் சுமைகள் முழுதும் அந்நாட்டு மக்கள் மீது திணிக்கப்பட்டது. சமூக நலத்திட்டங்கள் கைவிடப்பட்டன. அரசியல் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டன. ஏற்கனவே வேலையின்றி, போதிய வருமானமின்றி வாடிக்கொண்டிருக்கும் மக்கள், அரசுக்கு எதிராக போராட்டத்தைத்  துவங்கினர். ஐரோப்பிய நாடுகளிலும் இதே நிலைதான் தொடர்கிறது.

 அமெரிக்க மக்கள் சந்திக்கும் துன்பதுயரங்களுக்கு  நிதி மூலதனக் கும்பல்களே காரணம் என்று கூறி அமெரிக்க மக்கள் வால்ஸ்டீரிட்டை முற்றுகையிடும் போராட்டத்தைத் தொடங்கினர். நிதிமூலதனக் கும்பல்களுக்கு அரசாங்கம் வழங்கும் சலுகைகளை நிறுத்தவேண்டும் எனவும் முதலாளித்துவம் ஒழிக என்றும் அம்மக்கள் நாடுதழுவிய அளவில் தொடர்ந்து போராடி வருகின்றனர். அந்தப் போராட்டம் ஐரோப்பா, ஜப்பான் உள்ளிட்ட 87 நாடுகளில் பரவி தொடர்ந்து நடந்துவருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் அத்தகைய போராட்டங்களை ஒடுக்க கடுமையான அடக்குமுறையை ஏவிவிட்ட பிறகும் கூட மக்கள் அஞ்சாமல் போராடி வருகின்றனர். அமெரிக்காவில் இம்மேநாளில் நாடுதழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. 80ஆம் ஆண்டுகளின் இறுதியில் ரசிய சமூக ஏகாதிபத்தியத்தின் நெருக்கடியை (அதுவும் முதலாளித்துவ நெருக்கடிதான்) , காரணம் காட்டி அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் அவர்களின் தாசர்கள் கம்யூனிசம் ஒழிந்துவிட்டது என்று கூத்தாடினர். ஆனால் இன்று அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவ உலகம் முழுவதும் முதலாளித்துவம் ஒழிக என்று மக்கள் போர்க்கோலம் பூண்டுள்ளனர்!

இந்த தொழிலாளர்வர்க்க ஜனநாயக இயக்கமானது உள்நாட்டின் அரசியல் பொருளாதார மேம்பாட்டிற்கானதாக மட்டுமல்லாமல் ஏகபோக முதலாளித்துவத்தின் நவீன காலனியாதிக்கத்திற்கும், உலகமறுபங்கீட்டு அநீதி யுத்தங்களுக்கும் எதிரானதாகவும் உள்ளது.

எனவே இன்று ஏகாதிபத்திய நாடுகளில் ஏற்பட்டுவரும் தொழிலாளி வர்க்கத்தின் எழுச்சியும், அரபு மக்களின் விடுதலை மற்றும் ஜனநாயகத்திற்கான கிளர்ச்சிகளும் ஏகாதிபத்தியவாதிகளையும் அவர்களின் தாசர்களையும் எதிர்த்து சோசலிசம் மற்றும் விடுதலைக்கான பாதையில் நடைபோடும் நாள் வெகு தொலைவில் இல்லை.

உள்நாட்டுச் சூழ்நிலை:

”புலிப்பயங்கரவாதிகளிடம் இருந்து” தமிழ் மக்களை விடுவிக்கும் மனிதாபிமான நடவடிக்கை என்று கூறி ஒரு தேசிய இனப்படுகொலையை சிங்களம் முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றி முடித்தது.இதற்கான  அரசியல் தயாரிப்பை நோர்வே பேச்சுவார்த்தை மூலம் எரிக்சொல்ஹெய்மும் அன்ரன் பாலசிங்கமும் சேர்ந்து செய்து முடித்தனர். எல்லாவித யுத்தநெறிகளையும் மீறி விசவாயு வீசிப் போராளிகளைப் படுகொலை செய்து, இலட்சக்கணக்கான பொதுமக்களைக் கொன்று குவித்து தனது தேசிய இனப்படுகொலையை தொடர்ந்தது சிங்களம். அமெரிக்கா, ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள், ரஷ்ய சீன பிராந்திய ஆதிக்கவாதிகள், இஸ்ரேல் பாக்கிஸ்தான், இந்திய விஸ்தரிப்புவாத அரசு அனைவரும் இந்த யுத்தத்திற்கு அனைத்து இராணுவ தளபாட மற்றும் புலனாய்வு உதவிகளையும் வழங்கி ஆதரித்தனர். ஒபாமாவும் சமாதான தூதுவர் எரிக் சோல்ஹெமும் ஒரு படி மேலே சென்று விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து சிங்களத்திடம் சரணடைய வேண்டுமெனப் பகிரங்கமாகக் கோரினர்.சிங்களத்தின் கோரத் தாண்டவத்துக்குள் சிக்குண்ட மக்கள் கை கூப்பி அழுதும், தொழுதும், வேண்டியும் கூட அவர்களை அநாதரவாக விட்டு விட்டு ஐ.நா.வெளியேறியது.

சரணடைந்த முக்கிய உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பத்தாயிரத்துக்கு மேற்பட்டோர் சிறைவைக்கப்பட்டனர். இவர்களின் சரியான எண்ணிக்கையோ பேர்விபரமோ இதுவரை வெளியிடப்படவில்லை. அறியப்பட்ட சிலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வேறு ஒருசிலர் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஒரு பகுதியினர் என்ன ஆனார்கள் என்ற விபரம் கூட இன்றுவரை எவருக்குமே தெரியாது. பெண்போராளிகள் சிலர் இந்திய புடவை நிறுவனங்களுக்கு விளம்பர ’போஸ்’ கொடுத்து புனர்வாழ்வு பெற்று வருகின்றனர். வேறு சில போராளிகள் அரசியலில் ஈடுபடக் கூடாது, தொடர்ந்து பொலிஸ் நிலையத்தில் கையெழுத்து இடவேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள் கூட மீண்டும் கைது செய்யப்படுவது தொடர்கிறது.

யுத்தத்தில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு கடந்து போன இந்த மூன்று வருடங்களிலும் சிங்களம் தனது தேசிய இன அழிப்புக் கொள்கையை கைவிடவில்லை. குறிப்பாக விடுதலைப் புலிகளின் ஆயுதம் ஏந்திய எதிர்ப்பு இல்லாத சூழ்நிலையைப் பயன்படுத்தி தமிழீழ தேசத்தின் இருப்பை இல்லாதொழிப்பதை இலக்காகக் கொண்டு தனது அனைத்து நடவடிக்கைகளையும் திட்டமிட்டு வருகின்றது.. ஈழத்தமிழர்களுக்கான ஒரு அரசியல் தீர்வை காண மறுத்து வருகிறது. வடக்கு கிழக்கு இணைந்த நிலப்பரப்பு தமிழர் தாயகம் என்பதை ஏற்க மறுக்கிறது. ஈழத் தமிழர்கள் பகுதிகள் முழுவதும் சிங்கள இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. அது மக்களின் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இலட்சக்கணக்கான தமிழ்மக்களை அவர்களின் சொந்த வாழ்விடங்களில் குடியமர்த்த மறுப்பதுடன், தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றத்தைத் திட்டமிட்டு நிறைவேற்றி வருகிறது. இந்த இஸ்ரேல் பாணி நிலப்பறிப்பு மற்றும் இராணுவ மயத் திட்டமானது திட்டமிட்ட தேசிய அழிப்பாகும்.

பக்ச பாசிஸ்டுக்கள் தமிழர்கள் மீது மட்டுமல்லாது, உழைக்கும் சிங்கள மக்கள், மலையக மக்கள், இஸ்லாமியத் தமிழர்கள் மீதும் தாக்குதல் தொடுக்கிறது. தமது ஆட்சிக்கு எதிரான சிங்கள எதிர்க்கட்சியினர், மனித உரிமை அமைப்புகள், பத்திரிக்கையாளர்கள் மீதும் வெள்ளை வான் கும்பலை ஏவிவிட்டு எச்சிறு எதிர்ப்பையும் நசுக்குகின்றது. அது இலங்கை முழுவதையும் ஒரு இராணுவ சர்வாதிகார ஆட்சியின் கீழ் கொண்டு வந்துள்ளது.

இத்தகைய அரசியல் தாக்குதல்கள் மட்டுமல்ல உலகமய, தனியார்மய, தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை அமூல்படுத்துவதன் விளைவான நெருக்கடிகளையும் இலங்கை மக்கள் மீது சுமத்துகின்றது.இதற்கு எதிரான எதிர்ப்புக்களையும் துப்பாக்கி முனையில் நசுக்குகின்றது.

இதனால் சிங்களத்தை எதிர்த்து இலங்கை மக்கள் அனைவரும் ஒன்றுபட்டுப் போராடுவதற்கான புறச்சூழல் உருவாகி வருகின்றது.எனினும் இப்புறச் சூழலுக்குப் பொருத்தமாக அகச்சூழல் மாறவில்லை.தமிழீழ மக்கள் ஒரு தேசிய இனத்தவர் என்பதை அங்கீகரித்து அவர்களின் பிரிந்து செல்லும் உரிமையை உறுதி செய்ய தம் சொந்த ஆளும் கும்பல்களை எதிர்த்துப் போராட சிங்கள மக்கள் இன்னமும் தயாராக இல்லை.தமிழ்மக்கள் மத்தியில் நிலவும் குறுமினவாதமும், அதை ஏகாதிபத்திய தாச, சமரசத் தலைமைகள் தொடர்ந்து ஊட்டி வளர்ப்பதும் கூட இவ் ஐக்கியத்துக்குத் தடையாக உள்ளது. ஆனால் இந்நிலைமை மாறிவருகின்றது என்பதும், புறவய நிகழ்வுகள் இம்மாற்றத்தைத் தீவிரப்படுத்தும் திசைவழியில் பயணிக்கின்றன என்பதும் முக்கியமானதாகும்.

எனவே இத்தகைய ஒரு ஒன்றுபட்ட வெகுஜன இயக்கத்தை கட்டியெழுப்பும் வரையில் தமிழீழப் பிரிவினைக் கோரிக்கை என்பது பொருத்தமுடையதே ஆகும்.அதேவேளை ஒன்றுபட்ட இயக்கத்தைக் கட்டியெழுப்ப பிரிவினைக் கோரிக்கை தடையாக இல்லாதிருக்கும் பொருட்டு, பிரிந்து செல்லும் உரிமையை உயர்த்திப்பிடிப்பது அவசியமாகும். மேலும் உடனடியாக தமிழீழ மக்களின் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்கப் போராடுவது,  முதன்மையான அவசரக் கடமையாக , மாறியுள்ளது.

வடக்கையும் கிழக்கையும் நிர்வாக ரீதியாக இணைத்து அதைத் தமிழர் தாயகமாக அங்கீகரிப்பது, தமிழர் பகுதிகளிலிருந்து சிங்கள இராணுவத்தை திரும்பப் பெறுவது, சிங்களக் குடியேற்றங்களை அகற்றுவது, மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளில் தமிழர்கள் தங்கள் உரிமையைப் பெறுவது,யுத்தக்கைதிகளை விடுதலை செய்வது, யுத்தத்தால் இடம் பெயர்க்கப்பட்ட மக்களை மீளக்குடியமர்த்துவது,விவசாயம் மீன்பிடி மற்றும் வனத் தொழில்களுக்கு உள்ள தடைகளை நீக்குவது, யுத்தத்தால் பாழடிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வியளிப்பது, யுத்தத்தால் தனித்துப் போன பெண்கள் சிறுவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு அளிப்பது போன்ற கோரிக்கைகளை உடனடியாக போராடிப் பெறுவது அவசியமாகும். இப்போராட்டங்களில் அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கவும், இதேபோல் இதர மக்களின் குறிப்பான பிரச்சனைகளில் அவர்களுடன் ஒன்றுபட்டுப் போராடுவதும் அவசியமாகும்.

இவையல்லாமல் ஏகாதிபத்திய தாசர்களும், இன ஒடுக்குமுறையாளர்களும், சிங்கள பெளத்த வெறியர்களுமான சிங்கள ஆளும் வர்க்கத்தின் எத்தப் பிரிவினருடனும், உள்நாட்டுச் சமரசம் மூலமோ, அல்லது அந்நியத் தலையீட்டின் மூலமோ அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் எந்தச் சீர்திருத்தமும் இன ஒடுக்குமுறைக்கு முடிவுகட்டாது.மாறாக சிங்களத்தின் அடிமைத்தனத்துடன் கூடவே, நேரடியான ஏகாதிபத்திய அடிமைத்தனத்துக்குமே  வழியமைக்கும்.

அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் ஐ.நா. மனித உரிமை அமைப்பில் இலங்கைக்கு எதிராக கொண்டுவந்துள்ள தீர்மானம் பக்ச பாசிஸ்டுக்களை இன அழிப்புப் போர்க்குற்றவாளிகள் என்று அறிவிக்கவில்லை, போர்க்குற்றங்கள் குறித்தும் எதுவும் கூறவில்லை. 2010ஆம் ஆண்டில் டப்ளின் மக்கள் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்புகளிலிருந்து உலக மக்களை திசைதிருப்பி, இலங்கையின் மீது அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவுவதற்கானதே இந்த தீர்மானமாகும். குற்றவாளியான இராஜபட்சேவையே நீதிபதியாகக் கொண்டு “கற்றுக்கொண்ட பாடம் மற்றும் மறுசீரமைப்பு” என்ற இலங்கை அரசாங்கம் தயாரித்த அறிக்கையை செயல்படுத்துவதையே இத்தீர்மானம் கோருகின்றது. டப்ளின் தீர்ப்பாயம், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் இலங்கை அரசுடனான விடுதலைப் புலிகளின் பேச்சு வார்த்தையை சீர்குலைத்ததன் மூலமும், இலங்கை அரசுக்கு ஆயுத மற்றும் பொருளாதார உதவிகள் செய்ததன் மூலமும் இலங்கை அரசின் இன அழிப்புப் போருக்கு துணைபோயின என்று கூறியது. போர் நடக்கும் போது இந்நாடுகள் வேடிக்கை பார்த்தன என்றும் எனவே இந்நாடுகள் போர்க் குற்றத்திற்கு துணை போயின என்றும் குற்றம் சுமத்தியிருந்தது. எனவே இதையெல்லாம் மூடி மறைத்து இலங்கை அரசையும், இராஜபட்சே கும்பலையும் மிரட்டி பணிய வைக்கவே தற்போது அமெரிக்கா மனித உரிமை பேசி இலங்கையில் தலையிடுகிறது. இந்திய அரசாங்கமோ அந்தத் தீர்மானத்திலும்-இலங்கை அரசின் அனுமதியுடன்தான் ஐ.நா. செயற்படவேண்டும் என்று- திருத்தம் கொண்டுவந்து ஆதரித்தது. இராஜபட்சேவுக்கு சாதகமாகத்தான் நாங்கள் செயல்பட்டோம் என்று மன்மோகன் சிங் கடிதம் எழுதி தமது விசுவாசத்தைக் காட்டிக் கொண்டார். மேலும் இந்தப் போரை இந்தியாவிற்காக நாங்கள் நடத்தினோம் என்று இராஜபட்சே கும்பல் கூறியது. இந்திய அரசு போரை முன்னின்று நடத்தியது. இவர்களும் போர்க்குற்றவாளிகளே. இந்தியாவைப் பொறுத்தவரை சீனாவின் பக்கம் இலங்கை சாய்ந்துவிடுவதை தடுப்பது  நோக்கமாகும். இந்தத் தீர்மானத்தால் ஈழத் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அரசியல் தீர்வும் கிடைக்கப் போவதில்லை. சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்தியத் தூதுக்குழுவின் நடவடிக்கைகளே இதற்கு நல்லதொரு சான்றாக அமைந்துள்ளது. இலங்கையின் பிரதேச ஒருமைப்பாட்டை இந்தியா பாதுகாக்கும் என்பது இன ஒடுக்குமுறையை அங்கீகரிப்பது தவிர வேறொன்றுமல்ல.

 மறுபுறம் ரசியாவும், சீனாவும் இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிடக் கூடாது என்றும், நாடுகளின் இறையாண்மையை காப்பது என்ற ஐ.நா சாசனத்தை மீறக்கூடாது என்றும், அமெரிக்காவின் மேலாதிக்கத்தை எதிர்ப்பதாகவும் கூறுகின்றன. ஆனால் இவ்வாறு கூறிக்கொண்டு பக்ச பாசிஸ்டுக்களின் இனப்படுகொலையை இவர்கள் ஆதரிக்கின்றனர். சர்வதேச அரங்குகளில் இலங்கையைப் பாதுகாக்கின்றனர். இவர்களும் இலங்கை மீதான தங்களது செல்வாக்கு மண்டலத்தை விரிவுப்படுத்துவதற்காகத்தான் இலங்கை அரசுக்கு துணைபோகின்றனர்.

புலம்பெயர் தமிழ்ச் சமூகச் சூழல்:

புலம்பெயர் தமிழர் எனப் பொதுவாக அழைக்கப்படுவோர் இலங்கையில் இருந்து வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு தேவைகளின் நிமித்தம் வெளிநாடுகளில் குடியேறியோர் ஆவர். இவர்களின் முதல் தலைமுறையினர் காலனியாதிக்க அதிகாரத்தில் பங்குகொண்ட பிரிவினரின் வழி வந்தோர் ஆவர். இரண்டாவது தலைமுறையினர் போலிச்சுதந்திரத்துக்குப் பிந்திய இலங்கையில், அதிகாரபூர்வ சலுகைகளின் மூலம் உயர்கல்வி மற்றும் இதர தேவைகளுக்காக சட்டபூர்வமாக குடியேறியோர் ஆவர்.மூன்றாவது தலைமுறையினர் இலங்கையில் தமிழ்த்தேசியப் பிரச்சனையின் விளைவாக வெளியேறியோர் ஆவர்.இவர்களில் மிகப் பெரும்பாலானோர் சட்டவிரோதமாக புகுந்தவர்களும், பெருந்தொகைப்பணத்தை இப்பயணத்துக்காக இறைத்தவர்களும் இதன் காரணமாக கடும் உடல் உழைப்புக்கு உள்ளாக நிர்ப்பந்தப்பட்டவர்களும் ஆவர்.

இதிலிருந்து புலம்பெயர் தமிழரிடையே ஒரு ‘கற்றறிந்தோர்’ குழாம், சில்லறை வணிகர்கள், நாளாந்த கடும் உழைப்பாளிகள் என்ற சமூகப் பிரிவுகளும் தோன்றியுள்ளன.

பொருளுற்பத்தி உறவில் இவர்கள் வகிக்கும் பங்கு பாத்திரத்தின் காரணமாக இப்பிரிவினரது அரசியல் சமூக சிந்தனையும் அமைந்துள்ளது இயற்கையே!

மூத்த குடியினர் காலனியாதிக்கத்தின் கருப்பையில் பிறந்தவர்கள், கற்றறிந்தோர் குழாம் என அறியப்படுவது, சிந்தனா பூர்வமாக ஏகாதிபத்திய அடிமைத்தனத்தை தொழுதேற்றுக் கொண்டது, வணிகர்கள் எனப்படுவோர் ஏகபோக வணிகத்தின் முன்னால் தமது மூலதனப் பெருக்கத்துக்கு வழியற்றோர்.இந்த இழவு அவ்வளவும் ஒன்று சேர்ந்த கலவையே புலம்பெயர் நாடுகளில் சமரசத்துக்கான சமூக வேர் ஆகும்.

இதைச் சுற்றி பல்வேறு தீமைகள் படர்ந்துள்ளன.உள்நாட்டு ஆளும் கும்பல்களுடன் உள்ள உறவு, மத நிறுவனங்களுடன் உள்ள உறவு, கலைப்புவாதிகளுடன் உள்ள உறவு, என்.ஜி.ஓ கருங்காலிகளுடன் உள்ள உறவு என இந்த விச வித்து விரிந்துள்ளது.

மறுபுறம் சாமானிய உழைக்கும் மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் ஒரு சமூகம் என்றமுறையில் மேலை நாடுகளில் தேசிய சிறுபான்மை இனத்தவர் ஆவர்.மேலை நாடுகளில் தேசிய சிறுபான்மை இனத்தவர்களுக்கு என்ன மதிப்பும் மரியாதையும் உண்டோ, என்ன இழிவுகளையும், ஒதுக்குதல்களையும்  அவர்கள் சந்திக்கின்றார்களோ அதை இவர்களும் சந்தித்தாக வேண்டும்.மேலும் மரணத்தறுவாயில் இருக்கும் முதலாளித்துவம் சுமத்தும் அனைத்து நெருக்கடிகளுக்கும் முகம் கொடுக்கவேண்டும்.தமது அடுத்த சந்ததியினரின் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் அளிக்கவேண்டும்.இது சார்ந்த பண்பாட்டுக் கடமைகளையும் சுமக்க வேண்டும்.இதன் பொருட்டு தமது இருப்புக்கு ஒரு அடையாளத்தைத் தேடிக்கொள்ள வேண்டும்.இவர்கள் தான் சுதந்திரத்தின் ஆதரவாளர்கள் ஆவர்.

இந்திய விஸ்தரிப்புவாத அரசு:

தமிழீழத் தேசியப் பிரச்சனை ஒரு உள்நாட்டு யுத்தமாக வடிவமெடுத்த 1983 முதல் ஈழத்தமிழரைக் காப்பதாக இந்தியா நாடகமாடிவருகின்றது. ஈழத்தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண சிங்களத்தைக் கோருவதாகவும் பசப்பி வருகின்றது.ஆனால் இந்த 30 ஆண்டுகளில் இந்தியா மூலம் ஈழத்தமிழ்மக்கள் அடைந்தது என்ன?

ஈழத்தமிழ்மக்களின் அரசியல் பிரதிநிதிகளாகவும்,சிங்களத்தின் இன அழிப்பில் இருந்து அவர்களைக் காக்கும் அரணாகவும் இருந்த விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்ட இந்திய அரசு 1987 இல் முயன்றது.இந்த இராணுவ முயற்சி தோற்கடிக்கப்பட்டாலும், இலங்கையை அடிபணிய வைத்து இந்திய இலங்கை ஒப்பந்தம் மூலம் தனது மேலாதிக்கத்தை நிறுவிக் கொண்டது. 70 களின் பிற்பகுதியில் இலங்கை ஜப்பானின் குப்பைத் தொட்டி (பஞ்சிகாவத்த) என அழைக்கப்பட்டது. ஆனால் இன்று இலங்கை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணி வகிக்கின்றது.ஜப்பான் வெறும் 5%என்ற நிலைக்கு பின்தள்ளப்பட்டுவிட்டது. இலங்கையின் இறக்குமதி விகிதாசாரம் வருமாறு India 19.4%, China 15.1%, Singapore 9.1%, Iran 7%, Japan 4.9% (2010).
 1987 இல் தோற்றுப்போன முயற்சியை 2008 இல் இந்தியா நிறைவேற்றியது.

முள்ளிவாய்க்கால் பிரளயத்தின் மிக முக்கியமான ஈடு செய்ய இயலாத இழப்பு தமிழ் மக்கள் தமது விடுதலை இராணுவமான விடுதலைப் புலிகளை களப்பலி கொடுத்ததாகும். இந்தியா ஈழப்பிரச்சனையில் தலையீடு செய்யாதிருந்திருந்தால் இப்பேரிழப்பு நேர்ந்திருக்காது.இதற்காக எத்தனை தலைமுறைக்கும் ஈழம் இந்தியாவை மன்னிக்காது.

இந்த இந்தியா இப்போது சீனாவின் செல்வாக்கைத் தடுப்பதாகக் கூறி தொடர்ந்தும் தமிழீழப் பிரச்சனையில் தலையீடு செய்கின்றது.ரசிய சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னால் அமெரிக்காவின் யுத்ததந்திரக் கூட்டாளியாகிவிட்ட இந்தியா, அமெரிக்காவின் உலக மறுபங்கீட்டிற்கு இலங்கையைப் பணியவைக்க ஈழத்தமிழர்களை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துகின்றது.அமெரிக்கத் தீர்மானத்தை திருத்தியெழுதி இந்தியா வழங்கிய ஆதரவு இதையே காட்டுகின்றது.

அமெரிக்கத் தீர்மானம் ஒரு அரசியல் முள்ளிவாய்க்கால்:

அமெரிக்க நவீன காலனியாதிக்கத்தின் உலக மறுபங்கீட்டிற்கான இலங்கை மீதான தலையீடு, `நிரந்தர சமாதானம்` என்ற முழக்கத்துடன் நுழைவதே அமெரிக்கத் தீர்மானத்தின் முக்கியத்துவமாகும்.விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னால் உருவாகியுள்ள சமாதானச் சூழல்- உலகமயமாக்கல் கொள்ளைக்கான வாய்ப்பு- மீண்டும் கை நழுவிப் போய் விடாது நீடித்து நிலைத்து இருக்க வேண்டிய, சில சீர்திருத்தங்களை சிங்களம் செய்தாக வேண்டும் என்பது அமெரிக்காவின் நிலைப்பாடாகும்.அந்தச் சீர்திருத்தங்கள் LLRC இல் சிங்களத்தால் முன்வைக்கப்பட்டவை ஆகும்.சிங்களம் இதனையும் அமூலாக்காது, அமெரிக்காவும் இந்தியாவும் அதை அமூலாக்கக் கோரிய வண்ணம் தொடர்ந்து தலையீடு செய்யும்.எனவே இந்த நிரந்தர சமாதானம் நிரந்தர தலையீட்டிற்கான கருவியாகிவிடும். இதன் மூலம் அமெரிக்கா தனது நலன்களை அடைந்து கொள்ளும்.

உலக மேலாதிக்கத்திற்கான தனது யுத்ததந்திரக் களமுனையாக ஆசிய பசிபிக் பிராந்தியத்தை அமெரிக்கா தேர்ந்துள்ள நிலையில் இத்தீர்மானம், மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இதற்குமேல் தமிழர் நலன் குறித்து அமெரிக்கத் தீர்மானத்தில் எதுவும் இல்லை.சொல்லப்போனால் தமிழர் என்கிற வார்த்தையே இல்லை.இதை தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத் தருவதற்கான அமெரிக்க-இந்திய கூட்டு முயற்சி என்பதாக ஒபாமாவின் புலம் பெயர் தமிழர்கள் கூப்பாடு போடுகின்றனர்.

1983 இல் ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுவதாகக் கூறி இலங்கையில் இந்தியா தலையிட்டதற்கு தமிழ் அமைப்புக்கள் துணைபோனது இன்று எந்த நிலைமைக்கு தமிழர்களைக் கொண்டுவந்து விட்டுள்ளதோ, அதைவிட மோசமான நிலைமைக்கு இன்று அமெரிக்கத் தலையீட்டிற்கு வழங்கும் ஆதரவு கொண்டு செல்லும் என்பதை தமிழர்கள் ஒரு கணமேனும் மறந்து விடக்கூடாது.

இந்த அமெரிக்கத் தீர்மான ஆதரவுப் போக்கு, இலங்கையில் ஒரு ஒன்றுபட்ட தேசிய ஜனநாயக இயக்கத்தைக் கட்டியெழுப்ப உருவாகிவரும் புறவய வாய்ப்புக்களைப் பயன்படுத்த இயலாமல் நாசம் செய்துவிடும்.ஈழ விடுதலைப் போராட்டத்தை அமெரிக்க ஆதரவுப் போராட்டமாக்கி சர்வதேச ரீதியாக எம்மைத் தனிமைப்படுத்திவிடும். போலி அமெரிக்க எதிர்ப்பு நாடகமாடி சிங்களம் மக்களைத் தன் அணியில் சேர்த்துக் கொள்ள வழி சமைக்கும்.

எமது எதிரிகளான அமெரிக்காவும், இந்தியாவும்,சிங்களமும் இதனால் பயன் அடைய, நாம் எல்லா முனையிலும் தனிமைப்பட்டு விடுவோம்.

விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னால் விடுதலைப் போராட்டம் மீண்டும் தலையெடுத்துவிடக் கூடாது என்று கண்ணும் கருத்துமாக இருக்கின்ற அத்தனை சக்திகளும், அமெரிக்க-இந்திய தீர்மானத்தை விழுந்து விழுந்து ஆதரிப்பது காரணம் இல்லாமல் இல்லை.

இன்றைய அரசியல் சூழலின் பிரதான போக்குகள்:
1) ஏகபோக முதலாளித்துவத்தின் உலகு தழுவிய 3வது பொது நெருக்கடி தீர்வுகாண இயலாமல் தொடர்வது, உலக மறுபங்கீட்டு யுத்தங்கள் தீவிரமடைவது,`நிரந்தர சமாதானம்` என்கிற போர்வையில் அமெரிக்கா இலங்கையில் தலையீடு செய்வது.
2) ரசிய சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் யுத்த தந்திரக் கூட்டாளியாகிவிட்ட இந்திய விஸ்தரிப்புவாத அரசு, இலங்கைத் தலையீட்டில் அமெரிக்காவுடன் இணக்கம் காண்பது.
3) உலக மறுபங்கீட்டில் ஒரு போர்க்களமாகிவிட்ட இலங்கையில் அமெரிக்க-இந்திய அணிக்கு சவாலாக ரசிய-சீன அணியுடன் பேரம் பேசும் போக்கை பக்ச பாசிஸ்டுக்கள் கடைப்பிடித்து,இராணுவ சர்வாதிகார அடக்குமுறையை முழு இலங்கை மக்கள் மீதும் தொடுத்து, தமிழீழத் தேசிய இன ஒடுக்குமுறையைத் தொடர்வது.
4) இதன் விளைவாக இலங்கையில் அனைத்து மக்களும் தமது ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க, பக்ச பாசிஸ்டுக்களை எதிர்த்து ஒன்றுபட்டு போராட வாய்ப்புக்கள் உருவாகுவது.
5) புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தில் ஒரு பிரிவினர் ஏகாதிபத்தியவாதிகளுடனும், இந்திய விஸ்தரிப்புவாத அரசுடனும் அணிசேர்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சமரச சந்தர்ப்பவாத வழிகளில் சீர்குலைக்க முயல்வது, மறுபுறம் பெருந்திரளான மக்கள் ஈழவிடுதலைப் போராட்டத்தின் பின்புலமாகத் தொடர்ந்தும் நீடிப்பது.
இவையே ஈழவிடுதலைப் போராட்டம் எதிர்கொள்ளும் இன்றைய பிரதான அரசியல் போக்குகளாகும்.
 
பிரதான போக்குகள்பால் சமூக வர்க்கங்களின் (கட்சிகளின்) நிலையும், அணி சேர்க்கையும்:
 
ஒடுக்கும் சிங்களப் பெருந்தேசிய இனத்தின் ஐக்கிய தேசியக் கட்சியோ, அல்லது சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பக்ச குடும்ப எதிர்ப்பு (சந்திரிக்கா) அணியோ, அல்லது சரத் பொன்சேகாவோ எல்லோருமே ஈழத்தமிழரை இனப்படுகொலை செய்த யுத்தக் குற்றவாளிகள் ஆவர். இவர்கள் ஏகாதிபத்திய தாசர்களும், இந்திய விஸ்தரிப்புவாதத்தின் ஆதரவாளர்களும் ஆவர். இதனால் இக்கட்சிகள் எதிரிகள் ஆகும்.
 
ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட சாதுக்களின் அனைத்து அரசியல் நிறுவனங்களும் சிங்களப் பேரின வெறியையும் பெளத்த பாசிசத்தையும் அடிமட்ட கிராமப்புற ஏழை எளிய உழைக்கும் சிங்கள மக்களிடையே விதைக்கும் விசக்கிருமிகளாகும்.இதற்கு கிராமப்புற விவசாயிகளிடையே அதிகாரம் செலுத்தும் பெளத்த பாஞ்சாலைகளை பயன்படுத்துகின்றார்கள். இவர்கள் எதிரிகளின் ஆதார சமூகத் தூண்கள் ஆவர்.
 
சிங்களக் குட்டிமுதலாளிய ஜே.வி.பி பேரின வெறியிலும், பெளத்த பாசிசத்திலும் மேற்கண்டவர்களுக்கு சற்றும் சளைத்தது அல்ல. சொல்லில் சோசலிசமும் செயலில் பேரினவாதிகளுமான சமூக தேசிய வெறியர்களே இவர்கள். தமிழீழத் தேசிய இன ஒடுக்குமுறையில் இவர்கள் எதிரிகளின் நம்பகமான கூட்டாளிகளாக செயல்படுகின்றனர்.
 
உதிரிகளாகவோ,சிறு சிறு குழுக்களாகவோ இருப்போரில் பெரும்பாலானோர் இந்த அல்லது அந்த என்.ஜி.ஓ வில் ஞானப் பால் குடிக்கும் பிள்ளைகளே ஆவர்.
 
இஸ்லாமியத் தமிழர்களின் கட்சிகள் என்று சொல்லப்படுபவை இரண்டு பேரினவாதக் கட்சிகளோடு கூட்டமைத்து ஆதாயம் அடையமுயலும் பிழைப்புவாத சமரசசக்திகளே ஆகும்.இஸ்லாமிய மக்களிடையே இருக்கும் அதீத மத நம்பிக்கையை இதற்கு ஆதாரமாக்கிக் கொள்கின்றார்கள். தம்புள்ள மசூதி தாக்குதலில் பெட்டிப்பாம்பாக அடங்கிப் போனார்கள் இந்த வெறும் பேச்சு வீரர்கள்.ஈழவிடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்துவதற்கு இவர்கள் பேரினவாதக் கட்சிகளுக்கு துணைபோகின்றனர்.
 
மலையகத் தமிழர் மத்தியிலான கட்சிகளும், தொழிற்சங்கங்களும் அம்மக்களுக்கு தொடர்ந்து இழைத்த துரோகத்தினால் செல்வாக்கிழந்து வருகின்றனர். மலையகத்தில் அட்டைகளைக் காட்டிலும் என்.ஜி.ஓக்கள் அதிகம்.
 
கூட்டமைப்பு பல குள்ளர்களினதும், சில நல்லவர்களினதும் கூடாரம். அமெரிக்காவும் இந்தியாவும் இவர்களைத் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளாக்க படாதபாடுபட்டும் அது நாய் வாலை நிமிர்த்தும் கதையாகிவிட்டது. இப்போது சந்திரகாசன் என்கிற பேய், இராசதுரை என்கிற பூதம், பெருமாள் என்கிற சடலம் இவர்களை வைத்து ஒரு மயானகாண்டம் நடத்துகின்றது இந்தியா. இந்தக் கும்பல் அனைத்துமே இந்திய அடிமைகள் ஆவர்.
 
இவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல `உருத்திரகுமாரனும் 40 பேரவைகளும்`, `ஒபாமாவும் அவருக்கான தமிழர்களும்`!
 
இச்சித்திரத்தில் தெரிகின்ற பொதுவான உண்மை என்னவென்றால் மேற்கண்ட பிரதான போக்குகள்பால் மக்கள் நலன் சார்ந்த நிலைப்பாடு இந்தக்கட்சிகள் எவற்றுக்கும் கிடையாது.எல்லாம் ஏதோ ஒருவகையில் எதிரிகளுக்கு சேவகம் செய்கின்றவையே ஆகும்.குறிப்பாக ஏகாதிபத்திய தாசர்கள் ஆவர்.
 
ஏகாதிபத்தியம் மனிதகுலத்தின் எதிரி.
 
ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தனது நூலில் மாமேதை தோழர் லெனின் ஏகபோகங்களது வரலாற்றின் முக்கிய கட்டங்களை மூன்றாக வகைப்படுத்துகின்றார்.(1-1860-70- 2- 1873) மூன்றாவது கட்டமாக, ``பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட உயர்வேற்றமும், 1900-1903ம் ஆண்டுகளின் நெருக்கடியும், பொருளாதார வாழ்வு அனைத்தின் அடிப்படைகளில் ஒன்றாக கார்ட்டல்கள் ஆகிவிடுகின்றன.முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக மாற்றமடைந்து விடுகிறது`` என்பார். (தேர்வு நூல் தொகுதி 4, பக்கம் 61)
 
ஆக மனிதகுலம் ஏகாதிபத்திய நுகத்தடியின் கீழ் ஒரு நூற்றாண்டு காலத்துக்கு மேலாக கட்டுண்டு கிடக்கின்றது.இந்த நீண்ட காலத்தில் காலனியாதிக்கம், இரண்டு உலகப் போர்கள்,நவீனகாலனியாதிக்கம், எண்ணற்ற பிராந்திய உள்நாட்டு யுத்தங்கள், எல்லைத் தகராற்றுப் போர்கள், அணு ஆயுதப் பரவல்,பசி பஞ்சம் பட்டினி,வேலையின்மை,சமூக மோதல்கள்,கலகங்கள், வன்முறை; கொடிய நோய்கள் கொள்ளை வியாதிகள், மாசுபட்ட சூழல்,வற்றிப்போன வளங்கள்,சிறுவர் உழைப்பு, வக்கிரப் பாலியல் வன்முறை, உணவு உடை உறையுள் கல்வி குடிநீர் ஆகிய அடிப்படை மனித உரிமைகள் இழந்த இலட்சோப இலட்சம் மக்கள். நாடுகளுக்குள்ளும், எல்லைகள் தாண்டியும் அகதிகள் பட்டாளம். ஊழல் அதிகார துஸ்பிரயோகம்,சதிப்புரட்சி,இராணுவ ஆட்சி, கொடுங்கோன்மை.
 
ஏறத்தாழ உலக நாடுகளில் 25வீதமான(55) நாடுகளையும்,உலக சனத்தொகையில் 15 வீதமானவர்களையும், எண்ணற்ற வளங்களையும் வனப்பையும் உழைப்பையும் கொண்ட ஆபிரிக்கக் கண்டத்தை எவ்வாறு கடித்துக் குதறினார்கள் என்பது ஏகாதிபத்தியத்தின் கோரமுகத்துக்கு சான்றாகும். இத்தனையையும் மனிதகுலம் அநுபவிப்பது வெறும் 1வீதமான நிதியாதிக்க கும்பலுக்காக!
 
எனவே ஏகாதிபத்தியத்துக்கு முடிவுகட்டுவது மானுட தர்மமும், தார்மீகக் கடமையுமாகும்.
 
இதனால் இவ்வாண்டு மேநாளில், தேசிய சுதந்திரத்துக்காக மாண்ட நம் மக்களதும் மாவீரத் தோழர்களதும் வீர நினைவாக அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகளின் நவீன காலனியாதிக்கத்தை முறியடிக்கவும், உலகத் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட தேசங்களின் விடுதலையை சார்ந்து நிற்கவும், ஈழவிடுதலைப் போராட்டத்துக்கு புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்பவும் கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் செயற்பட ஒன்றுபடுமாறு  அறைகூவி அழைக்கின்றோம்.
 
• மரணப்படுக்கையிலிருக்கும் முதலாளித்துவத்தைக் காப்பாற்ற மனித குலத்தைப் பலியெடுக்கும் நவீன காலனியாதிக்க உலக மறுபங்கீட்டு யுத்தங்களை எதிர்ப்போம்!
 
• ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ மயமாக்கலை எதிர்ப்போம்!
 
• நவீன காலனியாதிக்க ஆட்சிக்கவிழ்ப்பு, அந்நியத் தலையீடுகளை, புதிய ஜனநாயக உள்நாட்டுப் புரட்சியால் தோற்கடிப்போம்!
 
• ஒற்றையாட்சிச் சிங்களத்தை எதிர்ப்போம், தமிழீழ சுயநிர்ணயத்துக்காகப் போராடுவோம்! ஆறாவது திருத்தச் சடத்தை நீக்கக் கோருவோம்!
 
• இலங்கையை உலகமறுபங்கீட்டுப் போர்க்களமாக்கும் சக்திகளை எதிர்ப்போம்!
 
• ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்தியத் தலையீட்டை எதிர்ப்போம்! இந்திய இலங்கை ஒப்பந்தத்தைக் கிழித்தெறியப் போராடுவோம்!
 
• மலையகப் பெருந்தோட்டத் தனியார் மயமாக்கலை எதிர்த்த போராட்டங்களுக்கு ஆதரவளிப்போம்!
 
• இஸ்லாமியத் தமிழர்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்போம்!
 
• தொழிலாளர்களின் தொழிற்சங்க, ஜனநாயக, அரசியல் உரிமைகளுக்காகப் போராடுவோம்!
 
• சிங்கள ஏழை விவசாயக் குடும்பப் பெண்களை கொத்தடிமைகளாக மத்தியகிழக்கு நாடுகளுக்கு அனுப்பும் கொடுஞ்செயலை தடைசெய்யப் போராடுவோம்!
 
• அபிவிருத்தி என்ற பெயரால் சிங்கள விவசாயிகளின் நிலங்களை அந்நியக் கம்பெனிகளுக்குத் தாரைவார்த்துவிட்டு, தமிழ் விவசாயிகளின் நிலங்களில் சிங்களவர்களைக் குடியேற்றி இனப்பகையைத் தூண்டும் இழி செயலை எதிர்ப்போம்!
 
• மீன்பிடி மற்றும் வனத் தொழில் மீது விதிக்கப்பட்டிருக்கும் சட்டத்தடைகள், இராணுவக் கெடுபிடிகளை நிறுத்தப் போராடுவோம்!
 
• பக்சபாசிஸ்டுக்கள் மக்கள் மீது சுமத்தியுள்ள அத்தியாவசிய எரிபொருள், உணவுப் பண்ட விலை உயர்வு, வரிச்சுமைகளைத் திரும்பப் பெறப் போராடுவோம்!
 
• யுத்தக்கைதிகள் அனைவரையும் நிபந்தனையின்றி உடனே விடுதலை செய்யப் போராடுவோம்!
 
• அந்நியத் தலையீட்டையும், உள்நாட்டு இனவெறிப் பாசிச இராணுவ சர்வாதிகாரத்தையும் வெற்றிகொள்ள பரந்துபட்ட தேசபக்த ஜனநாயக ஐக்கிய முன்னணியைக் கட்டியமைப்போம்!
 
உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே, ஒன்றுபடுவோம்!
 
மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனை வழி நடப்போம்!
====================================================================
புதிய ஈழப்புரட்சியாளர்கள்       தமிழீழம்     மே 2012      eelamnewsbulletin@googlemail.com
====================================================================
 
குறிப்பான திட்டத்தின் செயல் முழக்கங்கள்
 
நல்லிணக்க ஆணைக்குழு விமர்சனம்http://senthanal.blogspot.co.uk/2012/01/on-llrc-report.html

2012 வரவுசெலவுத் திட்டம்http://senthanal.blogspot.co.uk/2011/11/2012-2012-7.html 

Monday, 30 January 2012

போலிச்சுதந்திரம் பொசுங்கியே தீரும்! புதிய ஜனநாயகம் மலர்ந்தே தீரும்!!


ஜனநாயகமும் சுதந்திரமும் சுபீட்சமும்  மிக்க

இலங்கை நாட்டைக் கட்டியெழுப்ப,

சிங்களமே;

ஈழதேசத்தின் பிரிந்து செல்லும் உரிமையை அங்கிகரி!

இல்லையேல் ஈழப்பிரச்சனைக்கு தீர்வு காண, ஈழமக்களிடையே சர்வஜன வாக்கெடுப்பு நடத்து!

ஆறாவது திருத்தச் சட்டத்தை நீக்கு!

இந்திய இலங்கை ஒப்பந்தத்தைக் கிழித்தெறி!

 ஏற்றத்தாழ்வான அனைத்து அந்நிய ஒப்பந்தங்களையும் ரத்துச் செய்!

 அநியாய அந்நியக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாது என அறிவி!

 IMF, World Bank உள்ளிட்ட அனைத்து அந்நிய நிதியாதிக்க கும்பல்களும் 
 நாட்டின் பொருளாதாரத் திட்டமிடலில் தலையிடுவதை      நிறுத்து!

 தனியார்மய, தாராளமய, உலகமய அந்நியப் பொருளாதாரக்      கொள்கை   களைக்  கைவிடு!
        
இக்கொள்கைகளுக்குச் சேவகம் செய்யும் ஏற்றுமதி சார்ந்த சேவைத் துறையை ஊக்குவிக்காதே!
      
பட்டி தொட்டியும் பரந்து, முழு நாட்டையும் மூலை முடுக்கெங்கும் மின்சாரமயமாக்கு! `இரவைப் பகலாக்கு`!!
        
62 ஆண்டுகளாக உலக வங்கி தடை செய்து வரும் பெருவீதத் தொழிற் துறையில்  முதலீடு செய்!
   
நிலத்தடி, நீரடி வளங்களை அந்நியருக்கு தாரை வார்க்காதே! 
        
நீண்ட காலக் குத்தகையில் அந்நிய கொம்பனிகளுக்குத் தாரை வார்த்துள்ள நிலங்களை அரசுடமையாக்கு!
        
பெளத்த மடாலயங்களுக்கும், கிறீஸ்தவத் தேவாலயங்களுக்கும், பெரும் இந்துக் கோவில்களுக்கும் மற்றும் நிலவுடமையாளர்களுக்கும்       
சொந்தமான பெருநில உடமைகளைப் பறிமுதல் செய்து நிலமற்ற வறிய விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கு!

பெருந்தோட்டம், நெல் விவசாயம், உப உணவுப் பயிர்ச்செய்கை, கடற்றொழில், வனத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் துறைகளை         நவீனமயப்படுத்து!
        
மூலிகை விவசாயத்தை வளர்த்தெடு, மூலிகை விஞ்ஞானத்தை பல்கலைக்கழகம் வரை போதனைப் பாடமாக்கு, மூலிகை மருத்துவத்தை    
விஞ்ஞான மயமாக்கு!
        
அந்நியர்கள் மூலவளங்களை அபகரிக்கவோ நாசப்படுத்தவோ அனுமதிக்காதே!
        
அபிவிருத்தி என்ற பெயரால் உற்பத்தி சாராத ஊதாரி உல்லாச, இராணுவத் துறைகளில் முதலீடு செய்யாதே!
      
அரச கட்டுப்பாட்டில் அல்லாத அனைத்து அந்நிய பணவரவுகளையும் பறிமுதல் செய்!

உளவாளிகளும் ஊடுருவலாளர்களுமான, அனைத்து NGO க்கள், மற்றும் போலி `மக்கள் சங்கங்களின்` உடைமைகளைப் பறிமுதல் செய்து  நாட்டை விட்டு விரட்டு!
      
உள்நாட்டுத் தரகுமுதலாளிய நிறுவனங்களுக்கு அளிக்கும் வரிச் சலுகைகளை நிறுத்து! அவை மீது அதிக வரி அறவிடு!
        
உள்ளூர் உற்பத்தியாளர்களையும் விவசாயிகளையும் ஊக்குவிக்க வரிச் சலுகை வழங்கு!

அனைத்து மறைமுக வரிகளையும் நீக்கு!

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்து!
        
விவசாயிகளின் இடுபொருட்களுக்கு மானியம் வழங்கு!
        
குறைந்த வட்டியில் கடன் வழங்கி உள்ளூர் உற்பத்தியை ஊக்குவி!
      
படகு மற்றும் படகு இயந்திரத் தொழிற்துறையை உருவாக்கு!
        
பதனிடும் சாலைகளைப் பரவலாக்கு!
        
நகர கிராம பேதமின்றி நாடுதழுவிய போக்குவரத்து வலைப்பின்னலை உருவாக்கு!
        
உள்நாட்டு உற்பத்தியை நாசப்படுத்த திட்டமிட்ட வெளிநாட்டு இறக்குமதி களைச் செய்யாதே!
    
வனவளங்களைப் பாதுகார்! வக்கிர புத்தியில் விடுதலைப்புலிகள் வளர்த்து உருவாக்கிய செயற்கைக் காடுகளை அழிக்காதே!
        
வனத்துறை வளங்களை மூலப்பொருளாகக் கொண்ட முதலாளித்துவ தொழிற்துறையைக் கட்டியெழுப்பு!
      
அந்நியச் செலாவாணி, நாணய மதிப்பிறக்கம் போன்ற நாசகார ஏகாதிபத்திய கொள்கைகளால் நாட்டு மக்களின் உழைப்புச் சக்தியின் மதிப்பை 
 மலிவுபடுத்தாதே!
        
பங்குவர்த்தகச் சூதாடிகளை சிறையில் அடை, சூதாட்டத்துக்கு முற்றுப் புள்ளி வை!
        
ஊழலை ஒழி! அனைத்து ஊழல் பெருச்சாளிகளையும் கூண்டிலடை!
     
        
யுத்தகாலப் பேரழிவை மீளக்கட்டியமைக்க முழு இராணுவத்தையும் உடல் உழைப்பில் ஈடுபடுத்து!
        
முதலீட்டில் ஈடுபடுத்தி இராணுவ முதலாளிகளை உருவாக்காதே!
        
வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தைத் திரும்பப் பெறு!
     
 நாட்டை இராணுவமயப்படுத்தி இலங்கையை மியான்மார் (பர்மா) ஆக்காதே!
        
உலக மறுபங்கீட்டுப் போட்டியில் இலங்கையை பலிக்களம் ஆக்காதே!
        
இந்து சமுத்திரப்பிராந்தியத்தை அமைதிப் பிராந்தியமாக்கப் போராடு!
        
ஐ.நா.வின் ஆக்கிரமிப்புப் போர்களுக்கு `காக்கிச்சட்டை அணிந்த சிங்கள விவசாயிகளை` விற்றுப் பிழைக்காதே!
   
உலகமயமாக்கல் பொருளாதார நலன்களக் காக்கவும், உள்நாட்டு அடக்கு முறைக்கும் நடைமுறையில் உள்ள அனைத்துக் கறுப்புச்  சட்டங்களையும் காலாவதியாக்கு!

தொழிலாளர் நலச்சட்டங்களை அமூலாக்கு!
        
வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற பெயரால் நாட்டின் உழைப்புச் சக்தியை மலிவுக் கூலிகளாகவும், அடிமைத் தொழிலாளர்களாகவும்     மத்திய கிழக்கு நாடுகளுக்கு விற்றுப் பிழைக்காதே!
   
பெண்ணடிமைத்தனத்துக்கு முடிவு கட்டு!
   
மாணவர், பாலகர் பாலியல் குற்றவாளிகளிகளுக்கு ஆயுள் தண்டனை அளி!
        
உலகமயமாக்கல் நகரங்களையும், உல்லாசத்துறையையும், ஏழ்மையையும் சார்ந்து கலாச்சாரச் சீரழிவுக்கு வழிவகுக்காதே!

சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டு, பாதாளக்குழுக்களின் வெள்ளை வான்  ஆட்சி நடத்தாதே!

ஊடக, இணைய சுதந்திரத்தில் கை வையாதே!

யுத்தக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கு!
   
ஒன்றுபட்ட ஜனநாயக நாட்டை உருவாக்க இனமத பூசல்களைத் தூண்டாதே!
        
அரசில் இருந்தும் கல்வியில் இருந்தும் மதத்தை வேறுபிரி!
        
பெளத்த மதத்துக்கு அரசியல் சாசனத்தில் வழங்கியுள்ள விஷேட அந்தஸ்தை ரத்துச் செய்!

இன மத நல்லிணக்கத்துக்கு தடையாக இருக்கும் பெளத்த மத வெறி அமைப்புக்களை ஊட்டி வளர்க்காதே!
        
நடைமுறையில் தமிழர்களை சிங்கள மொழிபடிக்க நிர்ப்பந்திப்பதில் போய் முடியப் போகிற, மும்மொழித் திட்டத்தைக் கைவிடு!
     
 தாய்மொழிக்கல்வியை அமூலாக்கு!
        
வடக்குக் கிழக்கு மாகாணங்களை சட்டரீதியாக ஒன்றிணை!
        
வரலாற்று ரீதியான பொதுமொழித் தொடர்பாலும், பொது உற்பத்தி உறவாலும், பொது மொழி மற்றும் கலாச்சாரத்தாலும் இயல்பாக. அவர்கள் ஒரு சந்தையாக உருவானதை  வலுக்கட்டாயமாகப் பிரிக்காதே!
        
மத்திய மலைநாட்டில் மலையக மக்கள் செறிந்து வாழும் மாவட்டங்களை தனிப்பிரதேசமாக ஒன்றிணைத்து பிரதேச சுயாட்சி   அந்தஸ்து வழங்கு!
        
இஸ்லாமியத் தமிழர்களுக்கு தனியான சுயாட்சி அலகை உருவாக்கு!
        
அனைத்து தேசிய, இன, மத மக்களையும் ஜனநாயகக் கூட்டாட்சியில் ஒன்றிணை!
        
நிறைவேற்று சேர்ந்து வாழ்வோம்!    இல்லையேல் பிரிந்து போவோம்!
        
ஜனநாயகமும் சுதந்திரமும் சுபீட்சமும்  மிக்க இலங்கை நாட்டைக் கட்டியெழுப்ப, மேற்கண்ட புதிய ஜனநாயக அரசியல்,தேசிய ஜனநாயாகப் பொருளாதாரப் பாதையே ஒரே வழியாகும். வேறெந்த வழியும் கிடையாது.மாறாக அந்நிய உலகமயமாக்கல்  பொருளாதாரக் கொள்கையிலும், அந்நிய நிதி மூலதனத்திலும் தங்கியிருக்கும் வரை, நாடு தனது அரைக்காலனிய சுதந்திரத்தையும் இழந்து முழு அடிமை நாடாகிவிடும். இன ஒடுக்குமுறை மேலும் கூர்மையடையும்.இத்தகைய ஒரு போக்கில் ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனம் ஒடுக்கும் சிங்களத்துடன் `அதிகாரத்தைப் பகிரும்` சீர்திருத்த வழியில் தனது சுதந்திரத்தை உறுதி செய்யமுடியாது.

ஒரு மக்கள் ஜனநாயக குடியரசால் இத்தகைய திட்டத்தை அதன் முதல் ஐந்தாண்டிலேயே  நிறைவேற்றிவிட முடியும்.ஆனால் 64 ஆண்டுகளாக இலங்கையின் ஆளும் கும்பல்கள் நாட்டை விதேசிய திட்டத்தில் வழி நடத்தி  வந்துள்ளனர். அதனால்த்தான் நாடு அடிமைப்பட்டுக் கிடக்கின்றது. இனப் பூசல் தொடர்கின்றது.இதற்குக் காரணம் தமிழர்கள் அல்ல.சிங்கள ஆளும்  கும்பல்களே ஆகும்.   ஆட்சி அதிகாரம் இவர்கள் கையில் உள்ளவரை அதுவே இனியும் தொடரப்போகின்றது. 
        
* பக்ச பாசிஸ்டுக்கள் தேசபக்தர்கள் அல்ல ஏகாதிபத்திய தாசர்களே!
        
* அவர்கள் கொண்டாடுவது சுதந்திரம் அல்ல, 64 ஆண்டுகால அரைக்காலனிய அடிமைத்தனமே!!     
* புதிய ஜனநாயக இலங்கை உருவாக பிரிந்து செல்லும் உரிமையை

உயர்த்திப் பிடிப்போம்!!!

புதிய ஈழப்புரட்சியாளர்கள்
ஜனவரி-30-2012

Sunday, 29 January 2012

யார் இந்த TNA?



யார் இந்த  –TNA (Tamil National Alliance)?

தமிழ்க் கூட்டமைப்பா, இந்திய நாட்டமைப்பா?

(முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் கூட்டமைப்பு எடுத்துள்ள நிலைப்பாடும் ஆற்றும் பாத்திரமும்.)

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF), தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (TELO), ஆகிய அமைப்புக்களின் சில தனிநபர்களைக் கொண்டும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின்(LTTE) சில ஆதரவாளர்களைக் கொண்டும் 2002 ஆம் ஆண்டு ஒஸ்லோ பேச்சுவார்த்தையை ஒட்டி இக்கூட்டமைப்பு (Tamil National Alliance –TNA)  தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டது.

இவர்களில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, 1983 ஜூலைக் கலவரத்தை ஒட்டி இந்தியாவில் அடைக்கலம் புகுந்த நாள் முதல், ஆயுதப் போராட்டத்தை சமரச வழியில் சீரழிக்க இந்திய ஆளும் கும்பலுடன் சேர்ந்து திட்டம் தீட்டி வந்தது. (படிக்க ஈழத்தில் வர்க்கப் போராட்டம்).  ஈழப்போராளிக் குழுக்களில் இருந்து இந்திய கைக்கூலி அமைப்பு ஒன்றை உருவாக்க இந்திய உளவுப்படை (RAW) றோ முதலில் அணுகிய அமைப்பு தமிழீழ விடுதலை இயக்கம் ஆகும். இதில் வெற்றி கண்டு ஆரத் தழுவி  அணைத்துக் கொண்ட இயக்கமாகும். 1985 திம்புப் பேச்சுவார்த்தைக்குப் பின்னால் விடுதலைப் புலிகளை அழித்தொழிக்க றோவால் ஏவப்பட்ட இயக்கமாகும். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது குட்டிமுதலாளித்துவ நிலைப்பாடு காரணமாக சோவியத் சமூக ஏகாதிபத்திய ஆதரவு  திரிபுவாதிகளும்,பாராளமன்றவாதிகளுமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடம் CPI, ஈழப்போராட்டத்துக்கு வழிகாட்டுதல் பெறவிளைந்து இந்திய விஸ்தரிப்புவாதத்தின் காலில் விழுந்தது. 1985 ஆரம்பத்திலேயே அதாவது திம்புப் பேச்சுவார்த்தைக்கு முன்னாலேயே ஈழப் பிரிவினை குறித்த நிலைப்பாட்டில் ஊசலாடத் தொடங்கிவிட்டது.  இந்த இந்திய சார்பு அணிக்கு தலைமை வகுத்தவர், இந்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் அடியாளாக EPRLF இற்குள் இருந்த திரு சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆவார்.

இந்த வரலாற்றுப் பின்னணியில் தான் இந்த மூன்று அணியினரும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு, மாகாணசபையை அங்கீகரித்து,
இந்திய ஆக்கிரமிப்புப் படையுடன் கூட்டணி அமைத்து, தமிழீழ விடுதலைப் புலிகளை வேட்டையாடி, இந்திய ஆக்கிரமிப்பை எதிர்த்த தமிழீழ
மக்களுக்கு எதிராக கொலைவெறித் தாண்டவத்தைக் கட்டவிழ்த்தனர்.
அமிர்தலிங்கம் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு இந்தியப்படை இருப்பது அவசியம் என்றும், இந்தியப் படையின் கையில் இருக்கும் துப்பாக்கிகள்
சட்டபூர்வத் துப்பாக்கிகள் என்றும் கூறினார். சுரேஸ் பிரேமச்சந்திரன் யாழ்-அசோக்கா ஹொட்டேலில் ஈழ வதை முகாம் நடத்தி நல்லாட்சி புரிந்து
வந்தார்.

எனினும் இந்திய ஆக்கிரமிப்பை எதிர்த்த விடுதலைப் புலிகளின் நீதியான, வீரம் செறிந்த, வரலாறு படைத்த தமிழீழ விடுதலை யுத்தம் வெற்றிவாகை
சூடி இந்திய ஆக்கிரமிப்புப் படை தோற்கடிக்கப்பட்டது. இவ்வாறு இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் ஈழமண்ணில் இருந்து விரட்டியடிக்கப்பட்டது. இந்திய
ஆக்கிரமிப்பாளர்களுடன் கூட்டமைத்துக் கொண்ட தமிழினத் துரோகிகள் மக்களிடம் இருந்து தனிமைப்பட்டு கொழும்பிலும் இந்தியாவிலும் உதிரிகளாக
தஞ்சம் புகுந்தனர். தேடுவாரற்று தெருவில் கிடந்தனர்.மாகாண முதலமைச்சர் வரதராசப் பெருமாள் பதவி துறந்து தமிழீழப் பிரகடனம் செய்து விட்டு
ஒரிசாவில் அஞ்ஞாதவாசம் புரிந்தார்!

தமிழீழ விடுதலைப் போரை தொடரும் பொறுப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் கையில் தனியாக விடப்பட்டது. இந்தப் பணியைப் பொறுப்பேற்று
இறுதிவரை விடுதலைப் போரைத் தொடர விடுதலைப் புலிகள் திடசங்கற்பம் பூண்டிருந்தனர். இவ்வாறுதான் ஈழவிடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளின் “ஏகபோகம்” -தனித்த தலைமைத்துவம்- நிலைநாட்டப்பட்டது. இவ்வாறு விடுதலைப் புலிகள் ``பாசிசப் புலிகளாகி!``, 1989 இறுதியில் இருந்து 2002 வரை சுமார் 13 ஆண்டுகள்  தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தலைமை தாங்கி வழிநடத்தி வந்தனர்.

இந்த ஆண்டுகளில் எண்ணற்ற இராணுவ சாதனைகள் புரிந்தனர். தமிழீழ மண்ணின் பல பகுதிகளில் நிலைகொண்டிருந்த சிறீலங்கா இராணுவம்
விரட்டியடிக்கப்பட்டது.எதிரியிடமிருந்து விடுவிக்கப்பட்ட தளப்பிரதேசங்கள் உருவாகின. இதனால் விடுதலை இயக்கம் பெரு வளர்ச்சி கண்டது.
இதன் விளைவாக ஆனையிறவுப் பெரும்படைத்தளம் விடுதலைப்புலிகளின் கையில் வீழ்ந்தது. ஆறையிறவின் வெற்றியைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தை நோக்கிய முன்னேற்றத்தைக் கைவிட்டு சிங்களத்துடன் அரசியல் பேச்சுவார்த்தை மூலம் தமிழ்மக்களின் பிரச்சனைக்கு தீர்வுகாண 
முயலுமாறு அமெரிக்க ஏகாதிபத்தியத்தாலும் இந்திய விரிவாதிக்க அரசாலும் விடுதலைப் புலிகள் மிரட்டப்பட்னர். அமெரிக்க இந்தியப் படைகளின்
ஒருமித்த தாக்குதலில் இருந்து தமிழீழ விடுதலை இராணுவத்தைப் பாதுகாக்க விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதென சரியாகவே முடிவு செய்தனர்.

{இது முதல், மிகவும் காலம் தாழ்த்தி தமிழ்ச் செல்வன் பேச்சுவார்த்தைக் களத்தைப் பொறுப்பேற்கும் வரையான காலம் வரை அன்ரன் பாலசிங்கத்தின்
செல்வாக்கில் புலிகளின் அரசியல், வழி நடந்தது. எரிக் சொல்ஹெய்மின் வார்த்தைகளில் சொன்னால், `` ``பிரபாகரனை நேரில் சந்தித்து கலந்துரையாடி
தமது கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும்படி எவரும் கேட்க முடியாது.அவர் அத்தகைய தலைவர் அல்ல. அந்த நிலையில் இருந்த ஒரே நபர் அன்ரன்
பாலசிங்கம் மட்டும் தான்.எனவே நாம் பாலசிங்கம் ஊடாக பிரபாகரனை வழிப்படுத்த முயன்றோம்.பாலசிங்கம் உயிரோடு இருந்தவரையில் அது
வெற்றியும் அளித்தது.)``.இந்த வெற்றிகளில் முக்கியமானது, தமிழீழத்தைக் கைவிட்டு, பிரிந்து செல்லும் உரிமையைக் கை விட்டு, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைக் கைவிட்டு, திம்புக்கோரிக்கையைக் கைவிட்டு, வருடா வருடம் மாவீரர் தின உரையின் தாரக மந்திரமாக இருந்த புலிகளின் தாகத்தையும் மறந்து, ஒரு புதிய வாக்கெடுப்பைக் கூடக்கோராமல் ஒற்றையாட்சிக்குள் `அக சுயநிர்ணய உரிமை` யின் அடிப்படையில் அதிகாரத்தைப் பங்கீடு செய்யலாம் என்று புலிகளை நம்ப வைத்த பாலசிங்கத்தின் சதி ஆகும்,}

இந்தச் சூழ்நிலையில் தமிழ் மக்களின் பிரச்சனை தொடர்பான அரசியல் பேச்சுவார்த்தையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகப் பங்கேற்பவர்கள் யார் என்ற கேள்வி எழுந்தது. விடுதலைப் புலிகள் தமது 13 ஆண்டுகால தனியான அரசியல் தலைமைத்துவத்துக்கு ஜனநாயக வடிவம் கொடுக்க முயன்றனர். இந்த முயற்சியின் விளைவே  கூட்டமைப்பாகும்.

நோர்வே பேச்சுவார்த்தையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக கலந்து கொள்ளும் விடுதலைப் புலிகள் தமிழ் மக்களால் ஜனநாயக ரீதியாக தெரிவு
செய்யப்பட்டவர்கள் எனக் காட்டவும், ஏகாதிபத்தியவாதிகளும் இந்திய விரிவாதிக்க அரசும் தமது செல்வாக்கை தமிழ் மக்களிடையே நிலைநிறுத்த
கோரிவந்த, `அரசியல் பன்முகத் தன்மை`க் கோரிக்கையோடு கோட்பாடற்ற சமரசம் செய்து கொண்ட, சந்தர்ப்பவாத நிலைப்பாட்டின் காரணமாகவும்
விடுதலைப் புலிகள் இக்கூட்டமைப்பை உருவாக்கினர்.

கூட்டமைப்புக்கு ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை எழுதிக் கொடுத்து, தேர்தலில் நிறுத்தி, `வீட்டுக்குப் போக வீட்டுக்குப் போடுங்கள்`; எனத் தேர்தல் பிரச்சாரம் செய்து, கூடவே வாக்கும் அளித்து பாராளமன்றத்துக்கு அனுப்பினார்கள். இந்தத் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள்தான் என்றும், தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்த எந்தப்
பேச்சுவார்த்தைகளும் அவர்களுடனேயே நடத்தப்படவேண்டும் எனக் கோரியிருந்தது.
(10) The LTTE has for the past two years put up with the violent, surly behavior of the armed forces without impairing the conditions for peace and observing the cease-fire and acting steadfastly and firmly towards the path of peace. Hence, the international community should create the environment by removing the restrictions put in place by certain countries on the LTTE, the authentic sole representatives of the Tamil people, so that they could, with authority, dignity and with equal status conduct talks with the government of Sri Lanka
TNA Election Manifesto 2004

இவ்வாறு, தமது ஏகப் பிரதிநிதிகள் விடுதலைப் புலிகளே என
மக்கள் ஆணை வழங்கியுள்ளனர் என்பது தர்க்கமாகியது. (அவர்களது-எதிரிகளது தடியைக் கொண்டே அவர்களுக்கு அடிக்கும் `காய் நகர்த்தல்` என
இதனைப் புலி அறிவாளர்கள் புரிந்து கொண்டனர்.)

குறிப்பு 1.

சமஸ்டிக் கட்சி தமிழ்த் தேசியப் பிரச்சனைக்கு சமஸ்டி ஆட்சி முறையைத் தீர்வாக முன்வைத்துக் கட்டப்பட்ட கட்சி, (நடைமுறைக்கு வரவில்லையென்றாலும் டட்லி-செல்வா ஒப்பந்தம், பண்டா செல்வா ஒப்பந்தம் ஆகியவை சமஸ்டிக்கு மிகவும் கீழானவை ஆகும்.ஐக்கிய தேசியக்
கட்சியோடு கூட்டரசாங்கம் அமைத்த போது சமஸ்டியை நிபந்தனையாக வைக்கவில்லை சமஸ்டிக்கட்சி.) 1977 இல் தமிழ் ஈழத்துக்கு-பிரிவினைக்கு
சர்வஜன வாக்கெடுப்பு கோரி மக்களின் ஆணையைப் பெற்ற கட்சி, 1981 இல் மாவட்ட அபிவிருத்திச் சபையை ஏற்றுக் கொண்ட கட்சி. 1987 இல்
மாகாணசபையை ஏற்றுக் கொண்ட கட்சி, 2002 இல் மீண்டும் தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற தமிழ் மக்களின் `சுயநிர்ணயத்தை` ஏற்றுக் கொண்ட
கட்சி. பூச்சி, புழுக்கள் கூட இந்த அளவுக்கு வளைந்து நெளியாது!.

குறிப்பு 2.

சம்பந்தனின் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர். அ.அமிர்தலிங்கம் விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டார். சுரேஷ் பிரேமச்சந்திரனின் EPRLF கட்சியின் தலைவர் பத்மநாபா விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார். செல்வம் அடைக்கலநாதனின் ரெலோ அமைப்பின் தலைவர் சிறி சபாரத்தினம் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார். இந்தத் தலைவர்களது தொண்டர்களான, கூட்டமைப்புத் தலைவர்கள் யாரும், ஏன் எங்கள் `தாய்க் கட்சிகளின்` தலைவர்களைக் கொன்றீர்கள் என்று பகிரங்கமாகக் கேட்கவில்லை. தலைவர்கள் மரணதண்டனைக்குரிய “குற்றங்களை
இழைத்திருந்த போது”, தொண்டர்களோடு எப்படி அரசியல் கூட்டமைக்க முடிந்தது என்று விடுதலைப் புலிகளும் மக்களுக்கு விளக்கம் அளிக்கவில்லை. விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர்களும் அறிவு ஜீவிகளும் ஆதரவாளர்களும் அனுதாபிகளும் கூட இக்கேள்வியைக் கேட்கவில்லை. மக்கள் மட்டும் இப் புனிதக் கூட்டுக் குறித்து, மனதுக்குள் முணுமுணுத்து முறுகிக் கொண்டனர்.

குறிப்பு 3.

பிரிவினைக்காக – தமிழீழத் தனியரசுக்காக போராடிய விடுதலைப் புலிகளுடன் `அரசியல் கூட்டமைத்த` கூட்டமைப்பு, பிரிவினைக் கோரிக்கையைத் தடை செய்த ஆறாவது திருத்தச் சட்டத்தை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது எப்படி, என்பதற்கும் எந்த விளக்கமும் இல்லை.

குறிப்பு 4.

இக்காலத்தில் விடுதலைப் புலிகளின் காட்டில் மும்மாரி பொழிந்தது. காளான்களும் கண்மண் தெரியாமல் முளைத்தன. விச ஜந்துக்களும்
வெள்ளத்தில் நீந்தி மகிழ்ந்தன. இவர்களுக்குப் பொதுவாக சூட்டப்பட்ட அல்லது இவர்கள் பொதுவாகச் சூடிக் கொண்ட கிரீடம் “அரசியல் ஆய்வாளர்”
என்பதாகும்.

இந்த அரசியல் ஆய்வாளர்கள் தமது பங்கிற்கு அமெரிக்காவும், ஐரோப்பியன் ஜூனியனும், இந்தியாவும் விடுதலைப் புலிகளை அங்கீகரித்து நடத்தவுள்ள
முடிசூட்டு விழாவுக்கு கூட்டமைப்பு ஒரு `போர்வாள்` என ஆய்ந்து அறிந்து கூறிவந்தனர்.

இவ்வாறாகத்தானே கூட்டமைப்புச் சேனை பாராளுமன்றத்தைப் போர்க்களமாக்க புழுதி வீசி எறிந்த வண்ணம் புறப்பட்டது. 2002 ஆம் ஆண்டு இடம் பெற்ற இவர்களின் முதலாவது தேர்தலில் உயர்பாதுகாப்பு வலையங்களையும், யுத்தத்தால் ஏற்பட்ட இடப் பெயர்வுகளையும் மனதில் கொண்டு ``வீட்டுக்குப் போக வீட்டுக்குப் போடுங்கள் என முழங்கி, புலிகளின் ஆயுத பூஜையின் வரத்தால், டக்ளசுக்கு சொந்தமான இரண்டு தொகுதிகள் தவிர, எஞ்சிய  24 இல் 22  பொரும்பான்மை பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றி மக்கள் பிரதிநிதி ஆகியது.

நோர்வே வீசிய பாசக்கயிறு முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் குரல்வளையை நெரிக்கும் வரையிலும் இவ்வாறு கூட்டமைப்பு
பாராளமன்றத்தைப் போர்க்களமாக்கிக் கொண்டு- பெரும்பாலான காலங்களில் இந்தியாவிலும் பிற மேலைநாடுகளிலும் தங்கியிருந்தது.

கடைசியாக முள்ளிவாய்க்கால் பிரளயம் நடந்து முடிந்து, போர்க்களம் பாராளமன்றமானது. யுத்தத் தளபதி பொன்சேகாக்காவுடன் கூட்டமைத்து,  கூட்டமைப்பு தமிழ் மக்களிடையே வாக்கு வேட்டையாடியது. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததற்கு ராஜ பக்‌ஷவுக்கு நன்றி செலுத்தியது. புலிகளின் தியாகத்தை மதிப்பதாகவும் அவர்களின் வழிமுறையை எதிர்ப்பதாகவும் அறிவித்தது.யுத்தக்குற்றம் பற்றிய முறையீட்டில் கலந்து கொள்ளவில்லை.  பசு தனது புலித்தோலைக் கழற்றி எறிந்தது.கேவலம் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் சிங்களம் சிறைப்பிடித்து முகாம்களில் அடைத்து வைத்த இலட்சக்கணக்கான மக்களைச் சென்று பார்வையிடக் கூட இந்தக் கூட்டமைப்பு  போராடவில்லை!

விடுதலைப் புலிகள்  தம்மைத் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று நிரூபிக்க  கையில் எடுத்த துடைப்பங்கட்டை, இப்போது தன்னைத் தானே
மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்மக்களின் ஏகப்பிரதிநிதிகள் எனப் பிரகடனம் செய்தது.அவர்களது-எதிரிகளது- தடியைக் கொண்டே அவர்களுக்கு
அடிப்பதாக நினைத்து புலிகள் நகர்த்திய காய், தடியைக் கொடுத்து மரண அடிவாங்கிய கதையாய் முடிந்தது.அரசியலில் சந்தர்ப்பவாதம் என்பது
மரணதண்டனை தவிர வேறெதுவுமல்ல.இத்தகைய சந்தர்ப்பவாதத்துக்கு மேலே குறிப்பிட்ட அரசியல் ஆய்வாளர்கள் சூட்டிய நாமம் தான் காய்
நகர்த்தல்.(இந்தச் சொல்லே ஒரு சூதாட்ட மொழி, அரசியல் மொழி கிடையாது)

உலக மறுபங்கீடு நடைபெற்ற வண்ணமிருக்கும் சர்வதேசப் போக்கின் ஒரு  பகுதியாக இலங்கையிலும் அதன் பிரதிபலிப்பு வெடிக்கின்றது.அமெரிக்க இந்திய அணியும், ரசிய சீன அணியும் இப்போட்டியில் குதித்துள்ளன.ரசிய சீன அணி சிங்களத்தை முற்றிலுமாகச் சார்ந்து, தமிழ்மக்களுக்கு எதிரான நிலை எடுத்துள்ளது.
அமெரிக்க இந்திய அணி சிங்களத்தின், ரசிய சீன அணி நோக்கிய சாய்வைத் தடுக்க ஈழத்தமிழர்களை ஒரு துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தும் கொள்கையைக் கடைப்பிடிக்கின்றது.
 இவ்வாறு தமிழ் மக்களை வைத்து தமது நலன்களை அடைய முயலும் இந்தியாவும் அமெரிக்காவும் இந்தத் துடைப்பங்கட்டையை தமிழ் மக்களின் அரசியல் கட்சியாக அங்கீகரித்து (தமது நாடுகளுக்கு வரவழைத்துப் `பேச்சுவார்த்தை`கள் நடாத்தி) முடி சூட்டி விட்டனர். ஆகக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்களின் ஏக அரசியல் பிரதிநிதிகள் என்ற அங்கீகாரம் கிடைத்து விட்டது!.
இந்திய அரசியல் ஆலோசகரான விரிவாதிக்கவாதி B.ராமன், ஈழப்பிரச்சனைக்கு தீர்வுகாண்பதற்கு முதற்படி `அரபாத் இல்லாத பாலஸ்தீனம்` என்ற கொள்கையை வகுத்தளித்தார்.இதுவே இந்திய அரசின் அதிகாரபூர்வ கொள்கையுமாகியது.ஆக அரபாத் இல்லாத பாலஸ்தீனத்தில் கூட்டமைப்பை தனது அரசியல் பிரதிநிதியாக நிறுவியிருக்கின்றது இந்திய விரிவாதிக்க அரசு.இவ்வாறு கூட்டமைப்பு இந்திய நாட்டமைப்பாக உருவெடுத்துள்ளது.

(இலங்கையில் நோர்வேயின் சமாதான முயற்சி பற்றிய ஆய்வறிக்கை தொடர்பான விமர்சன அரங்கில் கலந்துகொண்ட எரிக் சொல்ஹெய்ம் `` தமிழ்
மக்கள் இனிமேல் ஆயுதம் ஏந்திப்போராடக் கூடாது, கூட்டமைப்பு தமிழ்மக்களின் முக்கிய அரசியல் பிரதிநிதி. அவர்கள் மூலம் நோர்வே தனது
பங்களிப்பைத் தொடரும்`` எனக் கூறியிருந்தார்.இந்துப்பத்திரிகை கூட்டமைப்பு தனது கடமையில் இருந்து தவறக் கூடாது என ஆலோசனை வழங்கியுள்ளது.உருத்திரகுமாரன் `தாயகத்தில் கூட்டமைப்பும், புலம்பெயர் நாடுகளில் நாடுகடந்த அரசாங்கமும்` ``தமிழீழ விடுதலைப் பணியை``த்
தொடர்வோம் என அறிவிக்கின்றார். தமிழ் கத்தோலிக்க பெரிய பாதிரியார் அரசாங்கம் கூட்டமைப்புடன் பேசி பிரச்சனைக்குத் தீர்வு காண
முயலவேண்டும் எனக் கோருகின்றார்.சமாதானத்துக்கு அயராது உழைக்கும் அந்நிய NGO க்களின் சிங்கள முகாமையாளர்கள் கூட்டமைப்பின்
நம்பிக்கையைப் பெற LLRC பரிந்துரைகளை அரசாங்கம் அமூலாக்க வேண்டுமென வேண்டிக் கொள்கிறார்கள்.)

புதிய அணிசேர்க்கைக்கான தயாரிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளைச் செலவிட்ட கூட்டமைப்பு இறுதியாக ஒரு தெளிவான விதேசியத் திட்டத்துடன்
ஈழத்தமிழ் அரசியலில் மீண்டும் குதிக்கின்றது.இனிமேலும் கூட்டமைப்பு செத்தபாம்போ செல்லாக் காசோ அல்ல.

மக்களைப் பொறுத்தவரையில் கூட்டமைப்பு செத்த பாம்பாகவும், செல்லாக்காசாகவும் இருப்பதனால் இது எந்தக்காலத்திலும் பரந்துபட்ட மக்களின் பெருந்திரளான ஆதரவைப் பெறப்போவதில்லை. இதன் காரணத்தால் இது அமைப்பு ரீதியிலும் பலம் பெறப்போவதில்லை. இந்த இரண்டு காரணங்களாலும் சிங்களத்துடன் பேரம் பேசுவதற்கு கூட்டமைப்புக்கு எந்தப்பலமும் கிடையாது. மேலும் பொருளாதார மையப்படுதலின் விளைவான பாசிசத்தின் வளர்ச்சி காரணமாக, உலகு தழுவிய ஒரு பொதுப்போக்கைச் சார்ந்து இலங்கையிலும் பிரதான ஆளும்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையில் ஒற்றுமை மேலும் மேலும் நெருங்கி
வருகின்றது.கொள்கைகள் ஏறத்தாழ ஒன்றே என்று ஆகிவிட்டன. இதனால் இங்கேயும் சந்தர்ப்பவாதக் கூட்டுக்கான வாய்ப்புக்கள் இல்லாது
போய்விட்டன.

இந்த நிலையில் சர்வதேச சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றங்களையும், பக்ச பாசிஸ்டுக்களின் ரசிய சீன சாய்வைக் கணக்கில் கொண்டும், அமெரிக்க
ஏகாதிபத்தியத்துக்கும், இந்திய விரிவாதிக்க அரசின் நலன்களுக்கும் சேவகம் செய்யும் தரகுப் பாத்திரத்தை ஆற்ற கூட்டமைப்பு விளைகின்றது.இவர்களின் நலன்களுக்கு சிங்களத்தைப் பணியவைப்பதற்கு ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனையை ஒரு துருப்புச் சீட்டாகப் பாவிக்க முயலுகின்றது. இதனால் உண்மையில் இந்த அதிகார பேரம் ஈழத்தமிழ் மக்களின் நலன் சம்பந்தப்பட்டது அல்ல.அமெரிக்க ஏகாதிபத்திய, இந்திய விரிவாதிக்க அரசுகளின்
நலன் சம்பத்தப்பட்டதாகும்.இவ்வகையில் கூட்டமைப்பு உலக மறுபங்கீட்டு போட்டியில் ரசிய சீன அணிக்கெதிராக, அமெரிக்க இந்திய- ஏகாதிபத்திய
அணிக்கு சேவகம் செய்ய முயல்கிறது.

இது ஒரு அபாயகரமான சமரச, சதிகாரப் பாதை.இது தமிழினத்தைக் காட்டிக் கொடுப்பது மட்டுமல்ல.ஒட்டு மொத்த நாட்டையுமே அந்நியருக்கு
காட்டிக்கொடுப்பதாகும். கூட்டமைப்பின் இத் தேச விரோத விதேசிய நடத்தை தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு பழியும், இழிவும் தேடி பலவீனப்
படுத்துவதாகும்.சிங்கள மக்களை மேலும் தமிமீழ விடுதலைப் போராட்டத்தில்ம இருந்து அந்நியப்படுத்துவதும் சிங்களத்தைப் பலப்படுத்துவதுமாகும்.உலக மறுபங்கீட்டுப் போட்டியில் இலங்கையை  ஆழத்தள்ளி அதன் பழியை ஈழத் தமிழரைச் சுமக்க வைப்பதாகும். 

இதற்கான கோரிக்கையே அரசியல் அமைப்பின் 13வது சட்டத் திருத்தத்துக்கு அமைய அமைக்கப்பட்ட மாகாணசபை(கள்) ஆகும்.

இம்மாகாண சபைக்கு உள்ள அதிகாரங்கள் குறித்து இந்தியாவின் பின்பலத்தில் அதிகார பேரம் நடத்தி அந்நிய சேவகம் செய்து பிழைக்க முயல்கின்றது
கூட்டமைப்பு.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் அமெரிக்காவுக்கும், இந்திய விரிவாதிக்க அரசுக்கும் அழைப்பு விடுவது அப்பட்டமான துரோகம் ஆகும்.மேலும் தமிழ்
மக்களின் போராட்டத்தை 25 ஆண்டுகள் பின்னோக்கித்தள்ளி அதிகாரப்பரவலாக்க சீர்திருத்த வழியில் சீரழிப்பதாகும்.

கடந்த 25 ஆண்டுகால சிங்களப் பேரினவாதத்தின் வளர்ச்சியும், மாறியுள்ள சர்வதேச-பிராந்திய சூழ்நிலைமைகளும், புலிகளின் வீழ்ச்சியும் அதிகார பேரத்தை ஆழக்குழிதோண்டிப் புதைத்துவிட்டன.

போலிச்சுதந்திரத்துக்குப் பிந்திய இந்த 64 ஆண்டுகால அரசியல் வரலாறு சொல்லுவதெல்லாம், சிங்களம் தனது அரசியல் அதிகாரத்தில்
எந்தப்பங்கையும் ஈழதேசத்துக்கு வழங்கத் தயாராகவில்லை என்பதுதான். இந்த ஈர்ப்பு மையத்தைச் சுற்றித்தான் இந்த 64 ஆண்டுகால வரலாறும் நகர்ந்திருக்கின்றது.

ஒற்றையாட்சி என்பது சிங்களத்தின் அரசியல் அதிகாரத்தின் ஏகபோகம் தவிர வேறொன்றும் இல்லை.

இந்நிலையில் ஒற்றையாட்சிக்குள், ஒன்றுபட்ட இலங்கைக்குள் `அரசியல் தீர்வு காண்பது` என்பது, கட்டாய இணைப்புக்குள் தமிழ்மக்களைத் தொடர்ந்தும்
வாழ நிர்ப்பந்திப்பது என்பது தமிழீழ தேசத்தின் இருப்பை படிப்படியாக இல்லாதொழிப்பதற்கான சதியே தவிர வேறெதுவுமல்ல.இது தேசிய இன
அழிப்பும், தேசியப் படுகொலையும் ஆகும்.

இதனால் பிரிந்து செல்லும் உரிமையை உயர்த்திப்பிடிப்பது இன்றியமையாத ஜனநாயகக் கடமையாகும்.இது ஒன்றே இன ஒடுக்குமுறையின் மீது கட்டப்பட்ட சிங்களத்தைத் தகர்க்கும்.இதுவே தமிழ்த் தேசிய இன ஒடுக்குமுறைக்கு முடிவுகட்டும், இதன் மூலம் மட்டுமே இன மதச் சிறுபான்மை மக்களும், சிங்களப் பெருந்தேசிய இனமும் விடுதலை பெற முடியும்.

கூட்டமைப்பு, உலகத் தமிழர் பேரவை, நாடுகடந்த அரசாங்கம் இவையாவும் கூட வசதிக்கேற்ப `சுய நிர்ணய உரிமையை` ஒரு சொல் என்ற அளவில்
பயன்படுத்துகின்றன. ஆனால் உள்ளடக்கத்தில் பிரிந்து செல்லும் உரிமை என்ற பொருளில் அல்ல மாறாக, ’சேர்ந்துவாழ  அதிகாரப் பகிர்வு’ என்ற
பொருளிலேயே  ஆகும்.

ஆக வரலாறு மீண்டும் எழுதப்படுகின்றது.கூட்டமைப்பு இலங்கை அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்துக்கு அமைய உருவாக்கப்பட்ட மாகாணசபைத்
திட்டத்தை தமிழ்த்தேசிய இனப்பிரச்சனைக்குத் தீர்வாகக் கையில் எடுத்துள்ளது.காணி அதிகாரம் பொலிஸ் அதிகாரம் குறித்து சிங்களத்துடன் அதிகார பேரம் நடத்தும் பொருட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ``அமெரிக்கவே நீதி வழங்கு! இந்தியாவே தீர்வு வழங்கு!!` எனச் சமரசவாதிகள் நடத்திய போராட்டங்களின் விளைவாக,
ஒபாமா ராஜபக்சவை யுத்தக் குற்றக் கூண்டிலிருந்து விடுவித்து விட்டார், இந்தியா மாகாணசபைத் தீர்வு வழங்கியுள்ளது, ஐ.நா.யுத்தக் குற்றவாளியான சிங்கள இராணுவ அதிகாரியை தனது அமைதிகாப்பு நடவடிக்கைகளுக்கு ஆலோசகராக நியமித்துள்ளது! இவை தான் சமரசவாதிகள் அமெரிக்காவிடம் இருந்தும், இந்தியாவிடமிருந்தும், ஐ.நா. விடமிருந்தும் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்த நீதி! ( இன்னும் நம்பிக்கை இழக்காத மயிலைக் காளைகள் மட்டும் நீதி கேட்டு நடந்தவண்ணமே இருகின்றார்கள்!)

1987 ஐ விட 2012 மாகாண சபை மேலானது என்று காட்ட இந்த நாடகத்தில் இணைத்துக்கொண்ட மேலதிக அங்கமே இந்த 13+ ஆகும்! (Extra Large!)

இன்று அமைப்பு ரீதியாக இம்முழக்கத்தை முன் வைப்பது கூட்டமைப்பாக இருந்தாலும், இச்சமரச தேசத்துரோக வழியில் நிற்பவர்கள் இவர்கள்
மட்டுமல்ல.ஈழத்திலும்,புலம் பெயர் நாடுகளிலும்,தமிழ் நாட்டிலும் உள்ள சில சமூக சக்திகள்- வர்க்கங்கள் இவ்வழியின் வளர்ச்சிக்கு ஆதாரமான
சமூகத் தூண்களாய் உள்ளன. புற முதுகில் பதுங்கி இருந்து விடுதலைப் புலிகளுக்கு கொள்ளி வைத்ததில் இக்கும்பலுக்கு பெரும் பங்குண்டு.
கூட்டமைப்பு TNA, உலகத் தமிழர் பேரவை Global Tamil Forum, பிரித்தானிய தமிழர் பேரவை British Tamil Forum, நாடு கடந்த அரசாங்கம் Trans National Government of Tamil Eelam), அந்நிய தமிழ் NGO கோடரிக்காம்புகள்,  நெடுமாறன்- வை.கோ கும்பல், கத்தோலிக்க பாதிரிகள், இந்துப் பெருங் கோவில்களின் சொந்தக்காரச் செல்வந்தர்கள் ஆகிய வகையறாக்கள், ஒரு கொடியின் கீழ், ஒரே அமைப்பின் கீழ் திரளாவிட்டாலும், அவரவர் தளங்களில், அடிப்படையில் ஒரே நலனுக்காகவே செயற்படுகின்றனர். அது தரகு முதலாளித்துவ நலனும், தேசத் துரோக, தமிழின விரோத, சந்தர்ப்பவாத சமரசவாத வழியும் ஆகும்.

கூட்டமைப்பும் தன்னை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய முயல்கின்றது. ஏதோ EPRLFஉம், TELOவும் சமஸ்டிக் கட்சிக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல, சமஸ்டிக்கட்சி தன்னை தாய்க் கட்சி என்று உரிமை கோருகின்றது. பிள்ளைக் கட்சிகளோடு கொடி,சின்னம்,பெயர் பற்றி விவாதித்து வருகின்றது.மாநாடு கூட்டத் திட்டமிடுகின்றது.அமைப்பை மேலும் விரிவாக்கிப் பலப்படுத்த சம்பந்தன் பிள்ளையான் பேச்சுவார்த்தை
நடைபெறவுள்ளது.இவையனைத்தும் ஈழத்தமிழரின் பெயரால் அமெரிக்க இந்திய ஆதரவு அரசியல் சக்தியொன்று உருவாக்கப்பட்டு வருவதையே
காட்டுகின்றது.இதை நுகர்ந்து பிடித்துவிட்ட புலம்பெயர் மேட்டுக்குடி பொன்னாடை போர்த்தத் தொடங்கிவிட்டது!

இதே நேரத்தில் சட்டபூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சியை நீக்க முயற்சிகள் நடப்பது தற்செயலானது அல்ல. ஆயுதங்களை மெளனித்துவிட்ட விடுதலைப் புலிகள் அரசியல் ரீதியாக ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்காகச் செயற்படுவதை யாரும் தடுக்க
முடியாது.தடுக்கக் கூடாது.இதை ஜனநாயகவாதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும்.

போலிச் சுதந்திரத்துக்குப் பிந்திய முதல் முப்பது ஆண்டுகால பாராளுமன்ற பாதையிலும், அடுத்த முப்பது ஆண்டுகால ஆயுதப் போராட்டப் பாதையிலும் ஈழத்தமிழ் மக்கள் தமது எதிரிகளை நன்கு அறிந்துள்ளனர்.சிங்களத்தைப் பற்றி மக்களுக்குத் தெரியும்.அமெரிக்கா, மற்றும் இதர ஏகாதிபத்தியவாதிகளைப் பற்றியும் மக்களுக்குத் தெரியும்.இலங்கையில் கால்பதித்துவரும், ஏகாதிபத்திய நோக்கில் வளர்ந்து வரும் சீன, ரசிய வல்லரசுகளையும் மக்கள் அறிவர்.இந்திய விரிவாதிக்க அரசையும் அதன் கபட வேடத்தையும் மக்கள் நன்கறிவர்.

மக்களுக்கு இன்று உடனடியாகத் தேவைப்படுவதெல்லாம் இந்த எதிரிகளை எதிர்த்துப் போரிடுவதற்கான சரியான, புரட்சிகரமான தத்துவார்த்த, அரசியல் ஸ்தாபன வழிகாட்டுதல் மட்டும் தான்.

இந்தப் பொறி மக்களைப் பற்றிக்கொண்டால் மீண்டும் ஒரு பெருங்காட்டுத் தீயாய் மூளும்!

இதைத் தடுப்பதுதான் அனைத்து சமரசவாதிகளின் நோக்கம்.இவர்கள் எங்கிருந்தாலும் இந்த ஒரே குறிக்கோளுக்காகவே பாடுபடுகின்றனர்.இதனால்
இச்சமரசவாதிகளைத் தனிமைப்படுத்தாமல் புரட்சிகர வெகுஜன மக்கள் திரளை விடுதலைப் புரட்சியின் பக்கம் வென்றெடுக்க முடியாது. அதிகாரப்
பகிர்வு வழியை ஒரு அரசியல் போக்கு என்ற வகையில் முறியடிக்காமல், பிரிவினைக் கோரிக்கையின் மீது மீண்டும் ஒரு முற்போக்கு தேச விடுதலை
இயக்கத்தைக் கட்டியமைக்க முடியாது. இதை அரசியல் ரீதியில் சாதிக்காமல் ஏகாதிபத்தியவாதிகளோடும், இந்திய விரிவாதிக்க அரசோடும்,
சிங்களத்தோடும் தீர்மானகரமான முறிவை ஏற்படுத்த முடியாது.இத்தகைய ஒரு முறிவு ஏற்படாமல் ஈழவிடுதலைப் புரட்சி பரந்துபட்ட மக்களைத்
தழுவுவது என்பது சாத்தியமில்லை.எனவே கூட்டமைப்பின் அணியில் இணையும் அனைத்து சமரசவாத தமிழினத் துரோகிகளின்,ஈழத்தமிழ் மக்கள் மீதான செல்வாக்கைத் தடுத்து நிறுத்தி, புரட்சிகர ஈழ மக்களை, எதிரிகளுக்கெதிராக விடுதலைப் புரட்சியில் ஊன்றி நிறுத்த பின்வரும் முழக்கங்களின் கீழ் அணிதிரளுமாறு அறை கூவல் விடுக்கின்றோம்.

         * அன்ரன் பாலசிங்கத்தின் ‘அகசுய நிர்ணய உரிமை’ அதிகாரப் பகிர்வே!


         * அதிகாரப்பகிர்வு என்பது அரசியல் விடுதலை அல்ல அடிமைத்தனமே!


         * நமது விடுதலைக் கோரிக்கை பிரிந்து செல்லும் உரிமையே!


         * மாகாணசபை, இடைக்கால அதிகார சபை அனைத்தும் அடிமைத் தீர்வே!


         * ஜனநாயகத் தீர்வுக்கு வழி, தமிழ்பேசும் மக்களிடையேயான சர்வஜன
            வாக்கெடுப்பே!


         * ஆறாவது திருத்தச்சட்டத்தை நீக்கவும்,இந்திய இலங்கை ஒப்பந்தத்தைக்
            கிழித்தெறியவும் போராடுவோம்!


         * அமெரிக்க ஏகாதிபத்திய, இந்திய விரிவாதிக்க அரசுகளின் அடியாளான
            கூட்டமைப்பைத் தனிமைப்படுத்துவோம்!


         * தமிழ்பேசும் மக்கள் வேண்டும் அரசியல் தீர்வு, என்ன என்பதை அறிய
           கூட்டமைப்பு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றைக் கோரினால் ஒழிய,
           இதர அனைத்துத் தேர்தல்களையும் புறக்கணிப்போம்!


         * பிரிந்து செல்லும் உரிமையை உயர்த்திப்பிடித்து முற்போக்கு
            தேசவிடுதலை அமைப்பைக் கட்டியமைப்போம்!


         * மலையக இஸ்லாமியத் தமிழர்களை விடுதலைப் புரட்சியில் ஐக்கியப்
            படுத்துவோம்!


         * மலையக, இஸ்லாமியத் தமிழர்கள், மற்றும் சிங்கள மக்கள் மீதான
           சிங்களத்தின் ஒடுக்குமுறையை எதிர்த்து குரல் கொடுப்போம்,
           அவர்களின் பிரதேச சுயாட்சி உரிமைகளுக்காகப் போராடுவோம்!


         * சிங்கள ஜனநாயக சக்திகளை ஈழத் தமிழர்களின் பிரிந்து செல்லும்
            உரிமையை அங்கீகரிக்கக் கோருவோம்!


         * உலகத் தொழிலாளர்களுடனும் ஒடுக்கப்பட்ட தேசங்களுடனும்
            ஒன்றுசேருவோம்!

                                                 புதிய ஈழப் புரட்சியாளர்கள்


                                                                        ஜனவரி-2012

Saturday, 28 January 2012

TNA: தமிழ்க் கூட்டமைப்பா, இந்திய நாட்டமைப்பா?

யார் இந்த  –TNA (Tamil National Alliance)
தமிழ்க் கூட்டமைப்பா,  இந்திய நாட்டமைப்பா?

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF), தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (TELO), ஆகிய அமைப்புக்களின் சில தனிநபர்களைக் கொண்டும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின்(LTTE) சில ஆதரவாளர்களைக் கொண்டும் 2002 ஆம் ஆண்டு ஒஸ்லோ பேச்சுவார்த்தையை ஒட்டி இக்கூட்டமைப்பு (Tamil National Alliance –TNA)  தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டது.

இவர்களில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, 1983 ஜூலைக் கலவரத்தை ஒட்டி இந்தியாவில் அடைக்கலம் புகுந்தது முதல், ஆயுதப்
போராட்டத்தை சமரச வழியில் சீரழிக்க இந்திய ஆளும் கும்பலுடன் சேர்ந்து திட்டம் தீட்டி வந்தது. (படிக்க ஈழத்தில் வர்க்கப் போராட்டம்).  ஈழப்போராளிக் குழுக்களில் இருந்து இந்திய கைக்கூலி அமைப்பு ஒன்றை உருவாக்க இந்திய உளவுப்படை (RAW) றோ முதலில் அணுகிய அமைப்பு தமிழீழ விடுதலை இயக்கம் ஆகும். இதில் வெற்றி கண்டு ஆரத் தழுவி  அணைத்துக் கொண்ட இயக்கமாகும். 1985 திம்புப் பேச்சுவார்த்தைக்குப்
பின்னால் விடுதலைப் புலிகளை அழித்தொழிக்க றோவால் ஏவப்பட்ட இயக்கமாகும். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது
குட்டிமுதலாளித்துவ நிலைப்பாடு காரணமாக சோவியத் சமூக ஏகாதிபத்திய ஆதரவு  திரிபுவாதிகளும்,பாராளமன்றவாதிகளுமான இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியிடம் CPI, ஈழப்போராட்டத்துக்கு வழிகாட்டுதல் பெறவிளைந்து இந்திய விஸ்தரிப்புவாதத்தின் காலில் விழுந்தது. 1985 ஆரம்பத்திலேயே
அதாவது திம்புப் பேச்சுவார்த்தைக்கு முன்னாலேயே ஈழப் பிரிவினை குறித்த நிலைப்பாட்டில் ஊசலாடத் தொடங்கிவிட்டது.  இந்த இந்திய சார்பு
அணிக்கு தலைமை வகுத்தவர், இந்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் அடியாளாக EPRLF இற்குள் இருந்த திரு சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆவார்.

இந்த வரலாற்றுப் பின்னணியில் தான் இந்த மூன்று அணியினரும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு, மாகாணசபையை அங்கீகரித்து,
இந்திய ஆக்கிரமிப்புப் படையுடன் கூட்டணி அமைத்து, தமிழீழ விடுதலைப் புலிகளை வேட்டையாடி, இந்திய ஆக்கிரமிப்பை எதிர்த்த தமிழீழ
மக்களுக்கு எதிராக கொலைவெறித் தாண்டவத்தைக் கட்டவிழ்த்தனர்.
அமிர்தலிங்கம் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு இந்தியப்படை இருப்பது அவசியம் என்றும், இந்தியப் படையின் கையில் இருக்கும் துப்பாக்கிகள்
சட்டபூர்வத் துப்பாக்கிகள் என்றும் கூறினார். சுரேஸ் பிரேமச்சந்திரன் யாழ்-அசோக்கா ஹொட்டேலில் ஈழ வதை முகாம் நடத்தி நல்லாட்சி புரிந்து
வந்தார்.

எனினும் இந்திய ஆக்கிரமிப்பை எதிர்த்த விடுதலைப் புலிகளின் நீதியான, வீரம் செறிந்த, வரலாறு படைத்த தமிழீழ விடுதலை யுத்தம் வெற்றிவாகை
சூடி இந்திய ஆக்கிரமிப்புப் படை தோற்கடிக்கப்பட்டது. இவ்வாறு இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் ஈழமண்ணில் இருந்து விரட்டியடிக்கப்பட்டது. இந்திய
ஆக்கிரமிப்பாளர்களுடன் கூட்டமைத்துக் கொண்ட தமிழினத் துரோகிகள் மக்களிடம் இருந்து தனிமைப்பட்டு கொழும்பிலும் இந்தியாவிலும் உதிரிகளாக
தஞ்சம் புகுந்தனர். தேடுவாரற்று தெருவில் கிடந்தனர்.மாகாண முதலமைச்சர் வரதராசப் பெருமாள் பதவி துறந்து தமிழீழப் பிரகடனம் செய்து விட்டு
ஒரிசாவில் அஞ்ஞாதவாசம் புரிந்தார்!

தமிழீழ விடுதலைப் போரை தொடரும் பொறுப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் கையில் தனியாக விடப்பட்டது. இந்தப் பணியைப் பொறுப்பேற்று
இறுதிவரை விடுதலைப் போரைத் தொடர விடுதலைப் புலிகள் திடசங்கற்பம் பூண்டிருந்தனர். இவ்வாறுதான் ஈழவிடுதலைப் போராட்டத்தில்
விடுதலைப் புலிகளின் “ஏகபோகம்” -தனித்த தலைமைத்துவம்- நிலைநாட்டப்பட்டது. இவ்வாறு விடுதலைப் புலிகள் ``பாசிசப் புலிகளாகி!``, 1989
இறுதியில் இருந்து 2002 வரை சுமார் 13 ஆண்டுகள்  தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தலைமை தாங்கி வழிநடத்தி வந்தனர்.

இந்த ஆண்டுகளில் எண்ணற்ற இராணுவ சாதனைகள் புரிந்தனர். தமிழீழ மண்ணின் பல பகுதிகளில் நிலைகொண்டிருந்த சிறீலங்கா இராணுவம்
விரட்டியடிக்கப்பட்டது.எதிரியிடமிருந்து விடுவிக்கப்பட்ட தளப்பிரதேசங்கள் உருவாகின. இதனால் விடுதலை இயக்கம் பெரு வளர்ச்சி கண்டது.
இதன் விளைவாக ஆனையிறவுப் பெரும்படைத்தளம் விடுதலைப்புலிகளின் கையில் வீழ்ந்தது. ஆறையிறவின் வெற்றியைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தை நோக்கிய முன்னேற்றத்தைக் கைவிட்டு சிங்களத்துடன் அரசியல் பேச்சுவார்த்தை மூலம் தமிழ்மக்களின் பிரச்சனைக்கு தீர்வுகாண 
முயலுமாறு அமெரிக்க ஏகாதிபத்தியத்தாலும் இந்திய விரிவாதிக்க அரசாலும் விடுதலைப் புலிகள் மிரட்டப்பட்னர். அமெரிக்க இந்தியப் படைகளின்
ஒருமித்த தாக்குதலில் இருந்து தமிழீழ விடுதலை இராணுவத்தைப் பாதுகாக்க விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதென சரியாகவே
முடிவு செய்தனர்.

{இது முதல், மிகவும் காலம் தாழ்த்தி தமிழ்ச் செல்வன் பேச்சுவார்த்தைக் களத்தைப் பொறுப்பேற்கும் வரையான காலம் வரை அன்ரன் பாலசிங்கத்தின்
செல்வாக்கில் புலிகளின் அரசியல், வழி நடந்தது. எரிக் சொல்ஹெய்மின் வார்த்தைகளில் சொன்னால், `` ``பிரபாகரனை நேரில் சந்தித்து கலந்துரையாடி
தமது கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும்படி எவரும் கேட்க முடியாது.அவர் அத்தகைய தலைவர் அல்ல. அந்த நிலையில் இருந்த ஒரே நபர் அன்ரன்
பாலசிங்கம் மட்டும் தான்.எனவே நாம் பாலசிங்கம் ஊடாக பிரபாகரனை வழிப்படுத்த முயன்றோம்.பாலசிங்கம் உயிரோடு இருந்தவரையில் அது
வெற்றியும் அளித்தது.)``.}

இந்தச் சூழ்நிலையில் தமிழ் மக்களின் பிரச்சனை தொடர்பான அரசியல் பேச்சுவார்த்தையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகப் பங்கேற்பவர்கள் யார் என்ற கேள்வி எழுந்தது. விடுதலைப் புலிகள் தமது 13 ஆண்டுகால தனியான அரசியல் தலைமைத்துவத்துக்கு ஜனநாயக வடிவம் கொடுக்க முயன்றனர். இந்த முயற்சியின் விளைவே  கூட்டமைப்பாகும்.

நோர்வே பேச்சுவார்த்தையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக கலந்து கொள்ளும் விடுதலைப் புலிகள், தமிழ் மக்களால் ஜனநாயக ரீதியாக தெரிவு
செய்யப்பட்டவர்கள் எனக் காட்டவும், ஏகாதிபத்தியவாதிகளும் இந்திய விரிவாதிக்க அரசும் தமது செல்வாக்கை தமிழ் மக்களிடையே நிலைநிறுத்த
கோரிவந்த, `அரசியல் பன்முகத் தன்மை`க் கோரிக்கையோடு கோட்பாடற்ற சமரசம் செய்து கொண்ட, சந்தர்ப்பவாத நிலைப்பாட்டின் காரணமாகவும்
விடுதலைப் புலிகள் இக்கூட்டமைப்பை உருவாக்கினர்.

கூட்டமைப்புக்கு ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை எழுதிக் கொடுத்து, தேர்தலில் நிறுத்தி, `வீட்டுக்குப் போக வீட்டுக்குப் போடுங்கள்`; எனத் தேர்தல் பிரச்சாரம் செய்து, கூடவே வாக்கும் அளித்து பாராளமன்றத்துக்கு அனுப்பினார்கள். இந்தத் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள்தான் என்றும், தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்த எந்தப்
பேச்சுவார்த்தைகளும் அவர்களுடனேயே நடத்தப்படவேண்டும் எனக் கோரியிருந்தது. இவ்வாறு, தமது ஏகப் பிரதிநிதிகள் விடுதலைப் புலிகளே என
மக்கள் ஆணை வழங்கியுள்ளனர் என்பது தர்க்கமாகியது. (அவர்களது-எதிரிகளது தடியைக் கொண்டே அவர்களுக்கு அடிக்கும் `காய் நகர்த்தல்` என
இதனைப் புலி அறிவாளர்கள் புரிந்து கொண்டனர்.)

குறிப்பு 1.
சமஸ்டிக் கட்சி தமிழ்த் தேசியப் பிரச்சனைக்கு சமஸ்டி ஆட்சி முறையைத் தீர்வாக முன்வைத்துக் கட்டப்பட்ட கட்சி. (நடைமுறைக்கு
வரவில்லையென்றாலும் டட்லி-செல்வா ஒப்பந்தம், பண்டா செல்வா ஒப்பந்தம் ஆகியவை சமஸ்டிக்கு மிகவும் கீழானவை ஆகும்.ஐக்கிய தேசியக்
கட்சியோடு கூட்டரசாங்கம் அமைத்த போது சம்ஸ்டியை நிபந்தனையாக வைக்கவில்லை சமஸ்டிக்கட்சி.) 1977 இல் தமிழ் ஈழத்துக்கு-பிரிவினைக்கு
சர்வஜன வாக்கெடுப்பு கோரி மக்களின் ஆணையைப் பெற்ற கட்சி. 1981 இல் மாவட்ட அபிவிருத்திச் சபையை ஏற்றுக் கொண்ட கட்சி. 1987 இல்
மாகாணசபையை ஏற்றுக் கொண்ட கட்சி. 2002 இல் மீண்டும் தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற தமிழ் மக்களின் `சுயநிர்ணயத்தை` ஏற்றுக் கொண்ட
கட்சி. பூச்சி, புழுக்கள் கூட இந்த அளவுக்கு வளைந்து நெளியாது!.

குறிப்பு 2.
சம்பந்தனின் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர். அ.அமிர்தலிங்கம் விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டார். சுரேஷ் பிரேமச்சந்திரனின் EPRLF கட்சியின் தலைவர் பத்மநாபா விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார். செல்வம் அடைக்கலநாதனின் ரெலோ அமைப்பின் தலைவர் சிறி சபாரத்தினம் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார். இந்தத் தலைவர்களது தொண்டர்களான, கூட்டமைப்புத் தலைவர்கள் யாரும், ஏன் எங்கள் `தாய்க்கட்சிகளின்` தலைவர்களைக் கொன்றீர்கள் என்று பகிரங்கமாகக் கேட்கவில்லை. தலைவர்கள் மரணதண்டனைக்குரிய “குற்றங்களை
இழைத்திருந்த போது”, தொண்டர்களோடு எப்படி அரசியல் கூட்டமைக்க முடிந்தது என்று விடுதலைப் புலிகளும் மக்களுக்கு விளக்கம் அளிக்கவில்லை. விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர்களும் அறிவு ஜீவிகளும் ஆதரவாளர்களும் அனுதாபிகளும் கூட இக்கேள்வியைக் கேட்கவில்லை. மக்கள் மட்டும் மனதுக்குள் இப் புனிதக் கூட்டுக் குறித்து முணுமுணுத்து முறுகிக் கொண்டனர்.

குறிப்பு 3.
பிரிவினைக்காக – தமிழீழத் தனியரசுக்காக போராடிய விடுதலைப் புலிகளுடன் `அரசியல் கூட்டமைத்த` கூட்டமைப்பு, பிரிவினைக் கோரிக்கையைத் தடை செய்த ஆறாவது திருத்தச் சட்டத்தை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது எப்படி, என்பதற்கும் எந்த விளக்கமும் இல்லை.

குறிப்பு 4.
இக்காலத்தில் விடுதலைப் புலிகளின் காட்டில் மும்மாரி பொழிந்தது. காளான்களும் கண்மண் தெரியாமல் முளைத்தன. விச ஜந்துக்களும்
வெள்ளத்தில் நீந்தி மகிழ்ந்தன. இவர்களுக்குப் பொதுவாக சூட்டப்பட்ட அல்லது இவர்கள் பொதுவாகச் சூடிக் கொண்ட கிரீடம் “அரசியல் ஆய்வாளர்”
என்பதாகும்.இந்த அரசியல் ஆய்வாளர்கள் தமது பங்கிற்கு அமெரிக்காவும், ஐரோப்பியன் ஜூனியனும், இந்தியாவும் விடுதலைப் புலிகளை அங்கீகரித்து நடத்தவுள்ள முடிசூட்டு விழாவுக்கு கூட்டமைப்பு ஒரு `போர்வாள்` என ஆய்ந்து அறிந்து கூறிவந்தனர்.

இவ்வாறாகத்தானே கூட்டமைப்புச் சேனை பாராளமன்றத்தைப் போர்க்களமாக்க புழுதி வீசி எறிந்த வண்ணம் புறப்பட்டது. 2002 ஆம் ஆண்டு இடம்பெற்ற இவர்களின் முதலாவது தேர்தலில் உயர்பாதுகாப்பு வலையங்களையும், யுத்தத்தால் ஏற்பட்ட இடப் பெயர்வுகளையும் மனதில் கொண்டு ``வீட்டுக்குப் போக வீட்டுக்குப் போடுங்கள்`` என முழங்கி, புலிகளின் ஆயுத பூஜையின் வரத்தால், டக்ளசுக்கு சொந்தமான இரண்டு தொகுதிகள் தவிர, எஞ்சிய  24 இல் 22  பொரும்பான்மை பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றி மக்கள் பிரதிநிதி ஆகியது.

நோர்வே வீசிய பாசக்கயிறு முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் குரல்வளையை நெரிக்கும் வரையிலும் இவ்வாறு கூட்டமைப்பு
பாராளுமன்றத்தைப் போர்க்களமாக்கிக் கொண்டு- பெரும்பாலான காலங்களில் இந்தியாவிலும் பிறநாடுகளிலும் தங்கியிருந்தது.

கடைசியாக முள்ளிவாய்க்கால் பிரளயம் நடந்து முடிந்து, போர்க்களம் பாராளமன்றமானது. யுத்தத் தளபதி பொன்சேகாவுக்கு கூட்டமைப்பு தமிழ்
மக்களிடையே வாக்கு வேட்டையாடியது. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததற்கு ராஜ பக்‌ஷவுக்கு நன்றி செலுத்தியது. புலிகளின் தியாகத்தை மதிப்பதாகவும் அவர்களின் வழிமுறையை எதிர்ப்பதாகவும் அறிவித்தது. பசு தனது புலித்தோலைக் கழற்றி எறிந்தது.கேவலம் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் சிங்களம் சிறைப்பிடித்து முகாம்களில் அடைத்து வைத்த இலட்சக்கணக்கான மக்களைச் சென்று பார்வையிடக் கூட இந்தக் கூட்டமைப்பு போராடவில்லை!

விடுதலைப் புலிகள்  தம்மைத் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று நிரூபிக்க  கையில் எடுத்த துடைப்பங்கட்டை, இப்போது தன்னைத் தானே
மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்மக்களின் ஏகப்பிரதிநிதிகள் எனப் பிரகடனம் செய்தது.அவர்களது-எதிரிகளது- தடியைக் கொண்டே அவர்களுக்கு
அடிப்பதாக நினைத்து புலிகள் நகர்த்திய காய், தடியைக் கொடுத்து மரண அடிவாங்கிய கதையாய் முடிந்தது.அரசியலில் சந்தர்ப்பவாதம் என்பது
மரணதண்டனை தவிர வேறெதுவுமல்ல.இத்தகைய சந்தர்ப்பவாதத்துக்கு மேலே குறிப்பிட்ட அரசியல் ஆய்வாளர்கள் சூட்டிய நாமம் தான் காய்
நகர்த்தல்.(இந்தச் சொல்லே ஒரு சூதாட்ட மொழி, அரசியல் மொழி கிடையாது)

உலக மறுபங்கீடு நடைபெற்ற வண்ணமிருக்கும் சர்வதேசப் போக்கின்பகுதியாக இலங்கையிலும் அதன்பிரதிபலிப்பு வெடிக்கின்றது.
அமெரிக்க இந்திய அணியும், ரசிய சீன அணியும் இப்போட்டியில் குதித்துள்ளன.ரசிய சீன அணி சிங்களத்தை முற்றிலுமாகச் சார்ந்து, தமிழ்மக்களுக்கு எதிரான நிலை
எடுத்துள்ளது.அமெரிக்க இந்திய அணி சிங்களத்தின், ரசிய சீன அணி நோக்கிய சாய்வை தடுக்க ஈழத்தமிழர்களை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தும்
கொள்கையைக் கடைப்பிடிக்கின்றது. இவ்வாறு தமிழ் மக்களை வைத்து தமது நலன்களை அடைய முயலும் இந்தியாவும் அமெரிக்காவும் இந்தத் துடைப்பங்கட்டையை தமிழ் மக்களின் அரசியல் கட்சியாக அங்கீகரித்து (தமது நாடுகளுக்கு வரவழைத்துப் `பேச்சுவார்த்தை`கள் நடாத்தி) முடி சூட்டி விட்டனர். ஆகக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்களின் ஏக அரசியல் பிரதிநிதிகள் என்ற அங்கீகாரம் கிடைத்து விட்டது!.
இந்தியஅரசியல்ஆலோசகரான விரிவாதிக்கவாதி B.ராமன், ஈழப்பிரச்சனைக்கு தீர்வுகாண்பதற்கு முதற்படி, `அரபாத் இல்லாத பாலஸ்தீனம்` என்ற கொள்கையை வகுத்தளித்தார்.இதுவே இந்திய அரசின் அதிகாரபூர்வ கொள்கையுமாகியது.ஆக அரபாத் இல்லாத பாலஸ்தீனத்தில் கூட்டமைப்பை தனது அரசியல் பிரதிநிதியாக நிறுவியிருக்கின்றது இந்திய விரிவாதிக்க அரசு.இவ்வாறு கூட்டமைப்பு இந்திய நாட்டமைப்பாக உருவெடுத்துள்ளது.
(இலங்கையில் நோர்வேயின் சமாதான முயற்சி பற்றிய ஆய்வறிக்கை தொடர்பான விமர்சன அரங்கில் கலந்துகொண்ட எரிக் சொல்ஹெய்ம் `` தமிழ் மக்கள் இனிமேல் ஆயுதம் ஏந்திப்போராடக் கூடாது, கூட்டமைப்பு தமிழ்மக்களின் முக்கிய அரசியல் பிரதிநிதி. அவர்கள் மூலம் நோர்வே தனது பங்களிப்பைத் தொடரும்`` எனக் கூறியிருந்தார்.இந்துப்பத்திரிகை கூட்டமைப்பு தனது கடமையில் இருந்து தவறக் கூடாது என ஆலோசனை வழங்கியுள்ளது.உருத்திரகுமாரன் `தாயகத்தில் கூட்டமைப்பும், புலம்பெயர் நாடுகளில் நாடுகடந்த அரசாங்கமும்` ``தமிழீழ விடுதலைப் பணியை``த் தொடர்வோம் என அறிவிக்கின்றார். தமிழ் கத்தோலிக்க பெரிய பாதிரியார் அரசாங்கம் கூட்டமைப்புடன் பேசி பிரச்சனைக்குத் தீர்வு காண முயலவேண்டும் எனக் கோருகின்றார்.தேசிய சமாதானத்துக்கு அயராது உழைக்கும் அந்நிய NGO க்களின் சிங்கள முகாமையாளர்கள் கூட்டமைப்பின் நம்பிக்கையைப் பெற LLRC பரிந்துரைகளை அரசாங்கம் அமூலாக்க வேண்டுமென வேண்டிக் கொள்கிறார்கள்.)
புதிய அணிசேர்க்கைக்கான தயாரிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளைச் செலவிட்ட கூட்டமைப்பு இறுதியாக ஒரு தெளிவான விதேசியத் திட்டத்துடன் ஈழத்தமிழ் அரசியலில் மீண்டும் குதிக்கின்றது.இனிமேலும் கூட்டமைப்பு செத்தபாம்போ செல்லாக் காசோ அல்ல.
மக்களைப் பொறுத்தவரையில் கூட்டமைப்பு செத்த பாம்பாகவும், செல்லாக்காசாகவும் இருப்பதனால் இது எந்தக்காலத்திலும் பரந்துபட்ட மக்களின் பெருந்திரளான ஆதரவைப் பெறப்போவதில்லை. இதன் காரணத்தால் இது அமைப்பு ரீதியிலும் பலம் பெறப்போவதில்லை. இந்த இரண்டு காரணங்களாலும் சிங்களத்துடன் பேரம் பேசுவதற்கு கூட்டமைப்புக்கு எந்தப்பலமும் கிடையாது. மேலும் பொருளாதார மையப்படுதலின் விளைவான பாசிசத்தின் வளர்ச்சி காரணமாக, உலகு தழுவிய ஒரு பொதுப்போக்கைச் சார்ந்து இலங்கையிலும் பிரதான ஆளும்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையில் ஒற்றுமை மேலும் மேலும் நெருங்கி வருகின்றது.கொள்கைகள் ஏறத்தாழ ஒன்றே என்று ஆகிவிட்டன. இதனால் இங்கேயும் சந்தர்ப்பவாதக் கூட்டுக்கான வாய்ப்புக்கள் இல்லாது போய்விட்டன.
இந்த நிலையில் சர்வதேச சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றங்களையும், பக்ச பாசிஸ்டுக்களின் ரசிய சீன சாய்வைக் கணக்கில் கொண்டும், அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும், இந்திய விரிவாதிக்க அரசின் நலன்களுக்கும் சேவகம் செய்யும் தரகுப் பாத்திரத்தை ஆற்ற கூட்டமைப்பு விளைகின்றது.இவர்களின் நலன்களுக்கு சிங்களத்தைப் பணியவைப்பதற்கு ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனையை ஒரு துருப்புச் சீட்டாகப் பாவிக்க முயலுகின்றது. இதனால் உண்மையில் இந்த அதிகார பேரம் ஈழத்தமிழ் மக்களின் நலன் சம்பந்தப்பட்டது அல்ல.அமெரிக்க இந்திய விரிவாதிக்க அரசின் நலன் சம்பத்தப்பட்டதாகும்.இவ்வகையில் கூட்டமைப்பு உலக மறுபங்கீட்டு போட்டியில் ரசிய சீன அணிக்கெதிராக, அமெரிக்க இந்திய- ஏகாதிபத்திய அணிக்கு சேவகம் செய்ய முயல்கிறது.
இது ஒரு அபாயகரமான சமரச, சதிகாரப் பாதை.இது தமிழினத்தைக் காட்டிக் கொடுப்பது மட்டுமல்ல.ஒட்டு மொத்த நாட்டையுமே அந்நியருக்கு காட்டிக்கொடுப்பதாகும். கூட்டமைப்பின் இத் தேச விரோத விதேசிய நடத்தை தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு பழியும், இழிவும் தேடி பலவீனப் படுத்துவதாகும்.சிங்கள மக்களை மேலும் தமிமீழ விடுதலைப் போராட்டத்தில் இருந்து அந்நியப் படுத்துவதும் சிங்களத்தைப் பலப்படுத்துவதுமாகும்.
இதற்கான கோரிக்கையே அரசியல் அமைப்பின் 13வது சட்டத் திருத்தத்துக்கு அமைய அமைக்கப்பட்ட மாகாணசபை(கள்) ஆகும்.
இம்மாகாண சபைக்கு உள்ள அதிகாரங்கள் குறித்து இந்தியாவின் பின்பலத்தில் அதிகார பேரம் நடத்தி அந்நிய சேவகம் செய்து பிழைக்க முயல்கின்றது கூட்டமைப்பு.முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் அமெரிக்காவுக்கும், இந்திய விரிவாதிக்க அரசுக்கும் அழைப்பு விடுவது அப்பட்டமான துரோகம் ஆகும்.மேலும் தமிழ் மக்களின் போராட்டத்தை 25 ஆண்டுகள் பின்னோக்கித்தள்ளி அதிகாரப்பரவலாக்க சீர்திருத்த வழியில் சீரழிப்பதாகும். கடந்த 25 ஆண்டுகால சிங்களப் பேரினவாதத்தின் வளர்ச்சியும், மாறியுள்ள சர்வதேச-பிராந்திய சூழ்நிலைமைகளும், புலிகளின் வீழ்ச்சியும் அதிகாரபேரத்தை ஆழக்குழிதோண்டிப் புதைத்துவிட்டன.
போலிச்சுதந்திரத்துக்குப் பிந்திய இந்த 64 ஆண்டுகால அரசியல் வரலாறு சொல்லுவதெல்லாம், சிங்களம் தனது அரசியல் அதிகாரத்தில் எந்தப்பங்கையும் ஈழதேசத்துக்கு வழங்கத் தயாராகவில்லை என்பதுதான். இதைச் சுற்றித்தான் இந்த 64 ஆண்டுகால வரலாறும் நகர்ந்திருக்கின்றது.
ஒற்றையாட்சி என்பது சிங்களத்தின் அரசியல் அதிகாரத்தின் ஏகபோகம் தவிர வேறொன்றும் இல்லை.
இந்நிலையில் ஒற்றையாட்சிக்குள், ஒன்றுபட்ட இலங்கைக்குள் `அரசியல் தீர்வு காண்பது` என்பது, கட்டாய இணைப்புக்குள் தமிழ்மக்களைத் தொடர்ந்தும் வாழ நிர்ப்பந்திப்பது என்பது தமிழீழ தேசத்தின் இருப்பை படிப்படியாக இல்லாதொழிப்பதற்கான சதியே தவிர வேறெதுவுமல்ல.இது தேசிய இன அழிப்பும், தேசியப் படுகொலையும் ஆகும்.
இதனால் பிரிந்து செல்லும் உரிமையை உயர்த்திப்பிடிப்பது இன்றியமையாத ஜனநாயகக் கடமையாகும்.கூட்டமைப்பு, உலகத் தமிழர் பேரவை, நாடுகடந்த அரசாங்கம் இவையாவும் கூட வசதிக்கேற்ப `சுய நிர்ணய உரிமையை` ஒரு சொல் என்ற அளவில் பயன்படுத்துகின்றன. ஆனால் உள்ளடக்கத்தில் பிரிந்து செல்லும் உரிமை என்ற பொருளில் அல்ல மாறாக, ’சேர்ந்துவாழ  அதிகாரப் பகிர்வு’ என்ற பொருளிலேயே  ஆகும்.
ஆக வரலாறு மீண்டும் எழுதப்படுகின்றது.ஆனால் இந்தத் தடவை எழுதுவோர் அனைவரின் முகங்களிலும் நாம் தமிழரின் எதிரிகள் என்று தெளிவாக எழுதப்பட்டிருக்கின்றது!.கூட்டமைப்பு இலங்கை அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்துக்கு அமைய உருவாக்கப்பட்ட மாகாணசபைத் திட்டத்தை தமிழ்த்தேசிய இனப்பிரச்சனைக்குத் தீர்வாகக் கையில் எடுத்துள்ளது.காணி அதிகாரம் பொலிஸ் அதிகாரம் குறித்து சிங்களத்துடன் அதிகார பேரம் நடத்தும் பொருட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ``அமெரிக்கவே நீதி வழங்கு! இந்தியாவே தீர்வு வழங்கு!!` எனச் சமரசவாதிகள் நடத்திய போராட்டங்களின் விளைவாக, ஒபாமா ராஜபக்சவை யுத்தக் குற்றக் கூண்டிலிருந்து விடுவித்து விட்டார், இந்தியா மாகாணசபைத் தீர்வு வழங்கியுள்ளது! ஐ.நா யுத்தக் குற்றவாளியான சிங்களத்தின் இராணுவ அதிகாரியை தனது `உலக அமைதி காக்கும் நடவடிக்கைக்கு ஆலோசகனாக நியமித்துள்ளது! இவைதான் சமரசவாதிகள்அமெரிக்காவிடம் இருந்தும், இந்தியாவிடமிருந்தும், ஐ நா விடமிருந்தும் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்த நீதி! (நம்பிக்கை இழக்காத மயிலைக் காளைகள் மட்டும் நீதி கேட்டு நடந்தவண்ணமே இருகின்றார்கள்!)
1987 ஐ விட 2012 மாகாண சபை மேலானது என்று காட்ட இந்த நாடகத்தில் இணைத்துக்கொண்ட மேலதிக அங்கமே இந்த 13+ ஆகும்! (Extra Large!)
இன்று அமைப்பு ரீதியாக இம்முழக்கத்தை முன் வைப்பது கூட்டமைப்பாக இருந்தாலும், இச்சமரச தேசத்துரோக வழியில் நிற்பவர்கள் இவர்கள் மட்டுமல்ல.ஈழத்திலும்,புலம் பெயர் நாடுகளிலும்,தமிழ் நாட்டிலும் உள்ள சில சமூக சக்திகள்- வர்க்கங்கள் இவ்வழியின் வளர்ச்சிக்கு ஆதாரமான சமூகத் தூண்களாய் உளளன. புற முதுகில் பதுங்கி இருந்து விடுதலைப் புலிகளுக்கு கொள்ளி வைத்ததில் இக்கும்பலுக்கு பெரும் பங்குண்டு.கூட்டமைப்பு TNA, உலகத் தமிழர் பேரவை Global Tamil Forum, பிரித்தானிய தமிழர் பேரவை British Tamil Forum, நாடு கடந்த அரசாங்கம் Trans National Government of Tamil Eelam), அந்நிய தமிழ் NGO கோடரிக்காம்புகள்,  நெடுமாறன்- வை.கோ கும்பல், கத்தோலிக்க பாதிரிகள், இந்துப் பெருங் கோவில்களின் சொந்தக்காரச் செல்வந்தர்கள் ஆகிய வகையறாக்கள், ஒரு கொடியின் கீழ், ஒரே அமைப்பின் கீழ் திரளாவிட்டாலும், அவரவர் தளங்களில், அடிப்படையில் ஒரே நலனுக்காகவே செயற்படுகின்றனர். அது தரகு முதலாளித்துவ நலனும், தேசத் துரோக, தமிழின விரோத, சந்தர்ப்பவாத சமரசவாத வழியும் ஆகும்.
கூட்டமைப்பும் தன்னை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய முயல்கின்றது. ஏதோ EPRLFஉம், TELOவும் சமஸ்டிக் கட்சிக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல, சமஸ்டிக்கட்சி தன்னை தாய்க் கட்சி என்று உரிமை கோருகின்றது. பிள்ளைக் கட்சிகளோடு கொடி,சின்னம்,பெயர் பற்றி விவாதித்து வருகின்றது.மாநாடு கூட்டத் திட்டமிடுகின்றது.அமைப்பை மேலும் விரிவாக்கிப் பலப்படுத்த சம்பந்தன் பிள்ளையான் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.இவையனைத்தும் ஈழத்தமிழரின் பெயரால் அமெரிக்க இந்திய ஆதரவு அரசியல் சக்தியொன்று உருவாக்கப்பட்டு வருவதையே காட்டுகின்றது.இதை நுகர்ந்து பிடித்துவிட்ட புலம்பெயர் மேட்டுக்குடி பொன்னாடை போர்த்தத் தொடங்கிவிட்டது!
இதே நேரத்தில் சட்டபூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சியை நீக்க முயற்சிகள் நடப்பது தற்செயலானது
அல்ல.ஆயுதங்களை மெளனித்துவிட்ட விடுதலைப் புலிகள் அரசியல் ரீதியாக ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்காகச் செயற்படுவதை யாரும் தடுக்க முடியாது. தடுக்கக் கூடாது. இதை ஜனநாயகவாதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும்.

போலிச் சுதந்திரத்துக்குப் பிந்திய முதல் முப்பது ஆண்டுகால பாராளுமன்ற பாதையிலும், அடுத்த முப்பது ஆண்டுகால ஆயுதப் போராட்டப் பாதையிலும் ஈழத்தமிழ் மக்கள் தமது எதிரிகளை நன்கு அறிந்துள்ளனர்.சிங்களத்தைப் பற்றி மக்களுக்குத் தெரியும்.அமெரிக்கா, மற்றும் இதர ஏகாதிபத்தியவாதிகளைப் பற்றியும் மக்களுக்குத் தெரியும்.இலங்கையில் கால்பதித்துவரும், ஏகாதிபத்திய நோக்கில் வளர்ந்து வரும் சீன, ரசிய வல்லரசுகளையும் மக்கள் அறிவர்.இந்திய விரிவாதிக்க அரசையும் அதன் கபட வேடத்தையும் மக்கள் நன்கறிவர்.

மக்களுக்குத் தேவையெல்லாம் இந்த எதிரிகளை எதிர்த்துப் போரிடுவதற்கான சரியான, புரட்சிகரமான தத்துவார்த்த, அரசியல் ஸ்தாபன வழிகாட்டல் மட்டும் தான்.இந்தப் பொறி மக்களைப் பற்றிக்கொண்டால் மீண்டும் ஒரு பெருங்காட்டுத் தீ மூளும்.

இதைத் தடுப்பதுதான் அனைத்து சமரசவாதிகளின் நோக்கம்.இவர்கள் எங்கிருந்தாலும் இந்த ஒரே குறிக்கோளுக்காகவே பாடுபடுகின்றனர். இதனால் இச்சமரசவாதிகளைத் தனிமைப்படுத்தாமல் புரட்சிகர வெகுஜன மக்கள் திரளை விடுதலைப் புரட்சியின் பக்கம் வென்றெடுக்க முடியாது. அதிகாரப் பகிர்வு வழியை ஒரு அரசியல் போக்கு என்ற வகையில் முறியடிக்காமல், பிரிவினைக் கோரிக்கையின் மீது மீண்டும் ஒரு முற்போக்கு தேச விடுதலை இயக்கத்தைக் கட்டியமைக்க முடியாது. இதை அரசியல் ரீதியில் சாதிக்காமல் ஏகாதிபத்தியவாதிகளோடும், இந்திய விரிவாதிக்க அரசோடும், சிங்களத்தோடும் தீர்மானகரமான முறிவை ஏற்படுத்த முடியாது.இத்தகைய ஒரு முறிவு ஏற்படாமல் ஈழவிடுதலைப் புரட்சி பரந்துபட்ட மக்களைத் தழுவுவது என்பது சாத்தியமில்லை.எனவே கூட்டமைப்பின் அணியில் இணையும் அனைத்து சமரசவாத தமிழினத் துரோகிகளின் செல்வாக்கை தடுத்து நிறுத்தி, புரட்சிகர ஈழ மக்களை, எதிரிகளுக்கெதிராக விடுதலைப் புரட்சியில் ஊன்றி நிறுத்த பின்வரும் முழக்கங்களின் கீழ் அணிதிரளுமாறு அறை கூவல் விடுக்கின்றோம்.

* அன்ரன் பாலசிங்கத்தின் ‘அகசுய நிர்ணய உரிமை’ அதிகாரப் பகிர்வே!

*அதிகாரப்பகிர்வு என்பது அரசியல் விடுதலை அல்ல அடிமைத்தனமே!

* நமது விடுதலைக் கோரிக்கை பிரிந்து செல்லும் உரிமையே!

* மாகாணசபை, இடைக்கால அதிகார சபை அனைத்தும் அடிமைத்தீர்வே!

* ஜனநாயகத் தீர்வுக்கு வழி, தமிழ்பேசும் மக்களிடையேயான சர்வஜன வாக்கெடுப்பே!

* ஆறாவது திருத்தச்சட்டத்தை நீக்கவும்,இந்திய இலங்கை ஒப்பந்தத்தைக் கிழித்தெறியவும் போராடுவோம்!

* அமெரிக்க ஏகாதிபத்திய, இந்திய விரிவாதிக்க அரசுகளின் அடியாளான கூட்டமைப்பைத் தனிமைப்படுத்துவோம்!

* தமிழ்பேசும் மக்கள் வேண்டும் அரசியல் தீர்வு, என்ன என்பதை அறிய கூட்டமைப்பு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றைக் கோரினால் ஒழிய,
அனைத்துத் தேர்தல்களையும் புறக்கணிப்போம்!

* பிரிந்து செல்லும் உரிமையை உயர்த்திப்பிடித்து முற்போக்கு தேசவிடுதலை அமைப்பைக் கட்டியமைப்போம்!

* மலையக இஸ்லாமியத் தமிழர்களை விடுதலைப் புரட்சியில் ஐக்கியப் படுத்துவோம்!

* மலையக, இஸ்லாமியத் தமிழர்கள், மற்றும் சிங்கள மக்கள் மீதான சிங்களத்தின் ஒடுக்குமுறையை எதிர்த்து குரல் கொடுப்போம்,
அவர்களின் பிரதேச சுயாட்சி உரிமைகளுக்காகப் போராடுவோம்!

* சிங்கள ஜனநாயக சக்திகளை ஈழத் தமிழர்களின் பிரிந்து செல்லும் உரிமையை அங்கீகரிக்கக் கோருவோம்!

* உலகத் தொழிலாளர்களுடனும் ஒடுக்கப்பட்ட தேசங்களுடனும் ஒன்றுசேருவோம்!
                                            






புதிய ஈழப் புரட்சியாளர்கள்  
ஜனவரி2012