Monday, 21 July 2014

மோடி ஆட்சியும் ஈழப் புரட்சியும் பகுதி (4) - மதப்பிளவுக்கு துணை நிற்கும் தமிழ்ச் சமூக வர்க்க சக்திகள்.

மோடி ஆட்சியும் ஈழப் புரட்சியும் பகுதி 4

மதப்பிளவுக்கு துணை நிற்கும் தமிழ்ச் சமூக வர்க்க சக்திகள்.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையை நாடு தழுவிய மத மோதலாக மாற்றுவதே மோடிப் பாசிசத்தினதும்,பக்ச பாசிசத்தினதும் புதிய திட்டம்.

மோடி ஆட்சி தனது பதவியேற்பு வைபவத்திற்கு `சார்க் நாடுகளோடு சகோதரத்துவம்` என்கிற போர்வையில் ஈழத்தமிழ் இனப் படுகொலையாளன் ராஜபக்சேவுக்கு செங்கம்பள வரவேற்பளித்தது.திரை மறைவில் பேசப்பட்ட விடயங்கள் மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.ஆனால் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு `13 இற்கு மேல்` தீர்வுக்கு வலியுறுத்தியதாக, தரகுத்தமிழ் அணியும் அவரகளது ஊதுகுழல் ஊடகங்களும் ஓயாது முழங்கின!

`13 இற்கு மேல்` என்கிற அடிமைத் தளையை ஈழத்தமிழர் மேல் திணிப்பதன் மூலம் ஒரு புறம் இலங்கை அரசை-சிங்களத்தை- பொறிந்து விழாமல் பாதுகாத்துக் கொண்டும், மறு புறம் ஓடுகாலிகளையும், தமிழ்த்தரகு அணியையும் தனது சமூக ஆதரவாக்கிக் கொண்டு, `தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண` முயல்வதாக நாடக மாடிக்கொண்டு இலங்கையின் மீது தனது மேலாதிக்கத்தை விரிவாக்க, ஈழ தேசியப் பிரச்சனையை மத மோதல்களை தூண்டி சீரழித்து சிதைப்பதே மோடி ஆர்.எஸ்.எஸ் பாசிச ஆட்சியின் புதிய திட்டமாகும்.

பிரித்தானிய காலனியாதிக்கவாதிகள் கற்றுக் கொடுத்த `பிரித்தாளும் தந்திரத்தை` அவர்களது அரைக்காலனிய சேவகர்கள் இந்திய விரிவாதிக்கத்துக்கான ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர். 1987 இல் காங்கிரஸின் இந்திய ஆக்கிரமிப்புப் படை ஈழத்தமிழர்களை சாதி ரீதியாக பிளவு படுத்தி, தமிழ்த்தேசிய புலிகள் இயக்கத்தை தோற்கடிக்கலாம் என்று கனவுகண்டது.இதற்காக EPRLF அமைப்பைப் பயன்படுத்த முயன்று படு தோல்வி கண்டது. ``மத்தாளோடைப் பத்மநாபா`` இந்திய ஆக்கிரமிப்பின் கூலிப்படைத் தலைவன் ஆனார்.

 இந்தியப் பாசிசத்தின் இரு முகங்களில் ஒன்றான காங்கிரஸ், ஈழ தேசிய இயக்கத்தை பிளவுபடுத்தி அழிக்க `சாதி` என்கிற ஆயுதத்தை ஏந்தியது என்றால், அதன் மறு முகமான பி.ஜே.பி மதம் என்கிற ஆயுதத்தை ஏந்திவருகின்றது.

ஈழ சமூகத்தில் மத முரண்பாடு கூர்மையானதாகவோ, பிரதானமானதாகவோ, இயற்கையாக இல்லாத போதும், எளிமை நிலையில் உள்ள முரண்பாட்டை செயற்கையாக முன்னிலைப் படுத்துவதற்கான சமூகக் கூறுகளும்,சமூக சக்திகளும்,நிறுவனங்களும் உள்ளதைப் புறக்கணிக்க முடியாது.இதைச் செயற்கையாகத் தூண்டி மோதல்களை உருவாக்குவதற்கான புறவய வாய்ப்புகளையும் நிராகரிக்க முடியாது.

அவையாவன:

1)  அமிர்தலிங்கம் தமிழும் சைவமும் நமதிரு கண்கள் என்று பேசி வந்த தலைவர்.சமஸ்டிக்கட்சியின் தேர்தல் சின்னமாக முதலில் சிபார்சு செய்யப்பட்டது `பசு` ஆகும்,பின்னால் இது வீடாக மாற்றப்பட்டது.இது வாக்கு வேட்டைக்கு செய்த திருத்தமே தவிர கொள்கைத் திருத்தம் அல்ல.
2) சமஸ்டிக்கட்சியின் கொடி `பச்சை மஞ்சள் சிவப்பு` வர்ணங்களைக் கொண்டதாகும்.இதில் பச்சை நிறம் இஸ்லாமியத் தமிழர்களைப் பிரதி நிதித்துவம் செய்தது. யாழ்ப்பாண/மன்னார்  பாரம்பரிய வாழ் நிலத்தில் இருந்து 24 மணி நேர கட்டாய இராணுவ உத்தரவில் இஸ்லாமியத் தமிழர்களை விரட்டியடித்து நாடு கடத்திய `விடுதலைப் புலிகள்` தமிழர்களின் அரசியல் வரலாற்றின் வர்ணங்களில் இருந்து பச்சை நிறத்தை அடியோடு நீக்கி விட்டார்கள்.புலம்பெயர் தமிழர் இயக்கமும், கூட்டமைப்பும், இந்தக் கறையை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது.
3)விக்னேஸ்வரன் ஓய்வு பெற்ற நீதிபதி. சட்டக் கல்வித் துறை சார்ந்தவர்.வடக்கு மாகாணத்தின் அனைத்து மதப் பிரிவு மக்களிடையே இருந்தும் பெரும்பான்மை வாக்குகளால் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டு, வடக்குத் தமிழர்களின் ஜனநாயகப் பிரதிநிதி சர்வதேச சமூகத்தால் போற்றப்பட்டவர். இவரது பதவியேற்பு வைபவத்தில் இவருக்கு விநாயகர் விக்கிரகத்தை பரிசளித்தார் ஐக்கிய இலங்கையின் ஜனாதிபதி!இதன் குறி பொருள் என்ன?
4)யாழ்பாணப் பல்கலைக் கழக - `அறிவாலயத்தின்` சின்னம் இப்போதும் நந்திச் சிலை தான்.யாழ் பொது சன நூலக வாசலில் -மற்றொரு அறிவாலய வாசலில் வெள்ளைத் தாமரை யில் சரஸ்வதி தான் வீற்றிருக்கின்றாள்.கம்பர் வருதி ஜெயராஜா மோடிக்கு வாழ்த்துத் தெரிவிக்கின்றார்.`இந்திய இலங்கை இந்து மக்கள் முன்னணி` என்கிற அமைப்பு ஒன்று மோடிக்காக நல்லூர் கோவிலில் ஜெபிக்கின்றது.
5) கொழும்பில் கட்டாய மதமாற்றத்துக்கு எதிராக -அதாவது கிறீஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிராக- இந்து மன்றம் பெளத்தபல படையணியோடு கூட்டமைத்து கண்டன ஊர்வலம்- போராட்டம்- நடத்துகின்றது.
6)BJP ஆதரவு  NDTV (New Delhi Television) இலங்கையில் பெளத்தர்களுக்கும் இந்துக்களுக்கும் பொது வழிபாட்டுத் தெய்வமாக கண்ணகி இருப்பதாக `ஆவணத்திரைப்படம்` ஒன்றை வெளியிட்டு வருகின்றது.பா.ஜ.கட்சி ஈழத்தமிழகளுக்கு என்றும் ஆதரவாக இருக்கும் என்று கூறுகின்ற அக்கட்சியின் தமிழகத் தலைவர் பொன்.இராதாகிருஸ்ணன், தமிழ்த் தேசிய இன ஒடுக்குமுறை குறித்தோ, இனப்படுகொலை குறித்தோ, போர்க்குற்றம் குறித்தோ ஒரு வரி கூடப் பேசுவதில்லை, மாறாக ``அங்கு இந்துக் கோவில்கள் சிங்களவர்களால் தாக்கி அழிக்கப்படுவதாக`` அழுகின்றார்! நவாலித் தேவாலயப் படுகொலைக்கும், புத்தளம் பள்ளிவாசல் படுகொலைக்கும் இவரது பதில் என்ன? இலங்கையின் தலைமை இந்துக் கோவில்கள்  தமிழ் நாட்டுக் கோவில்களுடன் தொடர்புடையவை.

இவை அனைத்தும் தமிழர் எழுச்சிக்கு எதிராக, ஒரு இந்து எழுச்சியை கட்டியெழுப்பும் முனைப்பையே சுட்டிக்காட்டுகின்றன.

இதை முளையிலேயே கிள்ளியெறியத் தவறினால்  ஒரு புறம்  பிரதேச ரீதியான துண்டாடலும்,மறுபுறம் மத சமூக அடிப்படையிலான மோதலுமாக தமிழீழத்துக்கான பொருளாயத அடித்தளம் சிதைத்து சின்னாபின்னமாக்கப்பட்டுவிடும்.

இது வரலாற்றை பின்னோக்கி தள்ளும் முயற்சி எனினும், இதை எதிர்த்து முறியடிக்கத் தவறினால் தற்காலிகமாகவேனும் இந்தப் பிற்போக்கு வெற்றி பெறுவது சாத்தியமே.

இதைக் கூட்டமைப்பைக் கொண்டோ, தமிழ்த் தரகு அணியைக் கொண்டோ சாதிக்க முடியாது,இதற்கு ஒரு புரட்சிகர ஜனநாயக முற்போக்கு முன்னணிப்படை அவசியம்.அத்தகைய ஒரு படையால் மட்டுமே இன.மத,சாதிய,பிரதேச பிளவுகளைக் கடந்து அனைத்துப் பிரிவினரிடையேயும் உள்ள உழைக்கும் மக்களை ஈழ தேசிய விடுதலை புரட்சியில் இணைக்க முடியும்.

இத்தகைய ஒரு அணி மட்டுமே தமிழகத்தில், இந்திய விரிவாதிக்க தமிழ்த் தரகுச் சமரச துரோகிகளுக்கு மாற்றாக, தமிழகத்தின் மக்கள் ஜனநாயக இயக்கத்துக்கு துணை நின்றும், அதன் துணையோடும் ஈழவிடுதலையை வென்றெடுக்க வல்லதாகும்.இலங்கையில் சமூக மாறுதலை,ஈழவிடுதலைப் புரட்சியை தொடர்ந்து நசுக்கி வரும் இந்திய விரிவாதிக்கத்தை வெற்றி கொள்ள தமிழகத்தில் ஒரு புரட்சிகர மக்கள் ஜனநாயக இயக்கம் அவசியத் தேவையாகும்.

`காங்கிரஸ் கருங்காலி நெடுமாறன், சி.ஐ.ஏ.உளவாளி வை.கோ, பதவிப் பித்தன் சீமான், சாதி வெறியன் ராமதாஸ், ஆளும் வர்க்க ஓட்டுப் பொறுக்கி தி.மு.க, அ.தி.மு.க மற்றும் இத்தியாதி, இந்திய விரிவாதிக்க ஆதரவு அணியில் எதைச் சார்ந்து நின்றும் ஈழவிடுதலையை வென்றெடுக்க முடியாது.

முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் முதுகில் குத்திய ``தொப்புழ் கொடி உறவின்``, ``தாய்த் தமிழகத்தின்`` சங்கார துரோகத்தை ஈழம் மன்னிக்காது, மறக்காது.

ஈழப்புரட்சி ஜனநாயகப் பாதையில் அடியெடுத்து வைத்துவிட்டது. இனிமேல் இதனை எந்த சக்தியாலும் அடக்க முடியாது.

மோடிப்பாசிசமும், பக்ச பாசிசமும் ஈழதேசிய ஜனநாயகப் புரட்சி இயக்கத்தை, `மத வெறித் தாக்குதல்களால்` முறியடிக்கும் சதியை, ஈழ-தமிழக மக்கள் ஜனநாயக இயக்கத்தால் மட்டுமே முறியடிக்க முடியும்.

மோடி ஆட்சியும் ஈழப்புரட்சியும் பகுதி (3) புதிய ஆயுதம் மத மோதல்.

மோடி ஆட்சியும் ஈழப் புரட்சியும் பகுதி 3


ஈழ தேசிய இன ஒடுக்குமுறையில் எதிரிகளின் 

புதிய ஆயுதம் மத மோதல்.

இலங்கை அரைக்காலனியாதிக்க அரசானது தான் ஏகாபதிபத்திய சுரண்டலின் உறுஞ்சு குழலாக இருப்பதை மூடிமறைக்க, உள்நாட்டு மக்களை இடையறாது மோதவிட்டு வருகின்றது.ஏகாதிபத்திய சுரண்டலை எதிர்த்து, அதற்குக் காரணமான இலங்கை அரசை எதிர்த்து, ஒரு மக்கள் ஜனநாயகப் புரட்சித்  திட்டத்தில் அனைத்து மக்களும் ஒன்று படுவதைத் தடுப்பதற்காகவே இன,மத,மோதல்களைத் தூண்டி வருகின்றது.இதில் இனப்பிரச்சனை பிரதான வடிவமெடுத்து இலங்கையின் அரைக்காலனிய அரசுமுறையே இன ஒடுக்குமுறையின் மீது கட்டப்பட்டது.இதனால் ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனத்துக்கு  பிரிவினை தவிர்க்க இயலாததாக்கியதால் பிரிவினை தவிர்க்க இயலாததாகியது. தமிழீழ விடுதலைப் போர் வெடித்தது.30 ஆண்டுகால விடுதலை யுத்தம் முள்ளிவாய்க்காலில் முறியடிக்கப்பட்டது.

பயங்கரவாதத்தை வெற்றி கொண்டுவிட்டதாக சிங்களம் பிரகடனம் செய்து 5 ஆண்டுகள் முடிந்துவிட்டது!

இன ஒடுக்குமுறையின் புதிய ஆயுதம் மத மோதல்.

ஆனாலும் இன ஒடுக்குமுறையைக் கை விடவில்லை.இன ஒடுகுமுறையின் புதிய வடிவமாக தமிழர்களை மத ரீதியாக பிளவுபடுத்தி மோதவிடும் தந்திரம் பின்பற்றப்படுகின்றது.

2002 பேச்சுவார்த்தையில் `மத்தியஸ்த்துவம்` வகித்த நோர்வே நாட்டிற்கு எதிராகவும்,ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வந்த அமெரிக்காவுக்கு எதிராகவும்,இன வெறி ஆர்ப்பாட்டங்கள் நடத்தி கொடும்பாவிகள் எரித்து தம்மை தேசபக்தர்களாகக் காட்ட முயன்ற போதும், இந் நாடுகளை `கிறீஸ்தவ` நாடுகள் என்றுதான் வசதியாக வரையறை செய்தனர். 30 ஆண்டுகளுக்கு மேலாக `தமிழ்ப்பயங்கரவாதிகளாக` இருந்த புலிகள் இப்போது கிறீஸ்தவ பயங்கரவாதிகள் ஆகி விட்டனர்.

நமது இடது சாரிகள் `தேசிய முதலாளித்துவ` சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் அமைத்த முற்போக்கு கூட்டணியின் 1972 குடியரசு அரசியல் யாப்பு, பெளத்த மதத்தை அரச மதமாகவும், அதைப்பாதுகாத்து பராமரிப்பதுஅரசின் பொறுப்பு என்றும் கூறி தன்னை `இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு` என மானங்கெட்ட விதமாகப் பிரகடனம் செய்தது.

பக்ச பாசிஸ்டுக்களின் முழுப் பாதுகாப்பிலும்,பராமரிப்பிலும், கோத்தபாயாவின் தலைமையிலும் கீழ்தான் -(சிங்கள மொழியில்) பொ(B)து பல சேனா என அழைக்கப்படும்- பெளத்த பலத்தின் படையணி என்கிற போதிப் பாசிசப் படை ஊட்டி வளர்க்கப்படுகின்றது.

முள்ளிவாய்க்கால் முடிந்த கையோடு இந்தப் போதிப்படை முஸ்லிம்களுக்கு எதிராகத் திரும்பிவிட்டது.ஹலால் உணவு எதிர்ப்பு, மசூதிகள் மீது தாக்குதல், முஸ்லீம் சிறு வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் என களமிறங்கியது. களுத்துறை மாவட்டத்தில் அளுத்கம, பேருவளை நகரங்களில் கலவரத்தைக் கட்டவிழ்த்தது.இஸ்லாமியத் தமிழர்களை படுகொலை செய்தது, சொத்துக்களை சூறையாடியது,தீக்கிரையாக்கியது.மக்களை அகதிகளாக்கியது.

புகைப்படங்கள்,ஒளி நாடாக்கள், ஒளிப்பதிவுகள்,CCTV பதிவுகள்,கண் கண்ட சாட்சியங்கள் என எல்லாமிருந்த போதும்,இதுவரையில் ஒரு காவிக் காடையனாவது நீதியின் முன் நிறுத்தப்படவில்லை!அரசதிகாரத்தின் உதவியுடனும்,அரசமைப்புச் சட்ட பாதுகாப்புடனும்,இந்தப் பெளத்த பலத்தின் பாசிசச் சேனை, இலங்கையின் சிவசேனையாக ஊட்டி வளர்க்கப் படுகின்றது.இந்தப் பாசிசக் காவிக் கும்பலை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பக்ச பாசிஸ்டுக்கள் புறந்தள்ளி வருகின்றனர்.

 மோடி ஆட்சியும் தேசிய இனப்பிரச்சனையும்.

இத்தகைய ஒரு சூழலில் தான் மோடி - ஆர்.எஸ்.எஸ்- பாசிசம் இந்தியாவில் ஆட்சிபீடம் ஏறியுள்ளது.குஜராத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களின் இரத்தம் குடித்தவன் மோடி.பாபர் மசூதியைத் தரைமட்டமாக்கிய இந்து மதவெறிப் பாசிசக் கட்சி பி.ஜே.பி.ஆர்.எஸ்.எஸ், சிவசேனைக் காவிக் கும்பல் ஆலயம் ஆலயமாகச் சென்று பாதிரிப் பெண்களை நரபலி எடுத்தவர்கள்.Face Book இல் இனந்தெரியாத ஒருவர் சிவசேனா நிறுவனர் பால் தக்காரையும், சக்கராதிபதி சிவாஜியையும்,அபகீர்த்திக்கு உள்ளாக்கும் வகையில் பதிவிட்டதற்கு எதிராக காட்டுத் தர்பாரில் இறங்கியது இந்து மத வெறிக்கும்பல்.இந்தக் கபளீகரத்தில் சாலையோரமாகச் சென்ற ஒரு 24 வயது இளைஞன் தாடி வைத்திருந்த ஒரே காரணத்துக்காக இஸ்லாமியன் என அடையாளம் காணப்பட்டு, 25 பேர் அடங்கிய ஒரு கும்பல் சாகும் வரை அடித்து நொருக்கி நரபலி எடுத்துள்லது.தாமரை மலர்ந்ததும் தலைகள் உருளத் தொடங்கி விட்டன!தளிர்கள் உலர்கின்றன!! ஆட்சிக்கட்டில் ஏறிய ஒரு வாரத்துக்குள்ளாவே இந்தக் கொலை வெறித் தாண்டவத்தை அரங்கேற்றியுள்ளது மோடிப்பாசிசம்.

ஜம்மு காஸ்மீர் மகாராஜாவை மிரட்டி அம்மாநிலத்தைக் கட்டாயமாக இணைத்த `சுதந்திர` இந்தியாவின் அரசியல் யாப்பு, வேறு எந்த மாநிலத்துக்கும் இல்லாத சிறப்புச் சலுகைகளை அரசியல் யாப்பில் உத்தரவாதம் செய்திருந்தது.இதுவே சரத்து 370 (Article 370) எனப்படுவதாகும். 1947-1948 முதல் இருந்து வரும் இப்பிரிவை விவாதிப்பது என்ற போர்வையில் நீக்குவதற்கு முயல்கின்றது மோடி ஆர்.எஸ்.எஸ்.பாசிச ஆட்சி.

ஜம்மு காஸ்மீர் மாநிலத்தை பாகிஸ்தானும், இந்தியாவும் பங்குபோட போட்டியிடும் சூழலில், அந்த மாநிலம் முழுமையும் இந்தியாவின் பிரிக்க இயலாத பகுதி என இந்திய விரிவாதிக்கம் அடம்பிடித்து வருகின்றது.இதனால் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதியை இதுவரையும் ` பாகிஸ்தானின் ஆக்கிரமிப்புக்குட்பட்ட காஸ்மீர்` என அழைத்து வந்தது. அதனை இப்போது  ` பாகிஸ்தானின் ஆக்கிரமிப்புக்குட்பட்ட ஜம்மு காஸ்மீர்` என மாற்றியமைத்துள்ளது.

இதன்மூலம் இந்திய அரசியல் சட்டம் உத்தரவாதம் செய்த சிறப்புப் பாதுகாப்புகளை நீக்கி முழு ஜம்மு காஸ்மீர் மாநிலத்தையும்-தேசத்தையும்- கபளீகரம் செய்ய மோடி ஆர்.எஸ்.எஸ்.பாசிசவாதிகள் முயலுகின்றனர். அதற்காக களம் இறங்கிவிட்டனர்.

ஒரு புறம் பாரத மாதா, வந்தே மாதரம்,ஒற்றுமைச் சிலை , இந்திய ஒருமைப்பாடு பேசிக் கொண்டு மறு புறம் கட்டாய இணைப்புக்குள்ளான இந்திய தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையையும், மொழி வாரி மாநிலங்களின் சுயாட்சி உரிமைகளையும், ஜம்மு காஸ்மீர் மாநில சிறப்புரிமைகளையும், பழங்குடி மக்களின் பாதுகாப்பு உரிமைகளையும் பறித்தெடுத்து, இந்துத்துவ,இந்திய விரிவாதிக்க,உலகமய பாசிசத்தைக் கட்டவிழ்க்கின்றது மோடி ஆர்.எஸ்.எஸ்.பாசிச ஆட்சி.

மோடி ஆட்சியும் ஈழப்பிரச்சனையும்

இவ்வாறு சொந்த நாட்டின் தேசிய இனப்பிரச்சனையில் பாசிச அடக்குமுறைக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் மோடி ஆட்சி, ஈழத்தமிழருக்கு `13 இற்கு மேல்` அதிகாரப் பகிர்வுத் தீர்வு பெற்றுத்தரப்போவதாக நாடகமாடுகின்றது.

இக்கட்டுரையின் பாகம் ஒன்றில் நாம் விரிவாக ஆராய்ந்து விளக்கியவாறு தமிழ்த்தரகு அணியும் , தமிழ் ஊடகங்களும் இந்த ஏமாற்றைப் பரப்பி ஏய்த்துப் பிழைத்து வருகின்றன.

``பதவியேற்பு வைபவத்துக்கு அழைத்து அவர் மூஞ்சையில் குத்து விட்டதாகவும், இந்திரா காந்தி பாணியில் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு ஒரு தனி அதிகாரியை நியமிக்கப் போவதாகவும் தாங்காத புளுகத்தில் பிரதட்டை எடுத்து வருகின்றனர்.மீண்டும் இந்திய விரிவாதிக்க வலைக்குள் ஈழப்புரட்சியை அடக்கி அழிக்க முயலுகின்றனர்.

இந்திய விரிவாதிக்க அரசு தனது மேலாதிக்கத்தை, இலங்கை மீது திணிப்பதற்காகவும், தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை அதிகாரப் பரவலாக்க சீர்திருத்த பாதையில் சீரழிக்கவும்,நீதி  யுத்தத்தை முறியடிக்கவும், விடுதலைப்புலிகளை அழித்தொழிக்கவும் ஜே.ஆர்.அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தமே 1987 இந்திய இலங்கை ஒப்பந்தமாகும்.

இந்த ஒப்பந்தம் உறுதி செய்து கொண்ட இந்திய விரிவாதிக்க நலனை, மூடி மறைக்க ஈழத்தமிழர்களுக்கு நன்மை பெற்றுத் தந்தது போல் ஆடிய நாடகப் பதிவுதான் 13வது திருத்தம்.

13 வது திருத்தம்

1) இது தமிழ் மக்களை ஒரு இனமாகக் கூட அங்கீகரிக்கவில்லை.
2) வடக்கு கிழக்கு பிரிவினைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் வழங்கி இன்று வடக்கையும் கிழக்கையும் பிரித்துவிட்டது,
3) தமிழ்த் தேசிய சுயநிர்ணய உரிமைப் பிரச்சனையை `அதிகாரப் பகிர்வு பேரமாக` முன் வைத்தது.
4) இந்தப் பேரம் கூட வரதன் முதல் விக்னேஸ்வரன் வரை அடையப்படவில்லை!

இதுதான் 13வது திருத்த மாகாணசபையின் நிலை,

இந்தியப் பாசிசமும், இந்திய விரிவாதிக்கமும் என்ற ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களே காங்கிரசும் பாரதிய ஜனதா கட்சியுமாகும். இவை இரண்டுமே ஈழப்புரட்சியின் எதிரிகள் ஆகும்.

ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்த இரு இந்திய விரிவாதிக்க பாசிசக் கட்சிகளின் நிலையும்  தமிழின ஒடுக்கு முறையில் சிங்கள ஆதரவு நிலையே!

இந்திய விரிவாதிக்க நலனுக்கு - இலங்கையின் சீன சார்பு போக்கு- ஒரு பகடைக் காயாகவே ஈழத்தமிழர் பிரச்சனை பயன்படுத்தப்படுகின்றது.
``13 இற்கு மேல் `` என்பது இலங்கை அரசை தட்டி அடக்கும் இந்திய மேலாதிக்கத்தின் கைத்தடியே!

இதனால் ஈழத்தமிழர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை.

எனவே ஈழத்தமிழ், இந்தியத் தமிழ் தரகு அணிகள் கூறுவது போல் மோடி ஆட்சியில் ஈழத்தமிழினம் விடுதலை பெறாது.மாறாக மத ரீதியாக துண்டாப்பட்டு தனது தேசிய அத்தாட்சியை-அடையாளத்தை  இழந்து விடும்.

இதுவே ஈழதேசிய எதிரிகளின் ஒரே குறிக்கோள். இதில் அவர்களின் பயணம் ஆரம்பித்துவிட்டது.

தொடர் (பகுதி 4)


Monday, 30 June 2014

கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் நினைவு முழக்கங்கள்

கறுப்பு ஜூலை இனப்படுகொலையின்
நினைவு முழக்கங்கள்!


சிங்கள தேசமே;

* முப்பது ஆண்டுகால ஈழவிடுதலை யுத்தத்தின் முறியடிப்பைப் பயன்படுத்தி, முழு நாட்டையும் `உலக மறு பங்கீட்டுக்குத் தாரை வார்த்து
பிழைக்கும்` பக்ச பாசிஸ்டுக்களின் ஆட்சியை வீழ்த்த  சூளுரை!

* மூன்று இலட்சம் ஈழமக்களை கொன்றொழிக்க துணைபோன தேசமே, `சம உரிமையும்` `மாந்த நேயமும்`பேசாதே, ஈழப்பிரிவினைப் பொது வாக்கெடுப்புக்கு குரல் கொடு!

* சமூக சிங்களப் பேரின வெறியர்களான (Social Chauvinist) ஜே.வி.பி, மற்றும் `பிரிந்த`, சந்தர்ப்பவாத NGO கிளைகளை நிராகரி! புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்பு!

* ரொட்ஸ்கிய திரிபு வாதத்துக்கு முடிவுகட்டு, மார்க்சிய லெனினிய மாஓ சிந்தனை வழி பரப்பு!

* மோடிப் பாசிசமும்,பக்ச பாசிசமும் ஈழதேசியத்தை இல்லாதொழிக்க கட்டவிழ்க்கும் `பெளவுத்த பல படையணியின்` மதவெறிப் பாசிசத்தை தடுத்து நிறுத்தப் போராடு!

* ஈழதேசிய இனப்படுகொலை அரசை, தூக்கு மேடையில் ஏற்ற துணை நில்!


ஈழத்தமிழினமே,

*தேசிய விடுதலைக்கு புரட்சி செய்!
* இன மதச் சிறுபான்மையினரான மலையக, இஸ்லாமியத் தமிழர்களை ஒன்றுபடுத்து!
* உழைக்கும் சிங்கள மக்களின் ஜனநாயகப் போராட்டங்களை ஆதரி!
* `தரகுத் தமிழ் அணியை` தனிமைப்படுத்து!
* இலங்கையில் ஏகாதிபத்திய NGO ஆட்சிக்கவிழ்ப்புக்கு துணைபோகாதே!
* உலகத் தொழிலாளர்களுடனும்,ஒடுக்கப்பட்ட 
தேசங்களுடனும் ஒன்று சேர்!



Tuesday, 3 June 2014

மோடி ஆட்சியும் ஈழப்புரட்சியும் பகுதி (2)

மோடி ஆட்சியும் ஈழப் புரட்சியும் பகுதி (2)

மோடி ஆட்சி கடைப்பிடிக்கப் போகும் பொருளாதாரத் திட்டத்தின் திசை வழி குறித்து:

மோடி ஆட்சியின் பொருளாதார-அபிவிருத்தித் திட்டம் தாராளமய, தனியார்மய,உலகமய (Liberalization, Privatization,Globalization - LPG)  பாதையே என்பது தெளிவு.இதை பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் `அபிவிருத்தி` எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த 10 ஆண்டுகளாக மன்மோகன் ஆட்சி கடைப்பிடித்த அதே அந்நிய சார்ப்புப் பாதையையே மோடி ஆட்சியும் பின்பற்றப் போகின்றது.அதாவது மோகன் ஆட்சி அழிவில் நிறுத்திய பொருளாதாரத்தை, மோடி ஆட்சி பேரழிவுக்கு இட்டுச் செல்லப்போகின்றது.

இதன் விளைவாக வெகுஜனங்களிடமிருந்து எழும் சினத்தை நசுக்க இந்தியப் பாசிச அரசையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்போகின்றது.

என்னதான் பாரதமாதா, இந்துத்துவா, சிவப்புப் பொட்டும்,காவிச்சட்டையுமாய் வர்ணாசியில் யாகம் நடத்தி,பாராளமன்றப் படியில் விழுந்து கும்பிட்டு, `இந்து-இந்திய` நாடகம் ஆடினாலும்,பொருளாதாரம் என்று வருகின்ற போது, வழிநடத்துகின்ற இராமர்கள் என்னவோ, அயோத்தியில் இல்லை, அமெரிக்காவிலும்,ஐரோப்பாவிலும்,IMFஇலும், WB இலும் தான் இருக்கின்றார்கள்!

ஏகாதிபத்திய சந்தை நலன்களின் அடிப்படையில் உலக விவகாரங்களை நோக்கும் உலகத்தரமிக்க பத்திரிகை Financial Times (FT) ஆகும்.
இது இலண்டனை தளமாகக் கொண்டு இயங்குகின்றது.ஏகாதிபத்திய புல்லுருவிகளின் சர்வதேசத் தலைமையகம் லண்டன் ஆகும்.

Martin Wolf
இப்பத்திரிகையின் பிரதான Commentator  Martin Wolf என்பவர் ஆவார். முதலாளித்துவ பொருளாதார கல்விமான்.``தாராளமய,தனியார்மய,
உலகமய`` காலனியாதிக்க பொருளாதாரக் கோட்பாட்டின் மூர்க்கமான பாதுகாவலர்.ஏகாதிபத்திய புல்லுருவிகளின் சிந்தனைச் சுரங்கம்.

Financial Times (FT) பத்திரிகை மோடி ஆட்சி அமைத்ததும், இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலையையும், அதாவது 10 ஆண்டு
மோகன் ஆட்சி விட்டுச்சென்ற இடத்தையும், இதிலிருந்து மீள மோடி ஆட்சி என்ன செய்ய வேண்டும் என்றும் இவரிடம் கருத்தறிந்தது.

அவர் இந்தியப் பொருளாதாரத்தின் நான்கு கூறுகளை தனித்தனியாக ஆராய்ந்து,பின்னர் அவற்றை,அவற்றுக்கிடையில் உள்ள பரஸ்பர
உறவில் ஆராய்து,இறுதியாக அவற்றின் பொதுத்தொடர்பில் இந்தியப் பொருளாதாரம் குறித்த தனது தீர்ப்பையும்,தீர்வையும் முன்
மொழிந்தார். மோடி ஆட்சி அதை வழி மொழிந்திருக்கின்றது!

அவசியம் கருதி இந்த அறிவாளி தனது ஆய்வில் இந்தியாவின் வேலையின்மை, வறுமை போன்ற முக்கிய பொருளாதார குறிகாட்டிகளுக்கு
எந்த மதிப்பும் அளிக்கவில்லை. இவரது ஆய்வின் இறுதியில் இந்த விபரங்களை நாம் இணைத்துள்ளோம்.

நான்கு அம்சங்கள்: 1) வாக்குப் பங்கு 2) மொத்தத் தேசிய உற்பத்தி 3) இந்தியப் பொருளாதாரக் கட்டமைப்பு 4) பணவீக்கம்/ நிதி நிலைப் பற்றாக்குறை
என்பன ஆகும்.

 1) வாக்குப் பங்கு



பா.ஜ.க.வுக்கு கிடைத்த வாக்குகள் மற்றும் ஆசனங்களையும், காங்கிரஸ் அடைந்த படுதோல்வியையும் ஒப்பீடு செய்து , பா.ஜ.க.வுக்கு இது ஒரு
பிரமாண்டமான வெற்றி என்று பிரகடனம் செய்தார்.மோடியின் தனிப்பெரும்பான்மைப் பலத்தை இந்திராவின் பலத்தோடு ஒப்பீடு செய்தார்.
இந்த ஒப்புவமையின் உள் நோக்கத்தைப் புரிந்து கொள்வது கடினமல்ல. அந்தப் பலத்தைக் கொண்டு தான் இந்திரா தாராளமயக் கொள்கையை
அமூலாக்கினார்.

ஆக வாக்குப் பங்கு குறித்த அவரது ஆய்வு அநுமானிப்பது என்னவென்றால், மோடி ஆட்சியின் பொருளாதார-அபிவிருத்தித் திட்டம் தாராளமய,
தனியார்மய,உலகமய (Liberalization, Privatization,Globalization - LPG) பாதையில் பயணிப்பதற்கு மோடி ஆட்சி தங்கு தடையற்ற பலம் பெற்றிருக்கின்றது
என்பதாகும்.

2) மொத்த உள்நாட்டு உற்பத்தி



மோகன் ஆட்சியின் கடந்த 10 ஆண்டுகால மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சராசரி வளர்ச்சி 5வீதமே ஆகும்.இது தான் மோகன் ஆட்சியின் சாதனை
ஆகும்.9-10 வீதத்தில் ஆரம்பித்து 4.5% அதல பாதாள வீழ்ச்சியடைந்த இந்தியப் பொருளாதாரத்துக்கு காரணமான மோகன் கொள்கைகள் குறித்து
இந்த மேதை ஒரு வரி கூடக் கூறவில்லை.மாறாக ``சாதாரணமான சில பொருளாதார கொள்கை நடவடிக்கைகளைக் கொண்டே`` இந்தியப்
பொருளாதாரம் 7-9% வளர்ச்சியை எட்ட முடியும் என்கிறார்.மேலும்``அடுத்த 20 ஆண்டுகளில் உலகின் மிக வேகமாக வளரும் முதன்மைப்
பொருளாதாரமாக இந்தியா மாறவில்லையென்றால் அது என்னை மிகவும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கும்`` என்று கொம்பு சீவி விடுகின்றார்.

3) இந்தியப் பொருளாதாரக் கட்டமைப்பு



இந்தியப் பொருளாதாரக் கட்டமைப்பு 3 தளங்களுக்குள் அடக்கப்படுகின்றது. அவை
1) சேவைத் துறை
2) கட்டுமானத்துறை
3) விவசாயத்துறை என்பனவாகும்.

சேவைத்துறை இதர இரு துறைகளையும் விழுங்கி வருவதில் பரமானந்தம் அடையும் அவர், சேவைத்துறையின் வளர்ச்சித் தேவையை ஈடு செய்வதற்கு நிகராக கட்டுமானத்துறை வளரவில்லையெனகவலைப்படுகின்றார்.இதனால் கட்டுமானத்துறை Infrastruture ஐகட்டியெழுப்ப முயலவும்,முதலீடு செய்யவும் வேண்டும் என்கின்றார். இந்தக் கட்டுமானத்துறை என்பது பெருவீதத் தொழிற்துறை அல்ல, சேவைத்துறைக்கு சேவகம் செய்யும் உப கட்டுமான துறையே ஆகும். இந்தக்கட்டுமானத்துறையில் முதலீடு செய்வதன் மூலம் கட்டுமானத்துறையையும், சேவைத்துறையையும் விரிவாக்க முடியும் என தர்க்கிக்கின்றார்.

நசுங்கி வரும் சீனா இப்பாதையில் இருந்து விலகி வருவதால் இது இந்தியாவுக்கு அரிய வாய்ப்பாகும் என்று கூறி -சீனாவை நசுக்கிய பாதையை இந்தியாவுக்கு சிபார்சு செய்கிறார்.

மேலும் இந்தியா சீனாவைக் காட்டிலும் மிகவும் வறிய நாடு என்பதால் கூலிமட்டமும் அந்தளவு தாழ்ந்திருக்க வேண்டுமென்றும், அமைப்புசார்
துறையில் அந்நிய முதலீட்டாளர்களை அச்சுறுத்தும் தொழிலாளர் நல பாதுகாப்புகள் நீக்கப்பட வேண்டுமெனவும் நீசத்தனமாகக் கூறுகின்றார்.

4) பணவீக்கமும் நிதிநிலைப் பற்றாக்குறையும்.



பணவீக்கம் (9%) மிக உயர்வாக உள்ளது.நிதிச் செலவினக் கொள்கை (Fiscal policy), வீண் விரயங்கள் தவிர்க்கப்பட்டு சிக்கனப்படுத்தப்பட வேண்டும்,
இந்த வீண் விரயம்- ``Too much waste'', என்பது அரசாங்க மானியங்கள் ஆகும்! (Monetary Policy) பணக்கட்டுப்பாட்டுக் கொள்கை மாற்றப்பட வேண்டும்,
அதாவது அந்நியமுதலீட்டாளர்களுக்கு வரிச்சலுகை அளிக்க வேண்டும் என்கிறார்.

இந்தப் பொருளாதாரக் கல்வி மானுக்கு இந்தியப் பெரு நாட்டின் வேலையின்மையும்,வறுமையும் ஒரு பொருளாதாரப் பிரச்சனையாகத்
தோன்றவேயில்லை.இங்கே தான் ``தூய`` அறிவின் வர்க்கச்சார்பு அடங்கியிருக்கின்றது.

ஆக முடிவாக,
உள்நாட்டு உற்பத்தித் தேக்கம்,பணவீக்கம்,கட்டுமானத்துறை வீழ்ச்சி,நிதிச் செலவின,பணக்கட்டுப்பாட்டு கொள்கை மாற்றம், தொழிற்சங்க,
தொழிலாளர் உரிமை பறிப்பு அடங்கிய அமைப்பு ரீதியான மாறுதல் செய்யப்படவேண்டும் என்பது அவரது தீர்ப்பாகும்.இந்த அமைப்பு ரீதியான
மாறுதல் என்பது அரைக்காலனிய இந்தியப் பொருளாதாரத்தை முழுக்காலனியாக்குவது தவிர வேறெதுவும் இல்லை.

``இந்தியர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும்`` (''Indians know what to do''). சாதிப்பதற்கு மோடிக்கு போதிய பலமும் (இந்திரா காந்தி போல்!) உண்டு, சாதிப்பாரா என்பதே கேள்வி எனக்கேட்டு, மோடியின் சாதனைக்கு வழிகாட்டியுள்ளார்.

1970 களில் இந்திரா ஆரம்பித்து படிப்படியாக இந்தியாவைப் பற்றிப்படர்ந்து வரும் புற்று நோயே  தாராளமய,தனியார்மய,உலகமய
(Liberalization, Privatization,Globalization - LPG) அந்நிய சார்பு பொருளாதாரப் பாதை ஆகும்.

மோடி RSS பாசிச சக்திகள் பெற்றிருக்கும் போலிப்பாராளுமன்றப் `பலம்` இதில் ஒரு பாய்ச்சலை  ஏற்படுத்தப் போவது திண்ணம்.

நமது கல்விமானுக்கு ஒரு பொருட்டாக தெரியாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்ட  `வேலையின்மையும்,வறுமையும்` இந்த முரண்பாட்டின்
மறு பக்கமாகும்.

அந்த தகவல்கள் வருமாறு.

1) வேலையின்மை


இந்தப் போலிப் புள்ளிவிபரம் காட்டுகிற அளவுக்குள்ளேயே மோகன் ஆட்சியில் பத்தாண்டு சராசரியாக 8% வேலையின்மையும். இறுதி ஐந்தாண்டுகளில் 10% வேலையின்மையும் இருந்ததைக் காண முடியும்.

2) வறுமை


ஏறத்தாழ 200 உலக நாடுகளில் வாழும் வறியவர்களில் 35% ஆனோர் இந்தியா என்கிற ஒரு நாட்டில் மட்டும் வாழ்கின்றார்கள்.அறுபது ஆண்டுகாலச் சுதந்திரம்  இந்திய உழைக்கும் குடிமகனுக்கு தின்னச் சோறு கூடக் கொடுக்கவில்லை, என்ன கொடுமை!

இங்கே தான் வர்க்கப் போராட்டத்துக்கான களம் திறக்கப்படுகின்றது.விதேசியத்துக்கு எதிரான தேசியத்தின் போர்க்களம் இது.

ஒரு சிறுபான்மை தரகுப் பெரு முதலாளித்துவ,பெரு நிலப்பிரபுத்துவ கும்பலின் நலனுக்காக இந்தியப் பெரு நாடு கொள்ளை போவதை , இந்திய
உழைக்கும் மக்கள் ஒரு போதும் அநுமதிக்க மாட்டார்கள். உழைப்பாளிகள் தொடர்ந்து உணவின்றி மடியமாட்டார்கள், விவசாயிகள் எலிதின்று
மாள மாட்டார்கள்.அடிமைத்தனத்தையும்,அடக்குமுறையையும் ஏற்கமாட்டர்கள்.தேசிய இனங்கள் சுயநிர்ணய உரிமை நசுக்கப்படுவதை
சகித்துக்கொள்ள மாட்டார்கள்.தலித்துக்கள் நீண்ட காலம் தங்கள் பிஞ்சுகள் தூக்குக் கயிற்றில் தொங்குவதை தாங்க மாட்டார்கள். ஜனநாயக சுதந்திர உணர்வுமிக்க இந்திய உழைக்கும் மக்கள் `இந்திய விரிவாதிக்கத்தை` ஏற்க மாட்டார்கள்.சார்க் நாடுகளோடு சகோதரத்துவம் என்கிற மோடிப்பாசிச பொய்மையை நம்ப மாட்டார்கள்.

மோடி ஆட்சியின் அநுமதியில் 60 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய நிதி மூலதனம் இந்தியாவுக்குள் பாய்கிறது.இந்த இரத்தம் குடிக்கும் அட்டையை வெட்டியெறிய புரட்சி தவிர வேறு வழியில்லை.

உழைக்கும் மக்களைச் சார்ந்து மோடி RSS பாசிச ஆட்சியை  தூக்கி எறிய சூளுரைப்போம். ஒரு பிரளயத்துக்கான புறச்சூழலை கையகப்படுத்துவோம்!


http://video.ft.com/3583814584001/Wolf-on-what-Modi-s-win-means/Markets

புதிய ஈழப்புரட்சியாளர்கள்

Sunday, 25 May 2014

மோடி ஆட்சியும் ஈழவிடுதலைப் புரட்சியும்.


மோடி ஆட்சியும் ஈழவிடுதலைப் புரட்சியும்.

மோடியின் ``அமோக வெற்றி`` ஒரு ஊடக மோசடி!

நடந்து முடிந்த இந்தியாவின் 16வது மைய அதிகாரத்துக்கான லோக் சபா பொதுத் தேர்தலில் பாசிச மோடியின்  பா.ஜ.க.கட்சி அமோக வெற்றிபெற்று,
தனிப்பெரும்பான்மை கொண்டு அரசாங்கம்-ஆட்சி அமைக்க இந்திய ஜனநாயகம் முடிவு செய்து விட்டதாக ஒரு ஊடகப் புனைவும், பொய்யும், புரட்டும்,மோசடியும் உலக மக்களின் கண்களை மூடி மறைத்து வருகின்றது.

இந்திய தேர்தல் திணைக்கள இணைய தளம், 2014 பொதுத் தேர்தல் குறித்து வெளியிட்ட புள்ளிவிபரங்கள் வருமாறு.

வாக்களித்தோர் விகிதாசாரம் 75%, அதாவது 25%, வாக்குரிமை பெற்ற இந்தியக் குடிமக்கள் வாக்களிக்கவில்லை.

வாக்களித்தோரில் பா.ஜ.க.31% மும், காங்கிரஸ் 19%மும் பெற்றன. ஆக மொத்தம் இந்த இரு பெரும் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகள் ஆக 50 % தான்.( உண்மையில் இதில் தேர்தல் மோசடி வாக்குகள் நீக்கப்படவேண்டும்.) ஆக 75% வீத இந்திய வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிகளே பா.ஜ.க வும்,காங்கிரசும்.

இதனால் இந்த தேர்தலை காங்கிரஸ் மீது மோடி கொண்ட அறுதிப் பெரும்பான்மை வெற்றியாகக் கொள்வதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை.

மாறாக, அதிக பட்சம் இரண்டு கட்சிகளையும் பெரும்பான்மை இந்திய வாக்காளர் நிராகரித்த தேர்தல் என்றே கொள்ள முடியும்.

மேலும் 19% வாக்குப்பெற்ற காங்கிரஸ் 44 பன்றி இருக்கைகளைப் பெற்றிருக்கின்றது, தோராயமாக இதனை 1% வாக்குக்கு 2 இருக்கைகள் என எடுத்துக்கொள்ளலாம்.அப்படியாயின் 31% வாக்குப்பெற்ற பா.ஜ.க.அதிகபட்சம் 65 இருக்கைகளையே பெற்றிருக்க வேண்டும்.ஆனால் பா.ஜ.க.பெற்றதோ 282!!
இந்த 31% வாக்குகளின் மொத்தத் தொகை 171657549 (தோராயமாக-பதினேழேகால் கோடியாகும்). 19% காங்கிரஸ் வாக்குகள் 106938242 (தோராயமாக-பத்தரைக்கோடியாகும்). வாக்கு வேறு பாடு 64719307 (தோராயமாக-ஆறரைக் கோடியாகும்.)  பா.ஜ.க.வின் சராசரி இருக்கை வாக்கு 608714 .இதன்படி காங்கிரசுக்கு 175 இருக்கைகள் கிடைத்திருக்கவேண்டும். கிடைத்ததோ ஆக 44!

இது இந்தியத் தேர்தல் வரலாற்றில்இதற்கு முன் என்றும் நடந்திராத நிகழ்வு என Times of India பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. மேலும் அது கூறுகையில்
 இந்த இருக்கைகளில் பாதியைக்கூட இதற்கு முந்திய தேர்தல்களில் 31% வாக்குகளைக் கொண்டு எந்தக்கட்சியும் பெற்றதாக தேர்தல் குறிப்புகளில் ஆதாரம் இல்லை என்று ஆணையிடுகின்றது.. மாபெரும் இந்திய ஜனநாயகத்தில்விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மோசடியான தேர்தல் முறை இந்தத் தடவை மோடிக்கு துணை போயிருக்கின்றது. (தகவல்: தேர்தல் திணைக்களம் மற்றும் Times of India, ஊடகங்கள். குறிப்பு: புள்ளிவிபரங்கள் பொது வாசக நோக்கில் தசமதானங்கள் முழுமைப் படுத்தப்பட்டுள்ளன. 74.3% > 75%,    19.3% > 19% ஆகியவாறு) மன்மோகன் விட்ட இடத்தில் இருந்து,இந்தியாவை அடுத்த கட்ட
இருண்ட யுகத்துக்குள் இட்டுச் செல்ல ஒரு பாசிச அடிமை நியமிக்கப் பட்டிருக்கின்றது.

இது தான் மோடிப் பாசிசம் ஆட்சி பீடம் ஏறிய யோக்கியம்!

குஜராத்தில் இஸ்லாமியர்களை குற்றுயிரும் குலை உயிருமாக கொன்றொழித்ததன் விளைவாக மோடிக்கு அமெரிக்க விசா ரத்துச் செய்யப்பட்டுள்ளது.இதையும் மீறி ஒபா மோடிக்கு அழைப்புவிடுத்துள்ளார், தோளோடு தோள் நின்று இங்கிலாந்துப் பிரதமர் டேவிட் கமெரனும் அழைப்பு விடுத்துள்ளார். மோடியோ இன்னுமொரு அடி மேலே போய் ஈழத் தமிழ்த் தேசிய இனப்படுகொலையாளனுக்கு செங்கம்பள வரவேற்பளிக்கவுள்ளான்.

இதை எதிர்த்து தமிழகம் கொந்தளிக்கின்றது. இதைச்சமரப்படுத்த
ஜெயா அரசு வரவேற்பு வைபவத்தைப் புறக்கணித்து, வெறும் வாழ்த்துச் செய்தி மட்டும் அனுப்பியுள்ளது. அதேவேளை ஜனநாயக ரீதியில் மக்கள் எதிர்ப்புத்தெரிவிக்க பொலிஸ் அனுமதி மறுத்து வருகின்றது.தேவைப்பட்டால் பொலிஸ் அராஜகத்தைக் கட்டவிழ்த்து நசுக்கவும் தயங்காது.

மேலும்,காங்கிரஸ் ஒரு எதிர்க்கட்சியாகவும் இருக்க பலமிழந்த
நிலையில் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சியாகவோ,அல்லது எதிர்க்கட்சித்தலைவராகவோ வருவதற்கான முயற்சியும் இந்தமுடிவுக்கு காரணமாக இருக்கலாம்.

தமிழ்த்தரகு அணியும் மோடி ஆட்சியும்:

தமிழகம்:

மோடி அமெரிக்கத் தெரிவு/நியமனம் என்பதால் அமெரிக்க தாசன் வை.வோ.சாமி மோடியோடு கூட்டமைத்தான்.தேர்தலில் மண்கவ்வினான். இருந்தாலும் இவன் கதை,முடியவில்லை.தமிழகத்திலும் புலம்பெயர் களத்திலும் ஈழ ஆதரவு ஜனநாயக இயக்கம் உருப்பெறுவதை கருவறுக்க கங்கணம் கட்டி நிற்கும் `கறுப்புக் காவிச்` சந்தர்ப்பவாதி இவன்.

முள்ளிவாய்க்காலில் ``அமெரிக்கத் தேர்தலில் ஒபாமாவும், இந்தியத் தேர்தலில் (2009) பா.ஜ.க.வும் ஆட்சி அமைத்து உங்களை ராஜபக்சவிடமிருந்து காப்பாற்றும்`` என விடுதலைப் புலிகளுக்கு நயவஞ்சக நம்பிக்கை அளித்த சகுனி இவன்.மோடிப் பாசிசம் அதன் முதல் நாளிலேயே போதிப்பாசிச சிங்கள ராஜபக்சவுக்கு செங்கம்பளம் விரிக்கின்றது.முள்ளிவாய்க்கால் ஈழதேசிய இனப் படுகொலைக்கு அங்கீகாரம் வழங்குகின்றது. இந்த அடிமைச் சந்தர்ப்பவாதச் சகுனி கருப்புக்கொடி காட்ட கிளம்புகின்றது. கதரும் காவியும் இந்தியப்பாசிசத்தின் இரு முகங்கள் என்று நாம் முழங்கியபோது இந்த `கறுப்புச்சட்டைக் கருங்காலி` ஈழத்தமிழனை பா.ஜ.க காக்கும், பா,ஜ,வந்தால் ஈழம் அமையும் என்று பிதற்றியதே அந்த நிலைப்பாட்டுக்கு என்ன பதில்?

``அறுதிப் பெரும்பான்மை பெற்ற மோடி ஆட்சியை``  கடந்த 10 ஆண்டுகள் பதவி வகித்த அதிகாரிகள் தவறாக நடத்துகின்றார்கள், என மோடியை ஒன்றும் தெரியாத பாப்பா, எனச் சப்பைக்கட்டுக் கட்டுவது அயோக்கியத்தனம் இல்லையா? `` அறுதிப்பெரும்பான்மை பெற்ற ஒரு கட்சியின் மாற்று ஆட்சியை``அதிகாரிகள் தவறாக வழி நடத்த முடியும் என்றால், இதை `உலகின் மிகப் பெரிய ஜனநாயகம்` எனப்பிதற்றுவது பித்தலாட்டம் இல்லையா?

இந்திய ஆளும் வர்க்கம், அதன் இரு பெரும் கட்சிகளான, பா.ஜ.க, காங்கிரஸ், அவற்றின் விரிவாதிக்க நலன், உலகு தழுவிய அமெரிக்க மேலாதிக்கத்துக்கு தொண்டூழியம் புரியஇவர்களிடயே உள்ள போட்டா போட்டி, இவற்றின் விளைவாக தனித் தமிழீழக் கோரிக்கையுடன் இக்கட்சிகளுக்கு உள்ள பகைமையான முரண்பாடு குறித்து, இந்தக் கறுப்புச் சட்டைக்
கருங்காலிகள் எப்போதுமே சந்தர்ப்பவாதிகள் ஆவர்,1983 இலிருந்து 2015-இன்றுவரையான 32 ஆண்டுகளில், ஈழப்பிரச்சனையில் ஒரு, முரணற்ற ஜனநாயக நிலைப்பாட்டை கொண்டிருந்தவர்கள் அல்ல.

ஒரு மாதம் நிலைத்திருக்க முடியாத,கூற்றுக்களின் மீது, பொய்கள், புரளிகள்,மோசடிகள்,மீது ஒரு நிறுவனமோ, தலைவனோ நிலைத்து நிற்க முடியாது.இது வை.கோ.சாமிக்கு மட்டுமல்ல, நெடுமாறன் ஐயாவுக்கும்,சீமான் அண்ணனுக்கும் முற்றும் பொருந்தும்.

கருணாநிதி ``ராஜபக்சவின் வரவை எதிர்ப்பதற்கு இது பொருத்தமான தருணம் அல்ல``  என்று கூறியுள்ளதோடு, மூத்த தலைவரான தனக்கு அழைப்பு வழங்கப்படவில்லையென்ற கவலையையும் வெளியிட்டுள்ளார்! இது எப்படி இருக்கு!!

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் திரு.பிரபாகரன் `புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்` என்ற முழக்கத்தோடு ஈழ அரசியலில் பங்கேற்றார். அதற்காக ஒரு படையைக் கட்டி அமைத்தார்.இன்று அந்தப் புலிப்படை  -வை.கோ.சாமி.துணையில்- கொன்றொழிக்கப்பட்டுவிட்டது.ஆனால் அந்த இலட்சிய நிலைப்பாடும்,ஆயுதப்போராட்டமும் இன்றும் பொருந்தும்,இன்னும் பன்னெடுங்காலத்துக்குப் பொருந்தும்.சிங்களம் ஜனநாயகமயப்படும்(?!) காலம் வரைக்கும் பொருந்தும். இது ஒரு நெருப்பு.நெடுமாறன்,வை.கோ.சாமி,சீமான் இத்தியாதி...இத்தியாதி தமிழகத்தின் தமிழ்த்தரகுசமரச அணியினர் இந்த நெருப்போடு விளையாடி வருகின்றார்கள்.இதில் அவர்கள் தீய்ந்து கருகுகின்ற காலம் வெகு தூரத்தில் இல்லை. தமிழக உழைக்கும் மக்களின் நேர்மையான,தூய்மையான,இதய சுத்தியுள்ள இனப்பற்றும், இளைஞர்கள், மாணவர்களின் கோபமும் கொந்தளிப்பும், கழகத்தின் ஜனநாயகத் தலைமையும், வளர்ச்சியும், இந்த மயானத் தீயை மூட்டியே தீரும்.இவ்வாறு தான் ஈழத்தில்,1977 இல் தமிழீழத் தீர்மானத்தோடு சமஸ்டிக்கட்சி விளையாடி இன்று வெறும் எதிரியின் அடியாட்களாக மாறியுள்ளது.

ஈழம்:

மோடிப்பாசிசம் தனது பதவியேற்பு நிகழ்விற்கு, போதிப்பாசிசத்துக்கு `சார்க் நாடுகளின் சகோதரத்துவம்` என்ற திரையில் அழைப்புவிட்டுள்ளது. இதை எதிர்த்து தமிழகம் கொந்தளித்து நிற்கின்றது.இந்தியத் திருவிழாவில் தனது மாகாணப் பங்காளி நீதியரசர் (?) (ஊடகப் பங்காளிகள் சூட்டிய மகுடம் இது.) சி.வி.விக்னேஸ்வரனை துணைக்கழைத்திருந்தான்.இந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளாத நீதியரசர், இதையேற்று பங்கு கொண்டால் வடக்கு மாகாண சபை சுமூகமாக இயங்குவதாக அர்த்தமளிப்பதாக ஆகிவிடும் என்று கூறியுள்ளார்.ஆக நீதியரசுக்கு இது ஒரு அதிகார பேரப்பிரச்சனை
ஆகவே தெரிகின்றது.ஈழ தேசிய இனப்படுகொலைப் பிரச்சனையாகத் தெரியவில்லை.மே 20 2014 இல் வடக்கு மாகாண சபையில் இடம்பெற்ற மே 18 நினைவுப் பிராத்தனையை புறக்கணித்த அயோக்கியன் தான் இந்த நீதியரசன்!

இந்திய தேர்தல் அறிவிக்கப்பட்டு பாசிச மோடி பகிரங்கமான கணமே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிற துடைப்பக்கட்டையில், ஒப்பீட்டில் ஓரளவு சகிக்க கூடியதாய் இருந்துவந்த சிறீதரன் என்கிற ஜென்மம் `மோடி ஆட்சியில் தமிழர்களுக்கு` மும்மாரி பொழியும் என்று பிரகடனம் செய்துவிட்டது.

சம்பந்தன்,சுமந்திரன் என்கிற ராஜபக்சவின் அடியாட்கள், மோடி ஆட்சியுடன் ``கை கோர்த்து நடப்போம்`` என்று கோழைத்தனமாக குரைக்கின்றன.

ஆக இந்த மூவர் குழு  ஈழத் தமிழ்த் தரகு அணி மோடிப்பாசிசத்துடனும், போதிப்பாசிசத்துடனும் கைகோர்த்து ஈழதேசிய இனப்படுகொலையை மூடி மறைத்து, ஈழப்பிரிவினை வாக்கெடுப்பு ஜனநாயக இயக்கத்தைஎதிர்த்து நின்று பக்ச பாசிஸ்டுக்களின் பாதந்தாங்கிகளாக ``அதிகாரப் பகிர்வு`` என்ற மோசடிப் பாதையில் தமிழீழத்தை விற்றுப்பிழைக்க எதிரிகளுடன் கை கோர்த்து நிற்கின்றது.

`அதிகாரப் பகிர்வு` குறித்த நிலை என்ன?

வடக்கு மாகாணசபையின் முதலமைச்சரின் பதவி வரையறை வாசகம் வருமாறு, அதாவது மாகாண சபையின் கடமைகளும் செயல் பரப்பும் வருமாறு;

நிதியும் திட்டமிடலும்: சட்டமும் ஒழுங்கும்:மின்சக்தி:வீடமைப்பும் நிர்மாணமும்:கூட்டுறவு அபிவிருத்திசமூக சேவைகள்: புனர்வாழ்வளித்தல்: மகளிர் விவகாராம்:தொழில் துறை மற்றும் தொழில் முனைவோர்
மேம்பாடு:சுற்றுலா:உள்ளூராட்சிமற்றும்மாகாண நிர்வாகம்:உணவு வழங்கல்/விநியோகம் அமைச்சர்.

நிதியும் திட்டமிடலும்: 
சிங்களத்தின் வரவு செலவுத் திட்டம் தான் வடக்கு மாகாண சபைக்கு நிதி ஒதுக்க வேண்டும்.

சட்டமும் ஒழுங்கும்:
இராணுவத்தின் கையில் உள்ளது.

மின்சக்தி:
வடக்கு மின்சாரம் தென் இலங்கையில் இருந்துதான் வருகின்றது.

வீடமைப்பும் நிர்மாணமும்:
இந்தியா குத்தகைக்கு எடுத்துள்ளது.

கூட்டுறவு அபிவிருத்தி சமூக சேவைகள்:
இவை அந்நிய என்.ஜி.ஓக்களால்,சிவில் சொசைற்றிகளால் நடத்தப்படுகின்றன.


புனர்வாழ்வளித்தல்:
மக்கள் இன்னும் மீள்குடியமர்த்தப்படவில்லை, குடியிருப்பு,விவசாய விளை நிலங்கள் கையளிக்கப்படவில்லை, மாறாக சிங்களக் குடியேற்றமும்,பெளத்தமத ஊடுருவலும்,பெயர்ப்பலகைகளில்
தமிழ் மொழி அழிப்பும் தொடர்கின்றது.அரசகரும மொழியாகக் கூட தமிழ் அமூல்படுத்தப்படுவதில்லை.தனிச் சிங்கள மொழி தொடர்பாடல் இன்னும் அமூலில் இருக்கின்றது.(1956 இல் ஆரம்பித்த பிரச்சனை!)


மகளிர் விவகாரம்:
இசைப்பிரியா உள்ளிட்ட போர்க்குற்ற பெண்வதைகள், விதவைகள் பிரச்சனை, ``காணாமல் போனோர் என்கிற பெயரில் சிங்களத்துக்கு தம் பிள்ளைச் செல்வங்களைக் காவு கொடுத்த தாய்மாரின் பிரச்சனை,பெண்கள் படைச் சேர்ப்பு,கட்டாயக் கருக்கலைப்பு, பாதிரிகள் செய்த பாலியல் படுகொலைகள்,தாயும் 13வயதுச் சிறுமி விபூசிக்காவும், பயங்கரவாதப் பட்டம் சூட்டி பிரித்து சிறைப்படுத்தப் பட்டிருக்கும் கொடுமை என, தொடரும் ஒரு பிரச்சனைக்கு மாகாண சபை தீர்வு கண்டதுண்டா? இரண்டாவது அதிகப்படியான வாக்குகளால் வெற்ற பெற்ற அனந்தி சசிதரனைக் கூட இந்த மூவர் கும்பல் பேசவோ,சுதந்திரமாக செயற்படவோ அனுமதிப்பதில்லை! இதுவா மகளிர் விவகாரம்?

தொழில் துறை மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு:
தொழில் துறை என்று ஒரு துறை வடக்கில் கிடையாது.இல்லாத துறைக்கு என்ன மேம்பாடு.ஓரிரு தொழிற்சாலைகளும்,பெருமளவிலான,சிறு தொழில்,சிறு வணிகம் போன்றவையும்,உலமயக் கொள்கைகளாலும், இராணுவ ஆதிக்கத்தாலும், வடக்குக்கு பிழைக்க படையெடுக்கும் சிங்களவர்களாலும் நலிந்து நசிந்து வருகின்றது.

சுற்றுலா: 
இது முற்றிலும் இராணுவ முதலீட்டுத் துறை ஆகிவிட்டது. இவற்றைக் கொண்டு தான் சிங்கள இராணுவம் ஒரு வர்க்கமாக வளர்ந்து வருகின்றது.

உள்ளூராட்சிமற்றும் மாகாண நிர்வாகம்:
மாகாண நிர்வாகத்தின் கடமைகளுக்குள் பாதுகாப்பு,காணி,மொழி, அதிகாரம் இல்லையென்பதைக் கவனியுங்கள்.மாகாண நிர்வாகத்தின் நிலை இதுவென்றால் உள்ளூராட்சி நிர்வாகத்தைக் கற்பனை பண்ணிப்பாருங்கள்.

உணவு வழங்கல்/விநியோகம் : 
இவை பெரும்பாலும் தனியார் துறை சார்ந்தவை.பொதுத்துறை உணவு விநியோகம் என்பது, மாகாண நிர்வாகம் உருவாகுதற்கு பலதசாப்தங்களுக்கு முன்னதாகவே ,பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் (MPCS), என்ற நாடு தழுவிய வலைப்பின்னல் அமைப்பைக் கொண்டு இயங்கி வந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் ஒரு சபை, ஒரு நிர்வாகம், இதற்கு ஒரு முதலமச்சர் தேவையா?  துறை துறையாக மாகாணசபையின் மேற்கண்ட நிலை, மைய அதிகாரம் மென்மேலும் குவிக்கப்பட்டு,இராணுவமயப்பட்டு,சிங்களமயப்பட்டு,
ஒரு தமிழ் மாகாணம் இல்லாதொழிக்கப்படுதற்கு ஒரு மூடு திரையாக இந்தச் சபை-திட்டம்- பங்காற்றுகின்றது என்பதையே காட்டுகின்றது. அதுவே சிங்களத்தின் திட்டமாகும்.13வது திருத்த மாகாணசபைகள் சட்டம் அவ்வாறு தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. நன்றி புண்ணியவான் ராஜீவ்!

இந்த மாகாணசபையைக் கொண்டு, இதற்கு அதிகாரங்களைப் பகிர்ந்து`` நீதியான மற்றும் சமத்துவ அடிப்படையிலான கௌரவமான ஒரு சமாதானம் இலங்கையில் உருவாக்க முடியும் `` என சம்பந்தன் மூவர் குழு
மோடிக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதற்கு எந்த தர்க்க நியதியும் இல்லை.

இந்தமாகாண சபைக்கு போர்க்குற்றவாளி ராஜபக்ச தேர்தல் நடத்தியதை, நல்லிணக்க ஆணைகுழுவின் வெற்றி என்றும், நல்லிணக்கம் மீண்டுவருவதாகவும்,ஒபாமாவும்,கமெரனும்,மன்மோகன்சிங்கும் (மோடி இணைகிறார்),நவநீதம் பிள்ளையும்,ஐ.நா.சபையும் கூறி வருவது அபத்தமாகும்.

புலம்பெயர் நாடுகளில்:

கடந்த வாரம் மே 18 2014, முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வை தமிழீழக் கொடியேற்றி ஆரம்பிக்க பிரித்தானிய தமிழர் பேரவை என்கிற தமிழ்த் தரகு அமைப்பு தடை வித்தது. இந்தக்கொடி பிரித்தனியாவில் சட்டபூர்வக்
கொடியாக இருந்த போதும் ``பிரித்தானிய கமெரன் அரசாங்கத்திடமிருந்து `` தமக்கு நெருக்கடி வருவதாக காரணம் கூறியுள்ளனர்.

தரகுத் தமிழ் அணிப் பேரவைகள் கருதுவது போல் ஈழத்தமிழ்மக்கள் அணிதிரள்வது இவர்களது பெயர்ப்பலகைகளுக்குப் பின்னால் அல்ல, தமிழீழம் என்ற இலட்சியதுக்கும், தமிழீழக் கொடிக்கும்,தளபதி பிரபாகரனுக்கும்,மாவீரர்களுக்கும் பின்னாலேயே ஆவர்.தமிழீழக் கொடிதான் அவர்களை ஒன்றுதிரட்டுகின்றது,அதன் கீழ் தான் அவர்கள் ஒன்று திரளுகின்றனர்.இதற்கு ஆப்பு வைக்க பிரித்தானிய தமிழர் பேரவை, தலைப்பட்டுவிட்டதையே மேற்பட்ட நிகழ்வு காட்டுகின்றது.

இந்தியாவில் குஜராத் கொலையாளியின் பாசிச ஆட்சி அரங்கேறி -யிருக்கின்றது. அனைத்துத் துறைகளையும் ` உலகமய, தனியார்மய, தாராளமய` பாதைக்குத் திறந்து விடுவதென பகிரங்கமாக அறிவித்துள்ளது.

இதனால் கிடைக்கப் போகும், சந்தை, அந்நிய நிதி மூலதன முதலீடு, ஆயுத வியாபாரம் போன்ற வாய்ப்புகள் தமது மீளமுடியாத நெருக்கடிக்கு தற்காலிகத் தீர்வாக முடியும் என்கிற அவாவிலேயே ஏகாதிபத்தியவாதிகள் மோடிக்கு அவசர அழைப்பு  விடுத்துள்ளனர்.

அமெரிக்கா தனது உலக மேலாதிக்க, பசுபிக் பிராந்தியத் திட்டத்தின் யுத்ததந்திரக் கூட்டாளியாக மோடி ஆட்சியுடனும், தொடர்ந்து பயணிக்கும்.ஏனெனில் காங்கிரசும்,பி.ஜே.பி.உம் இந்திய பாசிசத்தின் இரு முகங்களே.அமெரிக்க தாசக் கட்சிகளே,` உலகமய, தனியார்மய, தாராளமய` பாதைக்கு இந்திய நாட்டை விற்றுப்பிழைக்கும் கட்சிகளே.

மோடி ஆட்சி, பிரதமர் பதவியேற்பு வைபவத்துக்கு,`சார்க் நாடுகளோடு சகோதரத்துவம்` எனக் கூறி இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச, பாகிஸ்தான் பிரதமர் (மோடிக்கு அடுத்ததாக அதீத தனிப்பட்ட பாதுகாப்பு பெறும் இரு
அரசுத்தலைவர்கள் இவர்கள் இருவருமே ஆவர்!) உட்பட, சார்க் நாடுகளின் அரசுத்தலைவர்கள் அனைவருக்கும், ஆப்கான் அதிபர் கார்சாய் உட்பட அழைப்புவிடுத்துள்ளது.

இந்த ``சார்க் நாடுகளோடு சகோதரத்துவம்`` என்பது அகண்ட பாரதக் கனவும்,அமெரிக்க மேலாதிக்க சேவையும் தவிர வேறெதுவும் இல்லை.
அமெரிக்க ஜனநாயகத்துக்குக் கீழேயே கலிபோர்னியாவில் பிரிவினைப் போராட்டம் வெடிக்கும் போது, மோடிப்பாசிசத்தின் கீழ் சார்க் நாடுகள் ஒன்றுபடும் என்று ஒரு தற்குறிகூட நம்பமாட்டான்.

இந்த நிலையில் அமெரிக்க தாசர்களும்,இந்திய விரிவாதிக்க பாசர்களுமான புலம் பெயர் தரகுத் தமிழணிகள் தமிழீழ விடுதலையிலோ,பொது ஜன வாக்கெடுப்பிலோ, போர்க்குற்றத் தண்டனை இயக்கத்திலோ,
இதய சுத்தியோடு ஊன்றி நின்று, உறுதியாகப் போராடப் போவதில்லை.

எனவே இந்தியாவில் மோடிப்பாசிசம் ஆட்சி பீடம் ஏறி இருக்கும் இத்திருப்பத்தில், இச்சமரசவாத தமிழ்த்தரகு அணிகளை தனிமைப்படுத்தி, ஈழ விடுதலையைப், புரட்சிப்பாதையில் முன்னெடுக்க பின்வரும்
முழக்கங்களின் கீழ் அணிதிரளுமாறு தமிழீழ உழைக்கும் மக்களையும், தேசிய ஜனநாயக புரட்சிகர சக்திகளையும் அறை கூவி அழைக்கின்றோம்.

* இந்தியப் பாசிசத்தின் இரு முகங்களே, காங்கிரசும் பி.ஜே.பி.யும்!

* போர்க்குற்றவாளி ராஜபக்சவுக்கு செங்கம்பள வரவேற்பளிக்கும், மோடி ஆட்சியைக் கண்டிப்போம்!

* ஈழத்தமிழர்களுக்கும், தேசிய இனங்களுக்கும் எதிரான மோடி ஆட்சியைத், தாங்கிப்பிடிக்கும்
தமிழ்த் தரகு சமரச அணிகளைத் தனிமைப்படுத்துவோம்!

*போர்க்குற்றத்தண்டனைக்கும்,பொதுஜன வாக்கெடுப்புக்கும், தமிழீழப் பிரிவினைக்கும் புரட்சிப்பாதையில்
தொடர்ந்து போராடுவோம்!

*மாவீரர் தாகம் தமிழீழத்தாயகம் என உரத்து முழங்குவோம்!

* மார்க்சிய லெனினிய மாஓ சிந்தனை வழி நடப்போம்!

* உலகத் தொழிலாளர்களுடனும், ஒடுக்கப்பட்ட தேசங்களுடனும் ஒன்று சேருவோம்!

புதிய ஈழப்புரட்சியாளர்கள். 25-05-2014

Tuesday, 13 May 2014

மோடி ஆட்சி- இருண்ட யுகத்துள் இந்தியா!

மோடி ஆட்சி- இருண்ட யுகத்துள் இந்தியா!


இந்திய லோக்சபா தேர்தல் 2014 இல் ஏகாதிபத்தியவாதிகள் திட்டமிட்டவாறு
அரசதிகாரத்தை காங்கிரஸ் பாசிசத்திடமிருந்து, பா.ஜ,க பாசிசத்துக்கு கை மாற்றியுள்ளது இந்திய ஜனநாயகம்! மோடி குஜராத்தில் மாற்று இந்திய அரசாங்கத்தை அமைக்கும் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடத்துகின்றார்.
ஈழமக்களையும்,காஸ்மீர் மக்களையும் சுவைகண்ட புதிய இந்திய இராணுவத்தளபதி நியமனத்துக்கு தெரிவாகிவிட்டார்.பங்குச்சந்தை சூதாடிகள் எகிறிக்குதிக்கின்றனர். ஆக மோடி ஆட்சி உறுதியாயிற்று.உதயமாகிற்று!!




இந்திய பொதுத் தேர்தல்-லோக்சபா- 2014 இற்கு சில மாத காலம் முன்னால் அமெரிக்க டைம் சஞ்சிகை மன்மோகன் சிங்கை (அதீத இலக்குகளை எட்டாத) தோல்வியடைந்த இந்தியத் தலைவர் எனப் பிரகடனப்படுத்தியது. அதாவது பழ நெடுமாறனின் `அன்னை இந்திரா` ஆரம்பித்த `அந்நிய மூலதனக் கபளீகரத்துக்கு இந்தியாவை அகலத்திறந்துவிடும் ``தேசியப் பணியை``, மன் மோகன் விட்ட இடத்தில் இருந்து, எகிறிப்பாயும் எத்தனிப்பை வெளியிட்டது.



சிறிது காலம் தள்ளி வந்த டைம் இதழ், மன்மோகன் சிங்கை மோடியால் மாற்றீடு செய்யும் அமெரிக்கத் திட்டத்தை `ஊடகம்` ஊடாக சுயாதீனமாக வெளியிட்டது. `மோடி எமது அணி - Modi means business' எனப் பிரகடனப் படுத்தியது.அவரை அரியணையில் அமர்த்துமாறும் வேண்டிக்கொண்டது.


அதாவது மன்மோகன் விட்ட இடத்தில் இருந்து மேலும் எகிறிப்பாய்ந்து ஒரு-பாய்ச்சலை-எட்டவேண்டுமானால் அது பாசிசத்தை அதன் பச்சை இரத்த வடிவில் அமுலாக்காமல் செய்ய இயலாது.இதற்கான நியமனமே கேடி, மோடி!


இந்தத் தருணமே  அமெரிக்க அடிவருடியும், சி.ஐ.ஏ. கைக்கூலியுமான வை.கோ, பி.ஜே.பி.உடனான உறவை பகிரங்கப்படுத்தினான். குஜராத் படுகொலையாளனை பாசத்தோடு அரவணைத்து,பதவி வெறியோடு புன்னகைத்தான்.

இவன் ``காகிதப் புலி`` அல்ல இந்திய விரிவாதிக்க பாசிசச் சிங்கம்!

2014 இந்திய அரசாங்க மாற்றத்தில் அமெரிக்கா மோடியை அமர்த்துவது என 2009 இற்கு முன்னாலேயே முடிவெடுத்துவிட்டது. அமையப் போகும் மோடி அரசாங்கத்துக்கும்.அதன் உலகமய இந்துத்துவா பாசிசத்துக்கும் விடுதலைப்புலிகள் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக முள்ளிவாய்க்காலில் புலிகளின் கதை முடித்த துரோகிதான் வை.கோ.
தமிழீழ தேசிய இனப்படுகொலையின், ஏகாதிபத்திய,இந்தியவிரிவாதிக்க பங்காளி இவன்.

கத்தோலிக்க தமிழ் திருச்சபையும், மடுத்தேவாலய நிர்வாகமும் சிங்கள ஆளும் கும்பல்களுடன் திரைமறைவில் கூட்டமைத்து,சி.ஐ.ஏ இன் வழிகாட்டுதலில், விடுதலைப் புலிகளின் மடு இராணுவப் பாதுகாப்பு அரணை உடைத்து விடுதலைப் பிராந்தியத்துக்குள் அந்நிய சிங்களப் படைகள் காலடிவைக்க வழி திறந்து விட்டு தமிழீழ விடுதலைப் போருக்கு காலத்தால் அழியாத துரோகத்தை இழைத்தனர்.

எதிரி சர்வதேச சமூக ஆதரவோடு பெரும்படைபலத்தோடு, ஒட்டுமொத்த அழித்தொழிப்பு என்கிற `தமிழீழ தேசிய இனப்படுகொலை`த் திட்டத்தோடு தமிழீழ மண்ணுள் புகுந்தான்.இதிலிருந்து படிப்படியாக தளப்பிரதேசங்களை இழந்து இறுதியில் முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகள் முற்றுகையிடப்பட்டனர். எனவே மடு, இராணுவ ரீதியில்  விடுதலைப்புலிகள் பின் வாங்கியிருக்க வேண்டிய தருணம் ஆகும்.

அவ்வாறு அவர்கள் செய்யாமைக்கு அகக்காரணங்களாக அமைந்தவை, எதிரி (அமெரிக்கா) மீதான ஊசலாட்டமும்,சமரச சக்திகள் குறித்த தவறான மதிப்பீடும், நம்பிக்கையுமே ஆகும். ஒருவேளை தமது பலம், தியாகம், போர்த்திறன்,மீது கொண்ட அதீதநம்பிக்கையும் காரணமாய் இருக்கலாம். அறிவைக் காட்டிலும் துணிவை துணையாக நம்பிய மாவீரர்கள் அவர்கள்.

இதைப்பயன் படுத்தி அமெரிக்கத் தேர்தலில் ஒபாமாவின் மறுவருகையும், இந்தியத் தேர்தலில் பி.ஜே.பி.ஆட்சி அமையும் என்ற எதிர்பார்ப்பும் அடங்கிய `புதிய அமெரிக்க,இந்திய அரசியல் சூழல்` விடுதலைப்புலிகளுக்கு சாதகமாக அமையும் என்று கூறி முள்ளிவாய்க்கால் பலிக்களம் வரைக்கும் புலிகளை இட்டுச் சென்றவன் வை.கோஆவான்.

இந்தியத் ``தேர்தல்`` ஆரம்பிப்பதற்கு முன்னமே அனைத்து மேற்குலக ஏகபோக ஊடகங்களும் அடுத்த இந்தியப் பிரதமர் மோடி என பகிரங்கமாக பிரகடனம் செய்து விட்டன.

(இந்தப் பின்னணியில் தான் நாம் காங்கிரசை பின்தள்ளி பி.ஜே.பி.க்கு எதிரான பிரச்சாரத்தை முதன்மைப் படுத்தினோம், நிலமைக்கு அமைய நமது முழக்கத்தை மாற்றீடு செய்தோம்!)  

அவர்கள் முரசறைந்து நியமித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இப்போது தேர்தலில்`` மக்கள்-தெரிவாக- தீர்ப்பாக`` முளைத்து நிற்கின்றான்!

இருண்ட யுகத்துக்குள் இந்தியா நுழைகின்றது!

இந்திய மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கும், தேசிய இன விடுதலைப் போராட்டங்களுக்கும்,தமிழீழ தேசிய விடுதலைப் புரட்சிக்கும் இது மேலும் நெருக்கடியான காலமாகும்.

இந்திய, தமிழக புரட்சிகர இயக்கங்கள், மோடிப்பாசிசத்தின் கொலைவெறித் தாக்குதல்களில் இருந்து தம்மை அமைப்பு ரீதியாக தற்காத்துக்குக் கொள்ளும் செயல் தந்திரத்தை வகுத்து,மோடிப்பாசிசத்தை முறியடிக்க அரசியல் வழியில் முன்னணியில் நின்று செயற்படவெண்டிய காலமாகும்.

அமெரிக்க ஏகாதிபத்திய கைக்கூலியும்,இந்திய விரிவாதிக்கத்தின் பாதுகாவலனும், மோடிப் பாசிசத்தின் பங்காளியும்,முள்ளிவாய்க்கால் கொலைக்குற்றவாளியுமான வை.கோ.ஈழவிடுதலைப் புரட்சியின் எதிரி என்பதை ஈழமக்களுக்கு உணர்த்த புதிய ஈழப்புரட்சியாளர்கள் முந்நின்று உழைக்க வேண்டிய காலமாகும்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை புரட்சிப்பாதையில் நிலை நிறுத்த விடாப்பிடியுடன் போராடவேண்டிய காலமாகும்.

பாசிசம் தோற்கும்!  புரட்சி வெல்லும்! இறுதி வெற்றி ஈழ மக்களுக்கே!

உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்!



புதிய ஈழப்புரட்சியாளர்கள்                                                                                                                  மே 13 2014