முதல் ஈழ யுத்தம்[1979-1983-2009] , 2009ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொழுந்து விட்டு எரிந்தது. ஆனந்தபுரத்தில் பிரபாகரனும் தளபதிகளும் ஒன்று கூடி நிற்கின்றனர் என அறிந்த சிங்களப்படை அச்சூழலை சுற்றி வளைத்து பெட்டியடித்தனர். ஆயிரக்கணக்கான சிங்களப் படையினர் களமிறக்கப்பட்டனர். தம்மைச் சுற்றி பெட்டியடிக்கப்பட்டதை உணர்ந்த புலிகள் அதனை உடைத்து புதுமாத்தளன் பகுதிநோக்கி நகர முயன்றனர். இதற்காக சுமார் ஆயிரம் விடுதலைப் புலிகள் நாலாயிரத்துக்கு மேற்பட்ட சிங்களப்படையை எதிர்த்து கடும் சமரில் ஈடுபட்டனர். சிங்களப் படை நூற்றுக்கணக்கில் பலியாகியது. சிறிய நீதிப்படையை, பெரிய அநீதிப்படையால் வெல்ல முடியாத நிலை தோன்றியது.
களத்தில் பிரிகேடியர் தீபன், கேர்ணல் கடாபி, கேர்ணல் விதுசா, கேர்ணல் துர்க்கா நின்று களமாடுவதை சிங்களப்படை அறிந்து கொண்டது.
இந்த புலிப் போர் அணி அங்கே நின்றால் தம்மால் முன்னேற முடியாது என்பதை நன்குணர்ந்த எதிரிகள் , இந்தியா நயவஞ்சக மாற்றுத் திட்டம் வகுக்க,சிங்களம் தமது படையணியை திடீரென பின் நோக்கி நகர்த்தினர்.
அடுத்து அப்பகுதிக்குள், அந்நியர்[அமெரிக்கா-சீனா] வழங்கிய நச்சுவாயுக் குண்டுகளும், எரிதணல் பொஸ்பரஸ் குண்டுகளும் ஏவப்பட்டன .
தீய்ந்து போன தீபனின் வித்துடல்
ஏப்ரல் முதல் நாள் முதல், நான்காம் நாள் வரை இப்பலிக்களம் அரங்கேறியது.
விடுதலைப் புலிகளுடன் போரிட்டு வெல்ல முடியாத சிங்களம், கோழைத்தனமாகவும் பேடித்தனமாகவும் நச்சுக் குண்டுகளை ஏவி பிரிகேடியர் தீபன், கேணல் கடாபி, கேணல் விதுசா, கேணல் துர்க்கா ஆகிய போர்க்களத் தளபதிகளை கொன்றொழித்து விடுதலை யுத்தத்தின் இராணுவத்தலைமையை பூண்டோடு அழித்தது.
இது யுத்தத்தில் ஒரு தலைகீழான திருப்பத்தை ஏற்படுத்தியது. `` பொஸ்பரஸ் குண்டுகள் வீசப்பட்டதை மட்டும் ஏற்றுக் கொண்டு, இவ்வாறு ஆனந்தபுரம் முறியடிக்கப்படவில்லையெனில் யுத்தம் வேறு திசையில் சென்றிருக்குமென`` எதிரிகளின் `உளவாளி ஊடகவியலாளர்` டி.பி.எஸ்.ஜெயராஜ் சாட்சியம் பகர்ந்துள்ளார். கடந்த மாதத்தில் (மார்ச் 2016), ஈழப் போர்க் குற்றத்துக்கு யார் அதிக பொறுப்பு என்கிற போட்டியில் கோத்தபாயாவை எதிர்த்து சரத் பொன்சேகா சவால் விடுகின்றார். அதில் அவர் சொல்லுகின்றார்
``நிலத்தப் பிடிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த யுத்தத்தை நான் நடத்தவில்லை,பயங்கரவாதிகளை பூண்டோடு ஒழித்தால் யுத்தம் நின்று விடும் என்பதே எனது போர்த்தந்திரமாக இருந்தது``. சரத் பொன்சேகா
இதுவேதான் வெற்றிக்கு வித்திட்டது எனப் பிரகடனம் செய்துள்ளான். இந்தக் கூற்று தன்னளவிலேயே ஒரு யுத்தக் குற்றமாகும். எனினும் ஆனந்தபுர தமிழ்ப் புலிப் போர் வீரர் படுகொலையை சிங்களம் தனித்து நின்று செய்யவில்லை. 1987 இந்திய ஆக்கிரமிப்பு காலத்தில் இராணுவ பேச்சுவார்த்தை ஒன்றில் கலந்து கொண்ட பிரபாகரனையும், மாத்தையாவையும் கொன்றொழிக்குமாறு டிக்ஸிற் விடுத்த உத்தரவை, ``வெள்ளைக் கொடியோடு வருபவர்களை கொல்வது இராணுவ மரபல்ல`` எனக்கூறி தான் மறுத்துவிட்டதாக இந்திய ஜெனரல் கல்கட் எழுதியுள்ளார். இதற்குப் பின்னால் ரோ அறிவுஜீவிகள் `அரபாத் இல்லாத பாலஸ்தீனமே இலங்கைக்கு தீர்வு` என தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தனர். ஒபாமா `ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடை` என பகிரங்கமாக விடுத்த ஆணைக்கும் விடுதலைப் புலிகள் அடிபணியவில்லை. இதனால், அமெரிக்க ஏகாதிபத்தியமும், இந்திய விரிவாதிக்க அரசும் சிங்களத்தோடு கூட்டுச் சேர்ந்து ஈழ தேசிய ஜனநாயக விடுதலைப் புரட்சி இயக்கம் மீது தொடுத்த,கோழைத்தனமான,பேடித்தனமான தாக்குதலின் விளைவே ஆனந்தபுர விச வாயுத் தாக்குதலும், விடுதலைப்புலிகளின் அழிவும்,அதன் விளைவான முள்ளிவாய்க்கால் ஈழ தேசிய இனப் படுகொலையுமாகும்.மேலும்; இன்றைய தமிழரின் நிர்க்கதி நிலையுமாகும்.
இந்த முப்பதாண்டுக்காலம் போலிச் சுதந்திரத்தின், நிதிமூலதனக் காலனியாதிக்க ஆட்சிக் காலமாகும்.ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய சுதந்திர விவசாய இயக்கத்தை நசுக்கி, உள்நாட்டின் பயிற்றுவித்த ஏஜென்டுகளின் ஏகாதிபத்திய அரசியல் அதிகாரம் இலங்கையில் நிதிமூலதனக் காலனியாதிக்க ஆட்சியை, இரு பிரிவாக நிறைவேற்றிய காலகட்டமாகும்.
இந்த இரு வர்க்கப்பிரிவுகள் இலங்கையில் இவ்வாறு அமைந்திருந்தன:
1) நிதி மூலதனக் காலனியாதிக்கத்துக்கு இலங்கையை முற்றாக -படிப்படியாக- அடிமைப் படுத்தி சேவகம் செய்யும் பாதையை ஐக்கிய தேசியக் கட்சி எடுத்தது.
2) நிதி மூலதனக் காலனியாதிக்கத்தை ஆதரிக்கும் அதேவேளையில் உள்ளூர் சிறு தொழில் துறைக்கு சலுகை அளிக்கும் சார்புப் பாதையை சிறீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்தது.
இக்கட்சிகளின் ஆதிக்கத்தின் கீழ் தான் இலங்கையின் முதல் முப்பது ஆண்டு வாழ்வு நடந்தேறியது.
இந்தக்கால கட்டத்தில் உலக வங்கி ஐக்கிய தேசியக் கட்சியை ஊக்குவித்து வந்தது. இலங்கையின் இரு பெரும் ஆளும் வர்க்கப் பிரிவுகளின் கட்சிகளும் கடைப் பிடித்த நிதி மூலதனக் காலனியாதிக்க கொள்கைகளின் விளைவாக 1970 களின் உலக ஏகபோக முதலாளித்துவ பொது நெருக்கடியைச் சார்ந்து உள் நாட்டு நெருக்கடி வெடித்தது. ரோகணாவின் ஆட்சிக் கவிழ்ப்பு ஆயுதப் போராட்டம்,1972 பாசிச அரசியல் யாப்பு, ஈழ விடுதலை இயக்கத்தின் உதயம் என்பன இக்காலகட்டத்தின் இயற்கைப் பிரசவமாகின.இறுதியில் இது ஈழ சமரசவாதிகளை வட்டுக்கோட்டைத் தூக்குமேடையில் நிறுத்தியது. துரதிஸ்டவசமாக இந்த தூக்குமேடையோ பஞ்சு மெத்தையாக அமையவில்லை! 1977 பொதுத் தேர்தலில் தமிழீழ மக்கள் ஈழப்பிரிவினையை ஏற்று பொது வாக்களித்தனர். இதற்காக 1977 கலவரத்தால் பழி வாங்கப்பட்டனர்.இந்த அநீதிக்கு பழி வாங்க `ஆயுதப் போராட்டம்` என்கிற எண்ணம் கருக்கொண்டது. 1977 பொதுத் தேர்தலில் மலரும் முள்ளும் ஒரு சேர முகிழ்த்தன. மலர், ஈழப்பிரிவினைக்கான வெகுஜன வாக்கெடுப்பாக அமைந்தது.முள், ஜே.ஆர்.ஆட்சி தனியார்மய தாராளமயக் கொள்கையை `இலங்கையை சிங்கப்பூர் ஆக்குவேன்` `நீதியான சமுதாயம் படைப்பேன், என முழங்கி அமுலாக்கியது.இந்த முள்ளுக்கும் மலருக்கும் இடையான போராட்டம் தான் எஞ்சிய இலங்கை வரலாறாகும்.இன்றுவரை! 2) 1977- 1983
நிதி மூலதனக் காலனியாதிக்கத்துக்கு சேவகம் செய்ய சமஸ்டிக்கட்சி ஈழத்தமிழரின் பொது வாக்கெடுப்புத் தீர்ப்பை பாடையில் ஏற்றி 1981 இல் மாவட்ட அபிவிருத்தி சபை என்கிற போலி ஏமாற்றுத்தீர்வை ஏற்றுக்கொண்டது.தேர்தலில் பங்கேற்றது.தேர்தல் கூட்ட மேடை மீது கைக்குண்டை வீசி எறிந்து விட்டு தலைமறைவானோர் ஒலித்த குரல் `` புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்``.தமிழீழத்தாயகத்தை சிங்கள
இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க திண்ணை வேலியில் நடத்தப்பட்ட கண்ணி வெடித்தாக்குதலும் 13 சிங்களச் சிப்பாய்களின் மரணம், காத்திருந்த சிங்களத்துக்கு நல்ல காரணமாய் அமைந்து 1983இனப்படுகொலை வெடித்தது.ஜே ஆரின் சிங்கப்பூர் கனவு தவிடு பொடியாகியது. விடுதலைப்புலிகளை விசர் நாய்கள் என்று அவர் காரணம் இல்லாமல் குரைக்க வில்லை.
உள்நாட்டு யுத்தம் வெடித்தது.ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்தியா தலையிட்டு இலங்கை அரசை தனது மேலாதிக்கத்துக்கு பணிய வைக்க நிர்ப்பந்தித்தது.
3) 1983 -2002
உள்நாட்டு யுத்த காலம். வடக்கு கிழக்கு ஈழத்தில் நிதி மூலதனக் காலனியாதிக்கம் நிர்மூலமாக்கப்பட்டிருந்தது.சிங்களத்திலும் அந்நிய மூலதன முதலீடு பாதுகாப்பற்றிருந்தது.ஆனையிறவுப் படைத்தளத்
தாக்குதல் (2000 ஆம் ஆண்டு மார்ச் 26), இராணுவ பலச் சமநிலையில் விடுதலைப்புலிகளின் மேலோங்கிய நிலையை நிரூபித்தது.இதற்கு சிகரமாகவும்,வரலாற்று திருப்பு முனையாகவும் அமைந்தது
விடுதலைப்புலிகளின் விமானப் படையின் கட்டு நாயக்கா விமானப் படைத்தள தாக்குதல் (ஜூலை 24, 2001).ஆகும்.இப்போது தான் இலங்கைப் பொருளாதாரம் முதல் தடவையாக எதிர்க்கணிய வீழ்ச்சி கண்டு
பொறிந்து விழுந்தது.அரசு நிலை குலைந்திருந்தது.மிக மிக துரதிஸ்டவசமாக இதுவரைக்கும் வந்த புலிகள் இதன் பயன்களை எட்டாதவாறு ஏகாதிபத்திய பொறிக்குள் வீழ்த்தப்பட்டனர் அல்லது வீழ்ந்தனர்.2002ஆம் ஆண்டு மாசி மாதம்நோர்வே பேச்சுவார்த்தை ஆரம்பமானது.இன்னும் பொருத்தமாகச் சொல்வதானால் ஏகாதிபத்திய சதிவலை வீசப்பட்டது.
4) 2002-2009
இந்த பேச்சுவார்த்தையை சூசக மொழியில் PEACE PROCESS என அழைத்தனர்.இதன் பொருள் அது ஒரு தொடர் நிகழ்வு என்பதாகும்.இந்த தொடர் நிகழ்வின் முதல் நிகழ்வு, Regainning Sri Lanka.`ஈழ விடுதலைப்
போரால் இழந்த` நிதி மூலதனக் காலனியாதிக்கத்தை, 'சமாதான காலத்தில்` எவ்வாறு மீள நிர்மாணிக்க வேண்டும் என உலக வங்கி வகுத்தளித்த திட்டமே Regainning Sri Lanka ஆகும்.இது சம்பிரதாய பூர்வமாக ரணில் அரசாங்கத்தினதும், விடுதலைப் புலிகளினதும் வேண்டுகோளின் அடிப்படையில் உலக வங்கியால் `பரிந்துரைக்கப்பட்டது`!
இந்த சமாதானப் பேச்சுவார்த்தை உருவாக்கிய யுத்த நிறுத்தத்தை சிங்களம்,
அடுத்தகட்ட இனப்படுகொலைப் போருக்கு தயாராகிவிட்ட நிலையில் தன்னிச்சையாக, போர் நிறுத்த உடன்பாட்டை மீறி போர் தொடுத்தது.நோர்வே சிங்களத்துக்கு சாமரம் வீசிக் கொண்டிருந்தது! இந்த சதிச் சமாதானம் ஆனந்தபுர போர்க்களத்தில் நடத்தப்பட்ட சர்வதேச யுத்த விதிமுறைகளை மீறிய விசவாயுத் தாக்குதலில் கோழைத்தனமாக விடுதலைப் புலிப் போர்த் தளபதிகளை கொன்றொழித்தது. முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலையை நடத்தி முடித்தது.முப்பது ஆண்டுகால முதலாவது `ஈழ யுத்தம் மெளனித்தது`.
5) 2009-2015
யுத்தத்தில் விசவாயுத்தாக்குதல், இனப்படுகொலை, ஆகிய ஆயுதங்களால் வெற்றிவாகை சூடிய பக்ச பாசிசம், Regainning Sri Lanka திட்டத்தை மகிந்த சிந்தனை என்கிற மாறு வேடத்தில் வெளியிட்டது. யுத்த வெற்றியை மூலதனமாக்கி ,`இராணுவ சர்வாதிகார குடும்ப ஆட்சியை கட்டியெழுப்ப முயன்றது. இதற்கு சீனாவோடு அணிசேர்ந்தது.
ஐ நா வின் பாசையில் `சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளாத பாதை`யில் பயணிக்க எத்தனித்தது.
இதன் விளைவாக அமெரிக்க இந்திய ஆட்சிக்கவிழ்ப்பில் பக்ச பாசிசம் ஜனவரி 8 2015 இல் அரசியல் அதிகாரத்தை இழந்தது.
6) 2015............
ரணில் மைத்திரிப் பாசிசம் அந்நிய ஆட்சிக் கவிழ்ப்பில் அதிகாரத்தில் நிலை நிறுத்தப்பட்டது.
புலிகள் இல்லாத இலங்கை , தங்கு தடையற்ற உலகமயத்துக்கு திறந்து விடப்பட்டது.
வேறு விதமாகச் சொல்வதானால் முழு நாட்டையும் அதன் வளங்களையும் உலகமயக் கொத்தளங்களாகக் கூறுபோட்டு அந்நிய நிதிமூலதன காலனியாதிக்கத்துக்கு தாரைவார்க்க தயாராகிவிட்டது. இது மகிந்த சிந்தனை என்றே இன்றுவரையும்(2016) அழைக்கப்பட்டுவருகின்றது!.இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் உலகமய வர்த்தகத்தின் முக்கிய கடல்வழிப் பாதையில் அமைந்திருக்கும் பூகோள ரீதியான வாய்ப்பை இதற்கான மூலதனமாக்கிக்கொள்கின்றது.உண்மையில் இதில் மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட கடல் பரப்பு ஈழத்துக்குச் சொந்தமானதாகும்.பேடித்தனமாக ஆனந்தபுர விசவாயுத் தாக்குதலில் புலிகள் தலைமையை அழித்து, இனப்படுகொலையால் ஈழ தேசத்தைக் கபளீகரம் செய்த சிங்களம், இப்போது அதை அந்நியனுக்கு ஏலம் போட்டு விற்றுவருகின்றது.பக்ச பாசிசம் சீனாவோடு இணைந்து செய்த அதே கைங்கரியத்தை ரணில் மைத்திரி பாசிசம் இந்தியாவுடன் இணைந்து அமெரிக்க முகாமின் அடிமைக் கூட்டாளியாக செய்ய முயலுகின்றது.
--------------- மோடி ஆட்சியும் உலக மயமும் பாகம்(3) தொடரும்.
போலிச் சுதந்திரம் பொசுங்கியே தீரும்! ஈழப்புரட்சி வெடித்தே தீரும்!
(பாகம் 1)
அமெரிக்க இந்திய ஆட்சிக் கவிழ்ப்பில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய ரணில் - மைத்திரி பாசிசம் 68வது சுதந்திர விழாவை காலி முகத்திடலில் இன்று கொண்டாடி வருகின்றது.
காலனியாதிக்க அரசியல் அதிகாரக் கைமாற்றத்தை `சுதந்திர தினமாக` விளக்கி விழா எடுப்பது இலங்கையில் மட்டுமல்ல, இலங்கை போன்ற அனைத்து அரைக்காலனிய நாடுகளினதும் ஆளும் வர்க்கங்கள் நடத்தும் பொதுத் திருவிழாவாகும். இதன் இலங்கை வெளியீடே பெப்ரவரி 4 ஆகும்.
மேலும் இது முதல் உலகப் போரையும் ரசிய சோசலிசப் புரட்சியையும், இரண்டாம் உலகபோரையும் மக்கள் சீனப் புரட்சியையும், சார்ந்து காலனி நாடுகளில் நேரடிக் காலனியாதிக்கம் நீங்கி அரைக்காலனியாதிக்கம் நிறுவப்பட்டதை, காலனியநீக்கம் என விளக்கிய திருத்தல்வாதத்தின் தொடர்ச்சியுமாகும்.
இது குறித்து ருசிய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே நடைபெற்ற மாபெரும் விவாதத்தில் காலனிய நீக்கம் குறித்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 4வது விமர்சனம் புதிய காலனியாதிக்கத்தின் தாசர்கள் என்று தலைப்பிட்டு ஐப்பசி 22 1963 வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது;
``இரண்டாம் உலக போருக்குப் பின் ஏகாதிபத்தியவாதிகள் காலனியாதிக்கத்தை கைவிடவில்லை. புதிய காலனியம் என்கின்ற வடிவத்தை மட்டுமே புதிதாக மேற் கொண்டிருக்கின்றார்கள். ஏகாதிபத்தியவாதிகள் சில இடங்களில் தங்களது பழைய முறையான நேரடி காலனியாட்சி வடிவத்தை கைவிடுமாறும் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்ட ஏஜென்டுகள் மூலம் ஒரு புதிய வகை காலனியாட்சியையும் சுரண்டலையும் மேற்கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பது புதிய காலனியாதிக்கத்தின் முக்கிய குணாம்சமாகும்``.
(மாபெரும் விவாதம் கேடயம் வெளீயீடு முதற்பதிப்பு 1988 பக்கம் 390)
இந்த முக்கிய குணாம்சத்தின் அடிப்படையில் அமைந்தது தான் அரைக்காலனிய இலங்கை.
இரட்டைத் துருவ உலக ஒழுங்கமைப்பு நிலவிய காலத்தில் அணிசேரா நாடுகள் என தம்மை அழைத்துக் கொண்ட நாடுகளும் அவற்றின் அடிமைத் தரகு ஆளும் வர்க்கங்களும் இரண்டு ஏகாதிபத்திய முகாம்களில் ஏதோ ஒரு முகாமை சார்ந்து இயங்கியவர்களேயாவர்.
எழுபதுகள் வரை உள்ளுர் சிறு தொழிற் துறையை ஊக்குவித்தும் பெருவீத தொழிற் துறையை ஏகாதிபத்தியவாதிகளிடம் விட்டு வைத்து விடுவதுமான பொருளாதாரக் கொள்கையை SLFP கடைப்பிடித்தது.
இந்த அளவிற்குத் தான் அதனுடைய தேசிய தொழிற்துறை பாசம் இருந்தது.
இந்த மாய மானைக் கண்டு மயங்கித்தான் நமது சீன வீரர்கள் இக் கட்சியை தேசிய முதலாளித்துவக் கட்சி என வரையறை செய்து ஈழப் பிரிவினையை எதிர்த்து எதிரிகளுடன் ஐக்கியப்பட்டனர்.
அதேவேளை ஐதேக UNP- முற்றிலுமாக நாட்டை ஏகாபத்தியத்திடம் அடகு வைக்கும் கொள்கையை கொண்டிருந்தது.
ஆனால் 1977 இல் திறந்த பொருளாதாரக் கொள்கை ஐதேக ஆட்சியில் ஜேஆர் தலைமையில் அமுல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இவ்விரு கட்சிகளுமே ஒரே பாதையில் தான் பயணித்து வருகின்றன.
எந்தளவிற்கு எந்தளவு இந்த அரைக்காலனிய அரசியல் அடிமைத்தனத்திற்கும், உலகமய பொருளாதார அடிமைத்தனத்திற்கும் சிங்களம் உள்ளாக்கப்பட்டு வந்ததோ. அந்தளவிற்கு அந்தளவு உள்நாட்டு அடக்குமுறையும், தேசிய இன ஒடுக்குமுறையும் அரசு பாசிசமயப்படுவதும் வளர்ந்து வந்துள்ளன.
இதனால் இலங்கையின் உள்முரண்பாடுகள் அந்நாடு கடைப்பிடிக்கும் அந்நிய சார்பு அரசியல்- பொருளாதார-வெளிவிவகாரக் கொள்கைகளின் நேரடி விளைவாகும்.
இதனை மூடி மறைப்பதற்கான ஒரு கருத்தியல் ஆயுதமாகத்தான் பௌத்த சிங்கள பேரினவாதம் கையாளப்பட்டு வருகின்றது.
ஈழத்தமிழின முதலாளித்துவ தேசிய இன வாதிகள் தமது வர்க்க இயல்பும்,ஏகாதிபத்திய தாச வசதியும் கருதி இரண்டாம் அம்சத்தையே உயர்த்திப் பிடிக்கின்றனர்.
முதல் அம்சத்தை மூடி மறைக்கின்றனர்.
ஆனால் முதல் அம்சமே முக்கியமானது ஆகும்.
சிக்களத்தின் இந்த போக்கு, அரசியல் அதிகாரம் எந்த வர்க்கத்தின் கைகளில் இருக்கின்றது என்பதால் தீர்மானிக்கப்படுகின்றது..
இலங்கையின் அரசியல் அதிகாரம் சிங்கள தரகு முதலாளிய அரைநிலவுடமை வர்க்கங்களின் கையில் இருக்கின்றது.இந்த வர்க்க சக்திகளுக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் இருக்கும் தொப்புள் கொடி உறவு தான்
இக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்படுவதற்கான காரணமாகும்.
இதனால் ஈழ தேசிய இனப்பிரச்சனையில் மூன்று அம்சங்கள் இருக்கின்றன;
1) ஒன்று ஒட்டுமொத்த இலங்கை நாட்டையும் ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து விடுவிக்கின்ற விடுதலைப் பிரச்சனை;
2) ஒடுக்கும் சிங்கள தேசத்திடம் இருந்து ஈழ தேசம் விடுதலை பெறும் தேசியப் பிரச்சனை;
3) அ) பிரிவினை அல்லாத வழியில் இப்பிரச்சனை தீக்கப்படக்கூடிய வாய்ப்பு எழுமானால் பிரிந்து செல்லும் உரிமையை அங்கீகரித்த புரட்சிகர வர்க்கங்களின் இலங்கை மக்கள் ஜனநாயகக் குடியரசை புரட்சிகரப் போராட்டத்தின் மூலம் அமைத்தல்,அத்தகைய வாய்ப்பு அற்றுப்போன இன்றைய சூழ்நிலையில் ஈழம் பிரிந்து சென்று ஈழமக்கள் ஜனநாயகக் குடியரசை அமைத்துக் கொள்ளும் புரட்சிகரப் போராட்டம், பொது வாக்கெடுப்பு தழுவிய ஜனநாயகப் பிரச்சனை.
ஆ) மேற்குறித்த இரு நிலைமைகளிலும் மலையகத் தமிழர்களின் மாநில சுயாட்சி, இஸ்லாமியத் தமிழர்களின் பிரதேச சுயாட்சி, ஜனநாயக வழியில் உத்தரவாதம் செய்வதற்கான போராட்டத்தை தொடரும் இன மத சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைப் பிரச்சனை.
சிங்களத் தரகு வர்க்கங்களும் பொருளாதார உலக மயமும்.
போலி அதிகாரக் கைமாற்றம் நடந்து முடிந்த கையோடேயே இலங்கைப் பொருளாதாரத்தை வழிகாட்டியும் நெறிப்படுத்தியும் வந்தது உலக வங்கி ஆகும்.ஆக தேசத் தந்தை டி.எஸ்.சேனநாயக்கா முதல் ரணில் மைத்திரி பாசிசம் வரை இலங்கையின் ஆட்சி உலக வங்கியின் ஆட்சிதான்.
உலக வங்கியின் வரலாறு:
1916 ஆம் ஆண்டில் லெனின் எழுதி 1917 இல் வெளியிட்ட ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் என்கிற நூலில் ஏகாதிபத்தியத்தின் தனி விசேசமான இயல்புகளை பின் வரும் 5 அம்சங்களில் வரையறை செய்தார் . அந்த வரையறை வருமாறு:
1) பொருளாதார வாழ்வில் தீர்மானகரமான பங்காற்றும் ஏகபோகங்களைத் தோற்றுவிக்கும்படியான உயர்ந்த கட்டத்துக்கு உற்பத்தியின் ,மூலதனத்தின் ஒன்று குவிப்பு வளர்ந்துவிடுதல்;
2) வங்கி மூலதனம் தொழிற்துறை மூலதனத்துடன் ஒன்றுகலத்தலும், இந்த ``நிதி மூலதனத்தின் `` அடிப்படையில் நிதியாதிக்க கும்பல் உருவாகுதலும்;
3) பண்ட ஏற்றுமதியில் இருந்து வேறுபடுத்தப்பட வேண்டியதாகிய மூலதன ஏற்றுமதி தனி முக்கியம் பெறுதல்
4) சர்வதேச ஏகபோக முதலாளித்துவக் கூட்டுகள் உருவாகி , உலகையே இவை தமக்கிடையே பங்கிட்டுக்கொள்ளுதல்;
5) மிகப்பெரிய முதலாளித்துவ அரசுகளுக்கிடையே அனைத்து உலகப்பரப்பும் பங்கிடப்பட்டுக் கொள்ளுதல் நிறைவுறுகிறது.
முதலாளித்துவத்தின் வளர்ச்சியில் எந்தக்கட்டத்தில் ஏகபோகங்கள்,நிதி மூலதனம் ஆகியவற்றின் ஆதிக்கம் நிலை நாட்டப்படுகின்றதோ, மூலதன ஏற்றுமதி முனைப்பான முக்கியத்துவம் பெற்றுவிட்டதோ, சர்வதேச ரஸ்டுகளுக்கிடையில் உலகம் பங்கிடப்படுவது தொடங்கியுள்ளதோ, உலகின் நிலப்பரப்பு அனைத்தும் மிகப் பெரிய முதலாளித்துவ அரசுகளுக்கிடையே பங்கிடப்படுவது நிறைவு பெற்றுவிட்டதோ, அக்கட்டத்திலான முதலாளித்துவமே ஏகாதிபத்தியமாகும். (லெனின் நூல்திரட்டு 2(4) ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் முன்னேற்றப் பதிப்பகம்- 1977 பக்கம் 142)
இவ்வியல்பு காரணமாக ஏகாதிபத்திய முரண்பாடானது,நிதி மூலதன ஏற்றுமதிக்கும்,மூல வளத்திருட்டுக்கும்,சந்தைக் கைப்பற்றலுக்குமான கொள்ளைக்கார நாடு பிடிக்கும் போர்களுக்கும்,இறுதியில் உலக மறுபங்கீட்டு உலகப் போருக்கும் இட்டுச் செல்லும் என எச்சரித்தார்.
உலகப் பெருமந்தம் காரணமாக உலக மறுபங்கீட்டிற்காக மூண்ட முதல் உலகப் போரின் அநுபவங்கள் லெனின் ஆய்வால் அரசியல் விஞ்ஞானமாகின.
28 ஜூலை 1914 இல் ஆரம்பித்து, 70 இலட்சம் பொது மக்களின் உயி குடித்து 11 நவம்பர் 1918 இல் முடிவுக்கு வந்தது இக்கொடிய கொள்ளைக்காரப் போர். .
இந்த யுத்தத்தில் போர் புரிந்த நாடுகளின் கம்ஜூனிஸ்ட் கட்சிகளில் தாய் நாட்டைக்காப்போம் என்று முழங்கி ஏகாதிபத்திய யுத்தத்தில் பங்கேற்கும் திருத்தல் வாதப்போக்கு உருவாகியது.லெனினியமோ உலகப்போரை உள் நாட்டு யுத்தமாக மாற்றவேண்டுமென முழங்கியது. இச்சரியான யுத்த தந்திரத்தின் விளைவாக 1917 இல் ரசிய சோசலிசப் புரட்சி வெற்றி வாகை சூடியது.
இனிமேல் யுத்தம் வராது என மக்களுக்கு சத்தியம் செய்து எடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளையும் மீறி ஜேர்மனியின் கிட்லரின் நாசிச பாசிச ஐரோபிய விரிவாதிக்க தேசிய வெறியை எதிர்த்த இரண்டாம் உலப்போர் 1939 இல் ஆரம்பித்து 1945 இல் முடிவுக்கு வந்தது.இந்தப் போரில் தோழர் மா ஓ சே துங் கடைப்பிடித்த சரியான யுத்த தந்திரம் காரணமாக ஒக்ரோபர்1, 1949 இல் மக்கள் ஜனநாயக சீனக்குடியரசு உதித்தது.
ஹிட்லரின் பாசிசம் சோவியத் செஞ்சேனையின் மாபெரும் தியாகத்தாலும், தோழர் ஸ்ராலினின் தலைமத்துவத்தாலும் தோற்கடிக்கப்பட்டது. உலகம், ஏகாதிபத்திய முகாம் சோசலிச முகாம் என இரு இயல்பான பகைமை முகாம்களாக இறுதியில் பிரிந்தது.
முதல் உலகப் போரில் தாமதமாக பங்கெடுத்துக் கொண்ட அமெரிக்கா யுத்தத்தால் நொடிந்து போன நாடுகளின் நிலைமையைப் பயன்படுத்தி,ரசிய சோசலிசப் புரட்சிக்கு அஞ்சி, உலகை தனது மேலாண்மையின் கீழ் கொண்டு வர முயன்றது.
இந்த புறவயச் சூழலில் தான் முதலாளித்துவத்தின் அந்திமக்காலத்தை நீடிப்பதற்காக `அறிவார்ந்த முயற்சிகள்` அவசியப்பட்டன. இதன் விளை பொருள்தான் கெயின்ஸ் [John Maynard Keynes (1883 - 1946)]
என்கிற ஆங்கிலேய முதலாளித்துவ பொருளாதார கல்விமான்.
இவர் முதலாளித்துவ நெருக்கடிகள் சந்தை நிலைமகளால் தாமாகவே சரி செய்யப்படும் என்கிற `மூலச்சிறப்பு மிக்க ` முதலாளித்துவ பொருளாதாரக் கோட்பாட்டோடு உடன்பாடு காணவில்லை.``அதற்கிடையில்- அதுவரை காத்திருந்தால்- நாம் இறந்து போவோம்`` என எள்ளி நகையாடி பிரகடனம் செய்தார். இதற்கு இடை நடுவில் முதலாளித்துவ பொருளாதாரத்தைப் பாதுகாக்க சமரச சன் மார்க்கம் ஒன்றை கண்டறிந்தார்.
இந்த குறளி வித்தைக்காரனின் அந்த மந்திரக்கோல் என்னவெனில் `சந்தைப் பொருளாதாரத்தை நெறிப்படுத்தும் அரச தலையீடு`.
இரு உலக யுத்தங்களையும் அதன் பொருளாதாரக் காரணிகளையும் அதற்கு காரணமான முதலாளித்துவ உற்பத்தி முறையின் அடிப்படை முரண்பாடுகளையும் இயல்பாகவே இவர் நிராகரித்தார், அல்லது மூடி
மறைத்தார்.
உள் நாட்டில் அரச தலையீட்டுப் பொருளாதாரம், சமூக நல அரசு, எஞ்சிய உலகின் மீது அந்நிய நிதி மூலதன ஆட்சிக்கு பரிந்துரை செய்தார்.
இவர் தான் உலக வங்கியின் தந்தை.
இந்த `உலக வங்கி` (WORLD BANK) , அமெரிக்க பிரித்தானிய அந்நிய நிதி மூலதன வங்கியே! இதன் உலக வர்த்தக வங்கியே International Monitery Fund (IMF) ஆகும்.
ஏகாதிபத்தியத்தை யுத்த வீழ்ச்சியில் இருந்து மீட்க கை கொடுத்த தெய்வம் கெயின்ஸ்,
தெய்வம் நின்று கொல்லுமாம்: கெயின்ஸ் 1977 இல் கொல்லப்பட்டார்! இவரது குறளிவித்தைகள் அனைத்தும் மீண்டெழுந்த 1977 உலகப் பொருளாதார நெருக்கடியில் எரிந்து சாம்பராகின.
இவரின் சவக்குழுயில் பிறந்ததுதான் நவ தாராளவாதப் பொருளாதார கோட்பாடு. இக் கோட்பாடு அந்நிய நிதிமூலதனத்தின் நலன்களுக்கு எதிராக இருக்கும் அனைத்து தேசியச் சுவர்களையும் தகர்த்தெறிவதைக் குறிக்கோளாகக் கொண்டதாகும்.இதனை அமூலாக்க ஏகாதிபத்திய நிதி மூலதன இரட்டை வேட்டை நாய்களான, உலக வங்கியும், ஐ.எம்.எஃப் உம், சுதந்திர தேசங்களை,அரைக்காலனிய நாடுகளை மென்மேலும் குதறி குருதி குடித்து `நிதி மூலதன காட்டு மிராண்டிக் காலனியாதிக்கத்துக்கு` அடிமைப்படுத்த ஏவப்பட்டன.
அமெரிக்காவில் ரொனால்ட் ரேகனும், பிரித்தானியாவில் மார்க்கிரட் தச்சரும் இதை உலகப் பரப்பின் மீது நிலை நிறுத்தினர். உலகமயம் என்றால் என்ன?
1) உலகமய பொருளுற்பத்தி முறையானது அடம் ஸ்மித்தின் ஒரு தொழிற்சாலைக்குள் அடங்கிய வேலைப்பிரிவினையை சர்வதேச வேலைப்பிரிவினையாக மாற்றியுள்ளது. ஓரு பண்டம் முடிவுப் பண்டம் ஆகும் தருணத்துக்கு முன்னால் அதன் பாகங்கள், பல்வேறு நாடுகளில் உருவாக்கப்பட்டு வேறொரு நாட்டில் ஒருங்கு சேர்க்கப்படுகின்றன. ஒரு நூறு உலக ஏக போக நிறுவனங்களின் காலனித் தொழிற்சாலைகளாக முழு உலக நாடுகளும் மாறிவிட்டன.
2) இந்தத் தொழிற்சாலை அந்தஸ்த்துக்காக அரைக்காலனி, மற்றும் சார்பு நாடுகளின் ஆளும் கும்பல்கள் போட்டியிடுகின்றன.தம் நாடுகளை ஏலம் போட்டு விற்கின்றனர். Make in India, Make In Sri Lanka என வாங்குவோர் விதித்த விலைக்கு விலை பேசாமலே விற்கின்றனர்.
3) இந்த உற்பத்திமுறையின் விளைவான பண்டங்களை பரிமாற்றவும், விநியோகிக்கவுமான பொறிமுறைகள்,மற்றும் சர்வதேச நிதிக் கொடுக்கல் வாங்கல் பொறிமுறைகள், பங்குச் சந்தை, Hedges Funds என்பவை
சேவைத்துறைகள் என அழைக்கப்படுகின்றன.
4) முகியமாக இந்த பொறிமுறை அனைத்தும் அந்நிய நிதி மூலத்தின் அசுரப் பற்களுக்குள் சிக்கிக் கிடக்கின்றன.
5) ஒரு ஏக போக நாடோ, ஒரு ஏக போக நிறுவனமோ, ஒரு ஏகபோக வங்கியோ இச்சூதாட்டப் பொறிமுறையில் சரிந்து விழுந்தால் முழு உலகமும் அதற்கு விலை கொடுக்கின்றது.
6) உலக மயத்தின் ஆதரவாளர்கள் இதில் வெற்றி அடைவோர் தோல்வி பெறுவோர் (Winners and Loosers) என இதன் விளைவுகளைப் பாகுபடுத்துகின்றனர்.
கேள்வியெல்லாம் ஒரு நூறு ஏக போக நிறுவனங்களின் நலனுக்காகாக, கோடான கோடி மக்கள், நாம் வாழும் ஒரே பூமிக் கிரகம், நாசமடைந்து தோல்வியடைந்து நிர்மூலமாக வேண்டுமா? இதைத்தடுக்க எழாமல் சோர்ந்திருப்போமா?
============================================================== செழுமை 08 02 2016 பாகம் (2) இலங்கையில் உலகமயம் (தொடரும்)
``இந்த மண் எங்களின் சொந்த மண் இங்கிதை வெல்ல யார் வந்தவன்`` என்று எழுதிய புலவர்கள் இன்று எம்மோடு இல்லை, அதற்காக போராடிய தலைவர்களும், தோழர்களும் கூட நம் கூட இல்லை.புனர்வாழ்வு பெற்றவர்களும் தூக்குக்கயிற்றில் தொங்குகிறார்கள் அல்லது புற்று நோயால் சாகின்றார்கள் , துவம்சம் செய்யப்பட்டிருக்கின்றோம்!
ஆனால் மாவீரர் வம்சம் இருக்கின்றது, எம் தேசத்துக்கு விடுதலையின்
வாஞ்சை இருக்கின்றது.
மாண்ட நம் மக்களே, மாவீரத் தோழர்களே, மற்றும் மரணித்த ஈழப்போராளிகளே செவ்வணக்கம்.
தமிழீழத் தாயகத்தின் விடுதலைக்காக தாங்கள் விதைத்த உடலை, எம் விவசாய பூமியெங்கும் குளம் குளமாய் நிறைந்து உறைந்த குருதி வெள்ளத்தை, உறவாலும்- பொருளாலும் தாங்கள் இழந்த உடமையை,
அலைந்து திரிந்து,அழிந்து ஒழிந்த, அகதி வாழ்க்கையை, நம் சொந்தத் தவறுகளுக்கு தாங்கள் கொடுத்த விலையை, நீண்ட போரை எதிர் கொள்வதில் தாங்கள் காட்டிய வீரத்தை, தீரத்தை, அவற்றை வகுத்தெடுத்து படைத்தளித்த கலையை, பண்பாட்டை, பக்குவத்தை, மனோ தைரியத்தை, மானுட வலிமையை,ஒரே வார்த்தையில் தங்கள் புரட்சிகர ஆற்றலை மதித்து, மனதில் பதித்து, துதித்து ஆன்மீக ஆராதனை நடத்தும் இப் புனிதப் பெருநாள்,
ஈழ விடுதலைக்கான கடமையையும், பாதையையும், பணிகளையும் பிரகடனம் செய்யும் புரட்சித் திருநாளுமாகும்.
அவ்வாறுதான் அது இதுகாலமும் இருந்து வந்திருக்கின்றது, அவ்வாறுதான் அது இனிமேலும் இருக்கவேண்டும், இருக்கும்.அத்திருநாளின் இவ்வருடப் பிரகடனம்,
ஈழ தேசிய ஒற்றுமையை இறுகப்பற்றுவோம் என்பதாகும். இதுவே தான், இக்கட்டத்தில் நாம் மீண்டெழுவதற்கான ஒரே உந்துகோல் ஆகும்.
இவ்வாண்டு மாவீரர் நாள் ஒரு தனிக்குறிப்பான, முற்றிலும் பிரத்தியேகமான, இதற்கு முன் என்றும் இருந்திராத ஒரு புதிய சூழலில் பிறக்கின்றது. இப்புதிய சூழல் குறித்த தனிக்குறிப்பான ஆய்வும் மதிப்பீடும்,அதன் அடிப்படையில் அமைந்த செயல் தந்திர திட்டமும் இல்லாமல் ஈழவிடுதலைப் புரட்சிகர இயக்கத்தை தலைமையேற்று நடத்த முடியாது.ஆதலால் புதிய ஈழப் புரட்சியாளர்களாகிய நாம் எமது ஆய்வையும், செயல்தந்திர திட்டத்தையும், பணிகளையும், முழக்கங்களையும் மக்கள் முன் வைக்கின்றோம்.
ரணிலும் மைத்திரியும் போர்க்குற்றவாளிகளே!
ஈழ தேசிய இன ஒடுக்குமுறை அநீதி யுத்தத்தை எதிர்த்த விடுதலைப் புலிகளின் நீதி யுத்தம், பிரிகேடியர் பால் ராஜ் தலைமையில் முன்னூறு ஆண்டுகால இராணுவ ஆக்கிரமிப்பின் அடிமைச் சின்னமாக விளங்கிய
ஆனையிறவுப் பெரும் படைத்தளம் நிர்மூலமாக்கப்பட்டு, இராணுவ பலச் சமநிலையில் விடுதலைப் புலிகள் மேலோங்கியது யுத்த நிலைமையில் ஏற்பட்ட திருப்பு முனை ஆகும்.
இதன் அரசியல் விளைவாகவே நோர்வே பேச்சுவார்த்தை ஆரம்பமானது. அப்போது ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்த ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக இருந்தார்.எதிர்க்கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்தார்.அதாவது சர்வ வல்லமை உள்ளவராக இருந்தார்!
இப் ``பேச்சுவார்த்தைக் காலம்`` முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு , அரசியல் தயாரிப்பு செய்யப்பட்ட காலமாகும். அதாவது போராடி அழிக்கமுடியாத விடுதலைப் புலிகளை, சூதாடி அழிக்க திட்டமிடப்பட்ட காலமாகும். அடிப்படையில் இது இந்திய விரிவாதிக்க அரசின் திட்டம், அமெரிக்கா இதை ஏற்றுக்கொண்டு தனது அமைதி முகம் நோர்வேயை முன் நிறுத்தி நிறைவேற்றியது, இதன் உள்ளூர் தரகன் தான் ரணில் விக்கிரமசிங்கே!
1) Regaining Sri Lanka திட்டம் 2) எரிக் சொல்கெய்யுமும், மெலிந்த மொற கொடவும், பீரீஸ்சும், வகுத்தளித்துக் கொடுத்து முன் மொழிந்த தீர்மானத்தை ``பாலா அண்ணை`` வழி மொழிந்த தேசத் துரோக -ஈழத்துரோக `அக சுயநிர்ணய கோட்பாடு 3) கருணா கருங்காலியை ஏவி நடத்திய புலிகள் இயக்க பிளவு, இவை அந்த அரசியல் தயாரிப்புக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய சதிகளாகும்.
உண்மையில் இனப்பிரச்சனைக்கு விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்பது இவர்களது நோக்கமாக இருந்திருக்கு மேயானால் , `உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில்`- ஈழப்பிரிவினைக்கு மாற்றாக புலிகள் தலைமை முன் வைத்த அதிகாரப் பரவலாக்க ISGA திட்டத்தில் பேரம் நடத்தி, ஒரு சமரச தீர்வுக்கு வந்திருக்க முடியும்.
ஆனால் அவ்வாறு நிகழ்வுகள் நடந்தேறவில்ல, ஏனென்றால் நோர்வே பேச்சு வார்த்தையை எதிரிகள் - குறிப்பாக இந்திய விரிவாதிக்க அரசு விடுதலைப் புலிகளை இல்லாதொழிப்பதற்கான ஒரு பொறியாக பாவித்தார்களே ஒழிய,குறைந்த பட்சம் அவர்களே சறுக்க வைக்கப்பட்டபோது, அரசியல் தீர்வுக்கான நெறியாகப் பாவிக்கவில்லை.
இக்காலத்தின் மாவீரர் தின உரையில் தான் தளபதி பிரபாகரன் பேச்சுவார்தையின் பேரால் ரணில் சர்வதேசப் வலைப் பொறியில் தம்மைச் சிக்க வைக்க முயலுகின்றார் எனக் குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்திய விரிவாதிக்க அரசியல் உளவுத்துறையின் (RAW)- தத்துவார்த்த அறிவு ஜீவிகள், ஈழப்பிரச்சனை குறித்த நிலைப்பாட்டில், ''அரபாத் இல்லாத பாலஸ்தீனமே, ஈழப் பிரச்சனைக்கு தீர்வு`` என்று கோட்பாடு வகுத்த போது,அவர்கள் ``பிரபாகரன் இல்லாத ஈழமே ஈழப் பிரச்சனைக்கு தீர்வு`` என திட்டம் தீட்டியுள்ளார்கள் என சுட்டிக்காட்டி- RAW ராமனுக்கு கொடும்பாவி எரிக்க அறை கூவினோம், அது செவிடன் காதில் ஊதிய சங்காகியது. முள்ளிவாய்க்காலில் ஆனந்தபுரத்தில் விசவாயுத்தாக்குதலில் ஈழத்து அரபாத்துக்களை இந்திய விரிவாதிக்க அரசு சர்வதேச போர் விதிச் சட்டங்களையும் மீறி படுகொலை செய்த போது இது உண்மையாகியது..
ரணில் இந்தப் போர்ப் பாதையில் தான் பயணித்தான்.
ஆக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு சூதாட்ட போர்க்களம் வகுத்த ரணில் விக்கிரமசிங்கே போர்க்குற்றவாளியே!
முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி கொலை பாதக கோர நாட்களில் மைத்திரி பால சிறிசேனா தான் இராணுவ அமைச்சன்!.
அமெரிக்க இந்திய அரசியல், ரசிய சீன இராணுவ, உதவியில் ஈழ இனப்படுகொலையை நடத்தி முடித்து யுத்தத்தில் வெற்றி கொண்ட பக்சபாசிஸ்டுக்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சி நிலையைக்
கவனத்தில் எடுத்து சீன- ரசிய சார்பு வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடிக்க முயன்றனர்.இதனை முறியடிக்க அமெரிக்காவும் இந்தியாவும் ஆட்சிக் கவிழ்ப்புக்கு திட்டமிட்டன.
மூன்றாவது உலக மறுபங்கீட்டு போர்க்காலத்தில் அமெரிக்காவின் ஆசிய பசுபிக் பிராந்திய போர்த்திட்டத்தின் காவல் நாயாக` இந்திய விரிவாதிக்க அரசு கொம்பு சீவி நிறுத்தப்பட்டிருப்பதால், ஏற்கெனவே 1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் இந்திய விரிவாதிக்கத்தின் காலனியாகிவிட்ட இலங்கையின் பக்ச பாசிச ஆட்சியாளர்கள் இந்த தேர்வுச் சுதந்திரத்தையும் இறுதியாக இழந்தனர்.
இது மட்டுமல்ல, உலகப் பொருளாதார முறைமையின் ஒரே ஒழுங்கு ஏகபோக நிதியாதிக்க கும்பல்களின் நிதி மூலதன சேவகம் என்று ஆகிவிட்டதால் முன்னர் போல் சிறுவீத உள்ளூர் தொழில் துறை, அந்நிய சார்பு வர்த்தகத் துறை என்கிற இரு உற்பத்தித்துறை சார்ந்த, இரு வர்க்க முகாம்கள் கூட இன்று இல்லை!
இதன் விளைவாகத்தான் இருகட்சி போலிப்பாராளமன்றவாத ஜனநாயகம் அம்பலமாகி ``ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும்`` ஐக்கியப்பட முடிந்தது. `மைத்திரியும் 40`திருடர்களும்` ஐக்கிய தேசியக் கட்சிக்கு தாவி
ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சவைத் தோற்கடித்து மைத்திரி ஜனாதிபதியானார்.இந்தக்கூட்டு பொதுத்தேர்தலிலும் அளிக்கப்பட்ட வாக்குகளில் பெரும்பான்மை வாக்கு பெற்று ஆட்சி அமைத்தது.
வெட்கம் கெட்ட முறையில் இதை அவர்கள் தேசிய அரசாங்கம் என்று வேறு அழைக்கின்றனர்.சிங்களம் அரசியல் யாப்பின் படி எப்படி `சோசலிச ஜனநாயக குடியரசோ` அவ்வாறே இது தேசிய அரசாங்கமும் அதன் ஆட்சி நல்லாட்சியுமாகும்!
இதனால் உலக மறுபங்கீட்டில் ரசிய சீன ஏகாதிபத்திபத்திய சார்புப் போக்கை வீழ்த்தி. அமெரிக்க இந்திய சார்பு ஆட்சியாளார்களை அரியணையில் அமர்த்தியது ஆட்சிக்கவிழ்ப்பே!
ஆட்சிக்கவிழ்ப்பும் ஐ.நா.துரோகமும்:
இந்த ஆட்சிக்கவிழ்ப்பு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக் குற்றத்தில் இருந்து தன்னைத் தப்புவித்துக்கொள்ள, சிங்களம் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் தனது `அரைக்காகாலனிய சுதந்திரத்தையும்` பலிகொடுத்த செயலாகும்.அமெரிக்க இந்திய நலன்களுக்கு அமைய, பணிந்து சேவகம் புரியும் புதிய காலனியாக ரணிலும் மைத்திரியும் இலங்கையை விலை கூறி விற்றதன் விளைவாக, ஏகாதிபத்திய தொண்டு நிறுவனம் ஐ.நா வும் ஈழ தேசிய இனப்படுகொலைப் போர்க்குற்றத்துக்கு சர்வதேச நீதி விசாரணை கோரிய மக்களுக்கு துரோகம் இழைத்து, கொலையாளிகளையே நீதிபதிகளாக்கி சிங்களத்தின் உள்ளக விசாரணை என்கிற மோசடியை ஏற்று மீண்டும் ஒரு தடவை துரோகமிழைத்தது.ஆரம்பம் முதல் நாம் தொடர்ந்து கூறிவந்த வாறு ஐ.நா.பாதையில் தமிழர்களுக்கு நீதி பெற்றுத்தருவோம் என மக்களை வழி நடத்திய ஏகாதிபத்திய தாசர்கள் இறுதியில், நட்டாற்றில் விட்டு விட்டனர் ஈழ மக்களை!.
ஆட்சிக்கவிழ்ப்பும் தேசிய ஒடுக்குமுறையும்:
மேலும் இந்த ஆட்சிக்கவிழ்ப்பு, சிங்களம் ஈழ தேசிய ஒடுக்குமுறையைத் தொடரும் வரை தனது அரைக்காலனிய `சுதந்திரத்தைக்` கூட தக்கவைத்துக் கொள்ள இயலாது என்பதற்கு அப்பட்டமான எடுத்துக்காட்டாகும். போர்க்குற்றத்தில் இருந்து தப்புவதற்காக சிங்களம் இன்று கொடுத்துள்ள விலை அளப்பரியது.
உலகமய உலக மறு பங்கீட்டு மூன்றாம் உலகப் போர்த் தயாரிப்புக் கால கட்டத்தில் அமெரிக்க இந்திய முகாமின் தென்னாசிய இராணுவத்தளமாக சேவகம் செய்ய சிங்களம் பணிய வைக்கப்பட்டு விட்டது.
இந்நிலைக்கு சிங்களம் ஆளானதற்கு மூல காரணம் அது தனது சொந்த ஈழ தேசத்துக்கு ஜனநாயகத்தை வழங்க - சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க என்றும் மறுத்து வருவதே ஆகும்.
நல்லாட்சியும் 2016 நிதி நிலை அறிக்கையும்:
ரணில் மைத்திரி பாசிஸ்டுக்களின் நல்லாட்சி, இலங்கையின் 2016 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுவிட்டது.இதை `மூன்றாவது சீர்திருத்த அலை` என ஏகாதிபத்தியவாதிகள்
கொண்டாடுகின்றனர்.
முதலாவது அலை - மார்கிரட் தச்சர், ரொனால்ட் ரேகன் கொள்கைகளை தழுவி- எழுபதுகளில் ஜே.ஆர்.ஜெயவர்தனே அமூலாக்கிய `திறந்த பொருளாதாரக் கொள்கை`.
இரண்டாவது அலை- நோர்வே பேச்சுவார்த்தை, ISGA அதிகாரப்பகிர்வு காலத்தில், புலிகளும் ரணிலும் IMF இடம் கடன் வாங்கிய Regaining Sri Lanka திட்டம்.
இந்த மூன்றாவது அலையில்-ஊடகப் பயங்கரவாதிகள் எடுத்துச் சொல்லாத- முக்கிய அம்சம் இராணுவச் செலவினம்:
According to the Appropriation Bill that was tabled in Parliament on Friday, the Government has allocated Rs. 285 billion for the Ministry of Defence for 2015, which is a hike of 12.25% in comparison to this year (2014). The Defence budget will remain high next year -2016 - also The defence allocation is more than Rs. 306 billion.
அதாகப்பட்டதாவது: `பயங்கரவாதப் போர் 2009 இல் முள்ளிவாய்க்காலில் முடிவுற்று` 5 ஆண்டுகளுக்கு பின்னால், 2014 இல் பக்ச பாசிஸ்டுக்கள் தமது 2015 நிதி நிலை அறிக்கையில் இராணுவச் செலவினத்தை 12.25% ஆல் அதிகரித்தார்கள்.அதன் தொகை Rs. 285 billion ஆகும்.மொத்த தேசிய உற்பத்தியில் இது 2.5% ஐ அண்மித்ததாகும்.இதே விகிதாசாரத்தில் தான் பிரித்தானியாவின் இராணுவச் செலவினமும் இருக்கின்றது! இது
போதாதென்று ரணில் மைத்திரி பாசிசம் 2016 ஆண்டுக்கான இராணுவச் செலவினத்தை Rs. 306 billion இற்கு மேலாக (3%) உயர்த்தியுள்ளது!
உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து 6 ஆண்டு களுக்கு பின்னால் இராணுவச் செலவினத்தில் 15 சத வீத அதிகரிப்பு ஏன்?
அமெரிக்க இந்திய ஆட்சிக்கவிழ்ப்பின் மூலம், அரசியல் அதிகாரத்தை சதித்தனமாக கைப்பற்றிய ரணில் மைத்திரி கும்பல், உலகமய உலக மறு பங்கீட்டு மூன்றாம் உலகப்போர்த் தயாரிப்புக் கால கட்டத்தில் அமெரிக்க இந்திய முகாமின் தென்னாசிய இராணுவத்தளமாக சேவகம் செய்யவே இந்த அதிகரிப்பைச் செய்துள்ளது.
இதனால் இது தேசிய அரசாங்கமும் அல்ல, நல்லாட்சியும் அல்ல என்பதை தானே நிரூபித்து விட்டது .
ஆட்சிக்கவிழ்ப்பும் நல்லாட்சி நாடகமும்.
இவ்வாறு ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் உலகமய உலக மறு பங்கீட்டு மூன்றாம் உலகப் போர்த் தயாரிப்புக் கால கட்டத்தில் அமெரிக்க இந்திய முகாமின் தென்னாசிய இராணுவத்தளமாக சேவகம் செய்ய தயாராகிவிட்ட சிங்களத்தின் உண்மை நிலையை மூடி மறைக்க ஆடும் நாடகம் தான் இந்த `நல்லாட்சி`.இதனால் தான் ஏகாதிபத்திய பயங்கரவாத ஊடக குற்றவாளிகள் இந்த நல்லாட்சியில், இலங்கையில் ஆறு, குளம், நதி, சமுத்திரம் எங்கும் பாலும் தெளிதேனும் பாய்வதாகவும், மக்கள் பாகும் பருப்பும் உண்பதாகவும், சம்பந்தன் சிங்கக் கொடி பிடிப்பதாகவும்,ஜனாதிபதித் தேர்தலில் புரட்சி நடந்ததாகவும், பாராளமன்றத்தேர்தலில் ஜனநாயகம் மலர்ந்ததாகவும்
கூறிவருகின்றனர்,சோழியன் குடும்பி சும்மா ஆடாது!
நல்லாட்சியும் நாட்டு நடப்பும்:
ரணில் மைத்திரி கும்பலும் ஊடகப் பயங்கரவாதிகளும் நல்லாட்சி பற்றி எவ்வளவு தான் பிதற்றினாலும் நாட்டு நடப்பு அதற்கு மாறாகவே, எதிராகவே உள்ளது.
முள்ளிவாய்க்காலில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டதாக பிரகடனம் செய்த பக்ச பாசிஸ்டுக்களின் பக்கத் துணைவராக இருந்த ரணில் மைத்திரி கும்பல் ஈழ தேசிய அழிப்பை வேறு வகையில் தொடர்ந்து வருகின்றது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னால், ஈழ தேசத்தின் முடிவை அறிய ஈழத்தமிழ் வாக்கெடுப்பு நடத்த அது மறுத்து வருகின்றது.
போர்க்குற்றவாளிகளான தம்மீது நீதி விசாரணையைத் தவிர்க்க முழு நாட்டையுமே அமெரிக்க இந்திய அணிக்கு விலை கூறி விற்றுவிட்டது.
போர்க்காலத்தில் கைப்பற்றப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்படவில்லை.
வாழ் நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மீள் குடியேற்றப்படவில்லை.
ஈழக் கடல் தொழிலாளர்கள் வாழ முடியவில்லை.
ஆகமொத்தம் ஈழ தேசத்தின் விவசாயப் பிரச்சனை தீர்க்கப்படவில்லை.
ஈழ தேசிய இன ஒடுக்குமுறை யுத்தம் உருவாக்கிய சமூகப் பிரச்சனைகளில் எவையும் தீர்க்கப்படவில்லை.
மாறாகா தீவிரப்படுத்தப்பட்டும் சீரழிக்கப்பட்டும் வருகின்றது.போதை வஸ்து பாவனை அதிகரித்துள்ளது.வக்கிரப் பாலியல் (PONOGRAPHI), பரவி வருகின்றது, ஈழ வித்தியா இவ்வாறு தான் வக்கிரப் பாலியல் படப்பிடிப்பு வர்த்தகத்துக்கு பலியாகி படுகொலை செய்யப்பட்டாள், இதில் இளம் சந்ததியினர், மாணவர்கள் குறிவைத்துத் தாக்கப்படுகின்றனர், இராணுவ முகாம்கள் விபச்சார விடுதிகளாக உள்ளன.இவை தவிர்ந்த அரசியல் வாதிகளின் விபச்சார விடுதிகளும் உள்ளன.அனந்தி இவர்களை கையும் களவுமாக கைப்பற்றி அம்பலப்படுத்தியுள்ளார். இவை சிங்களத்தின் அரசதிகார பலத்துடனேயே நடந்தேறி வருவதாக வடக்கு மாகாண முதல்வர் தொடர்ந்து கூறி வருகின்றார்.
முற்றும் துறந்த பாதிரிகள் தங்கள் மறை ஆசிரையை பாலியல் பலாத்காரம் செய்து பாழ் கிணற்றில் வீசுகின்றனர், ராமதாஸ் பாணியில்! ஒரு சிவில் சமூகமும் குரல் எழுப்பவில்லை தமது திருத் தந்தையர்களுக்கு எதிராக!நாதியற்றுக் கிடக்கின்றது சட்டம் ஒழுங்கு!! சிங்கள மாணவர்கள் போராடினால் மட்டும் நையப்புடைக்கின்றது.
யுத்தக் கைதிகள் பிரச்சனை கூட இன்னமும் தீர்வு காணப்படவில்லை.
இனப்படுகொலை யுத்தத்தின் இறுதி நாட்களில் போராளிகளை சரணடையுமாறு சிங்களம் கோரியது.அமெரிக்க அதிபர் ஒபாமா `விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைய வேண்டும்` என பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
ஒரு இலட்சத்து அறுபதினாயிரத்துக்கும் மேற்பட்ட ஈழ மக்களின் இனப்படுகொலை, விடுதலைப் புலிப் படையின் முக்கிய கள முனைத் தளபதிகள் குழு மீதான விச வாயுத் தாக்குதல், யுத்த தர்மம் அனைத்தையும் மீறி சிங்களம் இழைத்த போர்க்குற்றங்கள், இந்திய விரிவாதிக்க அரசு,அதனது தமிழக இன மானத் தொண்டர்கள்- புற முதுகில் குத்திய எண்ணற்ற செயல்கள், புலம் பெயர் தமிழ் விதேசிகளின் துரோகம்,நமது சொந்தத் தவறுகள், இவற்றின் இணை விளைவாக ஆயுதங்களை மெளனிக்கும் விடுதலைப்புலிகளின் அறிவிப்போடு யுத்தம் தற்காலிகமாக ஒய்ந்தது.
யுத்தம் ஓய்ந்த கையோடு யுத்தத்தின் அரச எதிர்ப்பு, நீதி யுத்தத் தரப்பினராகிய விடுதலைப் புலிப் போராளிகள் அனைவரும் நிரபராதிகளாக அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும், அது தான் சர்வதேச நியதி.
இரண்டு பெரும் உலக யுத்தங்களிலும், வியட்னாம் யுத்தத்திலும் இவ்வாறுதான் நடந்தது.
வியட் கொங் மக்கள் படையால்,அமெரிக்க போர் விமானத்தில் இருந்து தவறுதலாக சறுக்கி விழுந்த ஒரு அமெரிக்க `போர்வீரன்` யுத்தக்கைதி என்கிற அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டான்!
இந்த ஜென்மம் இப்போதும் படு பிற்போக்கு யுத்த வெறிப் பிரச்சாரகராக திகழ்கின்றது.
ஆனால் சிங்களம் போர்க் கைதிகளையும் படுகொலை செய்தது.பெண் கைதிகளை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தது.
நல்லாட்சி நாடகமாடும் ரணில் மைத்திரி பாசிச ஆட்சி, ஆறு ஆண்டுகள் கடந்தும் எஞ்சியுள்ளவர்களை விடுதலை செய்ய மறுத்து வருகின்றது.
இவர்களில் 217 பேர் கடந்த மாதம்சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை சிறைக் கூடங்களுக்குள் ஆரம்பித்தனர்.இப் போராட்டத்தை `சம்பந்தன் சுமந்திரன் சேனாதி` துரோகக் கும்பல் போலி வாக்குறுதி அளித்து முறியடித்தது.
சம்பந்தன் கைதிகளை வகைப்படுத்துகின்றான், அதில் முதல் வகையினர் ``பாரதூரமான குற்றம் இழைத்தவர்கள்``!
இதனால் போராளிகள் தம் அனைவரதும் (217), உடனடி விடுதலையை வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தை சிறைக்கூடங்களுக்குள் ஆரம்பித்தனர், தம்மை மீட்க போராடுமாறு மக்களுக்கு அறைகூவல் விடுத்தனர்.
போராளிகளின் இந்த அறைகூவலை ஏற்று 13-11-2015அன்று தமீழ மக்கள் கதவடைப்புப் போராட்டத்தில் இறங்கினர்.
அம்பாறை,திருகோணமலை,மட்டக்களப்பு,வவுனியா,மன்னார்,முல்லைத்தீவு,யாழ்ப்பாணம்,மலையகம் அடங்கலாக தமிழீழம் தம் வேங்கைகளை மீட்க வெறிச்சோடியது.
முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் மீண்டும் தமிழீழம் ஓரணியில் திரண்டது,திரட்டியவர்கள் யுத்தக் கைதிகளான விடுதலைப் புலிப் போராளிகள்.
இப்போதும் காதடைத்த சிங்களம், இந்த ஈழக் கதவடைப்புக்கு காது கொடுப்பதாகத் தெரியவில்லை.வழக்கம் போல போலி வாக்குறுதி அளித்து காது குத்தவே முயலுகின்றது.
எனவே `217, விடுதலை இயக்கத்தில்` நாம் இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டியுள்ளது.
முதலாவதாக, நாம் ஈழ தேசிய ஒற்றுமையை வளர்க்க வேண்டும் கட்டிக் காக்க வேண்டும்.ஓரணியில் திரட்ட வேண்டும்.
இரண்டாவதாக,நாம் உலகத் தொழிலாளர்களையும் ஒடுக்கப்பட்ட தேசங்களையும் அடிப்படையில் சார்ந்து நிற்க வேண்டும்.
மூன்றாவதாக, நாம் தொடர்ந்து போராட வேண்டும்,போராட்டத்தை பரவலாக்க வேண்டும்,தீவிரப்படுத்த வேண்டும்.
நான்காவதாக, இத்தனியொரு குறிக்கோளுக்காக சாத்தியமான அனைத்துச் சக்திகளோடும் ஐக்கியப்படவேண்டும்.
தென்னிலங்கையில் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற ஒரு குரல் எழுகிறது.யாழ்ப்பாணத்தில் - 217 விடுதலை இயக்கத்தில்- இஸ்லாமியத் தமிழர்கள் இணைந்துள்ளனர்.இஸ்லாமிய சிறு உடமை வியாபாரிகளின் பங்களிப்பு இல்லாமல் ஈழக்கதவடைப்பு போராட்டம் இந்த மாபெரும் வெற்றியை ஈட்டியிருக்க முடியாது.முடியவே முடியாது!தமிழகத்தில் கடந்த வாரம் இண்டூரில் நடை பெற்ற ஈழ ஆதரவுப் பொதுக்கூட்டத்தில் ம.ஜ.இ.கழகத்தின் பிரதான பேச்சாளர் தோழர் மனோகரன், ஈழ யுத்தக் கைதிகள் விடுதலைக்கு குரல் எழுப்பி ,கழகம் சார்பாக தமிழக மக்களை தட்டி எழுப்பினார்.
ஒருகணம் நமது கொள்கை கோட்பாடுகளை யெல்லாம் துறந்த துறவிகளாகி மனித உரிமையாளர்களாக மாறி நியாயம் கோரக் கூடுமெனில் கூட, தன் ``காணாமல் போன`` தமையனுக்காக கதறி அழுத ஜெசிக்காவையும் அவளுக்கு ஒரே அடைக்கலமான தாயையும் இன்னமும் ஏன் பிரித்து வைத்து இருகின்றீர்கள் ? இவர்களால் உங்களது தேசிய பாதுகாப்புக்கு என்ன அச்சுறுத்தல்? நாசமாகுக இந்த நல்லாட்சி!
மக்களைச் சார்ந்து நின்று போராடினால் `217 விடுதலை இயக்கத்தில்` நாம் வெற்றி பெறுவது திண்ணம்.
ஆட்சிக் கவிழ்ப்பும் சம்பந்தன் கும்பலின் காட்டிக் கொடுப்பும்:
நாம் ஜனாதிபதித் தேர்தலையும், பொதுத்தேர்தலையும் புறக்கணிக்குமாறு பகிரங்கமாக கோரினோம்.ஏறத்தாள பாதியளவு மக்கள் புறக்கணித்தனர். எஞ்சிய வாக்குகளில் கூட்டமைப்பு கும்பல் ஆசனங்களைப் பெற்றது.இது ரணில் மைத்திரியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாகும்.பக்ச பாசிஸ்டுக்கள் இடது சாரி ரொட்ஸ்கியவாதி வாசுதேவ நாணயக்காராவை அணைத்துக் கொண்டது போல,நல்லாட்சியின் அலங்காரப் பொம்மையாக ரணில் மைத்திரி பாசிசம் சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக்கியது!
கேவலம் இந்த எதிர்க்கட்சித் தமிழ்த் தலைவன் ஆகக் குறைந்தபட்சம் போர்க்கைதிகளின் விடுதலையைக் கூட சாதிக்க வில்லை.மாறாக இவனது கொழும்பு கூட்டமைப்பு அவர்களது ஜீவ மரண சிறைவாசப் போராட்டத்தை தொடர்ந்து முறியடித்து வருகின்றது.
உலகமய உலக மறு பங்கீட்டு மூன்றாம் உலகப்போர்த் தயாரிப்புக் கால கட்டத்தில் அமெரிக்க இந்திய முகாமின் தென்னாசிய இராணுவத்தளமாக சேவகம் செய்ய தயாராகிவிட்ட சிங்களத்தின் தொங்கு சதையாக சம்பந்தன் கூட்டமைப்பு கும்பல் மாறி விட்டது.
மதியப் பொழுது மறைவதற்கு முன்னால் மைத்திரிக்கு வாக்கிடக்கோரிய மனித உரிமை மனோ கணேசனும் யுத்தக்கைதிகள் விவகாரத்தில் கை விரித்து விட்டார்.
கூட்டமைப்பு கும்பலும் ஈழதேசிய பிரச்சனைத் தீர்வும்.
உலகமய உலக மறு பங்கீட்டு மூன்றாம் உலகப்போர்த் தயாரிப்புக் கால கட்டத்தில் அமெரிக்க இந்திய முகாமின் தென்னாசிய இராணுவத்தளமாக சேவகம் செய்ய தயாராகிவிட்ட சிங்களத்தின் தொங்கு சதையாக சம்பந்தன் கூட்டமைப்பு கும்பல் மாறி விட்டதால் அதன் ஈழ தேசியப்பிரச்சனைக்கான தீர்வும் அந்த முகாமின் நலன்களுக்கு அடங்கியிருப்பது தர்க்க பூர்வமானதே.
இதனால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னாலும் கூட்டமைப்புக் கும்பல் 13 வது திருத்தத்திற்கு அமைந்த அதிகாரப் பகிர்வு என்று பம்மாத்து நாடகம் ஆடி இந்திய விரிவாதிக்கத்துக்கு சேவகம் செய்கின்றது.
இதைக் கூட்டமைப்பு மட்டும் செய்யவில்லை, பிரித்தானிய தமிழர் பேரவை உள்ளிட்ட,புலம் பெயர் பேரவைகளும் , நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் , EXCELL வீரர்களும், பாதிரிகளும் இணைந்தே செய்கின்றார்கள்.இதனால் தான் நல்லாட்சி இவர்கள் மீதான தடையை நீக்கியுள்ளது!
இவர்கள் தமது சொந்த வர்க்க நலனில் இருந்தும், ஏகாதிபத்திய தாச விதேசிய மனப்பான்மையில் இருந்தும் ஈழதேசிய சுய நிர்ணய உரிமைப் பிரச்சனையை பேரப்பொருளாக்கி வருகின்றனர்.
இத்துரோகத்தை முறியடிக்க முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்குப் பின்னால் ஈழ தேசத்தின் முடிவை அறிய ஈழத்தமிழ் வாக்கெடுப்பு நடத்தக் கோரி, தேசம் தழுவிய வெகு ஜன இயக்கத்தைக் கட்டியெழுப்புவது இன்றைய உடனடி அவசியக் கடமை ஆகும்.
ஈழ தேசிய ஒற்றுமையே இதன் ஆதாரத்தூண் ஆகும்.
வெகுஜனப் போராட்டப் பாதையே விடுதலைப் பாதை!
கைதிகள் முதல் கைம்பெண்கள் வரை ஈழத்தில் மக்கள் போராடுகின்றார்கள். வடக்கு கிழக்கு மலையகம் தழுவிய -ஈழதேசிய யுத்தக் கைதி விடுதலை கதவடைப்புப் போராட்டம் மாபெரும் வெற்றி கண்டுள்ளது.மீள் குடியேற்றத்துக்காகவும்,காவு கொடுத்த உதிரங்களை மீளப் பெறவும் ஈழ மக்கள் போராடுகின்றனர்.விவசாயிகள் போராடுகின்றனர்,கடற் தொழிலாளர் போராடுகின்றனர்,மலையக மக்கள் போராடுகின்றனர்,கறுப்பு ஓகஸ்ட் சமூக நீக்க கொடுமைக்கு நீதி கோரி இஸ்லாமியத் தமிழர்கள் போராடுகின்றனர். தென் இலங்கையில் மாணவர் போராட்டங்கள் தன்னியல்பாக வெடிக்கின்றன.இவை கல்வியில் அந்நிய ஆதிக்கத்தை ஒழிக்கக் கோருகின்றன,இதனால் விதேசிய ரணில் மைத்திரி ஏகாதிபத்திய நலன் ஆட்சி,மாணவர்களின் ஜனநாயகப் போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு நசுக்குகின்றது.உலகமய உலக மறு பங்கீட்டு மூன்றாம் உலகப்போர்த் தயாரிப்புக்களை எதிர்த்து உலகமெங்கும் வெகுஜனப் போராட்டப் போர்ப்புயல் வீசி வருகின்றது.
இந்த உலகத் தொழிலாளர்களையும் ஒடுக்கப்பட்ட தேசங்களையும் ஆதார சக்திகளாகக் கொண்டுதான் ஈழதேசிய விடுதலைப் புரட்சி இயக்கம் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் தனது அடுத்த காலடியை முன் வைக்க வேண்டும்.
மாறாக ஏகாதிபத்திய அமெரிக்கா,விரிவாதிக்க இந்தியா,ஏகாதிபத்திய பஞ்சாயத்து மன்றம் ஐ.நா.வை நம்பியோ,ரணில் மைத்திரி பாசிஸ்டுக்களோடு பின்கதவு உறவு கொண்டு, உண்டு குடித்தோ,`சிவில் சமூகம்` என்கிற பெயரில் அந்நிய NGO களோடு கள்ள உறவு கொண்டு, தமிழர்களுக்கு வலை விரித்தோ அல்ல.
தகரும் நிலையில் ஏகாதிபத்தியமும் அதன் தலைமை நாடான அமெரிக்காவும்.
`ஏகாதிபத்தியம் என்பது முதலாளித்துவத்தின் உச்சக் கட்டமாகும். அதாவது அந்திமக்கால முதலாளித்துவம் ஆகும்.` இதுதான் லெனின் விஞ்ஞான வரையறை. முதலாளித்துவ பொருள் உற்பத்தி முறையின் அடிப்படை, பண்ட உற்பத்தியாகும்.பண்ட உற்பத்தியின் ஒரே குறிக்கோள் அதிக இலாபம். இந்த அதிக இலாபம் அபரிமிதமான உற்பத்திக்கும், அபரிமிதமான உழைப்புச் சக்தியின் சுரண்டலுக்கும் தவிர்க்க இயலாமல் இட்டுச் செல்கின்றது.இதன் விளைவு என்னவென்றால் சந்தையில்,
`நுகர்வோரின் வாங்கும் வலிமையை தகர்க்கும் உழைப்புச் சக்தி சுரண்டலும், இதனால் வாங்கும் சக்தியை தொடர்ந்து இழந்து வரும் அவர்களுக்கே அபரி மித உற்பத்திப் பண்டங்களை விற்றுத் தீரவேண்டியதும்`
ஆன தீர்க்க முடியாத முரண்பாட்டுக்குள் சிக்கிக் கொள்வதாகும்.இதைத் தீர்ப்பதற்கான ஏகாதிபத்தியவாதிகளின் தீர்வும் திட்டமும் தான் உலக மறுபங்கீடும்,பிராந்திய உலகப் போரும்!
இவ்வாறு அமெரிக்கா,மூன்றாவது உலகமறுபங்கீட்டு போர்க்கால கட்டத்தில் ஆப்கானிஸ்தானில் ஆரம்பித்து சிரியா வரை வந்து, சிக்கிக் கொண்டுள்ள நிலை, இவை தீர்வு அல்ல தகர்வு என்பதையே நடைமுறையில் நிரூபித்து நிற்கின்றது.
ஆக தகரும் ஏகாதிபத்தியத்தை நமது வல்லமைக்கு உட்பட்டு தாக்கி அழிக்க வேண்டுமே ஒழிய தாங்கிப் பிடித்து தற்காக்கக் கூடாது.
எனவே எந்த தேசிய விடுதலை இயக்கமும் போலவே ஈழப்புரட்சிகர தேசிய விடுதலை இயக்கமும் தனது குரலை சிங்களத்துக்கு எதிராக மட்டுமல்ல அமெரிக்காவுக்கும் இந்திய விரிவாதிக்கத்துக்கு எதிராகவும்,ஒலித்துத் தீர வேண்டும் என்பது புரட்சியின் விதியாகும். இதற்கான வல்லமை ஈழ தேசிய ஒற்றுமையில் தான் தங்கியுள்ளது.
வெற்றிக்கான ஆயுதம்
ஈழ தேசிய ஒற்றுமையை இறுகப்பற்றுவோம் என்கிற முழகத்தின் அடிப்படையில், வகுக்கப்பட்ட புரட்சிகர செயல் தந்திர திட்டத்தின் மீது அமைந்த அரசியல் பிரச்சார கிளர்ச்சி நடவடிக்கைகளே எமது வெற்றிக்கான ஆயுதமாகும்.
ஈழதேசிய ஒற்றுமை
இக்கோட்பாட்டு அடிப்படையில் மட்டுமே ஈழ தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்ப முடியும். எனவே ஈழவிடுதலைப்புரட்சியின் எதிரிகளான அமெரிக்கா முன்னிட்ட ஏகாதிபத்தியவாதிகளையும்,இந்திய விரிவாதிக்க அரசையும்,சிங்களத்தையும் எதிர்த்து, கூட்டமைப்பு,புலம்பெயர் பேரவைகள், இனமானம் பேசும் தமிழக இந்திய விரிவாதிக்க தரகர்கள் அடங்கிய சமரச சக்திகளை தனிமைப்படுத்தி,ஈழதேசிய ஒற்றுமையைக் கட்டிக் காத்து உலகத் தொழிலாளர்களுடனும் ஒடுக்கப்பட்ட தேசங்களுடனும் ஒன்றுபட்டு, மாண்ட நம் மக்களதும் மாவீரத் தோழர்களதும் ஒரே கனவான ஈழ தேசத்தை விடுவிக்க பின்வரும் முழக்கங்களின் அடிப்படையில் ஓரணி திரளுமாறு அறை கூவல் விடுக்கின்றோம்.
புதிய ஈழப் புரட்சியாளர்கள் தமிழீழம் 27-11-2015 செழுமை 06-12-2015
இனப்படுகொலை யுத்தத்தின் இறுதி நாட்களில் போராளிகளை சரணடையுமாறு சிங்களம் கோரியது.அமெரிக்க அதிபர் ஒபாமா `விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைய வேண்டும்` என பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
ஒரு இலட்சத்து அறுபதினாயிரத்துக்கும் மேற்பட்ட ஈழ மக்களின் இனப்படுகொலை, விடுதலைப் புலிப் படையின் முக்கிய கள முனைத் தளபதிகள் குழு மீதான விச வாயுத் தாக்குதல், யுத்த தர்மம் அனைத்தையும் மீறி சிங்களம் இழைத்த போர்க்குற்றங்கள், இந்திய விரிவாதிக்க அரசு,அதனது தமிழக இன மானத் தொண்டர்கள்- புற முதுகில் குத்திய எண்ணற்ற செயல்கள், புலம் பெயர் தமிழ் விதேசிகளின் துரோகம்,நமது சொந்தத் தவறுகள், இவற்றின் இணை விளைவாக ஆயுதங்களை மெளனிக்கும் விடுதலைப்புலிகளின் அறிவிப்போடு யுத்தம் தற்காலிகமாக ஒய்ந்தது.
யுத்தம் ஓய்ந்த கையோடு யுத்தத்தின் அரச எதிர்ப்பு, நீதி யுத்தத் தரப்பினராகிய விடுதலைப் புலிப் போராளிகள் அனைவரும் நிரபராதிகளாக அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும், அது தான் சர்வதேச நியதி.
இரண்டு பெரும் உலக யுத்தங்களிலும், வியட்நாம் யுத்தத்திலும் இவ்வாறுதான் நடந்தது.வியட் கொங் மக்கள் படையால் விடுவிக்கப்பட்ட ஒரு அமெரிக்க யுத்தக்கைதி இப்போதும் படு பிற்போக்கு யுத்த வெறிப் பிரச்சாரகராக திகழ்கின்றார்.
ஆனால் சிங்களம் போர்க் கைதிகளையும் படுகொலை செய்தது.பெண் கைதிகளை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தது.
நல்லாட்சி நாடகமாடும் ரணில் மைத்திரி பாசிச ஆட்சி, ஆறு ஆண்டுகள் கடந்தும் எஞ்சியுள்ளவர்களை விடுதலை செய்ய மறுத்து வருகின்றது.
இவர்களில் 217 பேர் கடந்த மாதம்சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை சிறைக் கூடங்களுக்குள் ஆரம்பித்தனர்.இப் போராட்டத்தை `சம்பந்தன் சுமந்திரன் சேனாதி` துரோகக் கும்பல் போலி வாக்குறுதி அளித்து முறியடித்தது.
சம்பந்தன் கைதிகளை வகைப்படுத்துகின்றான், அதில் முதல் வகையினர் ``பாரதூரமான குற்றம் இழைத்தவர்கள்``!
இதனால் போராளிகள் தம் அனைவரதும் (217), உடனடி விடுதலையை வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தை சிறைக்கூடங்களுக்குள் ஆரம்பித்து தற்போது தொடர்ந்து வருகின்றனர்,தம்மை மீட்க போராடுமாறு மக்களுக்கு அறைகூவல் விடுத்தனர்.
போராளிகளின் இந்த அறைகூவலை ஏற்று நேற்றைய தினம் 13-11-2015அன்று தமீழ மக்கள் கதவடைப்புப் போராட்டத்தில் இறங்கினர்.
அம்பாறை,திருகோணமலை,மட்டக்களப்பு,வவுனியா,மன்னார்,முல்லைத்தீவு,யாழ்ப்பாணம்,மலையகம் அடங்கலாக தமிழீழம் தம் வேங்கைகளை மீட்க வெறிச்சோடியது.
முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் மீண்டும் தமிழீழம் ஓரணியில் திரண்டது,திரட்டியவர்கள் யுத்தக் கைதிகளான விடுதலைப் புலிப் போராளிகள்.
இப்போதும் காதடைத்த சிங்களம், இந்த ஈழக் கதவடைப்புக்கு காது கொடுப்பதாகத் தெரியவில்லை.வழக்கம் போல போலி வாக்குறுதி அளித்து காது குத்தவே முயலுகின்றது.
எனவே `217, விடுதலை இயக்கத்தில்` நாம் இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டியுள்ளது.
முதலாவதாக, நாம் ஈழ தேசிய ஒற்றுமையை வளர்க்க வேண்டும் கட்டிக் காக்க வேண்டும்.ஓரணியில் திரட்ட வேண்டும்.
இரண்டாவதாக,நாம் உலகத் தொழிலாளர்களையும் ஒடுக்கப்பட்ட தேசங்களையும் அடிப்படையில் சார்ந்து நிற்க வேண்டும்.
மூன்றாவதாக, நாம் தொடர்ந்து போராட வேண்டும்,போராட்டத்தை பரவலாக்க வேண்டும்,தீவிரப்படுத்த வேண்டும்.
நான்காவதாக, இத்தனியொரு குறிக்கோளுக்காக சாத்தியமான அனைத்துச் சக்திகளோடும் ஐக்கியப்படவேண்டும்.
தென்னிலங்கையில் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற ஒரு குரல் எழுகிறது.யாழ்ப்பாணத்தில் - 217 விடுதலை இயக்கத்தில்- இஸ்லாமியத் தமிழர்கள் இணைந்துள்ளனர்.இஸ்லாமிய சிறு உடமை வியாபாரிகளின் பங்களிப்பு இல்லாமல் ஈழக்கதவடைப்பு போராட்டம் இந்த மாபெரும் வெற்றியை ஈட்டியிருக்க முடியாது.முடியவே முடியாது!தமிழகத்தில் கடந்த வாரம் இண்டூரில் நடை பெற்ற ஈழ ஆதரவுப் பொதுக்கூட்டத்தில் ம.ஜ.இ.கழகத்தின் பிரதான பேச்சாளர் தோழர் மனோகரன், ஈழ யுத்தக் கைதிகள் விடுதலைக்கு குரல் எழுப்பி ,கழகம் சார்பாக தமிழக மக்களை தட்டி எழுப்பினார்.
மக்களைச் சார்ந்து நின்று போராடினால் `217 விடுதலை இயக்கத்தில்` நாம் வெற்றி பெறுவது திண்ணம்.
ஒரு பொதுவான மொழியாலும், பொதுப் பொருளாதார மேம்பாட்டுக்கான அவசியத்தாலும், அதன் விளைவான சமூக உள்ளிணைவால் உருவாகிய பொதுப் பண்பாட்டாலும்,வரலாற்று ரீதியாக உறவு -நிலை பெற்ற ( வட கிழக்கு தமிழர், இஸ்லாமிய தமிழர்,மலையகத் தமிழர் அடங்கிய) சமூகத் திரள், பொது எதிரியின் தாக்குதலில் இருந்து தம்மைத் தற்காத்து ஒருங்கிணைய, தம் பூர்வீக-தார்மீக பூமியை ,தமது ஆட்சிப் பிரதேசமாக மாற்றுவதே விடிவுக்கு வழி என உணர்ந்த வரலாற்றுக் கட்டத்தின் அரசியல் வகையினமே ஈழ தேசம் ஆகும்.